தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.2.11

லிபியாவில் மக்கள் எழுச்சி அதிகரிப்பு​ - சாலையெங்கு​ம் உடல்கள் கிடக்கின்ற​ன - மீண்டு வந்த இந்தியர்கள்

டெல்லி,பிப்.27:லிபியாவில் மக்கள் எழுச்சி அதிகரித்துள்ளது. அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடந்து வருகிறது. சாலையெங்கும் உடல்களாக கிடக்கின்றன. அவற்றை புல்டோசர்கள் மூலம் அகற்றி குப்பைகளில் வீசுகிறார்கள் என்று அங்கிருந்து மீண்டு வந்த இந்தியர்கள் கூறியுள்ளனர்.

லிபியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்க இரண்டு சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்குகிறது. இந்த விமானங்கள் நேற்று லிபியா சென்று இரண்டு கட்டமாக 528 இந்தியர்களை மீட்டு கொண்டு வந்துள்ளன.

முதல் விமானம் 291 பேருடன் டெல்லிக்கு வந்து சேர்ந்தது. அதேபோல 237 பேருடன் இரண்டாவது விமானம் வந்து சேர்ந்தது. இரு விமானங்களிலும் ஏராளமான தமிழர்களும் வந்துள்ளனர்.

லிபியாவிலிருந்து தங்களது நாட்டவரை காக்கும் பணியில் ஐரோப்பிய நாடுகள் தீவிரம்


பெர்லின், பிப். 26 லிபியாவில் அதிபர் மம்மர் கடாஃபிக்கு ஆதரவான ராணுவ வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபடும் மக்களை சுட்டுத்தள்ளுவதால் அந்நாடு போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. இதனால் தங்களது நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணியில் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
மீட்புப் பணியை ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள 27 நாடுகளும் கைகோத்து மேற்கொண்டுள்ளன

சுனில் ஜோஷி கொலை: பெண் ஹிந்துத்துவ தீவிரவாதி பிரக்​யாசிங் தாக்கூர் கைது

மும்பை,பிப்.27:ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகள் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி சுனில் ஜோஷி கொலைத் தொடர்பான வழக்கில் ஹிந்துத்துவா பெண் தீவிரவாதியான சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே மலேகான்-2008 குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிகிட்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேகான் வழக்கை விசாரித்துவரும் Maharashtra Control of Organised Crime Act (MCOCA)

13 கர்ப்பிணிகள் உயிரைப் பறித்த கெட்டுப்போன குளுக்கோஸ் :ராஜஸ்தானில் நடந்தது விபரீதம்

ஜோத்பூர்,பிப்.27:ராஜஸ்தானில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிகளுக்கு, சத்துக்காக குளுக்கோஸ் மருந்தை ஏற்றியபோது, அதிகளவு ரத்தப் போக்கு ஏற்பட்டு 13 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விசாரணையில், கெட்டுப் போன குளுக்கோஸ் திரவத்தை ஊசி மூலம் அவர்களுக்கு ஏற்றியது தெரியவந்துள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில்

துணிந்து வழக்கை சந்திப்பேன்: பாகிஸ்தானில் கைதான யு.எஸ்.அதிகாரி


நான் இருவரை சுட்டுக்கொன்ற விஷயத்தில் துணிந்து வழக்கை எதிர்கொள்வேன் என்று பாகிஸ்தானில் கைதான அமெரிக்க அதிகாரி ரேமண்ட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
முறைப்படி வழக்கை எதிர்கொள்வதற்கு அரசுரீதியான அதிகாரம் தனக்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லாகூரில் உள்ள கோட் லாக்பட் சிறையில் ரேமண்ட் டேவிஸ் அடைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு நலன் கருதி சிறைக்குள்ளேயே அவரிடம் நீதி விசாரணை நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் அப்துல் சாமட் ஆஜரானார். தமது தரப்பில் வாதாட ரேமண்ட் டேவிஸ் இன்னும் வழக்கறிஞரை அமர்த்தாததால் அவர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.
வெள்ளிக்கிழமை விசாரணையின் போது ரேமண்டுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விவரம் குறித்த ஆவணம் அவரிடம் அளிக்கப்பட்டது. அந்த ஆவணத்தில் தகவல்கள் அனைத்தும் உருது மொழியில் இருந்ததால் அதை அவர் வாங்க மறுத்துவிட்டார். தனக்கு உருது மொழி தெரியாது என்றும், ஆங்கிலத்தில் உள்ள ஆவணத்தை தருமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஆயுதம் ஏந்திய இருவரும் தன்னிடம் வழிப்பறி செயலில் ஈடுபட முயன்றனர். அதனால் தற்காப்புக்காக அவர்களை தான் சுட வேண்டியதாயிற்று என்றும் நீதிபதியிடம் ரேமண்ட் தெரிவித்தார். இதை அரசு தரப்பு வழக்கறிஞர் மறுத்தார்.
ரேமண்ட் வேண்டுமென்றே இருவரையும் சுட்டுக்கொன்றதாகவும், அவருக்கும் தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறினார். இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார் ரேமண்ட். இதைத்தொடர்ந்து அடுத்த வழக்கு விசாரணையை மார்ச் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி யூசுப். அடுத்த விசாரணைக்குள் தமது தரப்பில் ஆஜராக வழக்கறிஞரை அமர்த்த வேண்டும் என்றும் ரேமண்டை கேட்டுக்கொண்டார்.
பாகிஸ்தானில் கடந்த மாதம் ஆயுதத்துடன் வந்த இருவரை ரேமண்ட் டேவிஸ் சுட்டுக்கொன்றார். இதையடுத்து அவரை ஜனவரி 27-ம் தேதி பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். ரேமண்ட் டேவிஸ் அமெரிக்க உளவுத்துறையின் ஏஜென்ட் என்றும், அவருக்கு சில பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருக்கிறது என்றும் பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இதை அமெரிக்கா மறுத்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே உள்ள நல்லுறவைக் கருத்தில் கொண்டு ரேமண்டை விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா பலமுறை வேண்டுகோள்விடுத்தும் அதை பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை.
நன்றி: தமிழ்கூடல்

27.2.11

கோத்ரா:நீதிக்கு ஏற்பட்ட வறட்சி

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் அஹ்மதாபாத் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நமது நீதிபீடத்தின் வறட்சியையும், வீழ்ச்சியையும் குறித்த சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது. 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி பி.ஆர்.பட்டேல், 63 பேரை குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்துள்ளார்.மோடியின் மாநிலத்தில் சிறைக் கொட்டகையிலிருந்து 63 பேருக்கு விடுதலை

புஷ் மீது ஷூ வீசிய முன்ததிர் மீண்டும் கைது

பாக்தாத்,பிப்.26:முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஆவேசத்துடன் ஷூவை வீசியெறிந்ததற்காக சிறைத் தண்டனையை அனுபவித்த முன்ததிர் பாக்தாதில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தும் வேளையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

பாக்தாதில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடுச் செய்திருந்தார் முன்ததிர்.

லிபியாவில் உள்நாட்டு கலகம் - ஷாவேஸின் குருட்டு நியாயம்


கராக்கஸ்,பிப்.26:லிபியாவும், சுதந்திரமும் நீண்ட நாள் வாழவேண்டும். லிபியாவில் கத்தாஃபி எதிர்கொள்வது உள்நாட்டு கலகமாகும் என லத்தீன் அமெரிக்க நாடுகளில் கத்தாஃபியின் நெருங்கி நண்பரான ஷாவேஸ் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி லிபியாவில் மக்கள் ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்த பிறகு முதன்முதலாக தனது கருத்தைப் பதிவுச் செய்துள்ளார் ஷாவேஸ்.

கத்தாஃபிக்கு ஆதரவாக ட்விட்டரில் மேலும் ஷாவேஸ் தெரிவித்திருப்பதாவது: லிபியாவில் ராணுவம் மக்களிடம் கொடூரமாக நடந்துக் கொள்வதையடுத்து கத்தாஃபியின் அரசை தண்டிக்க வேண்டுமெனக்கோரும் அமெரிக்

26.2.11

ஈராக்:எழுச்சிப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் மரணம் ( வீடியோ )

பாக்தாத்,பிப்.26:அமெரிக்க (வீடியோ) கைப்பாவையான பிரதமர் நூரி அல் மாலிக்கின் தலைமையிலான அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராக 'வெகுண்டெழும் தினம்'(day of rage) கடைப்பிடிப்பதையொட்டி ஈராக்கின் நகர வீதிகளில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டனர்.
இந்நிலையில் நூரி அல் மாலிக்கியின் ராணுவத்தினர் நடத்திய அநியாயமான துப்பாக்கிச்சூட்டில் 7 பேர்

10 ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிள் ஓட்டியவர் தற்பொழுது ஹெலிகாப்டரில் பறக்கிறார் - சர்ச்சையில் சிக்கும் யோகா சாமியார் ராம்தேவ்

புதுடெல்லி,பிப்.26:யோகா என்றாலே பலருக்கு அலாதி பிரியம் உருவாகிவிட்டது. 'வாழுங்கலை' இன்னும் பல்வேறு பெயர்களில் சில மெஸ்மரிஸ கலைகளையும் கற்றுவிட்டு கோடி கோடியாக சம்பாதிக்கின்றார்கள் பல சாமியார்கள்.

'கதவைத்திற காற்று உள்ளே வரட்டும்' என கட்டுரை எழுதிய ஒரு சாமியார் 'கதவை மூடமறந்ததால்' சர்ச்சையில் சிக்கி சீரழிந்தார். இந்நிலையில் பல்வேறு சாமியார்களின் கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்த பொழுதிலும் பலருக்கு யோகா மற்றும் சுவாமிகள் மீதான பற்று விட்டப்பாடில்லை

கத்தாஃபியை சுட்டுத் தள்ளுங்கள் - லிபியா ராணுவத்தினருக்கு யூசுஃப் அல் கர்தாவி வேண்டுகோள்

தோஹா,:சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும், பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞருமான டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி அல்ஜஸீராவுக்கு அளித்த நேர்முகத்தில், லிபியாவின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபியை சுட்டுக் கொல்லுமாறு அந்நாட்டு ராணுவத்தினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தின் சாரம்சம் வருமாறு: தனது சொந்த நாட்டு மக்களுக்காக ஏவுகணகளை பயன்படுத்தி

லிபியா கலவரத்திற்கு ஒசாமா பின்லேடன் தான் காரணம்: கடாபி


திரிபோலி எங்கள் நாட்டு மக்களை திசை திருப்பி அவர்களை குழப்பி கலவரத்தினை உண்டாக்கியதே அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் தான். இச்சதிச்செயலை அவர் திறமையாக கையாண்டுள்ளார் என லிபியா அதிபர் மும்மர் கடாபி தெரிவித்துள்ளார்.
லிபியாவில் 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் கடாபி பதவிவிலகக் கோரி கடந்த ஒருவாரமாக மக்கள் போராட்டம் நடத்தி

நிலைத்தடுமாறும் கத்தாஃபி

திரிபோலி,பிப்.25:ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிராக லிபியாவில் மக்கள் எழுச்சி கொளுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளார் அந்நாட்டின் அதிபர் முஅம்மர் கத்தாஃபி.

தேசிய தொலைக்காட்சியில் தோன்றி கொலை வெறித்தனமாக பேட்டிக்கொடுத்த அவர், தற்போது மக்கள் எழுச்சியை திசை திருப்பும் முகமாக லிபியாவில் போராட்டத்தை வழி நடத்துவது அல்காயிதா என புழுகியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது: "தெளிவாக தெரிகிறது லிபியாவின் தற்போதையை பிரச்சனையை வழி நடத்துவது அல்காயிதாதான் என. 20 வயதுக்கு மேற்பட்டோர் எவருமே இந்த போராட்டங்களில் கலந்துக் கொள்ளவில்லை. இளைஞர்களை அல்காயிதாவன்முறைக்காக தூண்டுகிறது." என கூறுகிறார் கத்தாஃபி

கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி பரிமாற்றத்துக்கு பல்வா உதவியுள்ளார்: சி.பி.ஐ.


புதுடெல்லி, பிப். 25- கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ரூ.200 கோடிக்கு அதிகமான பணம் பரிமாறியதற்கு ஸ்வான் டெலிகாம் நிர்வாகி சாகித் உஸ்மான் பல்வா உதவியுள்ளார் என்று டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் கைதாகி இப்போது நீதிமன்றக் காவலில் பல்வா உள்ளார். அவரது ஜாமீன் மனுவும், இவ்வழக்கில்

முஸ்லிம்கள் பிரஞ்சு கலாச்சாரத்துடன் கலந்துவிட வேண்டும் - சர்கோஸி

பாரிஸ்,பிப்.25:பிரான்சில் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் அவர்கள் பிரஞ்சு கலாச்சாரத்துடன் கலந்துவிட வேண்டும் என அந்நாட்டு அதிபர் சர்கோஸி தெரிவித்துள்ளார்.

பன்முக கலாச்சாரத்தை கண்டித்த அவர் ஒன்றுக்கு மேற்பட்ட கலாச்சாரங்கள் மூலமாக முன்னேறுவது என்பது தோல்வியை ஏற்படுத்தும் என விளக்கம் கொடுத்தார்.

பிரான்சு நாட்டைச்சார்ந்த ஒன் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். பிரான்சில் வாழும் மக்களின் அடையாளத்தைக் குறித்து நாங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளோம். ஒரே சமுதாயமாக மாறுவதை

25.2.11

ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்ட வழக்கு ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஷார்ஜா,பிப்.25:ஷார்ஜா கீழ் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்த 17 இந்தியர்களுக்கு மன்னிப்பு வழங்க கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் தயார் என அறிவித்ததைத் தொடர்ந்து வழக்கில் சமரசம் ஏற்படுத்த விசாரணை ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த மஸ்ரிஹ் கானின்

புரட்சி அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவும் - அஹ்மத் நஜாத்

டெஹ்ரான்,பிப்.24:மேற்காசியாவிலும், வட ஆப்பிரிக்காவிலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் உருவான மக்கள் புரட்சி அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவு காலம் வெகுதூரத்தில் இல்லை என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை அடக்கி ஒடுக்குவதில் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பிரசித்திப் பெற்றவையாகும். அமெரிக்கா ஆதரவு பெற்ற அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கெதிராகத்தான் தற்போதைய எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

1979-ஆம் ஆண்டில் ஈரானில் அமெரிக்க ஆதரவுப் பெற்ற மன்னர் ஆட்சியை

மத்தியதரைக் கடல் பகுதியில் ஈரான் போர்க்கப்பல்கள்: அமெரிக்கா கலக்கம்


வாசிங்டன் மத்தியதரைக் கடல் பகுதியில் ஈரானுக்கு சொந்தமான இரு போர்க்கப்பல்கள் வலம் வருகின்றன. இது அமெரிக்காவை கவலை அடையவைத்துள்ளது.
1979-ல் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் சூயஸ் கால்வாயை கடந்து இப்போதுதான் முதல் தடவையாக ஈரான் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடல் பகுதியில் வலம் வருகின்றன. ஈரானின் இச்செயலை அத்துமீறிய

பஹ்ரைன்:புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு

பஹ்ரைன் மன்னர்
மனாமா,பிப்.24:பஹ்ரைனில் மன்னருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாக மன்னர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள வளமான பஹ்ரைனில் மன்னருக்கு எதிரான போராட்டத்தைக் குறைக்கும் முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளின் படி நேற்று 50 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இவர்களில்

தேவ்பந்த்:​குறைந்த அதிகாரத்து​டன் மவ்லானா வஸ்தன்வி துணைவேந்தர் பதவியில் தொடருவார்

லக்னோ,பிப்.24:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டி பேட்டியளித்ததைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தேவ்பந்த் துணைவேந்தர் மவ்லானா குலாம் முஹம்மது வஸ்தன்வி தாருல் உலூம் தேவ்பந்தின் துணைவேந்தராக தொடர்ந்து பதவியில் நீடிப்பார்.

ஏற்கனவே துணைவேந்தர் பதவியை ராஜினாமாச் செய்துவிட்டார் என்று வெளியான செய்தியை அவரே மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று தேவ்பந்தில் கூடிய தாருல்

24.2.11

லிபியாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வர விமானங்கள் தயார்

லிபியாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வர விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக வெடித்துள்ள புரட்சியில் இதுவரை 300 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார். இதனால், லிபியாவில் வசிக்கும் 18 ஆயிரம் இந்தியர்களின் நிலைமை குறித்து மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. எனவே, அவர்களை பத்திரமாக இந்தியா அழைத்து வர முடிவு செய்துள்ளது. இது தவிர, பக்ரைன் நாட்டில் மூன்றரை லட்சம் இந்தியர்களும் ஏமனில் 14 ஆயிரம் இந்தியர்களும் உள்ளன. அந்த நாடுகளிலும் கலவரம் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக, பாராளுமன்றத்தில் மத்திய வெளியுறவு மந்திரி

பஸ் தின ஊர்வலத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம்


சென்னை, பிப். 24- சென்னையில் நேற்று நடந்த பஸ் தின ஊர்வலம் பயங்கர கலவரமாக வெடித்தது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கல்வீசி தாக்கியதில் பெண் துணை கமிசனர், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 35 போலீசாரும், பொதுமக்கள் 6 பேரும் காயமடைந்தனர்.
சென்னையில் போலீஸ் தடை

லிபியா:ராணுவம் திரிபோலியில் குண்டுவீசித் தாக்கியது, சாலைகளில் பிணக்குவியல்


திரிபோலி,பிப்.23:அரசுக்கெதிராக மக்கள் எழுச்சி தீவிரமடைந்துள்ள சூழலில் லிபியாவின் தலைநகரான திரிபோலியில் ராணுவம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது.

ஹெலிகாப்டர்களும், போர் விமானங்களும் குண்டுவீசித் தாக்கியதைத்தொ டர்ந்து ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என மனித உரிமை ஆர்வலர்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரபு லீக்கிலிரு​ந்து லிபியா நீக்கம்

கெய்ரோ,பிப்.23:அரசுக்கெதிராக போராட்டத்தை தொடரும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு கொலை வெறிப்பிடித்து சொந்த நாட்டுமக்களை கத்தாஃபியின் அரசு கொன்றுக் குவித்து வரும் சூழலில் அந்நாட்டை அரபு லீக்கிலிருந்து வெளியேற்றியதாக அரபுலீக்கின் பொதுச்செயலாளர் அம்ரு மூஸாதெரிவித்துள்ளார்.

லிபியாவின் நிலைமைகளை குறித்து ஆராய கூடிய அரபுலீக்கின் ஆலோசனைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இத்தகவலை அல்ஜஸீரா முதன்முதலில் வெளியிட்டுள்ளது.

பக்ரைனில் அரசியல் கைதிகளை விடுவிக்க மன்னர் சம்மதம்


மனாமா பக்ரைனில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட டியா பிரிவு கைதிகளை விடுவிக்கும்படி மன்னர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கடந்தாண்டு 25 பேர் மீது போடப்பட்ட வழக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை துவங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது

வன்முறையை நிறுத்துமாறு லிபிய அதிபருக்கு ஐ.நா. கோரிக்கை


நியூயார்க், பிப். 23- அமைதி வழியில் போராடிவரும் லிபிய மக்களின் மீது இராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு லிபியா அதிபர் கர்னல் கடாபியை ஐ.நா. பாதுகாப்புப் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.
ஐ.நா.வின் உயர் அதிகார அமைப்பான பாதுகாப்புப் பேரவை அதன் இம்மாத தலைவரான பிரேசில் தூதர் மரியா லூயிசா ரிபேரோ வயோட்டி தலைமையில்

23.2.11

சூயஸ் கால்வாய்:ஈரான் தனது பலத்தை காட்டுவதாக இஸ்ரேல்

ஜெருசலம்,பிப்.23தனது சக்தியை வெளிப்படுத்துவதன் ஒரு பகுதியாகத்தான் ஈரானின் போர்க் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக கடந்து சென்றது என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கவலை தெரிவித்துள்ளார்.

ஈரானின் இரு போர் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக கடந்து மத்தியத்தரைக் கடல் வழியாக சிரியா சென்றது. ஈரானின் போர் கப்பல்கள் 1979 ஆம் ஆண்டு ஈரானின்

யூதர்களின் பிடியில் உலக ஊடகங்கள்!!!

நபிமார்களைப் பொய்யாக்குவது, படுகொலை செய்வது (5:70, 2:87) அல்லாஹ்வைப் பிச்சைக்காரன் என்று இழிவாகப் பேசுவது, அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது (3:181) அல்லாஹ்வின் வலிமையையே நாங்கள் வென்றவர்கள் என்று கிறுக்குத்தனமாக உளறுவது (5:64) அல்லாஹ்வினால் அருளாக வழங்கப்பட்ட வேத வசனங்களை இடம் மாற்றி, பொருள் மாற்றிப் புரட்டல் செய்வது (4:46) அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுவது (3:75) பூமியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவது, யுத்தச் சூழலை உருவாக்குவது (5:64) முஃமீன்களை கடும் பகைவர்களாகக் கருதுவது (3:118-

லிபியாவுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம்

கெய்ரோ,பிப்.22:மக்கள் எழுச்சியை அடக்கி ஒடுக்கும் லிபிய அரசுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான O.I.C கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து 57 முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான Organisation of Islamic Countries இன் தலைவர் இக்மலுத்தீன் இஹ்ஸானோக்லு வெளியிட்டுள்ள அறிக்கையில்; 'லிபியாவின் முஅம்மர் கத்தாஃபியின் அரசு அதிகமான படைகளைக் கொண்டு போராட்டத்தில்

தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ராணுவ தொழில் நுட்பம்!!!

புதுடெல்லி,பிப்.22:கடந்த 2006-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ராணுவத்தின் 'பங்கர் டெமோலிஷன் டெக்னிக்' பயன்படுத்தப்பட்டுள்ளது என புலனாய்வில் தெரியவந்துள்ளது. சிறிய அளவிலான குண்டு வெடிப்புகளுக்குக் கூட பெரிய அளவிலான அழிவுகளை ஏற்படுத்த இந்த தொழில் நுட்பத்தால் இயலும். இதே தொழில் நுட்பத்தை உபயோகித்து தான் மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதாக புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர்.

22.2.11

கோத்ரா ரெயில் எரிப்பு:63 பேர் விடுதலை, 31 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

அஹமதாபாத்,பிப்.22:2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கை விசாரித்த அஹ்மதாபாத் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் 31 பேர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-இன்படி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 63 பேர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் தண்டனை வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதி

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்: 65 பேர் பலி


ஆக்லாந்து, பிப். 22- நியூசிலாந்தில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் 65 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்தில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் சில தேவாலயங்கள் சேதம் அடைந்தன. விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த பூகம்பம் பெரும் சேதத்தை விளைவித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை


வாசிங்டன் ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒடுக்குவதற்காக அவர்களுடன் சண்டையிட்டு வரும் அமெரிக்கா இந்த போரில் வெற்றி பெறமுடியாது என்பதால் அவர்களுடன் சமரசம் செய்து கொள்ள முன்வந்து உள்ளது. இதற்காக அந்த இயக்கத்தினருடன் ரகசியமாக நேரடி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
இந்த தகவலை நியூயார்க்கர் என்ற பத்திரிகை வெளியிட்டு உள்ளது.

பின் அலியை ஒப்படையுங்கள் - சவூதியிடம் துனீஷியா கோரிக்கை

துனீஸ்,பிப்.21:மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் அடைக்கலம் புகுந்துள்ள துனீசிய நாட்டு முன்னாள் ஏகாதிபத்தியவாதியான ஜைனுல் ஆபிதீன் பின் அலியை தங்களிடம் ஒப்படைக்குமாறு சவூதியிடம் துனீசியா கோரியுள்ளது.

முன்னாள் அதிபர் பின் அலியின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளிருப்பதாக துனீசிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள் - ஜனதா தளத்தில் இணைந்த பஜ்ரங்தள் தலைவர் பேட்டி

பெங்களூர்,பிப்.21:கர்நாடகா மாநிலத்தில் கிறிஸ்தவ சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான பஜ்ரங்தள்ளின் முன்னாள் கண்வீனர் மஹேந்திர குமாரும் ஆதரவாளர்களும் மதசார்பற்ற ஜனதாதளத்தில் இணைந்தனர்.

ஹெச்.டி.தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளத்தில் மஹேந்திர குமாருக்கு உறுப்பினர் அந்தஸ்தை வழங்கினார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசுவாமி

சிறு குருவி வடிவில் உளவு இயந்திரம்

பென்டகன்,பிப்.22:பதினாறு சென்டி மீட்டர் அளவுள்ள சிறு குருவி போன்ற உளவு இயந்திரம் ஒன்றை அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பெண்டகனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

நான்கு மில்லியன் டாலர் செலவு செய்து உருவாக்கப்பட்ட இந்தக் குருவி இயந்திரம் போர் முனையில் எதிரிகளின் கண்ணுக்குப்படாமல் அதில் பொருத்தப்பட்டுள்ள சிறு ஒளிப்பதிவுக் கருவி மூலம் எதிரியின் நிலைகளைப் படம் பிடித்துவிடும். இச்சிறு விமானம்

கலைஞர் டிவி தொடர்பான ஆவணங்கள் எரிக்கப்பட்டுவிட்டன ஜெ


கலைஞர் டிவி தொடர்பான ரசீதுகள், பணம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’முதல்வர் கருணாநிதியை எதிர் கொள்வதில் எந்த அளவுக்கு விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை ரூ 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து ஆய்வு நடத்திக் கொண்டு இருக்கும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் உணராதது துரதிர்ஷ்டவசமானது.

21.2.11

சீனாவில் மல்லிகை புரட்சி என்றபெயரில் மக்கள் புரட்சி!!!

பீஜிங்,பிப்.21:துனீசியாவிலும், எகிப்திலும் நிகழ்ந்ததுபோல ஆட்சிமாற்றங்கோரி சீனாவில் ’மல்லிகைப் புரட்சி’ என்ற பெயரிலே மக்கள் நடத்துவதற்கான முயற்சிக்கு எதிராக நாடு முழுவதும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் இணையதளம் மூலமாக 'மல்லிகைப் புரட்சிக்கு' அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பீஜிங்கிலும், சீனாவின் இதர 11 நகரங்களிலும் போராட்டத்திற்கு தயாராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நகரங்களில் கூடுதல்

எகிப்து, துனிஷியா போன்று லிபியா இல்லை - கடாபியின் மகன் அறிவிப்பு


லிபியாவில் தொடர்ந்து வரும் வன்முறைகளை அடுத்து அந்த நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய
முஅம்மர் கடாபியின் மகன் சிலர் உள்நாட்டு யுத்தம் ஒன்றை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் எனினும் அதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் எச்சரித்துள்ளதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது

எகிப்து , துனிஷியா போன்று எமது நாடு இல்லை என்று தெரிவித்த அவர், தனது தந்தை

லிபியாவில் சர்வாதிகாரத்தின் கோரத்தாண்டவம் - மரணம் 200 தாண்டியது

திரிபோலி,பிப்.21:ஆட்சிமாற்றம் கோரி மக்கள் எழுச்சிப் போராட்டம் நடந்துவரும் லிபியாவில் நேற்றும் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிகளிலிருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் அப்பாவி மக்களின் உயிரை பறித்தன.

பெங்காசி நகரத்தில் நேற்று முன்தினம் மரணித்தவர்களை அடக்கம் செய்ய ஒன்றுக்கூடிய மக்களின் மீது பாதுகாப்புப்படை அரக்கத்தனமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமலே சுட்டுத்தள்ளினர். இதனால் லிபியாவில் எழுச்சிப் போராட்டத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.
காயமடைந்தவர்களையும், இறந்தவர்களின் உடல்களையும் அனுமதிக்கப்பட்டுள்ள

குவைத்தில் குடியுரிமை கோரி போராட்டம்

குவைத்சிட்டி,பிப்.20:குவைத்தில் குடியுரிமை கோரி போராட்டம் நடத்தியவர்களும், பாதுகாப்பு படையினரும் மோதிக்கொண்டதில் 30 பேருக்கு காயமேற்பட்டது. 50 பேரை ராணுவம் கைது செய்தது.

குவைத்தில் வடமேற்கு நகரமான ஜஹ்ராவில் நேற்று போராட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை குவைத்தின் செலிபியா கிராமத்திலும், இதைப் போன்றதொரு போராட்டம் நடைபெற்றுள்ளது.

தலிபான்களுடன் ஒபாமா நிர்வாகம் ரகசிய பேச்சு


நியூயார்க்:"ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் ஒபாமா நிர்வாகம், ரகசிய பேச்சுவார்த்தையைத் துவக்கி விட்டது. அரசியல் தீர்வு ஒன்றே ஆப்கன் பிரச்னையைத் தீர்க்கும் என்று ஹிலாரி கூறியுள்ளார்' என, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "நியூயார்க்கர்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் குடியேற்றம்:ஐ.நா தீர்மானத்தை அமெரிக்கா 'வீட்டோ' மூலம் முறியடித்தது

ஐ.நா,பிப்.20:ஃபலஸ்தீன் பிரதேசத்தில் இஸ்ரேல் சட்டத்திற்கு புறம்பாக கட்டிவரும் குடியேற்றங்களை கண்டிக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தனது 'வீட்டோ' அதிகாரத்தின் மூலம் முறியடித்துள்ளது.

ஃபலஸ்தீன் விடுதலை இயக்கம்(P.L.O) தயாராக்கிய தீர்மானத்தை பாதுகாப்பு கவுன்சிலில் இதர 14 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன.

முஸ்லிம்களுடன் நல்ல உறவை நிலைநாட்டுவேன் என சவடால் விடும் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு 'வீட்டோ'

ஹிந்துத்துவா பயங்கரவாதம் - குண்டுவைக்க முயன்றபோது காயமடைந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி

கொல்லம்,பிப்.20:வீட்டிற்குள் குண்டுவைக்க முயன்றபோது குண்டுவெடித்துச் சிதறியதில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஒருவர் கடுமையாக காயமடைந்தார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கேரள புரம் என்ற இடத்தில் பட்டாணி முக்கு என்ற பகுதியில் உள்ள சிந்து என்பவரின் வீட்டின் மேல் மாடியில் குண்டுவைக்க முயற்சி செய்த பொழுதுதான் இச்சம்பவம் நிகழ்ந்தது.

குண்டுவெடித்ததில் அந்த வீடும், அண்டை வீடும் சேதமடைந்தன. வெடிக்காமல் கிடந்த ஒரு குண்டு மதப் பிரச்சார தொடர் நிகழ்ச்சி தொடர்பான நோட்டீஸால் பொதிந்து வைக்கப்பட்டிருந்தது.

இப்பிரதேசத்தில் மத வன்முறையை உருவாக்குவதற்கான திட்டம் இது என அவ்வூர் மக்கள்

மலைக்க வைக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு


"வணக்கம் சார்! மக்கள் தொகை கணக்கெடுக்க வந்துருக்கோம்!'


- ரோட்டில் இருந்து வாசல் கதவை எட்டிப் பார்த்துக் கூவுகிறார் அந்த அரசு ஊழியர்.


"நாளைக்கு சாயந்தரமா வாங்க' என, முகத்தில் அடித்தாற்போல் பதில் வருகிறது. பென்சிலால் அதைக் குறித்துக்கொண்டு, அலுக்காமல் அடுத்த வீட்டு கதவைத் தட்டுகிறார் அந்த ஊழியர்.

நியூசிலாந்தில் ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் மற்றுமொறு உலக அதிசயம்


ஆக்லாந்து, பிப். 15 நியூசிலாந்தில் ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் மற்றுமொறு உலக அதிசயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவின் தாஜ்மகால், சீனாவின் பெருஞ்சுவர் உள்ளிட்ட 7 உலக அதிசயங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது மற்றுமொறு உலக அதிசயமாக நியூசிலாந்தில் உள்ள

20.2.11

உதயமான விடியலை எவராலும் பின்னோக்கி இழுக்கவியலாது - தஹ்ரீர் சதுக்கத்தில் டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி

கெய்ரோ,பிப்.19:சர்வதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும் உலகின் பிரபல முஸ்லிம் அறிஞருமான டாக்டர் யூசுஃப் அல்கர்தாவி நேற்று கெய்ரோ தஹ்ரீர் சதுக்கத்தில் 30 லட்சம்பேர் பங்கேற்ற ஜும்ஆ தொழுகையில் பங்கேற்று உரைநிகழ்த்தினார்        டாக்டர் கர்தாவி எகிப்து நாட்டைச் சார்ந்த மார்க்க அறிஞராவார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், இஸ்லாத்தின் எதிரிகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பவர்.
கடந்த 1981 ஆம் ஆண்டு எகிப்தை விட்டு வெளியேறிய அவர் கத்தர் நாட்டில்

பஹ்ரைன் மன்னர் அறிவிப்பு: எல்லா பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்த இளவரசர் நியமனம்

மனாமா,கடந்த சில தினங்களாக பஹ்ரைனில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு தீர்வுக்காண நாட்டின் அனைத்து பிரிவினர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டு மன்னர் ஹமத், இளவரசர் ஸல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவை நியமித்துள்ளார்.
நேற்று பஹ்ரைன் தொலைக்காட்சியில் உரைநிகழ்த்திய மன்னர் ஹமத் தெரிவித்ததாவது; "எல்லா பிரிவைச் சார்ந்த குடிமக்களின் எதிர்பார்ப்புகளும், விருப்பங்களும் நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை இளவரசருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இளவரசர் நாடு முழுவதும் பேச்சுவார்த்தை நடத்த துவங்குவார். எனது அனைத்து மக்களோடும், நமது நேசத்திற்குரிய நாட்டின் அனைத்து மக்களோடும் நான் கோரிக்கை விடுக்கிறேன் இளவரசருடன் உள்ளார்ந்த நேர்மையுடனும் உண்மையாகவும் ஒத்துழைக்கவும். இறைவன் நாடினால் பஹ்ரைனுக்கு இதனை சாதிக்க இயலும். நாட்டை பாதுகாக்கும் முயற்சியில் எல்லா குடிமக்களுக்கும் வெற்றிப்பெற வாழ்த்துகிறேன்." இவ்வாறு மன்னர் உரை நிகழ்த்தினார்.

மாத்யமம்


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி விடுதலையை எதிர்த்து சி.பி.ஐ. மனு


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.
1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையொட்டி சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தினார்கள். பாபர் மசூதியை இடித்த திரளான கரசேவகர்கள் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்படும் போது மேடையில் இருந்து பார்வையிட்ட பா.ஜனதா, சிவசேனா, விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங்தளம், ராஷ்டிரீய சுயம் சேவக் மற்றும்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, காஷ்மீருக்கு மாற்றம்


சென்னை, பிப். 19 சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பல ஆண்டு காலம் பணியாற்றியவர் எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா. இவர், தற்போது ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.
இவர், அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்க வேண்டும் என்று ஜனாதிபதியின் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 5


மீடியா உலகில் முஸ்லிம்கள் – 5


தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்தான் சதாம் ஹுஸைனைப் பற்றிய "கொடுமையான" செய்திகளை கதை கதையாகத் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதன் செய்தியாளர் ஜுடித் மில்லர் என்பவர்தான் WMD எனப்படும் பேரழிவு தரும் ஆயுதங்கள் (Weapon of Mass Destruction) ஈராக்கில் இருப்பதாக பல சிறப்புக்

பெனசிர் கொலையாளிகளுக்கு முசரப் நேரடியாக உதவினார்


 இஸ்லாமாபாத், பெனசிர் பூட்டோ கொலையாளிகளுக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முசரப் நேரடியாக உதவினார் என்று விசாரணைக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
பெனசிர் பூட்டோ கொலை வழக்கை எப்ஐஏ எனப்படும் பாகிஸ்தான் புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் அதிபர் முசரப்பின் பெயரை சேர்க்க

19.2.11

பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு :- அத்வானி பெயரை நீக்கிய அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பு தவறு- சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!


பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மீதான கிரிமினல் சதி குற்றச்சாட்டை நீக்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

அமித்ஷா விவகாரத்தி​ல் பாஜக மிரட்டல்? பிரதமர் மன்மோகன் சிங்

புதுடெல்லி,பிப்.18:குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் அமித் ஷா கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு பாஜக மிரட்டல் விடுத்ததாக பிரதமர் மன்மோகன் சிங் சூசகமாகத் தெரிவித்தார்.
குஜராத்தில் நடந்த போலி என்கவுன்டரில் சொராஹ்ப்தீன் கொல்லப்பட்டது தொடர்பாக அந்த மாநில பாஜக முன்னாள் அமைச்சர் அமீத் ஷா சிபிஐ

குண்டுவெடி​ப்புகளில் பங்கு:கைது​க்கு பயந்து பிரதமர் அலுவலகத்தி​ல் தஞ்சம் புகுந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத் தலை​வர்கள்

புதுடெல்லி,பிப்.18:இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமாரின் பங்கு வெட்ட வெளிச்சமானதைத் தொடர்ந்து கைது பயத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பிரதமர் அலுவலகத்தில் அபயம் தேடியுள்ளனர்.

குண்டுவெடிப்புகளுடன் தங்களை தொடர்புப் படுத்துவதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமெனக்கோரி ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவ் பிரதமர் அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்க பொதுச்செயலாளர் சுரேஷ் பய்யா ஜோஷி பிரதமருக்கு எழுதிய கடிதமும் ஒப்படைக்கப்பட்டது.

எகிப்தில் முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் கைது


கெய்ரோ, பிப். 18 எகிப்தில் முன்னாள் அமைச்சர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எகிப்தில் மக்கள் கிளர்ச்சி காரணமாக அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓட்டம் பிடித்துள்ள நிலையில், இராணுவத்தின் பிடியில் தற்போது ஆட்சி அதிகாரம் உள்ளது. இருப்பினும் இன்னும் சில மாதங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசிடம் ஆட்சியை ஒப்படைக்க தயாராக உள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் எல் ஹாட்லி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜுகீர் கரனா, வீட்டுவசதி துறை அமைச்சர் அகமத் அல் மக்ராபி மற்றும் தொழிலதிபர் அகமத் ஏஸ் பேர் கைது செய்யப்பட்டு 15 நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 
இதில் ஹபீப் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை குற்றச்சாற்று சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

18.2.11

பஹ்ரைன் மக்கள் எழுச்சி: ராணுவம் அடக்குமுறை - 4 பேர் மரணம்

மனாமா,பிப்.18:பஹ்ரைன் ( வீடியோ ) தலைநகரான மனாமாவில் பியர்ல் ரவுண்டபவுட்டில் அமைதியாக கூடியிருந்த மக்கள் மீது இன்று அதிகாலை ராணுவம் நடத்திய அநீதிமான துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் மரணமடைந்தனர்.நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஸல்மானியா மெடிக்கல் காம்ப்ளக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தின் தாக்குதலைத் தொடர்ந்து பின்வாங்கிய மக்கள் போலீசாருடன்

சென்னையில் கலைஞர் டி.வி. அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு

சென்னை, பிப். 18- ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் தொடர்பாக தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் டி.வி., ஆபீசில் சி.பி.ஐ. அதிகாரிகள் நுழைந்து அதிரடி ரெய்டு நடத்தினர். நள்ளிரவு முழுவதும் நடந்த இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பரிசீலித்து நிர்வாக உறுப்பினர்களிடம் கேள்விக்கணைகள் மூலம் துளைத்தெடுத்து வருகின்றனர்.

லிபியாவிலு​ம் மக்கள் எழுச்சிப் போ​ராட்டம் வீடியோ

திரிபோலி,பிப்.17:அரபுலகில் கொளுந்துவிட்டெரியும் மக்கள் எழுச்சி லிபியாவிலும் பரவியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களும், பாதுகாப்பு படையினரும், அரசு ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதில் 14 பேருக்கு காயமேற்பட்டது.( வீடியோ )
இன்று நாடுமுழுவதும் ‘கண்டன தினம்’ கடைப்பிடிக்க போராட்டத்தில் ஈடுபட்டோர் இணையதளம் மூலமாக அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த 1996-ஆம் ஆண்டு திரிபோலி சிறையில் நடந்த கலவரத்தில் கொலைச் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளின் 

லெபனானை தாக்குவோம் - இஸ்ரேல் மிரட்டல், கப்பலை தாக்குவோம் - ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை

டெல்அவீவ்,பிப்.17:தெற்கு லெபனானில் மீண்டும் ராணுவத்தை அனுப்புவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பாரக் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஹிஸ்புல்லாஹ் போராளிகளை துரத்துவதற்காக எதிர்காலத்தில் தாக்குதல் நடத்துவோம். புதிய ராணுவத் தலைவராக பொறுப்பேற்றுள்ள பென்னி காண்ட்சுடன் லெபனானின் எல்லையில் நடத்திய சந்திப்பின்போது யஹூத் பாரக் இந்த மிரட்டலை விடுத்துள்ளதாக இஸ்ரேலின் ஹாரட்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது
.