சென்னை, மே.28- வளைகுடா நாடான ஏமனில் உள்நாட்டு போரில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த செவிலியர்களை காப்பாற்றுமாறு மத்திய அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஏமன் நாட்டில் அதிபர் அலி அப்துல்லா சலேவை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபருக்கு ஆதரவாக ராணுவமும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாக பழங்குடியினரும் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர்.