லிபியாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வர விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக வெடித்துள்ள புரட்சியில் இதுவரை 300 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார். இதனால், லிபியாவில் வசிக்கும் 18 ஆயிரம் இந்தியர்களின் நிலைமை குறித்து மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. எனவே, அவர்களை பத்திரமாக இந்தியா அழைத்து வர முடிவு செய்துள்ளது. இது தவிர, பக்ரைன் நாட்டில் மூன்றரை லட்சம் இந்தியர்களும் ஏமனில் 14 ஆயிரம் இந்தியர்களும் உள்ளன. அந்த நாடுகளிலும் கலவரம் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக, பாராளுமன்றத்தில் மத்திய வெளியுறவு மந்திரி