ஒஸ்லோ: கடந்த வெள்ளிக்கிழமை (20.04.2012) நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நீதிமன்ற வளாகம் பொது மக்களால் நிறைந்திருந்தது.
2011 ஜூலை மாதம் ஒஸ்லோ நகரில் கார் வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் 8 பேரையும், ஒடோயா தீவில் கோடைகாலப் பாசறையில் குழுமியிருந்த இளைஞர்களில் 69 பேரையும் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுகுவித்த ப்ரீவிக்கின் படுகொலை வழக்கு விசாரணை ஐந்தாம் நாளாகத் தொடர்ந்தது. தன்னுடைய படுகொலைகளுக்கான முன்னாயத்தங்கள் குறித்து 33 வயதான ப்ரீவிக்