புதுடெல்லி, மார்ச். 23- லிபியா மீது, விமான தாக்குதல் நடத்தும் அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு, கண்டனம் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, அனைத்து கட்சி எம்.பி.,க்களும் லோக்சபாவில் நேற்று வலியுறுத்தினர்.
லோக்சபாவில் நேற்று, சமாஜ்வாடி உறுப்பினர் முலாயம் சிங் யாதவ் பேசுகையில், லிபியா மீது, அமெரிக்க கூட்டுப் படைகள், விமான தாக்குதல் நடத்துகின்றன. அமெரிக்க கூட்டுப் படைகளின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை, வேடிக்கை பார்க்கக் கூடாது என்றார்.