தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.10.11

இஸ்ரேல் மீண்டும் காஸா மீது குண்டு வீச்சு ஒன்பது பேர் மரணம்


பாலஸ்தீன – இஸ்ரேல் பேச்சுக்கள் ஒரு புறம் நடைபெறுகிறது. பாலஸ்தீனத்தின் தனிநாட்டுக்கான அங்கீகாரப் பிரேரணை ஐ.நாவின் அங்கீகாரம் பெறும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த பதட்டமான நிலையில் இஸ்ரேலிய விமானங்கள் காஸாவின் தெற்கு பகுதியில் உள்ள றபா நகரத்தில் குண்டு வீச்சு நடாத்தின. இந்தத் தாக்குதலில் ஆயுதப்பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த இஸ்லாமிய கடும் போக்கு ஜிகாத் அமைப்பினர் ஐந்து பேர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டு மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் ஜிகாத் உட்பட மொத்தம் ஒன்பது பேர் மரணித்தாக காஸா செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் 20 படையினர் சுட்டுக்கொலை ஆஸாத் ஆவேசம்


சிரியாவில் சர்வாதிகாரி பஸருல்ஆஸாத்தின் படுகொலைப் படைகள் இதுவரை 3000 பொது மக்களை சுட்டுக் கொன்றுவிட்டன. வேறு வழியற்ற நிலையில் இப்போது குடும்ப சர்வாதிகாரியின் படைகள் மீதான தாக்குதல்கள் ஆரம்பித்துவிட்டன. நேற்று நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 20 சிரியப்படைகள் படுகொலை செய்யப்பட்டனர், 53 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிகழ்வு சிரியாவின் போராட்டப்பாதையில்

டெல்லியில், பார்முலா-1 கார்பந்தயம்; தகுதி சுற்றில் செபாஸ்டியன் வெட்டல் முதலிடம்

கார் பந்தயங்களில் உலக அளவில் பிரசித்தி பெற்றது, பார்முலா-1 கார்பந்தயம். பார்முலா-1 வடிவிலான கார்கள் தான், உலக கார் ரேசில் அதிவேகத்தில் செல்லக்கூடியதாக கருதப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 360 கிலோமீட்டர் வரை சீறிப்பாயும். பார்முலா-1 கார்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி 1950-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.

சவூதி வாழ் இந்தியர்களுக்கு தூதர் வேண்டுகோள்


சவூதி வாழ் இந்தியர்களுக்கு தூதர் வேண்டுகோள் : ஆன்லைனில் தூதரகத்தில் பதிவு செய்க!
சவூதி அரேபியாவுக்கான புதிய இந்திய தூதராக பதவியேற்ற ஹமீத் அலி ராவ் அவர்களுக்கு சவூதி வாழ் இந்தியர்கள் சார்பில் கடந்த 20ம் தேதி வரவேற்பு விழா நடத்தப்பட்டது.

அருணாச்சல பிரதேசத்தில் தொங்குபாலம் அறுந்து வீழ்ந்தது : இதுவரை 6 பேரின் சடலம் மீட்பு


அருணாச்சல பிரதேசத்தில் நேற்று மாலை, ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்ட தொங்கு பாலமொன்று
அறுந்து வீழ்ந்ததில் இதுவரை 6 பேர் பலியாகியிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு கேமங் மாவட்டத்தில் உள்ள செப்பா நகரையும், நியூசெப்பா