சென்னை, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் விழிப்புடன் பாதுகாத்து வருகிறார்கள்.
வருகிற 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.