தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.9.10

ஆர் எஸ் எஸ் ன் உண்மையான தீவிரவாத முகத்தை வெளிக்கொணர வேண்டும் : பிரணாப் முகர்ஜி !

மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர் எஸ் எஸ்ஸின் உண்மையான தீவிரவாத முகத்தை வெளிக்கொண்டு வருவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

நேற்று அவர் AICC மூலமாக அளித்துள்ள அறிக்கையில், “சமீப கால விசாரணைகள், ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் தொடர்பு அமைப்புகளின் தீவிரவாத தொடர்பை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.” என்றும் “அதன் தொண்டர்கள் பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது விசாரணைகளின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது” என்றும் கூறியுள்ளார். ஏ என் ஐ செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர் எஸ் எஸ்ஸின் முக்கிய மூத்த தலைவர் இந்திரேஷ் குமார்,அஜ்மீர் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவர்களது அரசியல் சண்டையில் உண்மை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகி வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!

-செய்தி தமிழாக்கம் அல்மதராஸி