தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.1.11

யாழ்ப்பாணத்தில் 622 முஸ்லிம் குடும்பங்கள் மீளக் குடியமர்வு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார்


(அரசியல் செய்தியாளர்)
புலிகளால் வெளியேற்றப்பட்ட 622 முஸ்லிம் குடும்பங்கள் இதுவரை யாழ் மாவட்டத்திலுள்ள தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இவர்களுள் பெரும்பான்மை யானோர் யாழ் நகரப் பகுதியிலுள்ள சோனகத் தெருபொம்மை வெளி பிரதேசத்திலும் ஒரு சிலர் சாவகச்சேரியிலும் மீளக் குடி யேறியுள்ளார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
மீளக்குடியேறியுள்ள இவ் 622 முஸ்லிம் குடும்பங்களுக்கும் தலா 5000 ரூபா கொடுப்பனவு வழங்க மீள்குடியேற்ற அமைச்சி டமிருந்து அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கான உட னடிக் கொடுப்ப னவாகவே இத்தொகை வழங்கப்படவுள்ளது. எனினும்கொடுப்பனவுகள் வழங்கப்படுவதற்கு முன்னர்அவர்கள் இதுவரை வசித்து வந்த வெளிமாவட் டங்களிலுள்ள பதிவுகள் ரத்துச் செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.
இதேவேளைவடக்கில் மீள் குடியேறிவரும் மக்களுக்காக வழங்கப்படுகின்ற மீள்குடி யேற்ற உதவித் தொகையான 25000 ரூபா தமக்கு வழங்கப்பட வில்லை என இம்மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
போர் சூழல் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தமது  சொந்த இடங்களில் மீள்குடி யேறுகின்றபோது அவர்களுக் கென இத்தொகை அவ்வப் பிரதேச செயலாளர்களினால் வழங் கப்பட்டு வந்தது.
2008ம் ஆண்டுக்குப் பின்னர் இடம் பெயர்ந்தவர்களுக்கு மட்டுமே இத்தொகை வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சு திடீரென அறிவித்துள்ளது. இதனால், 1990ல் இடம்பெயர்ந்த வடமாகாண முஸ்லிம் மக்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
நீண்டகாலத்தின் பின்னர் யாழ்ப்பாணம் வந்திருக்கும் முஸ் லிம்கள் தமக்கு போதிய உதவிகளோஉரிய ஏற்பாடுகளோவசதி களோ செய்துகொடுக்கப் படுவதில்லை என விசனம் தெரிவிக் கின்றனர். தமது பிரச்சினைகளைத் தீர்க்க அரசியல் கட்சிகளோ அரசாங்க அதிகாரிகளோ ஊடகங்களோ போதிய அக்கறை காட்டுவதில்லை எனவும்அண்மையில் பெய்த அடைமழை காரண மாக தாம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்ததாகவும் இம்மக்கள் அங்கலாய்க்கின்றனர்

அப்துல் நாசர் மதானியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளிவைப்பு!

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியின் ஜாமீன் மனு மீதான விசாரணையைக் கர்நாடகா உயர் நீதிமன்றம் மூன்றாம் முறையாக தள்ளிவைத்தது.
ஜாமீன் மனுக்கு எதிரான எதிர்ப்பு மனு தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர் மேலும் கால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து, மேலும் 10 நாட்கள் அரசு தரப்புக்கு நீதிமன்றம் கால அவகாசம் அளித்து விசாரணையை வரும் 16 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தது.
நாசர் மதானியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது அரசு சார்பாக எதிர்ப்பு மனு தாக்கல் செய்ய மேலும் இரு வாரங்கள் அதிகம் கால அவகாசம் வேன்டும் என அரசு வழக்கறிஞர் கோரினார். இதற்கு மதானியின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். "எதிர்ப்பு மனு தாக்கல் செய்ய இதுவரை இருமுறை அரசுக்குக் கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக வழக்கு விசாரணையை மாற்றி வைப்பதும் அரசுக்குக் கால அவகாசம் வழங்குவதும் நியாயமல்ல" என மதானியின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து அரசு தரப்பு எதிர்ப்பு மனு தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்தது. "இதுவே இறுதி முறை. எதிர்ப்பு மனு தாக்கல் செய்வதற்காக இனிமேல் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் தள்ளி வைக்காது" என அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை செய்தது.
நாசர் மதானி ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 16 ஆம் டேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்தது.

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் கலாமுக்கு சாப்பாடு தருவதில் அலட்சியம்

மதுரை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மதுரையில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபோது, அவருக்கு சாப்பாடுவது தருவதில் அலட்சியமும், தாமதமமும் காட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அப்துல் கலாம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபோதும், வீட்டோடு முடங்காமல் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மாணவர்களுடன் உரையாடுவது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்று ஒரு இளைஞரைப் போல உற்சாகத்துடன் செயல்பட்டு வருகிறார். அதேசமயம், அவருக்கு ஆங்காங்கே சிற்சில அவமதிப்புகளும் தொடர்ந்து கொண்டே வருகின்றன.

முன்பு அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அவர் ஷூவைக் கழற்றச் சொல்லி அவமதித்தனர். கேரளாவில் பயணம் செய்தபோது அவருடன் வர வேண்டிய டாக்டர் வராமலேயே அவர் பயணிக்க நேரிட்டது.

இந்த நிலையில், மதுரையில் அவருக்கு சாப்பாடு தருவதில் அலட்சியமும், கவனக்குறைவும் காட்டப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அப்துல் கலாமுக்கு, காலை 7 மணிக்கு உணவு தரப்பட வேண்டும் என்று உதவியாளர்கள் நேற்றிரவே சொல்லியிருந்தனர்.

அதன்படி, இன்று காலை 7 மணிக்கு உணவு உண்ணச் சென்றார் அப்துல்கலாம். ஆனால் உணவு தரப்படவில்லை. சரி என்று கிளம்பிச் சென்ற கலாம் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்துள்ளார். அப்போதும் உணவு தரப்படவில்லை. இப்படி மூன்று முறை வந்து போயிருக்கிறார் கலாம்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமாக 7.50 மணிக்குத்தான் சாப்பாடு வந்திருக்கிறது. இதனால் அவரது பயணமும் தாமதமாகியுள்ளது. அதன் பின்னர் அவர் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கோவா கடற்கரையில் ஓய்வாக அமர்ந்திருந்ததை படம் பிடித்ததை பெரிய குற்றச் செயலாக பிரச்சினை எழுப்பி, புகைப்படம் எடுத்தவர்களை காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்று விசாரணை நடத்தி உலுக்கி எடுத்துள்ளனர். ஆனால் இந்திய மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள கலாமுக்கு சாப்பாடு தருவதில் இவ்வளவு கால தாமதம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

சவுதி அரேபிய ரியாத் நகரத் தெருவில் சிறுத்தைப் புலி

உலகின் பரபரப்பு மிகுந்த பெருநகரங்களுள் சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்தும் குறிக்கத்தக்கது. இங்கு அமைச்சகங்கள் அமைந்துள்ள பகுதி அமைச்சகப்பகுதி (ஹைய்ய அல் வஜாராத், சுருக்கமாக ஹாரா) என்று அழைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள், வங்காளிகள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
நகரின் இதயப்பகுதியாகக் கருதப்படும் இப்பகுதியில் கடந்த திங்களன்று சிறுத்தைப் புலியொன்று தெருவில் இறங்கி உலாவரவும், பீதியடைந்த பொதுமக்கள் காவல் துறைக்குத் தொலைத் தகவல் அளிக்க, விரைந்து வந்தது காவல்துறை. அதன்பின் பொதுமக்கள், காவலர்கள் துப்பாக்கியை எடுத்தது கண்டனர்; சிறுத்தை வீழ்ந்தது கேட்டனர் என்பதாக சிறுத்தைப் புலி வீழ்த்தப்பட்ட செய்தி (படம் காண்க) அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். 
அண்மையில் அந்த வேங்கையை அருகிலிருந்து கண்ட ஒரு வங்காளத் தொழிலாளி அளித்த தகவல்படி அவருடைய குடியிருப்புக்கு அருகில் தான் அந்தச் சிறுத்தை வளர்க்கப்பட்டு வந்ததாகவும், அந்த வீட்டில் மேலும் இரு குட்டிச்சிறுத்தைகள் அங்கே விளையாடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.    
மேலும் கிடைக்கப்பெறும் தகவல்களிலிருந்து......  சிறுத்தை வீழ்த்தப்பட்ட தகவலறிந்ததும் விரைந்து வந்த அதன் உரிமையாளர் அந்தப் 'பூனைகளின் பெரியண்ணனை' மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறாராம். இதற்கிடையில் வீட்டுவிலங்குகள் கூட வீதியில் வருவதற்குத் தடை இருக்கும் ரியாத்தில் வனவிலங்கொன்றை மனம்போனபோக்கில் செல்ல விட்ட உரிமையாளரை காவல்துறை 'வலை'வீசி தேடி வருகிறதாம்.

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள்-தீப்பிடித்ததால் ஓட்டம்

சென்னை: சென்னையில் கனரா வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. ஆனால், எந்திரத்தில் தீப்பிடித்துக் கொண்டதால் கொள்ளையர்கள் தப்பியோடிவி்டடனர்.

சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். எந்திரம் இன்று காலை உடைந்து கிடந்தது.
இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் விசாரணை நடத்தியதில் நேற்றிரவு கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்திருப்பது தெரிய வந்தது. ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள ஸ்கீரினை அவர்கள் உடைத்தபோது, எந்திரத்தில் தீப்பிடித்துள்ளது.

இதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்தக் காட்சிகள் ஏசிஎம் மைய கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது.

அதில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் முயன்று வருகின்றனர். இந்த ஏடிஎம் மையத்துக்கு காவலாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை சிபாரிசால் கருத்து வேறுபாடு: தனித்தெலுங்கானா உருவாக கட்சிகள் மும்முரம்


புதுடில்லி : "ஒன்றுபட்ட ஆந்திர மாநிலமே நீடிக்கலாம் என்றும், ஆந்திராவை இரண்டாக பிரிக்கலாம் என்ற பரிந்துரைகளை ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தெரிவித்துள்ளதால், தனி தெலுங்கானா விவகாரத்தில் அரசியல் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை இல்லை. வேறுபாடு துவங்கியுள்ளது. இதனால், மேலும் குழப்பமான நிலைமையே உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

"ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்'என்பது, தெலுங்கானா பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை. இதை வலியுறுத்தி, அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஐந்து பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, ஆந்திராவுக்கு 28 முறை சுற்றுப் பயணம் செய்து, அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொதுமக்களிடம் கருத்தை கேட்டது. அதன் அடிப்படையில் அறிக்கையை தயார் செய்து, கடந்த மாதம் 30ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் அறிக்கை அளிக்கப்பட்டது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் சிதம்பரம், உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை உள்ளிட்டோருடன் ஆந்திர அரசியல் கட்சிகள் நேற்று ஆலோசனை நடத்தின. தெலுங்கு தேசம், டி.ஆர்.எஸ்., - பா.ஜ., ஆகிய கட்சிகள் இதில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ், பிரஜா ராஜ்யம், இடதுசாரி கட்சிகள் ஆகியவை மட்டுமே பங்கேற்றன. இதன்பின், ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அளித்த 461 பக்க அறிக்கையின் நகலை, உள்துறை அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டார். அதில் கீழ்கண்ட ஆறு முக்கிய பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.

1. தற்போது இருப்பதை போலவே, ஆந்திரா ஒரே மாநிலமாக இருக்கலாம். தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவருக்கு முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவி தரலாம். தெலுங்கானா பகுதியை மேம்படுத்துவதற்காக, சட்ட ரீதியான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை கணக்கில் கொண்டு பார்க்கும்போது, ஒருங்கிணைந்த ஆந்திராவே சிறந்ததாக உள்ளது.

2. ஆந்திராவை சீமாந்தரா, தெலுங்கானா என, இரண்டு மாநிலங்களாக பிரிக்கலாம்.

3. தெலுங்கானா பிராந்திய கவுன்சிலை உருவாக்க அதிகாரம் அளிக்கும் வகையிலான சட்டத்தை அரசு இயற்றலாம்.

4. ஆந்திராவை இரண்டாக பிரிக்கும்போது, ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக்கலாம். இரண்டு புதிய மாநிலங்களுக்கும், தனித், தனி தலைநகரங்களை உருவாக்கலாம்.

5. ஆந்திரா, தெலுங்கானா என, இரண்டு மாநிலங்கள் உருவாக்கும்போது, ஐதராபாத்தை தெலுங்கானாவின் தலைநகராக அறிவிக்கலாம்.

6. ஆந்திராவை ராயல் - தெலுங்கானா, கடலோர ஆந்திரா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கலாம். அப்போது, ஐதராபாத்தை ராயல் தெலுங்கானாவின் தலைநகராக அறிவிக்கலாம்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி, ஆறு பரிந்துரைகளை தெரிவித்துள்ளது. இவற்றில் முதல் மூன்று பரிந்துரைகளை செயல்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என, கமிட்டியே அவற்றை நிராகரித்துள்ளது. கமிட்டியின் இந்த அறிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் கவனமுடன் ஆய்வு செய்ய வேண்டும். உடனடியாக எந்த முடிவுக்கும் வந்து விடக் கூடாது. நான் அழைப்பு விடுத்த கூட்டத்துக்கு, சில அரசியல் கட்சிகள் பங்கேற்கவில்லை. இது வருத்தம் அளிக்கிறது. தெலுங்கானா விவகாரம் தொடர்பாக இந்த மாதத்திற்குள் மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி, ஆலோசிக்கப்படும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் பரிந்துரையால், பரவலாக கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், தெலுங்கு தேசம், பா.ஜ., - தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள், தனித் தெலுங்கானா மாநிலம் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. தனித் தெலுங்கானாவை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சந்திரசேகர ராவ் நேற்று அறிவித்தார். இந்த அறிக்கை குழப்பமானது, ஏற்கமுடியாதது என்று பா.ஜ., கூறியிருக்கிறது. ஏற்கனவே மத்திய அரசு உறுதி கூறியபடி தனித் தெலுங்கானா அமைக்க சட்டம் இயற்றாமல் தாமதப்படுத்தும் முயற்சி என்று கூட்டு நடவடிக்கை குழு அறிவித்திருக்கிறது. தெலுங்கானா மோதல் மீண்டும் ஆந்திராவில் துவங்கிவிட்டது.