ஷரமுல் ஷேக்:எகிப்து-இஸ்ரேல் எரிவாயு ஒப்பந்தம் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியிருக்கவே எரிவாயு ஏற்றுமதியை நிறுத்த வேண்டுமென அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் மக்களுக்கு போதுமான எரிவாயு இருப்பதை உறுதிச் செய்யாமல் ஏற்றுமதிச் செய்யக் கூடாது என எகிப்து நீதிமன்றம் அந்நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான எரிவாயு ஏற்றுமதி எதிர்ப்பு பிரச்சாரக் குழுவின் தலைவர் இப்ராஹீம் யூஸ்ரி தெரிவித்துள்ளார்.