தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.11.11

புதிய கலாச்சாரத்திற்கு துவக்கம் குறிப்போம்-அரஃபா உரையில் சவூதி முதன்மை முஃப்தி


Saudi-grand-mufti
மக்கா:எதிரிகள் இஸ்லாத்திற்கு எதிராக பொய்ப்பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ள, உலகின் பல்வேறு பகுதிகளில்  முஸ்லிம்கள் கொடுமைக்கும் ஆளாக்கப்படும் துயரமான காலக்கட்டத்தில் புதிய கலாச்சாரத்திற்கு துவக்கம் குறிக்க முஸ்லிம்கள் தயாராகவேண்டும் என சவூதி அரேபியாவின் முதன்மை

சூடுபிடிக்கிறது ஈரான் அணு ஆயுத தயாரிப்பு விவகாரம்:ஓரிரு நாட்களில் ஐ.நா., அறிக்கை


வியன்னா:ஐ.நா.,வின் சர்வதேச அணுசக்தி ஏஜன்சி (ஐ.ஏ.இ.ஏ.,), இன்னும் ஓரிரு நாட்களில், ஈரான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருவதற்கான ஆதாரப்பூர்வ அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது. “அவர்கள் அறிக்கையை வெளியிடட்டும்; அதன் பின் என்ன நடக்கும் என்பதை நாம் பார்ப்போம்’ என, ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஈரான் மீதான ராணுவ

ஈரான் மீது தாக்குதலுக்கு தயாராகிறது இஸ்ரேல் : சீமொன் பெரஸ்


ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் செய்யாது என்று இனியும் கூறமுடியாதென நேற்று முன்தினம் இஸ்ரேலிய அதிபர் சீமொன் பெரஸ் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலிய தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது இஸ்ரேல் ஈரானுடனான போருக்கு தயாரவதை மறைமுகமாக அவர் தெரிவித்தார். தமது மோசாட் உளவுப்பிரிவினர் இஸ்ரேல் தாக்குதலை நடாத்த தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்தானதென தமக்குத் தெரிவிப்பதாகவும் கூறினார்.

நாமும் யுத்தத்துக்குத் தயார், இஸ்ரேல் தாக்கினால் திருப்பித் தாக்குவோம்: ஈரான் அறிவிப்பு


எந்நேரத்திலும் ஈரான் யுத்தத்துக்கு தயாராகவுள்ளதாகவும், இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடுகள் தாக்கினால் திருப்பித் தாக்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி அக்பர் சாலி தெரிவித்துள்ளார்.துருக்கி நாட்டு ஊடகமொன்றுக்கே

கடிதத்தை வெளியிட்டதால் தனது இணையதள நிர்வாகியை விரட்டிய ஹஸாரே!


இப்போதுள்ள நிர்வாகிகள் குழுவைக் கலைத்துவிட திட்டமிட்டுள்ளதாக ஹஸாரே எழுதிய கடிதத்தை வெளியிட்டதால், ஆத்திரமடைந்து அந்த இணையதள நிர்வாகியை விரட்டிவிட்டார் அன்னா ஹஸாரே. இதனால் கோபமடைந்த அந்த பத்திரிகையாளர், “ஹஸாரே தெரிந்தே பொய் சொல்வதாகவும், கிரண்பேடி, அரவிந்த் கேஜ்ரிவால், சிசோதியா ஆகியோரின் சுயநலத்துக்காக,

செவ்வாய்க்கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப ரஸ்யா தயாராகிவிட்டது


செவ்வாய்க்கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப தயாராகிவிட்டதாக இன்று ரஸ்யா அறிவித்துள்ளது. சந்திரனுக்கு மனிதனை அனுப்பிய அமெரிக்க சாதனையை முறியடித்து உலக முதன்மை பெற ரஸ்யா முடிவு செய்துவிட்டது. கடந்த 520 தினங்களாக செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பும் உடற் தகுதியை பெறுவதற்காக பலரை பரிசோதித்தனர் ரஸ்ய விஞ்ஞானிகள். செவ்வாய்க்கிரகத்தின் தரைமேல் நிலவும் சூழலுக்கு கட்டுப்பட்டு, மோசமான பயணத்தை வெற்றிகரமாக மேற்கொள்ளும் மனோபலம், உடற் தைரியத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை அறிய இந்த சோதனைகள் நடாத்தப்பட்டது. இதில் ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். மூன்று ரஸ்யர்கள், ஒரு பிரான்சியர், ஒரு இத்தாலியர், ஒரு சீனர் இந்த

தொலைக்காட்சி ஒளிபரப்பு டிஜிட்டல் மயமாகிறது: ரூ.40 ஆயிரம் கோடியில் மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி, நவ. 8-  தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய 4 மாநகரங்களில் தொடங்குகிறது. 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்குள் இதற்கான பணிகள் படிப்படியாக முடிவடையும். இந்த புதிய தொழில்நுட்பம் ரூ.40

2 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு

அபுஜா, நவ. 8-  நைஜீரியா நாட்டில் ஹர்கோட் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இருந்த ஒரு எண்ணெய் கப்பலில் கடற்கொள்ளைக்காரர்கள் ஏறி அதை கடத்தி சென்றனர். கிரேக்க நாட்டுக்கு சொந்தமான இந்த கப்பலில் 2 இந்திய மாலுமிகள் இருந்தனர். அவர்களும் கப்பலுடன் கடத்தப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் இந்த கப்பல் கடத்தப்பட்டது. இதில் மாலுமிகளுடன் மொத்தம் 20