தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.3.11

ஜப்பானின் ஐந்து அணு உலைகள் வெடிக்கும் அபாயத்தில்​ - நாடு முழுவதும் பீதி


டோக்கியோ,மார்ச்.13:ஜப்பானில் சுனாமி பேரழிவைத் தொடர்ந்து புகஷிமா அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலையிலும் வெப்பமும், அழுத்தமும் அதிகரித்துள்ளதால் அந்நாடு அணு விபத்து பீதியில் ஆழ்ந்துள்ளது.

40 ஆண்டுகள் பழமையான புகஷிமா அணுசக்தி நிலையத்தின் முதல் அணு உலை கடந்த சனிக்கிழமை வெடித்தது. பூகம்பத்தால் சேதமடைந்த அணு உலையின் மேல்பகுதி வெடித்துச் சிதறியதால் அப்பிரதேசம் முழுவதும் அணுக்கதிர் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமலர் மீது மானநஷ்ட வழக்கு ?

தினமலர் நாளேட்டின் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வது குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் உத்தரவின் பேரில், சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இன்றைய தினமலர் நாளேட்டின் முதல் பக்கத்தில், ஜப்பானைத் தாக்கிய சுனாமியையும், தயாளு அம்மாள் விசாரிக்கப் பட்டதையும், இணைத்து, சுனாமி என்ற பெரிய தலைப்பை போட்டு ஜப்பானை புரட்டிப் போட்டது, திமுகவை கலங்கடித்தது என்று படத்தோடு செய்தி வெளியிட்டிருந்தது  
இச்செய்தியைப் பார்த்து, கடும் கோபம் அடைந்த கருணாநிதி உடனடியாக தினமலர் நாளேட்டின் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உத்தரவிட்டதாகத் தெரிகிறது.   இதையடுத்து, மதுரையில் உள்ள ஒரு வழக்கறிஞரோடும், சட்டத் துறை செயலாளர் தீனதயாளனோடும், இன்று ஆலோசனையில்

மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியா?

சென்னை : அ.தி.மு.க., அணியில் ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூ., கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு உடன்பாடு முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க., தரப்பிலிருந்து எப்போது அழைப்பு வரும் என, மூன்று கட்சிகளின் தலைவர்களும் காத்திருக்கின்றனர். அவர்கள் யாரும் வெளியூர் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று அவசரமாக கூடுகிறது.

அக்கூட்டத்தில் அ.தி.மு.க., தரும் குறைந்த சீட்டுகளை பெற்றுக் கொள்வதா? அல்லது தனித்து

லிபியாவுக்கு எதிரான இராணுவதாக்குதல் ஐரோப்பிய ஒன்றியம் தயக்கம்


டென்மார்க் 12.03.2011 அதிகாலை
புறுக்சல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களின் விசேட மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் லிபியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு பெரும் தயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் காட்டிய காரணத்தால் கூட்டம் பெரும் பின்னடைவுடன் முடிவடைந்துள்ளது. மேலும் ஒரு இஸ்லாமிய நாட்டின் மீது மேலை நாடுகள்

தேர்தலில் போட்டியிட அல்பராதி நிபந்தனை

கெய்ரோ,எகிப்தில் ராணுவத்தின் உத்தரவின்படி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதால் மட்டும் நான் அதிபர் பதவிக்கு போட்டியிட தயாரில்லை என முன்னாள் சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் தலைவர் முஹம்மது அல் பராதி தெரிவித்துள்ளார்.

ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார்.

ராணுவம் ஜனநாயக அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்துவதாக உறுதி அளிக்கவேண்டும். அரசியல் சட்டதிருத்தங்கள் வரவேற்கத்தக்கதே. ஆனால், அதிபருக்கு