தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.10.10

தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் : இ.யூ.மு. லீக் மாநில செயலாளர் நம்பிக்கை

குலசேகரம்: தமிழகத்தில் தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மஹ்பூப் தெரிவித்தார்.
குலசேகரம் ஜமா அத்திற்கு வருகை தந்த காயல் மஹ்பூப் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவராக மத்திய அசைச்சர் அகமதுவும், மாநில தலைவராக காதர்மைதீனும் உள்ளனர். மத்தியில் ஆட்சியில் உள்ளோம். மாநிலத்தில் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். கட்சி தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், சிறுபான்மையினர் நல பாதுகாப்புக்கு குரல் கொடுக்கிறது.காஷ்மீர் தூதுக்குழுவில் இடம் பெற்று இந்திய மக்களின் கருத்தை எடுத்து கூறியதற்கு பா.ஜ., பாராட்டியது. மதத்தின் பெயரால் மனிதர்களை பிரிக்கக்கூடாது என்ற கொள்கை முழக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். சமய நல்லிணக்க மாநாடு நடத்தி மூன்று சமய தலைவர்களையும் கவுரவித்தோம்.வரும் டிசம்பர் 11ம் தேதி தாம்பரம் ரயில்வே மைதானத்தில் மகிளா ஜமா அத் ஒருங்கிணைப்பு கருத்தரங்கு நடத்த உள்ளோம். இதில் ஜமா அத் கட்டுப்பாடுடன் சமுதாய செயல்பாடு நடத்தும் ஜமா அத்துகளை தேர்தெடுத்து கவுரவிக்கிறோம். இதில் தமிழகத்தில் நான்கு ஜமா அத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.குலசேகரம் ஜமா அத்தும் அதில் ஒன்று. அதற்காக ஜமா அத்தை பார்வையிட்டு பரிந்துரை செய்ய வந்துள்ளோம். மேலும் கருத்தரங்கில் தமிழக முதல்வருக்கு நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் விருது வழங்கி கவுரவிக்கிறோம். இந்த கருத்தரங்கில் மத்திய அமைச்சர் அகமது, தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கின்றனர்.
கருத்தரங்கில் தமிழகத்தில் இருந்து பல லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். தி.மு.க., கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும். கடந்த முறை 7 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டில் வெற்றி பெற்றோம். இம்முறை பத்மனாபபுரம் தொகுதி உட்பட 10 தொகுதிகள் கேட்போம்.இதுவரை கட்சியில் 8.5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். பத்து லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கில் உள்ளோம். தமிழகத்தில் உள்ள 60 லட்சம் முஸ்லிம்களில் 92 சதவீதத்தினர் சுன்னத் என்ற பிரிவை சேர்ந்தவர்கள். எட்டு சதவீதம் தான் மற்ற பிரிவினர்.தமிழகத்தில் 12 ஆயிரம் மகிளா ஜமா அத் அமைப்பு உள்ன. தற்போது 28 மாவட்டங்களில் கட்சியின் அமைப்பு தேர்தல் நடத்தி உள்ளோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் அமைப்பு தேர்தல் நடக்க உள்ளது. இவ்வாறு காயல் மஹ்பூப் கூறினார்.பேட்டியின் போது பாங்காக் தமிழ் சங்க தலைவர் சம்சுத்தீன், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் நாசர், செயலாளர் மஹ்மூத் ஹஸன், குமரி மாவட்ட தலைவர் சாகுல் அமீது, செயலாளர் நசீம், மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர் அப்துல் நாசர், மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, குலசேகரம் முஸ்லிம் ஜமா அத் தலைவர் பீருக்கண், செயலாளர் ஷாகுல் ஹமீது, குலசேகரம் பிரைமறி முஸ்லிம் லீக் தலைவர் ஷாஜகான், செயலாளர் ஷாகுல் ஹமீது, மாவட்ட தி.மு.க., முன்னாள் தலைவர் எஸ்.எம்.ஷா, குளச்சல் பிறைமறி முஸ்லிம் லீக் துணைத்தலைவர் ஷாகுல் ஹமீது உடன் இருந்தனர்.

30.10.10

பிரான்ஸூக்கு எச்சரிக்கை - ஒஸாமா

பிரான்ஸை எச்சரித்து ஒஸாமா பின் லேடன் உரையாற்றிய ஒலிநாடாவை அல் ஜஸீரா வெளியிட்டுள்ளது. இதில் கடந்த மாதம் நைஜர் நாட்டில் ஐந்து பிரான்ஸ் நாட்டவரை கடத்திச் சென்றது பிரான்ஸ் முஸ்லிம்களுக்கெதிரான செயல்படுத்திவரும்அநீதிகளுக்கான எதிர்வினை என ஒஸாமா குறிப்பிட்டுள்ளார்.
எனது மக்கள் பசியால் வாடும்போது நீங்கள் எங்களது நிலங்களை மறைமுகமான பேரங்கள் மூலம் அபகரிப்பது எந்த விதத்தில் நியாயமானது என அந்த ஒலிநாடாவில் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக வட மற்றும் மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள முஸ்லிம் நாடுகளை குறிப்பிட்டு ஒஸாமா பேசியுள்ளார். முஸ்லிம் நாடுகளில் நீங்கள் நடத்தி வரும் அநீதிகளின் எதிர்வினைதான் நைஜரில் நடத்தப்பட்ட கடத்தல் சம்பவம் என ஒலி நாடாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பரில் நைஜரில் வேலை பார்த்து வந்த ஐந்து பிரான்ஸ் நாட்டவர் கடத்தப்பட்டதற்கு அல் காய்தாவின் வட ஆப்ரிக்கா பிரிவு பொறுப்பேற்றுள்ளது. இவர்களின் புகைப்படங்களையும் அல்காய்தா கடந்த மாதம் வெளியிட்டது. கடத்தல் சம்பவத்திற்கு பிறகு அல்காய்தா எந்த விதமான கோரிக்கைகளையும் தங்களுக்கு வைக்கவில்லை என பிரான்ஸ் அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒலிநாடாவில் பர்தாவை தடை செய்ய முன்வந்திருக்கும் பிரான்ஸின் செயலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் முஸ்லிம் பெண்களின் பர்தாவை நியாயமின்றி தடை செய்வது உங்களின் உரிமை என நினைக்கும்போது , எங்கள் நாடுகளை ஆக்கிரமித்துள்ள உங்களை வெளியேற்றுவது மற்றும் கொலை செய்வது எங்களின் உரிமை அல்லவா என தெரிவித்துள்ள ஒஸாமா ஆப்கானிஸ்தானிலிருந்து பிரான்ஸ் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு வெளியேறாவிட்டால் கடத்தல் சம்பவங்கள் தொடரும் என எச்சரித்துள்ளார். எங்களின் நிலைப்பாடு தெளிவானது - நீங்கள் கொன்றால் நாங்களும் கொல்வோம் , நீங்கள் மக்களை பிணைக்கைதிகளாக்கும்போது நாங்களும் அவ்வாறு செய்வோம் என அந்த ஒலிநாடாவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருந்ததி ராயை நாடு கடத்த வேண்டும்! பாஜக

தேச ஒற்றுமைக்கு எதிராக பேசிய அருந்ததி ராயை நாடு கடத்த வேண்டும் என போபாலில் மத்தியபிரதேச பா.ஜ. தலைவர் பிரபாத்ஜா ப.சிதம்பரத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். விடுதலை ஒன்றே குறிக்கோள் என்ற தலைப்பில் கடந்த வாரம் டெல்லியில் காஷ்மீர் பிரிவினைவாதிகள், மாவோ ஆதரவாளர்கள் மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பஙகேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பிரபல ஆங்கில எழுத்தாளர் அருந்ததி ராய், ‘காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை’ என்றார். மேலும் இந்திய அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

இதையடுத்து அவரை தேச விரோத வழக்கில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அருந்ததிராய் சர்வதேச அளவில் புகழ் பெற்ற எழுத்தாளர் என்பதால் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வரும் சமயத்தில் புதிதாக ஒரு சர்வதேச பிரச்னையை உருவாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் மத்திய அரசு இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில் அருந்ததிராயை நாடு கடத்த வேண்டும் என மத்தியபிரதேச பாஜ மாநில தலைவர் பிரபாத் ஜா, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தனது கடிதத்தில், ‘அருந்ததிராயை நாடு கடத்தவதுடன் அவருக்கு வழங்கப்பட்ட விருதுகள் மற்றும் கவுரவங்களை வாபஸ் பெற வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேச விரோத பேச்சுக்கும், பேச்சு சுதந்திரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை ப.சிதம்பரம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கடிதத்தில் பிரபாத் ஜா குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கையெழுத்திடவில்லை - திமுக எம்.பி.ஹெலன் டேவிடசன் விளக்கம் !

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டும் கோரிக்கை மனுவில் தான் கையெழுத்திடவில்லை என்று எம்.பி.ஹெலன் டேவிட்சன் விளக்கம் அளித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குள்ளான நிலத்தில் மூன்றில் இரண்டு பகுதியை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. சர்ச்சைக்குரிய இடமாக ஆக்கப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்துத்துவா அமைப்பான வி.ஹெச்.பி. இந்தியா முழுவதும் கையெழுத்து இயக்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கமிட்டி நிர்வாகிகள் கன்னியாகுமரி தி.மு.க.வை சேர்ந்த எம்.பி. ஹெலன் டேவிட்சனை அணுகி ராமர் கோவில் கட்டுவது தொடர்பான விவரங்களை எடுத்துக்கூறி கையெழுத்து இயக்கத்தின் மனுவில் கையெழுத்து போடுமாறு கேட்டுக்கொண்டதாகவும், அவரும் உடனடியாக கையெழுத்து போட்டுக் கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இது குறித்து எம்.பி. ஹெலன் டேவிட்சனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்திருந்த்தது.

இந்த சர்ச்சை குறித்து எம்.பி. ஹெலன் டேவிட்சன் விளக்கமளித்துள்ளார். மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் பலர் வந்து என்னிடம் மனு அளிக்கிறார்கள். அதுபோலவே ஸ்ரீஅனுமன் சக்தி ஜாகரன் சமிதி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் தலைமையில் ஒரு குழுவினர் வந்து மனு அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்டதை உறுதி செய்யும் வகையில்தான் கையெழுத்திட்டிருந்தேன். ஆனால், அதை சிலர் திரித்துச் செய்தி வெளியிட்டுள்ளனர். ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து நான் கையெழுத்திடவில்லை. திமுக தலைமைக் கழகம் அனுப்பியுள்ள நோட்டீஸ் கிடைக்கப் பெற்றேன். இது குறித்து அக்டோபர் 27ம் தேதி புதன்கிழமையன்று திமுக தலைமைக் கழகத்திற்கு விரிவான விளக்கம் அனுப்பவுள்ளேன் என்று ஹெலன் டேவிட்சன் கூறினார்.

எம்.பி. ஹெலன் டேவிட்சன் கூறியுள்ள விளக்கத்தின் மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

துபாயில் நேச்சர் 2010: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

துபாய்: துபாய் நகராட்சி சார்பில் ‘நேச்சர் 2010’ எனும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை அல் ஜடாஃப் பகுதியில் நடைபெற்றது.

துபாய் முனிசிபாலிட்டி கடந்த 1994-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் சுற்றுச்சுழல் விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தி வருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிகழ்வில் ஈடிஏ நிறுவன ஊழியர்கள், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில அமைப்புகள் பங்கேற்றன.

இந்த நிகழ்ச்சிக்கு ஈடிஏ ஜீனத் நிறுவனம், யூனியன் பேப்பர் மில், டல்ஸ்கோ, அல்பா எமிரேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அனுசரணை வழங்கியிருந்தன

29.10.10

அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவும் இல்லை : திருமாவளவன் அறிக்கை

காஷ்மீர் குறித்து எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவும் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் குரலை நெறிக்க முயற்சி செய்யும் மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம். பா.ஜ.க.வை திருப்திப்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசு இப்படி செயல்படுவது வெட்கக் கேடு. காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பது எல்லாரும் அறிந்த உண்மை.

அங்கு 2 இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகுதான் அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மத்திய உள்துறை மந்திரி தலைமையில் காஷ்மீருக்கு சென்ற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில் நானும் இடம் பெற்று, காஷ்மீரின் நிலைமையை நேரில் கண்டறிந்தேன்.

`இந்திய ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்' என்று அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் எங்களிடம் வெளிப்படையாக பேசினர். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, சோனியாகாந்தி, மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நடத்திய 2 கூட்டங்களில், காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்பதையும், அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன்.

காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவுமில்லை. யாரையும் தூண்டுவது போலவும் அவர் பேசவில்லை. காஷ்மீர் மக்கள் மற்றும் ஜனநாயக நாட்டமுள்ளவர்களின் எண்ணத்தின் எதிரொலிதான் அவரது கருத்தில் பிரதிபலிக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் இருந்த மவுனத்தை உடைத்த அருந்ததி ராயை நான் பாராட்டுகிறேன். அவருக்கு இந்த விவகாரத்தில் முழு ஆதரவு அளிக்கிறோம். ஜனநாயக அமைப்புகள், தலைவர்கள், அவருக்கு உறுதுணையாக இருந்து, பேச்சுரிமையை காப்பாற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

28.10.10

68 ஆயிரம் கஷ்மீரிகளை கொன்ற நாடு ஜனநாயக நாடா? குஜராத்தில் 2500 முஸ்லிம்களை கொன்ற நாடு மதச்சார்பற்ற நாடா? அருந்ததிராய் ஆவேசம்...!

டெல்லியில் ‘காஷ்மீருக்கு சுதந்திரம்தான் ஒரே வழி’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மனித உரிமைப் போராளியும் புக்கர் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளருமான அருந்ததி ராய் உரையாற்றினார்.அவர் உரையாற்றுவதற்கு முன்னதாக காஷ்மீரிகளின் மூத்த தலைவரான சையத் அலிஷா கிலானி மீது வெறியர்கள் சிலர் காலணி வீசி ரகளை செய்தனர். அதனை முன்னதாக குறிப்பிட்ட அருந்ததி ராய் “என் மீது யாருக்கேனும் காலணியை எறிய வேண்டுமானால் இப்பொழுது எறிந்து கொள்ளுங்கள்” எனக் கூறியவாறு தனது உரையைத் தொடங்கினார். காஷ்மீரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இடத்தை இந்திய காலனி யாதிக்கம் பிடித்துக் கொண்டது. காஷ்மீர், இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி அல்ல. காஷ்மீர் ஒருபிரச்சனைக்குரிய பகுதி தான் என்பதை ஐக்கிய நாடு கள் அவையில் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. 68 ஆயிரம் கஷ்மீரிகளைக் கொன்ற ஒரு நாட்டிற்கு ஜனநாயக நாடு என்று கூற உரிமையில்லை.


குஜராத்தில் 2500 முஸ்லிம்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கும் மதசார்பற்ற நாடு என்றுகூற தகுதியில்லை. வல்லமை மிகுந்த இந்திய ராணுவத்தினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடும் கஷ்மீரி இளைஞர்களையும், பெண் களையும், குழந்தைகளையும் பார்த்து ராயல் சல்யூட் செய்யா மலிருக்க முடியவில்லை என அருந்ததிராய் நிகழ்த்திய உரை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இக்கருத்தரங்கில் கவிஞர் வரவரராவ், மனித உரிமை ஆர்வலர் கள் ஷேக் ஷவ்கத் ஹுசைன், அமீத் பட்டாச்சார்யா, என்.வேணு, மாலெம், நஜீப் முபாரகி, சுஜாதோ பத்ரா, பேராசிரியர்கள் எஸ்.எ.ஆர் கிலானி மற்றும் ஜி.என்.ஸாயிபாபா ஆகியோர் உரையாற்றினர். இதனிடையே அருந்ததி ராய் உள்ளிட்டோரின் உரையை வைத்து பாஜக சர்ச்சையை கிளப்பியதை அடுத்து இந்த கருத்தரங்கில் உரையாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தலைநகர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


-அபுசாலிஹ்


26.10.10

அஜ்மீர் குண்டுவெடிப்பு: ஆர்.எஸ்.எஸ் இந்திரேஷ்குமார் கைதாகிறார்

புதுடெல்லி,அக்.26:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ் செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ்குமார் ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸால் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள இந்திரேஷ் குமாரிடம் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், தெளிவான தகவல்கள் கிடைத்தால் கைதுச் செய்யப்படுவார் எனவும் ஏ.டி.எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு ஆலோசனை நடத்திய ஜெய்பூர் குஜராத்தி சமாஜம் விருந்தினர் மாளிகையில் இவர்கள் தங்கியிருந்ததற்கான ஆவணங்களை போலீஸ் பரிசோதித்து வருகிறது.

குண்டுவெடிப்பிற்காக கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி இங்கு வைத்து இந்திரேஷ்குமார் பங்கேற்ற ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றுள்ளது. தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சுவாமி அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த ரகசிய கூட்டங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தவேண்டிய இடங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டங்களிலும் இந்திரேஷ்குமாரின் பங்கேற்புக் குறித்த விசாரணையில் தற்பொழுது ஏ.டி.எஸ் இறங்கியுள்ளது.

குஜராத்தி சமாஜம் விருந்தினர் மாளிகையில் செக்-இன் பதிவேட்டில் முகவரி எழுதிய நபரின் கையெழுத்து இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான சுனில் ஜோஷியுடையதுதான் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மனோஜ்சிங் என்ற பெயரில்தான் சுனில் ஜோஷி அறையை புக் செய்துள்ளார். சுனில் ஜோஷியின் தேவாஸ் என்ற இடத்திலிலுள்ள வீட்டில் வைத்து கண்டெடுக்கப்பட்ட் டயரியிலிலுள்ள தகவல்களையும் ஏ.டி.எஸ் பரிசோதித்து வருகிறது. தேவாஸில் தனது வீட்டில் வைத்து சுனில் ஜோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டிருந்தார்.

குண்டுவெடிப்பில் நேரடித் தொடர்புடைய சுனில் ஜோஷியை ரகசிய வெளியே கசியாமலிருக்க அவருடைய சக தோழர்களே கொலைச் செய்துள்ளனர் என்பதும் தெளிவாகியுள்ளது.

இந்தூரிலிருந்து சுனில் ஜோஷியும், லோகேஷ் சர்மாவும் சேர்ந்து வெடிக்குண்டு நிர்மாணிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே மார்க்கெட்டிலிருந்துதான் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைப்பதற்கான வெடிக்குண்டுகளும் வாங்கப்பட்டுள்ளன.

இந்திரேஷ் குமாருடன், தற்பொழுது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையிலுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கர்னல் புரோகித், பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோரையும் ஏ.டி.எஸ் விசாரணைச் செய்யும். அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த ரகசியக் கூட்டத்தில் இருவரும் பங்கெடுத்திருந்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

குஜராத் கலவரம்:சுப்ரீம் கோர்ட்டில் 2வது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது எஸ்ஐடி


டெல்லி,அக்.26:2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனக் கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தனது 2வது விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஷான் ஜாஃப்ரி கொலை வழக்கு உள்ளிட்ட 2002ல் குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக் கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

இந்த குழு தனது விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இக்குழு கடந்த மே மாதம் தனது முதல் கட்ட விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

அதன் பின்னர் நேற்று தனது 2வது அறிக்கையை சமர்ப்பித்தது. எஸ்ஐடி தலைவரான ஆர்.கே.ராகவன் இந்த அறிக்கையை சமர்ப்பித்தார். மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் அறிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்று எஸ்ஐடி தரப்பில் விசாரித்தபோது, மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளவை பகிரங்கமாக அறிவிக்கப்படக் கூடிய தகவல்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த 2வது அறிக்கையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முன்னதாக ஜாப்ரி கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜடாபியா, எம்.கே.தான்டன் ஆகியோரின் பங்கு குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தது எஸ்ஐடி என்பது நினைவிருக்கலாம்.

2வது விசாரணை நிலவர அறிக்கை இன்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று பரிசீலனைக்கு வரவுள்ளது

பாபர் மசூதி இடிப்பை உச்ச நீதி மன்றம் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் : உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஹ்மதி

புது டில்லி : 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை, "உச்சநீதிமன்றம் தடுக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டிருந்தால் தடுத்திருக்க முடியும்" என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஹ்மதி கருத்து தெரிவித்துள்ளார்.

அயோத்தி தீர்ப்பு குறித்த மக்கள் சமூகத்தின் நிலைப்பாடு எனும் தலைப்பில் இன்ஸ்டியூடூட் ஆப் ஆஃப்ஜக்டிவ் ஸ்டடிஸ் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பேசிய அஹ்மதி, பாபர் மசூதி இடிப்புக்கு முன் உச்சநீதிமன்றத்தில் அப்போதைய அட்டர்னி ஜெனரல் மிலன் பானர்ஜி மசூதி இடிக்கப்படுவதற்கு ஏராளமான சாத்தியக்கூறுகள் உண்டு என்றும் அந்நிலத்தை உடன் மத்திய அரசிடம் ஒப்படைத்து மசூதி இடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தும்படி உச்சநீதிமன்றத்தில் அப்போது இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் வெங்கடாச்சலையா மற்றும் ரேயிடம் வலியுறுத்தியதை நினைவூட்டினார்.

அட்டர்னி ஜெனரலின் கோரிக்கையை ஏற்று அந்நிலத்தை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்திருந்தால் பாபர் மசூதி இன்றும் அதே இடத்தில் இருந்திருக்கும் என்று கூறிய அஹ்மதி, அதற்குப் பதிலாக அடையாள கரசேவை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது தவறானது என்றும் பாபர் மசூதி இடிப்புக்காக கல்யாண் சிங்குக்கு வழங்கப்பட்ட ஒரு நாள் தண்டனை நகைப்புக்கிடமானது என்றும் கூறினார்.

மேலும் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பாகவே கருத முடியவில்லை என்றும் இந்திய அரசியல் சாசனம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றும் அஹ்மதி கூறினார். மேலும் இவ்விழாவில் பேசிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சையது சஹாபுதீன் உள்ளிட்ட பலர் இது முஸ்லீம் மற்றும் இந்து நம்பிக்கைக்கும் இடையிலான மோதல் அல்ல என்றும் அரசியல் சாசனம் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் தீர்ப்பு கொடுக்கபட வேண்டுமே தவிர குரான் மற்றும் கீதையின் அடிப்படையில் அல்ல என்றும் கூறினர்.

எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும் பால்தாக்கரேவுக்கு ராஜ்தாக்கரே எச்சரிக்கை

மும்பை: ராத்திரி எட்டரை மணி ஆகி விட்டால் என்ன நடக்கும் என்று எங்களுக்கும் தெரியும். அதையெல்லாம் வெளியில் சொல்ல வைத்து விடாதீர்கள். எங்களை தொடர்ந்து சீண்டிக் கொண்டிருக்காமல் எங்களுக்கு மக்கள் [^] தந்திருக்கும் அங்கீகாரத்தை மதிக்க முன்வாருங்கள் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு மகாராஷ்டிர [^] நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை வளர்த்து ஆளாக்கிய குருவான பால் தாக்கரேவுக்கு ராஜ் தாக்கரே நேரடியாக விடுத்திருக்கும் முதல் எச்சரிக்கை இது என்பதால் சேனா வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி சிவசேனாவை விட்டு விலகி தனிக் கட்சி கண்டார் ராஜ் தாக்கரே. அன்று முதல் இதுவரை பால் தாக்கரேவை அவர் விமர்சித்து ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை. இந்த நிலையில் முதல் முறையாக பால்தாக்கரேவுக்கு வார்னிங் கொடுத்துள்ளார் ராஜ்.

நேற்று மும்பை [^] யில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் ராஜ் தாக்கரே பேசுகையில், ராத்திரி எட்டரை மணிக்கு என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியும் (இப்படி சொல்லியபடியே தனது கை விரல்களை மது அருந்துவது போல செய்து காட்டினார் ராஜ்). எனவே தொடர்ந்து எங்களை சீண்ட வேண்டாம் என கூறிக் கொள்கிறேன்.

கடந்த காலத்தை தோண்டி எடுக்க ஆரம்பித்தால் நாங்களும் அதேபோல செய்வோம். மக்கள் ஏன் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை பற்றி யோசியுங்கள். நமக்கு ஏன் வாக்களிப்பதில்லை, மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவுக்கு ஏன் வாக்களிக்கிறார்கள் என்று யோசியுங்கள்.

சிவசேனாவின் செயல் தலைவராக உத்தவ் தாக்கரேவை நான்தான் நியமித்தேன் என்று பால்தாக்கரே கூறியிருப்பதில் உண்மை இல்லை. ஒரு வட்டத் தலைவரை நியமிக்கும் அதிகாரத்தைக் கூட எனக்கு பால் தாக்கரே தந்ததில்லை. அப்படி இருக்கையில் கட்சியின் செயல் தலைவரை நியமிப்பது என்பது இயலாத காரியம்.

கட்சியின் செயல் தலைவராக உத்தவ் வர வேண்டும் என விரும்பியவர் பால்தாக்கரேதான். அதற்கு நான் தடையாக இருப்பதாக உணர்ந்தார் அவர். சிவசேனா அவரது சொந்தக் கட்சி, அங்கு நமது கருத்தெல்லாம் எடுபடுமா. இதை உணர்ந்துதான் உத்தவ் பெயரை நான் முன்மொழிய வேண்டுமா என்று அவரிடம் கேட்டேன். மற்றபடி உத்தவை நான் நியமிக்கவில்லை என்றார் ராஜ்.

25.10.10

பர்தாவுக்குத் தடை - தாக்கரேவின் அரைவேக்காட்டுத் தனமான கருத்து! தாக்கரேவையும் கடவுளாகக் கருதும் சிலருக்காக இந்த பதிவு

சாம்னா - சிவசேனா கட்சியின் அதிகாரப் பூர்வ நாளேடு. இந்த நாளேட்டில் சில தினங்களுக்கு முன் எழுதப்பட்ட தலையங்கத்தில் சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே கடத்தல் குற்றங்களை தடுப்பதற்காக தனது மூளையை கசக்கி பிழிந்து ஒரு வழியை கண்டு பிடித்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து இருக்கிறார்.

அது வேறொன்றுமில்லை. கடந்த அக்டோபர் 15ஆம் தேதியன்று மும்பை சாந்தாகுரூசில் உள்ள மருத்துவமனையில் 2 மாத குழந்தை ஒன்று கடத்தப் பட்டு விட்டதாம். அந்த குழந்தையைக் கடத்தியவர் பர்தா அணிந்து இருந்தாராம். மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ள ரகசிய கேமராவில் இது பதிவாகியுள்ளதாம்.

இதைக் காரணமாகக் கூறி பர்தாவை தடை செய்ய கோரிக்கை வைத்து இருக்கிறார் குற்றங்களைத் தடுக்க நினைக்கும் மாபெரும் அறிவாளியான (?) தாக்கரே.

பாகிஸ்தான், ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவுக்கு கிரிக்கெட் விளையாட வரும்போது எதிர்ப்பு தெரிவிப்பது, ஆடுகளத்தை சேதப் படுத்துவது, ஐபிஎல் கிரிக்கெட் ஏல விவகாரத்தில் ஷாருக்கான் மற்றும் டெண்டுல்கருக்கு எதிராக விமர்சனம் செய்வது போன்றவை விளம்பரதிற்க்காக தாக்கரே செய்யும் கோமாளித் தனத்துக்கு உதாரணங்கள். அது போன்ற கோமாளித் தனமே இது என்ற போதிலும் தாக்கரேவையும் கடவுளாகக் கருதும் சிலருக்காக இந்த பதிவு.

குற்றத்தைத் தடுக்க வேண்டும் என்ற சமுதாய அக்கறை உள்ளவர் எந்தெந்த வழிகளில் குற்றத்தைத் தடுக்கலாம் என சிந்தித்து அறிவுரை கூற வேண்டுமே தவிர மத துவேசத்தில் சிந்திக்க மறந்து, மற்றவர்கள் எள்ளி நகையாடும் அளவுக்கு கருத்துக்களைக் கூறக் கூடாது. தாக்கரேவை கடவுளாகக் கருதும் நடிகர் நடித்து சமீபத்தில் வெளி வந்த திரைப்படத்திற்கு அதை தயாரித்தவரின் தொலைக் காட்சியில் வெளி வந்த ஒரு விளம்பரத்தில் நடிகர் தோன்றி, படப் பிடிப்பின் போது படத்தின் கதாநாயகியான உலக நாயகி (?) நடிகரின் முன்னால் வந்தவுடன் நடிகருக்கு தான் பயிற்சி செய்த அத்தனையும் மறந்து விட்டதாம். 60 வயது நடிகரையும் மறக்கடிக்கும் அளவுக்கு அந்த உலக நாயகியின் உடைகள்.

காற்றாட மேலே ஒரு ஆடையும், தொடையை காட்டிக் கொண்டு கீழே ஒரு ஆடையும் அணிந்து வரும் பெண்களாலேயே அளவுக்கதிகமான பாலியல் குற்றங்களும், வன்புணர்வுகளும் நடந்தேறுகின்றன. தாக்கரே சற்று சிந்தித்து கருத்து கூறி இருந்தால் உலக நாயகியையும், டூ பீஸ் ஆடைகளை அணியும் பெண்களையும் பர்தா அணியச் சொல்ல வேண்டாம் குறைந்த பட்சம் அந்த ஆடைகளை தடை செய்ய கோரிக்கை விடுக்கலாமே.


இது வரை இந்தியாவில் நடைபெற்ற ஆள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எத்தனை சதவீதம் பேர் பர்தா அணிந்து கொண்டு செய்கின்றனர் என்ற புள்ளி விவரத்தை தருவாரா இந்த தாக்கரே? சரி. தாக்கரேவின் ஆலோசனைகளை ஏற்று பர்தாவை தடை செய்தால் இனி இந்தியாவில் ஆள்கடத்தல் போன்ற குற்ற சமபவங்கள் ஒரு சதவீதம் கூட நடக்காது என தாக்கரே உத்தரவாதம் தரத் தயாரா?

காஞ்சி சங்கராசார்யா, நித்யானந்தா போன்ற (ஆ)சாமிகள் பக்தியின் பெயரால் மக்களை ஏமாற்றி காவி உடை தரித்து காமக் களியாட்டங்களில் ஈடுபட்டது உலகறிந்த விஷயம். இந்த செயலுக்காக காவி உடையத் தடை செய்யக் கோருவாரா பால் தாக்கரே? அர்ச்சகர் தேவநாதன் கோயில் கருவறையில் நடத்திய காமலீலைகள் சிடி போட்டு விற்கும் அளவுக்கு புகழ் பெற்ற நிலையில் அர்ச்சகர்கள் பதவியையே தடை செய்யக் கோருவாரா பால் தாக்கரே?

மும்பை மராத்தியர்களுக்கே என கோஷம் போடும் தாக்கரே பீகாரில் இருந்தோ, தமிழ்நாட்டில் இருந்தோ யாராவது ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள சென்றால் அவர்களை தாக்கேரேவின் சேனைகள் கொலை செய்யும் அளவுக்கு தாக்குதல் நடத்துவர். ஆனால் அயோத்தி போன்ற சில விவகாரங்களில் மட்டும் இவரது பாசம் மாநிலம் கடந்து எட்டிப் பாருக்கும். தாக்கரேவை கடவுள் எனக் கூறியவர் கூட என் தந்தை ஒரு மராத்தியர் என்ற அடையாளத்துடனே தாக்கரேவை சந்தித்தது குறிப்பிடத் தக்கது.

மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளை அடிப்பதால் பிஸ்கட்டையும், ரயில், பஸ்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என எல்லா இடத்திலும் குற்றங்கள் நடப்பதால் இவை அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்று அரைவேக்காட்டுத் தனமாக கருத்து கூறாமல் குற்றங்களைத் தடுக்க சிறப்பான ஆலோசனைகளையும், குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கக் கோரியும் தாக்கரே போன்றோர் கருத்து கூறினால் வரவேற்போம்.
- அப்துர் ரஹ்மான், ஓமா

அஜ்மீர் குண்டுவெடிப்பு: குற்றப்பத்திரிகையில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பெயர்

ஜெய்பூர்,அக்.24:ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமாரும் ஆறு முக்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும் அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பான ரகசியக் கூட்டத்தில் பங்கெடுத்ததாக, அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐந்து ஆர்.எஸ்.எஸ், அபினவ் பாரத் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்புப்படை குறிப்பிட்டுள்ளது.

இந்திரேஷ் குமாருக்கு குண்டுவெடிப்பில் தொடர்புக் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், ஆனால் இவ்வழக்கில் அவரைகுற்றவாளியாக்கவில்லை எனவும் 806 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் ஏ.டி.எஸ் கூறுகிறது.

2005 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி குஜராத்தி விருந்தினர் மாளிகையில் நடந்த ரகசியக் கூட்டத்தில்தான் இந்திரேஷ் குமாரும், இதர ஆறு முக்கிய் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளும் பங்கேற்றுள்ளனர்.

வெளியானது உண்மை மட்டுமே எனவும், இதனை அங்கீகரிக்க ஆர்.எஸ்.எஸ் தயாராக வேண்டுமெனவும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். சிறிது காலம் கழிந்தால் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்களும் அவர்களின் பங்கும் பின்னணியும் வெளிவரும். சத்தியம் வெளிவரும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என அசோக்கெலாட் தெரிவித்தார்.

அதேவேளையில், தனது பெயர் அரசியல் தூண்டுதலின் காரணமாகவே குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திரேஷ்குமார் தெரிவிக்கிறார்.

தேசத்துரோகிகளை(?) பாதுகாக்கும் அரசு, தேச விசுவாசிகளூக்கெதிராக(?) போர் புரிகிறது. அநீதிக்கெதிராக நீதிமன்றத்தை அணுகுவோம் இவ்வாறு இந்திரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்திரேஷ்குமாரின் பெயர் குற்றப்பத்திரிகையில் இல்லை என ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது. இத்தகையச் செய்திகளை சட்டரீதியாக எதிர்க் கொள்வோம் என ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தெரிவிக்கிறார்

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு தடை

உதகை, அக். 24: ஆர்எஸ்எஸ் நிறுவன தினத்தையொட்டி உதகையில் நடத்த திட்டமிட்டிருந்த அணிவகுப்பு ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 186 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) துவங்கியது விஜயதசமி தினத்தில் என்பதால் ஆண்டுதோறும் விஜயதசமியை ஒட்டி, அந்த அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவது வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் குன்னூரிலும், அதற்கு முந்தைய ஆண்டில் கோத்தகிரியிலும் இத்தகைய அணிவகுப்பு ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன.

நடப்பாண்டுக்கான ஊர்வலத்தை ஞாயிற்றுக்கிழமையன்று உதகையில் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதி கோரியிருந்தது. உதகை மத்திய பேருந்து நிலைய வளாகத்திலிருந்து காந்தி மைதானத்தை வந்தடைந்து, அங்கு பொதுக்கூட்டம் நடைபெறுமென மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் என்.கே.கிருஷ்ணமூர்த்தி அறிவித்திருந்தார்.

ஆனால், ஊர்வலம் செல்ல அவர்கள் கேட்டிருந்த பாதையை ஒதுக்க காவல் துறையினர் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், தடையை மீறி ஊர்வலத்தை நடத்துவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அறிவித்திருந்ததால், நகரில் ஞாயிற்றுக்கிழமையன்று பெரும் பரபரப்பு நிலவியது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமார் தலைமையில் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட போலீஸôரும், அதிவிரைவுப் படையினரும் குவிக்கப்பட்டனர். மத்திய பேருந்து நிலையப் பகுதியில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் உதகை வந்திருந்தனர். அனைவரும் சீருடைகளுடன் இருந்தனர். பிற்பகல் 2.30 மணி வரை காவல்துறையினர் அனுமதி அளிக்காததால் தடையை மீறி ஊர்வலம் செல்ல முடிவெடுத்தனர்.

24.10.10

அவரை நிர்வாணமாக்கி தீவைத்துக் கொளுத்துவதை நான் கண்டேன்' - ஸாகியா ஜாஃப்ரியின் கண்ணீர் சாட்சியம்

புதுடெல்லி,அக்.24:தனது கணவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டுபோய் நிர்வாணமாக்கிய பிறகு அவருடைய உடல் உறுப்புக்களை வெட்டி தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்வதை தான் நேரடியாக கண்டதாக, குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா கண்ணீர் சாட்சி அளித்துள்ளார்.

குல்பர்கா சொசைட்டி கூட்டு இனப் படுகொலையில் விசாரணை நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கும் பொழுதுதான் கண்ணீர் மல்க இதனைத் தெரிவித்தார் ஸாகியா. 2002 பிப்ரவரி 22 ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது.

ஜாஃப்ரி உள்ளிட்ட 69 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி வழக்கில் நரேந்திர மோடியை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்திருந்தது.

"கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து பந்த் அறிவிக்கப்பட்டதால் வன்முறைக்களமாக மாறியது சூழல். அதிகாலை முதல் அக்கம்பக்கத்து முஸ்லிம்கள் எங்கள் வீட்டை நோக்கி வரத் துவங்கினர்.

அவர்களை ஹிந்துத்துவாவாதிகளின் தாக்குதலிருந்து பாதுகாக்க போலீஸை அழைக்க அவர்கள் ஜாஃப்ரியிடம் கோரினர்.

காலை 7.30 க்கு அவர்களை வீட்டிற்குள் அழைத்த ஜாஃப்ரி, ஒன்றாக இருக்கக் கூறியதுடன் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் எனக் கூறினார்.

இந்த நேரத்திலிருந்தே ஜாஃப்ரி தொலைபேசியில் பலரையும் அழைக்க ஆரம்பித்தார். 11.30 மணிக்கு போலீஸ் கமிஷனர் பி.ஸி.பாண்டே வீட்டிற்கு வந்து ஜாஃப்ரியை வெளியே அழைத்தார். இதர முஸ்லிம்களை காப்பாற்றுவதற்கு பதிலாக தனது காரில் ஜாஃப்ரியையும், குடும்பத்தினரையும் மட்டும் அழைத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதாக வாக்குறுதியளித்தார் பாண்டே.

ஆனால், மிரண்டுபோன இதர முஸ்லிம்களை விட்டுச்செல்ல ஜாஃப்ரி மறுத்துவிட்டார். பாண்டே திரும்பிச் சென்றபிறகு, வன்முறையாளர்கள் சிறிய கேட்டின் வழியாக வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் வீட்டை நெருங்கிய பொழுது வீட்டின் மாடிக்கு செல்லுமாறு என்னிடம் கூறினார் ஜாஃப்ரி.

கோஷங்களை எழுப்பியவாறு வந்த ஆயுதங்கள் ஏந்திய கும்பல் ஜாஃப்ரியிடம் வெளியே வருமாறு கூறினர். தான் வெளியே வருவதாகவும், ஆனால் தனது வீட்டில் புகலிடம் தேடி வந்தவர்களை ஒன்றும் செய்யாதீர்கள் எனவும் ஜாஃப்ரி வன்முறையாளர்களிடம் கூறினார்.

வெளியேவந்த ஜாஃப்ரியை அவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஆடைகளை கீறி எறிந்தனர். பின்னர் அவரை நிர்வாணமாக்கி அவருடைய உடல் உறுப்புக்களை வெட்டி எறிந்து தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்தனர்." -இதனை சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி பி.யு.ஜோஷியின் முன்னால் ஸாகியா தெரிவித்தார்.

"ஆனால் போலீஸ் வந்தது மாலை 5.30 மணிக்காகும். வீட்டின் உள்ளே ஒழிந்திருந்த எங்களை வெளியேவருமாறு கூறினர். 18-19 உடல்கள் வீட்டின் வராந்தாவிலும் இதர இடங்களிலும் கிடந்தன. அதில் ஒன்று, தங்களுடைய அயல் வீட்டாரான கஸம்பாயின் கர்ப்பிணியான மருமகளாவார். அவருடைய வயிறு கிழிக்கப்பட்டு அதிலிருந்து சிசு வெளியே வந்திருந்தது.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அக்கிரமக்காரர்கள்தான் இந்தக் கொலைகளை நடத்தினர்." இவ்வாறு ஸாக்கியா கூறினார்.

அதேவேளையில், குறுக்கு விசாரணையின்போது ஸாகியாவுக்கு மனித உரிமை ஆர்வலரான டீஸ்டா செடல்வாட், முன்னாள் போலீஸ் அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமார், வழக்கறிஞர் ஷொஹைல் திர்மிஜி, ரைஸ்கான் பத்தான் ஆகியோருடன் தொடர்பிருப்பதாக கூற முயன்றார் எதிர்தரப்பு வழக்கறிஞர் மிதேஷ் அமீன். ஆனால், ஸாகியா அதனை மறுத்தார்.

டீஸ்டா செடல்வாட்டிடமிருந்து ஒரு உதவியையும் தான் பெறவில்லை எனவும், பல காலமாக அவரை தான் காணக்கூட செய்யவில்லை எனவும் ஸாகியா தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் ஸாகியா கண்ட ஏதேனும் உடல் சேதமாக்கப்பட்ட இறந்துப்போன ஒருவரின் பெயரைக் கூற இயலுமா என எதிர் தரப்பு வழக்கறிஞர் மிதேஷ் அமீன் கேள்வி கேட்டபொழுது, தனது கணவரை கொலைச் செய்த பாதகர்களிடம்தான் இதனைக் கேட்கவேண்டும் என ஸாகியா பதிலளித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளி
ழ்

23.10.10

அமெரிக்க - ஈராக் படையினரின் சித்திரவதைகள் - ஆயிரக்கணக்கில் வீடியோ வெளியானது!

ஈராக் சிறைக்கைதிகளை ஈராக் மற்றும் அமெரிக்க படைகள் துன்புறுத்தும் 391,831 புதிய ஆதாரங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் நேற்று வெளியிட்டுள்ளது.

DAT 36 என்ற படை நடவடிக்கை மூலம், 2006 ஜூலை 7ம் திகதி வடபக்தாத்தின் டார்மியா எனும் தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டகைதிகள், அன்றைய இரவு பொழுதில் மணிக்கணக்கில் மிக மோசமாக துன்புறுத்தபப்ட்ட சம்பவங்கள், இவ் ஆதாரங்களில் பெரும் பங்கு வகிக்கின்றன.

கண்களை கட்டிவைத்து அடித்தல், முக உறுப்புக்களையும், ஏனைய உடல் அங்கங்களையும் மிகக்கொடூரமாக சிதைத்தல், மின்சாரம் பாய்ச்சல், வெந்நீர் பாய்ச்சல் என கட்டுக்கடங்காத சித்திரவதைக்காட்சிகள் 'the Secret Iraq Files' எனும் இவ்வெளியீட்டில் இடம்பெற்றுள்ளன.

எனினும் இப்பதிவுகளில், அமெரிக்க இராணுவத்தினர் இருப்பதை, பெண்டகன் இராணுவ தலைமையகம் முற்றுமுழுதாக மறுத்துள்ளது.
இச்சித்திரவதைகளுக்கும் தமக்கும் தொடர்புமில்லை என அறிக்கைவெளியிட்டுள்ளது.

2004 ஜனவரி 1 ம் திகதி தொடக்கம், 2010 ஜனவரி 1ம் திகதி வரை ஈராக்கில் சந்தேகத்தின் பெயரில் தடுத்துவைக்கப்பட்ட அனைத்து சிறைக்கைதிகள் அனுபவித்த சித்திரவதைகளும் குறித்த தொகுப்பில் இடம்பிடித்துள்ளன.

இவற்றில் அதிகமானவற்றில், ஈராக்கின் கடைநிலை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றன. 15,000 படுகொலை சம்பவங்களும் இதில் அடங்குகின்றன.

இத்தொகுப்பில் ஆயிரக்கணக்கான குற்றச்செயல்கள் வீடியோ காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. (இதயம் பலவீனமானோர் பார்க்க வேண்டாம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் செல்போன் மூலம் கல்வி

அமீரகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய வசதி அறிமுகம். இனி மாணவர்கள் தங்கள் செல்போனிலேயே பாடங்களை படித்துக்கொள்ளலாம், M-Education என்ற இந்த சேவை விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.

அமீரகத்தின் அரசு செல்போன் நிறுவனமான எதிசலாத், கல்வி கற்கும் முறையில் நவீன நுட்பங்கள் மூலம் புதுமைகளைப் புகுத்திவரும் பிளாக் போர்டு (Blackboard Inc) என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த M-Education சேவையை வழங்கப்போகிறது, அபுதாபி பல்கலைகழகத்தில் வரும் ஜனவரி 2011ஆம் ஆண்டில் இருந்து இது சோதனை முறையில் நடைமுறைக்கு வருகின்றது.

இந்த Blackboard Mobile Learn solution மூலம் மாணவர்களும் ஆசிரியர்களும் பாடங்களையும், பாடம் சம்பந்தப்பட்ட பிற தகவல்களையும் நினைத்த நேரத்தில் தங்களின் செல்போன் மூலம் பெறலாம்.

அமீரகத்தில் 99 சதவிகிதத்தை அடைந்துள்ள எதிசலாத் நிறுவனத்தின் 3.5G மொபைல் அலைவரிசை மூலம் இந்த சேவை வழங்கப்படவுள்ளது. மேலும் Android phone, BlackBerry, iPhone மற்றும் iPad. போன்ற அனைத்து மொபைல் சாதனைகள் மூலமும் எளிதில் பயன்படுத்தத்தக்கது.

இதற்கான் ஒப்பந்தம் எதிசலாத், பிளாக் போர்ட் மற்றும் அபுதாபி பல்கலைக் கழக அதிகாரிகளிடையே கையெழுத்திடப்பட்டுள்ளது.

இது குறித்து எதிசலாத் உயரதிகாரி அப்துல்லா ஹஷிம் தெரிவிக்கையில் இந்த திட்டம் எதிசலாதிற்கு மட்டுமல்ல அமீரக கல்வி சமுதாயத்திற்கே ஒரு மிகமுக்கிய நிகழ்வு. இதன் மூலம் அமீரகத்தின் கல்வி முறை அதன் அடுத்த கட்டத்திற்கு புதிய பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறினார்

அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!

அயோத்தியில் ராமர் கோயில் ராம் ஜன்மபூமி நியாஸ் என்ற அமைப்பால் கட்டப்படும் என்ற சாந்த் உச்சதிகார் சமிதியின் அறிவிப்புக்கு நிர்மோகி அகாரா தலைவர் மஹந்த் பாஸ்கர் தாஸ் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதன் மத அமைப்புமான விசுவ இந்து பரிஷத்தும் இந்தப் பிரச்சனையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று தாஸ் எச்சரித்துள்ளார். சாந்த் உச்சதிகார் சமிதி என்ற விசுவ இந்து பரிஷத்தின் சாமியார்கள் பிரிவுதான் ராமர் கோயில் இயக்கதத்தை நடத்தி வருகிறது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நிர்மோகி அகாரா அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்று கூறிய தாஸ், பிரச்சனைக்குரிய இடத்தின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் நிர்மோகி அகாராவுக்கே உரிமை உண்டு என்று கோருவோம் என்றும் அவர் கூறினார். செப்டம்பர் 30ஆம் தேதியன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தற்போதைய கோயில் ராம் லாலா விராஜ்மான் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அந்த அமைப்புக்காக நீதிமன்றத்தில் வாதாடியவர் ஆர்எஸ்எஸ்சைச் சார்ந்தவர் என்றும் தாஸ் கூறினார்.

பிரச்சனைக்குரிய இந்த இடத்தை உயர் நீதிமன்றம் எந்த தனி நபருக்கோ அல்லது ஆர்எஸ்எஸ்ஸிற்கோ வழங்கவில்லை என்பதை சங்பரிவாரத்திற்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன் என்றும் தாஸ் கூறினார். மத்திய டுமிற்குக் கீழே உள்ள பகுதிகள் ஹிந்துக்களுக்கு என்றுதான் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

பிரச்சனைக்குரிய நிலத்தின் உரிமை தங்களுக்குக் கிடைத்துவிட்டதாக எண்ணிக் கொள்ளும் இந்துக்களில் மிகச்சிலரை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விசுவ இந்து பரிஷத் ஆகியவை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீண்டும் ஒரு முறை நன்றாக ஆய்ந்து கொள்ளட்டும் என்றும் தாஸ் கூறினார்.

ராம் சபுதரா மற்றும் சீதா ரஸோய் ஆகியவை நிர்மோகி அகாராவுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பாகம் ராம் லாலாவுக்கும் பொதுவாக இந்துக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே எங்களிடம் மூன்றில் ஒரு பாகம் உள்ளது. ராம் லாலா விராஜ்மானுக்கு நெருக்கமான இந்துக்கள் நாங்கள்தான் என்பதால், ராமர் கோயிலைக் கட்டும் உரிமை எங்களுக்கே உள்ளது என்றும் தாஸ் கூறியுள்ளார்.

சாந்த் உச்சதிகார் சமிதி மற்றும் ராம் ஜன்மபூமி நியாஸ் கோவா மற்றும் புது டில்லியில் விசுவ இந்து பரிஷத்தால் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை. அவை இரண்டும் ஆர்எஸ்எஸ்ஸின் நிழல் அமைப்புகள் என்று குற்றம் சாட்டிய தாஸ், இத்தகைய குழுக்களை நாங்கள் அங்கீகரிப்பதில்லை. அயோத்தியில் உள்ள மக்களுக்கோ, பொதுவாக இந்துக்களுக்கோ அவர்களால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை என்றும் தாஸ் கூறினார்.

தன்னுடைய நிலையை அகில இந்திய அகாரா பரிஷத்தின் தலைவர் மஹந்த் கியான் தாஸும் ஆதரிப்பதாக பாஸ்கர தாஸ் கூறினார். இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாதவர்கள், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவறாக விங்கிக் கொண்டு ராமர் கோயிலை கடத்திச் செல்ல முயல்கின்றனர். அத்தகையோர் தொடக்கம் முதலே இதற்காக முயன்று கொண்டுள்ளனர். தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு புதிய வியாக்கியானங்களை அவர்கள் அளிக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்றும் பாஸ்கர தாஸ் கூறினார்

21.10.10

பால்தாக்கரேக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதே இந்துத்துவாவினரின் வேலையாகிவிட்டது. அவ்வப்போது இஸ்லாத்திற்கும் , முஸ்லிம்களுக்கும் எதிராக ஏதாவது ஒன்றைக் கூறி அமைதியைக் கெடுத்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்துவதே இந்துத்துவாவினரின் ஒரே குறிக்கோளாகும்.

இந்த அடிப்படையில்தான் அடுத்த சர்ச்சையை இந்துத்துவா வெறியன் சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே கிளப்பியுள்ளார்.

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பால்தாக்கரே தமது கட்சி ஏடான சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளார். பர்தாவை தடைசெய்ய வேண்டும் என்பதற்கு பால்தாக்கரே கூறியுள்ள காரணம்தான் முட்டாள்தனமானதாகும்.

சாந்தாகுரூசில் வி.என்.தேசாய் மாநகராட்சி மருத்துவமனையில் பிறந்து இரண்டு மாதமே ஆன ஆண்குழந்தையை கடந்த பதினைந்தாம் தேதி பர்தா அணிந்த ஒரு பெண் திருடிச் சென்று விட்டாராம் . இதன் காரணமாகத்தான் திருட்டிற்குப் பயன்படும் பர்தா எனும் ஆடையை தடைசெய்ய வேண்டும் என்ற அறிவுப்பூர்வமான(?) காரணத்தை பால்தாக்கரே கூறியுள்ளான்.

பர்தாவை தடைசெய்ய வேண்டும் என்பதற்கு பால்தாக்கரே கூறியுள்ள காரணம் மிகவும் முட்டாள்தனமானதாகும். பர்தா என்பது பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் தரக்கூடிய ஒரு ஆடையாகும். இந்த கண்ணியமிக்க ஆடையை அணிந்து ஒருவர் ஒரு தவறை செய்து விட்டால் அந்த ஆடையையே தடைசெய்ய வேண்டும் என்பது முட்டாள்தனமானதாகும்.

எத்தனையோ பேர் போலீஸ் அதிகாரி போல் சீருடை அணிந்து மக்களை ஏமாற்றி பலகேடுகெட்ட காரியங்களைச் செய்கின்றனர். மேலும் வங்கி அதிகாரிகளைப் போல் சீருடை அணிந்து மிகப் பெரும் மோசடியில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் கூட வருமான வரித்துறை அதிகாரிகளைப் போல் நடித்து ஒரு வீட்டில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது பத்ரிகைகளில் பரபரப்பான செய்தியாக வெளிவந்துள்ளது.

பல்வேறு துறைகளில் உள்ளவர்களின் சீருடைகளை அணிந்து சமூகவிரோதிகள் பல்வேறு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அனைத்து சீருடைகளையும் தடை செய்ய வேண்டுமென்று பால்தாக்கரே கூறுவரா?

காவியாடை அணிந்து எத்தனையோ பேர் காமலீலைகளில் ஈடுபட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்டு ஊடகங்களால் கேவலப்படுத்தப்படுகின்றனர். எனவே காவியாடை அணிவதற்கு தடைவிதிக்க வேண்டுமென்று பால்தாக்கரே கூறுவாரா?

பர்தா என்ற கண்ணியமிக்க ஆடையை அணிவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கூறுவதின் மூலம் அமைதியாய் உள்ள முஸ்லிம் சமுதாயத்தை தூண்டிவிட்டு பெரும் கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்பதே பால்தாக்கரே போன்ற இந்துத்துவவாதிகளின் நோக்கமாகும்.

எனவே இதுபோன்ற சமூகவிரோத கருத்துக்களைத் தெரிவித்து முஸ்லிம்களின் கோபத்தை தூண்டும் பால்தாக்கரே மீது மத்திய அரசும், மகராஷ்டிர மாநில அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் இந்திய அளவில் முஸ்லிம்கள் மாபெரும் போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்கிறோம்.

இப்படிக்கு

ஆர் ரஹ்மதுல்லாஹ்

மாநிலத் துணைத் தலைவர்

கர்காரே படுகொலை:பதில் அளிக்க போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை,அக்.21:மும்பை தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படைத் தலைவர் ஹேமந்த் கர்காரேயின் கொலையின் பின்னணியில் ஹிந்துத்துவா சக்திகள் செயல்பட்டுள்ளன என்பதனை சுட்டிக்காட்டி சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் பதில் அளிக்க மும்பை போலீஸ் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பீகார் மாநில எம்.எல்.ஏக்களான ராதாகாந்த் யாதவும், ஜோதி பெடேக்கரும் சமர்ப்பித்த மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மும்பை தாக்குதலின்போது காமா மருத்துவமனையில் நடந்த தாக்குதலுக்கு காரணம், அஜ்மல் கஸாபோ அல்லது அபூ இஸ்மாயிலோ காரணமல்ல எனவும், அத்தாக்குதலின் பின்னணியில் அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புதான் செயல்பட்டுள்ளது எனவும் ராதாகாந்த் யாதவ் தான் அளித்த மனுவில் கூறியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் அதற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளான அபினவ் பாரத் பயங்கரவாதிகளை கர்காரே கைதுச் செய்திருந்தார்.இதற்கு பழிவாங்க அபினவ் பாரத் கர்காரேக்கு குறிவைத்தது.

முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலான எஸ்.எம்.முஷ்ரிஃப் தனது கர்காரேயைக் கொன்றது யார்? என்ற நூலிலும் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக யாதவ் குற்றஞ்சாட்டுகிறார். இதனைக் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தவேண்டும் என ராதாகாந்த் யாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

முஷ்ரிஃப் எழுதிய புத்தகங்களில் உண்மைகளல்ல, அபிப்ராயங்கள்தான் உள்ளன என அரசு தரப்பில் வாதாடிய துணை சோலிசிட்டர் ஜெனரல் டாரியஸ் கம்பாட்டா வாதிட்ட பிறகும் நீதிமன்றம் அதனை அங்கீகரிக்கவில்லை.

கர்காரேயின் மரணத்தைக் குறித்து வேறு சிலரும் சந்தேகத்தை முன்வைத்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், பொறுப்பான போலீஸ் அதிகாரி இதற்கு பதிலளிக்கவேண்டுமென உத்தரவிட்டது.

இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நவம்பர் 29 ஆம் தேதி இதற்கு பதில் அளிக்கப்படும் என அரசுதரப்பு வழக்கறிஞர் பி.எ.பால் அறிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

எதிரியின் நோக்கம் ஈரானும், இஸ்லாமுமாகும் - காம்னஈ

டெஹ்ரான்,அக்.21:ஈரானுடன் இஸ்லாமும் எதிரியின் லட்சியம் என ஈரானின் ஆன்மீகத் தலைவர் காம்னஈ தெரிவித்துள்ளார். கும் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்களிடம் உரை நிகழ்த்துகையில் காம்னஈ இதனை தெரிவித்தார்.

ஈரானின் புரட்சியை சீர்குலைக்க நாடுபவர்கள் குறிவைப்பது இரண்டாகும். ஒன்று ஈரான் மக்களின் மதமும் இரண்டாவதாக புரட்சியுடனான ஈரான் மக்களின் சமர்ப்பணமுமாகும்.

மத அடிப்படையில் அல்லாத புரட்சியால் எதிரிகளின் சதித் திட்டங்களை எதிர்த்து நிற்கமுடியாது என்பதை அவர்களுக்கு நன்றாகவே தெரியும். மதத்தின் அடிப்படையில் வார்த்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் நிர்பந்தங்களுக்கு அதிகாரத்தின் அகங்காரத்திற்கு அடிபணியாது என அவர்கள் புரிந்துக் கொண்டார்கள்.

ஈரான் மக்கள் புரட்சியை எப்பொழுதும் ஆதரித்தே வந்துள்ளனர். எல்லாத் துறையிலும் ஈரான் மக்களின் பரிபூரண ஆதரவும், அரசும் மக்களுக்குமிடையே ஐக்கியமும் தொடர்ந்து நீடிக்காவிட்டால் எதிரிகளின் சதித்திட்டங்களை எதிர்த்து முறியடிக்க முடியாது என்றும் காம்னஈ ஈரான் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

பர்தாவை தடை செய்ய வேண்டும்!- சிவசேனா கோரிக்கை

மும்பை,அக்,20:முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா எனப்படும் பர்தாவைத் தடை செய்ய வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 15-ம் தேதியன்று புறநகர் சாந்தாகுரூஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து பர்தா அணிந்த பெண்ணால் இரண்டரை மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குழந்தையை திருடுவதற்கு பர்தா பயன்படுத்தப்படுகிறது எனில் சட்டப்படி அதைத் தடை செய்ய வேண்டும் என சிவசேனை பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பர்தாவையும், உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான ஆடைகளையும் பிரெஞ்சு அரசு தடை செய்துள்ளதை சாம்னா பத்திரிகை பாராட்டியுள்ளது. பர்தாவை தடைசெய்ய புரட்சிகர நடவடிக்கையை பிரெஞ்சு அதிபர் எடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துருக்கியிலும் கமால் பாஷா, பர்தாவுக்கு தடை விதித்தார். இந்தியாவில் மட்டும் ஏன் இந்த நிலை என்று சாம்னா பத்திரிகையில் வெளியான தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது

அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?

முஸ்லீம் விரோத அரசு வங்கிகள்

அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?

நீங்கள் குடியிருக்கும் பகுதியை அபாயகரமான பகுதி என்று அறிவித்து, அங்கே வசிப்பவர்கள் யாரும் வங்கிக் கணக்கு தொடங்க முடியாதென்று சொன்னால் நீங்கள் சகித்துக் கொள்வீர்களா? மதச்சார்பற்ற குடியரசு என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்தியாவில் அரசு வங்கிகள் முஸ்லீம்களுக்கு எதிராக இத்தகைய புறக்கணிப்பை அமலாக்கி வருகின்றன.

கல்வி உதவித் தொகை பெறும் பொருட்டு சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு விண்ணப்பித்த 90,000 முஸ்லீம் மாணவர்களுடைய விண்ணப்பங்கள் ஆந்திராவில் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பீஹாரில் வங்கிகள் மறுத்ததால் 50,000க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் அரசின் உதவித் தொகையை இழந்துள்ளனர். அஸ்ஸாம், மேற்கு வங்கம், உ.பி., கர்நாடகா என நாடு முழுவதிலும் முஸ்லீம் மாணவர்கள் இதே நிலைக்கு ஆளாகியுள்ளனர். அரசு வங்கிகளில் கடன் பெறுவது மட்டுமின்றி கணக்குத் தொடங்குவதும்கூட முஸ்லீம்களுக்கு இயலாததாகிவிட்டது என்ற புகாரை தேசிய சிறுபான்மை கமிசன் விசாரிக்கப் புகுந்தபோதுதான், முஸ்லீம்கள் வாழும் பகுதிகள் பலவற்றை “அபாயகரமான பகுதிகள்” (Red Zones) என்று அரசு வங்கிகளே ஒதுக்கி வைத்திருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமானது.

நகரங்களில் மற்ற பிரிவினருடன் கலந்து வாழமுடியாமல் ஒதுக்கப்படுவதனால்தான் தலித் மக்களும் முஸ்லீம்களும் குறிப்பிட்ட சில பகுதிகளில் கூடி வாழும்படி நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். வர்க்கரீதியிலும் இவர்கள்தான் நாட்டின் ஏழ்மையான பிரிவினர். “ஏழ்மையான பகுதிகளில் கடனை வசூலிப்பது சிரமம் என்பதனால்தான் இவ்வாறு வகைப்படுத்துகிறோம், இதில் மதத்துவேசம் இல்லை” என்று தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றன வங்கிகள். கடன் கொடுப்பது இருக்கட்டும், மாணவர்களின் உதவித் தொகையை வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்வதில் என்ன அபாயம்? ஏழ்மைக்கு நிவாரணமாக கல்வி உதவித்தொகை! வங்கிச் சேவையை மறுப்பதற்குக் காரணம்- அதே ஏழ்மை!

தேசிய சிறுபான்மை கமிசன் ஜூலை 28 அன்று அரசு வங்கிகளுக்கு அனுப்பிய கடிதத்தில், ரிசர்வ் வங்கிச் சுற்றறிக்கையின்படி பின்தங்கிய சமூகப் பிரிவினருக்கு எளிய முறையில் சேமிப்புக் கணக்குகளை உருவாக்கித் தரவேண்டுமென வலியுறுத்தியது. ஆயினும், ரிசர்வ் வங்கியிடமிருந்து அவ்வாறு எந்த சுற்றறிக்கையும் வரவில்லையென்று முஸ்லீம் மாணவர்களிடம் புளுகியிருக்கின்றனர், வங்கி அதிகாரிகள்.

சரியான வேலை வாய்ப்புகளோ, தரமான கல்வியோ கிடைக்காததனால், தலித் மக்களைப் போலவே சமூகத்தின் மிகப் பின்தங்கிய நிலையில்தான் பெரும்பான்மை முஸ்லீம்கள் உள்ளனர் என்கிறது, சச்சார் கமிட்டி அறிக்கை. அரசு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, சிறு வணிகம் அல்லது சுயதொழில் செய்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள முஸ்லீம் மக்களுக்கு சிறு கடன்களும், வங்கிச் சேவைகளும் அத்தியாவசியமானவை. வங்கிச் சேவைகளை மறுப்பதென்பது அவர்களை வாழவிடாமல் செய்வதாகும். இதனை ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன. நாடு முழுவதிலும் முஸ்லீம்களின் சேமிப்புக் கணக்கு எண்ணிக்கை இந்த வருடம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. முஸ்லீம்களின் வங்கிக் கணக்குகள் அஸ்ஸாமில் 47%மும், கர்நாடகாவில் 46.2%மும், மேற்கு வங்கத்தில் 17.44%மும், கேரளாவில் 6.90% குறைந்துள்ளன. சட்டத்தில் என்ன எழுதி வைத்திருந்தாலும் இந்து சமூகத்திலும் அதிகார வர்க்கத்திலும் ஊடுருவியிருக்கும் முஸ்லீம் விரோத உளவியல்தான் நடைமுறையில் செயல்படுகிறது.

முஸ்லீம்களை சமூகப் பொருளாதார புறக்கணிப்பு செய்து, இரண்டாம்தர குடிமக்களாக்கி அடிபணியச் செய்யவேண்டும் என்ற இந்துவெறி பாசிஸ்டுகளின் கொள்கையும், ஏழைகளுக்கு வங்கிச் சேவையை மறுக்கும் புதிய தாராளவாதக் கொள்கையும் ஊடும் பாவுமாகப் பின்னியிருக்கின்றன. மதத்துவேசம் வர்க்கத்துவேசத்திற்குள் மறைந்து கொள்கிறது. வர்க்கத்துவேசம் மதத்துவேசத்தால் புனிதப்படுத்தப்படுகிறது. வங்கிகளில் நடக்கும் இந்த அநீதியின் பொருள் இதுதான்.

20.10.10

பாபரி பள்ளிவாசல் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியக் கூட்டத்தில் தீர்மானம்!

பாபரி பள்ளிவாசல் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியக் கூட்டத்தில் தீர்மானம்!



பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு அனைத்திந்திய முஸ் லிம் தனியார் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.



உ.பி. மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள புகழ்பெற்ற நத்வத்துல் உலூம் அரபி பல்கலைக் கழகத்தில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 16) அன்று நடைபெற்றது. அனைத்திந் திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இந்தியாவில் உள்ள பல்வேறு முஸ்லிம் அமைப் புகளின் பிரதிநிதித்துவ அமைப் பாகும். முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தலைவரும் நத்வா பல்கலைக்கழகத்தின் தலை வருமான மவ்லவி ராபி ஹசன் நத்வி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் 51 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மவ்லவி நிஜாமுத்தின், துணைப் பொதுச் செயலாளர் அப்துர் ரஹீம் குறைஷி, வாரியத்தின் துணைத் தலைவரும் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் தலைவருமான மவ்லவி ஜலாலுத்தீன் அன்சார் உமரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சைய்யது சஹாபுதீன், ஜம்மியத்துல் உலமா ஹிந்தின் தலைவர்கள் மஹ்மூத் மதனி எம்.பி. மற்றும் அர்ஷத் மதனி பிரபல மூத்த வழக்குரைஞர் யூசுப் முசாலா, தனியார் சட்ட வாரியத்தின் பாபரி பள்ளிவாசல் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் டாக்டர் எஸ்.கி.யூ.ஆர். இல்யாஸ், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான், கர்நாடக இமாஅரத்தே ஷரீஅத் அமைப்பின் தலைவர் முப்தி அஷ்ரப் அலி, இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பேரா.சுலைமான், மில்லி கவுன்சில் பொதுச் செயலாளர் டாக்டர் மன்சூர் ஆலம் தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.


காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 2.30 வரை நீடித்தது. தொடக்கமாக பாபரி பள்ளிவாசல் வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து வழக்குரைஞர் ஜஃபர்யாப் ஜீலானி விவரித்தார். இதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.



சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) பல்வேறு குழப்பங்களும், தவறுகளும் நிறைந்த அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது மிக அவசியமாகும். இந்த மேல்முறையீட்டின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளங்களை சிதைக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப் பை திருத்தி எழுத முயற்சிகள் மேற்கொள்வது,

2) மேல்முறையீடு தொடர்பான நீதிமன்ற செலவுகளுக்காக பாபரி பள்ளிவாசல் சட்டநிதி உருவாக்குவது,

3) பாபரி பள்ளிவாசல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அபத்தங்களை விளக்குவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கருத்தரங்குகள் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழுக் கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. பாபரி பள்ளிவாசல் பிரச்சனையில் பேச்சு வார்த்தைக்கு வழி இல்லையா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த வாரியத்தின் துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் குரைஷி, ‘நீதிமன்றத் திற்கு வெளியில் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. எதிர்தரப்பு ஏதாவது திட்டத்தை முன்வைத்தால் அது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், ஷரீஅத் நெறிமுறைகள் மற்றும் முஸ்லிம்களின் கண்ணியம் ஆகியவற்றின் வெளிச்சத்தில் பரிசீலிக்கப்படும்‘ என்று பதிலளித்தார்.

ஹாசிம் அன்சாரி நடத்தி வரும் சமாதான பேச்சு வார்த்தைகள் குறித்து கருத்து கேட்டபோது, “அது தனி நபர் எடுக்கும் முயற்சி என்றும் ஆனால் தனியார் சட்டவாரியம் எடுக்கும் முடிவிற்கு தான் கட்டுபட்டு நடப்பதாக அன்சாரி தன்னிடம் தெரிவித்தார்” என டாக்டர் இல்யாஸ் தெரிவித்தார்.

மிகுந்த பாதுகாப்பு வளையத் திற்குள் இந்தக் கூட்டம் நடைபெற்றது. வாரிய உறுப்பினர் கள் மத்தியில் கருத்து மோதல் இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அக்கருத் துகளையெல்லாம் பொய்ப்பிப்பது போல் ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


பாப்ரி மஸ்ஜித் நில விவகாரம்:ஜெயேந்திர,விஜேந்திரருடன் இணைந்து வக்பு வாரியத்துடன் பேச்சு நடத்த இந்து மகாசபை முடிவு

சென்னை,அக்.20:அயோத்தி நிலவிவகாரம் குறித்து வக்பு வாரியத் தலைவர்களுடன் வரும் 28-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக இந்து மகா சபை தேசிய தலைவர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

ராம ஜென்மபூமி இந்துக்களுக்கு உரியது. 1949-ம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பாக முதன் முதலாக வழக்கு தொடர்ந்ததும் இந்து மகாசபை தான்.

அயோத்தி இடத்தை மூன்றாகப் பிரித்திருப்பதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த இடத்தை முழுமையாக இந்து மகா சபையிடம் ஒப்படைத்திருந்திருக்க வேண்டும். இந்த தீர்ப்பு எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. எனவே, இதை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருக்கிறோம்.

ராமஜென்மபூமி முழுவதுமாக எங்களுக்கு கிடைத்தவுடனே ராமர் கோவில் கட்டும் பணியை துவங்குவோம். அங்கு ராமர் கோவில் கட்டுவது உறுதி.

இந்த விவகாரம் குறித்து வரும் 28-ம் தேதி வக்பு வாரியத் தலைவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம். இதற்காக ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் நானும் டெல்லி செல்கிறேன். அங்குள்ள மீனாட்சி கோவிலில் வைத்து தான் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம்.

குஜராத் இனக் கலவரம்:குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள் ஆன்லைனில்

மும்பை,அக்.20:2002ஆம் ஆண்டு குஜராத்தில் ஏராளமான முஸ்லிம்களைக் கொலை செய்து இன சுத்திகரிப்பு நடத்திய சங்கபரிவாரங்களுக்கு எதிரான வழக்குகளில் தகுந்த ஆதாரங்களை சமர்பித்து முக்கிய பங்காற்றி மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் "நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு (The Citizens for Justice and Peace)" தான் இதுவரை இந்த இந்து தீவிரவாதிகளுக்கு எதிராக திரட்டிய மொத்த ஆதாரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளது
உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடான இந்திய தேசத்திற்கு உலக நாடுகளின் முன்னிலையில் மாபெரும் அவமானத்தையும், தலைக் குணிவையும் ஏற்படுத்திய இந்த இன சுத்திகரிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க, இதனை நடத்திய இந்து தீவிரவாத கும்பல்களுக்கு உரிய தண்டனை கொடுத்து நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று களமிறங்கிய இந்த The Citizens for Justice and Peace அமைப்பு, தகுந்த ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதில், குற்றம் செய்த தீவிரவாதிகளைப் பாதுகாக்கும் பணிகளை செய்து வந்த அரசுக்கெதிராக போராடி வந்தது.

தான் சேகரித்த ஆதாரங்களை உடனுக்குடன் நீதிமன்றத்தில் சமர்பித்தும் வந்தது. ஆனால் நமது நீதிமன்றங்கள் தம்மால் முடிந்த அளவிற்கு விசாரணையை காலம் தாழ்த்தின என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வருத்தம் தரக்கூடிய விஷயம். மற்றொரு புறம், குற்றவாளிகளுக்கெதிராக தேவைக்கு அதிகமாகவே கிடைத்த ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் தட்டிக்கழித்தும், நீதி விசாரணையை காலவரையின்றி இழுத்தடித்தும் வந்தன.

இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் முன் சமர்பிக்க எங்களால் இயன்ற அளவு முயற்சிகள் செய்து வந்துள்ளோம். அதில் புதிய முயற்சியாக அனைத்து ஆதாரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இதனை http://www.gujarat-riots.com/ என்ற இணைய தளத்தில் கொடுத்துளோம் என்று TCJP அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து தாங்கள் எடுத்துவரும் இதுபோன்ற முயற்சிகளால் குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள் என்று தாங்கள் நம்புவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கீழ்காணும் முக்கிய ஆவணங்கள் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளன:

* தேசிய மனித உரிமை கழகத்தின் (NHRC) அதிகாரப்பூர்வ அறிக்கை
* தேசிய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை
* குஜராத் மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை
* உச்ச நீதிமன்றம் மற்றும் பிரத்தியோக விசாரணை நீதிமன்றங்களின் தீர்ப்புகள்
* கலவர நேரத்தில் முக்கிய தலைவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள். அதில் யார் யாருடன் பேசினர், கலவர நேரத்தில் என்னென்னவெல்லாம் பேசினார்கள் என்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆதாரம்
* மாநில அரசு தெரிவித்த நிவாரண பணிகள் மற்றும் புணர்நிர்மான, மறுவாழ்வுக்கான பணிகளுக்கான அறிக்கைகள்
* முன்னாள் மாநில உளவுத்துறை தலைவர் RB ஸ்ரீகுமாரின் சட்டபூர்வ ஒப்புதல் அறிக்கைகள் (affidavits) அதன் மற்ற இணைப்புகள்

தேசிய அவமானமாகக் கருதப்படும் முஸ்லிம்களுக்கெதிரான இந்த இன சுத்திகரிப்பு நடவடிக்கையை குஜராத் மாநில அரசாங்கம் தான் ஆசீர்வதித்து முன்னின்று நடத்தியது என்பதற்குப் போதுமான ஆதாரம் உள்ளதா? என்று அனைவராலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கு, மிகுந்த எச்சரிக்கையுடன் கூடிய எங்களின் தொடர் முயற்சி வெகு விரைவில் விடை கிடைக்கும் என்று தாங்கள் நம்புவதாக இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

ஆனால் இந்த ஆதாரங்கள் எல்லாம் தகுந்த முறையில் விசாரிக்கப்பட்டு முறையான நீதி வழங்கப்படுமா என்பதை இப்போது நாம் அறுதியிட்டுக் கூற முடியாது. ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்து பாப்போம் என்றும் "இந்திய தேசத்தின் நீங்கா அவமானமாக நிலைபெற்றுவிட்ட இந்த கருப்பு நாட்களை நேர்மையோடு விசாரித்து நீதிவழங்க உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது இந்திய தேசத்தின் அரசியல் அமைப்பிற்கு நீதியை நிலைநாட்டும் நேர்மையும் தைரியமும் உண்டா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்" என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத்தில் சட்ட மேலவை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

விரைவில் சட்ட மேலவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் தமிழகத்தில் உள்ள பட்டதாரிகளும் (பட்டம் பெற்று மூன்று ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்) தங்களது சார்பாக சில உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உரிமை பெற்றுள்ளனர்.

அப்ஸலுல் உலமா பட்டம் பெற்ற ஆலிம்களும், M.A. (அரபிக்) பட்டம் பெற்ற பட்டதாரி ஆலிம்களும் தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவர் ஆவர்.

இது சம்பந்தமான அரசு அறிவிப்பை கீழே வாசியுங்கள்.


நீங்கள் அப்ஸலுல் உலமா பட்டம் பெற்றிருந்தாலோ அல்லது வேறு ஏதாவது டிகிரி பெற்றிருந்தாலோ தேர்தலில் வாக்களிக்க வேண்டுமெனில் உங்கள் பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தை அணுகி இதற்கான விண்ணப்பத்தை பெற்று, அதை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்துக் கொடுத்தால் நீங்களும் சட்ட மேலைவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும். உங்களது சார்பாக ஒருவரை சட்ட மேலவைக்கு தேந்தெடுக்க முடியும்.

இத்தகவலை உங்களைச் சார்ந்தவர்களுக்கு மின்னஞ்சல் / வலைப்பூ / இணையதளம் / செய்தி ஊடகம் / தொலைகாட்சி / சொற்பொழிவு / நிகழ்ச்சி / தொலைபேசி / தொலைநகல் வாயிலாக தெரிவியுங்கள்.

நன்றி! வஸ்ஸலாம்

தகவல் உதவி: கோவை மவ்லவீ அ. அப்துல் அஜீஸ் பாகவீ & காயல்பட்டினம் மவ்லவீ சுல்தான் சலாஹுத்தீன் மழாஹிரி

பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A.,
பொதுச் செயலாளர்,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),

துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்கள்: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group


அஹ்மது நிஜாத் லெபனானை விட்டு உயிரோடு போக கூடாது : இஸ்ரேல் எம்.பி.

ஜெருசலேம் : ஈரானை கடுமையாக எதிர்க்கும் இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்யேஹ் எல்தாட் இஸ்ரேல் ரேடியோவுக்கு அளித்த நேர்காணலில் லெபனானில் இருக்கும் ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத்தை லெபனானை விட்டு வெளியேறும் முன் எல்லையில் உள்ள வீரர்கள் எப்பாடுபட்டேனும் தங்கள் துப்பாக்கிகளை பயன்படுத்தி கொலை செய்ய வேண்டும் என்று பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லெபனானுக்கு அரச முறை பயணம் மேற்கொண்டுள்ள அஹ்மது நிஜாத் இஸ்ரேலின் எல்லையருகே நடந்த ஹிஸ்புல்லா பேரணியில் கலந்து கொண்டு இஸ்ரேலின் இறுதி காலம் நெருங்கி விட்டது என்று பேசியது இந்நேரம் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இச்சூழலில் இஸ்ரேல் எம்.பி. அஹ்மது நிஜாத்தை கொலை செய்ய வேண்டும் என்றும் அது ஹிட்லரை கொலை செய்வதற்கு ஒப்பானதாகும் என்றும் கூறியுள்ளார். தனக்கு பிடிக்காத உலக தலைவர்களை இஸ்ரேல் கொலை செய்வது புதிதல்ல என்பதும் தன் நலனுக்காக எந்தளவுக்கும் இஸ்ரேல் இறங்கும் என்பதும் அனைவருக்கும் தெரியும் என்றாலும் அஹ்மது நிஜாத் கொலை செய்யப்பட்டால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதால் அம்முடிவுக்கு இஸ்ரேல் செல்லாது என்றே அரசியல் பார்வையாளர்கள் அவதானிக்கின்றனர். சமீபத்தில் கூட பல நாட்டு போலி பாஸ்போர்ட்டுகளை வைத்து துபாயில் ஹமாஸ் தலைவரை கொலை செய்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது

இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதிக்குத் தடைவிதிக்குமாறு பிரிட்டிஷ் தூதுவர் கோரிக்கை

பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நிலத்தில் தொடர்ந்தும் சட்டவிரோத யூதக் குடியேற்றங்களை நிறுவிவரும் இஸ்ரேலுடனான அனைத்து இராணுவ ஒப்பந்தங்களையும் ரத்துச் செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் முன்னாள் பிரித்தானியத் தூதுவர் லோர்ட் ரைட் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிரியா மற்றும் சவூதி அரேபியாவுக்கான பிரித்தானியத் தூதுவராகப் பணிபுரிந்த லோர்ட் ரைட் கடந்த வெள்ளிக்கிழமை (15.10.2010) வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில், பலஸ்தீன் நிலத்தில் தொடர்ந்தும் சட்டவிரோதமான குடியேற்றங்களை எத்தகைய தயக்கமும் இன்றி நிறுவிவரும் இஸ்ரேலின் அடாவடித்தனமான போக்கை மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இஸ்ரேலின் இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகள் மிக மோசமான விளைவுகளையே தோற்றுவிக்கும் எனக் கூறியுள்ள அவர், 'இஸ்ரேல் தொடர்ந்தும் சட்டவிரோத யூதக் குடியேற்றங்கள் நிறுவுவதை வழக்கமாக்கிக் கொண்டால், அதன் இந்தப் போக்கு மத்திய கிழக்குப் பிராந்திய அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைவது உறுதி' என்று எச்சரித்துள்ளார்.

அவர் தமது கட்டுரையில், இஸ்ரேல் கடந்த வருடமும் சட்டவிரோதமான யூதக் குடியேற்றங்கள் பலவற்றை நிறுவியுள்ளது என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளார். மேற்குக் கரை, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரங்களில் வாழும் பலஸ்தீனர்களைத் தத்தமது சொந்த இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி, அங்கு யூத ஆக்கிரமிப்பாளர்களைக் கொண்டுவந்து நிரப்பும் நிலைப்பாட்டை இஸ்ரேல் இனியும் மாற்றிக்கொள்ளாத பட்சத்தில், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்து தடுத்துநிறுத்த வேண்டும் என்று லோர்ட் ரைட் கோரிக்கை விடுத்துள்ளார்
.

18.10.10

உலகின் மிகக் குள்ளமான மனிதராக நேபாளி இளைஞர்!கின்னஸ் தேர்வு

கடந்த வியாழக் கிழமையன்று தனது 18 வயதை நிறைவு செய்த நேபாளிய இளைஞர் ஒருவர் உலகிலேயே மிகவும் குள்ளமான மனிதர் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

கஜேந்திர தாபா மகர் 67.08 சென்டி மீட்டர் (26.4 இஞ்ச்) உயரம் உடையவராகவும் 6.5 கிலோ எடையுள்ளவராகவும் இருக்கிறார். கின்னஸ் ரிகார்டு புத்தகத்தில் இதனைப் பதிவு செய்வதற்காக லண்டனில் இருந்து அதன் துணைத் தலைவர் மார்கோ ஃப்ரிகாட்டி காட்மண்டு வந்திருந்தார்.

உலகிலேயே கஜேந்திர தாபா மகர்தான் மிகவும் குள்ளமான மனிதர் என்பதை நான் உறுதி செய்கிறேன் என்று ஆரவாரங்களுக்கிடையே ஃப்ரிகாட்டி கூறினார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நேபாளத்தின் பாக்லுங் மாவட்டத்தில் வியாபாரி ஒருவர் இந்த இளைஞரைக் கண்டறிந்து ஊடகங்களுக்கு தகவல் சொன்னார். அதன் பின்னர் இந்த இளைஞர் நேபாளத்தின் பிரபலமான மனிதர் ஆனார்.

தம்முடைய மகனுக்கு கின்னஸ் அங்கீகாரம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக இந்த இளைஞரின் தந்தை ரூப் பகதூர் தாபா மகர் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார். நான் இப்பொழுது பெரிய மனிதன் என்று கடந்த சில நாட்களாக தன்னுடைய மகன் கூறிவருவதாகவும் அவர் கூறினார்.

இந்த இளைஞரின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று கடந்த நான்காண்டுகளாக தாம் செய்த முயற்சிகள் நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இவரைக் கண்டறிந்து தகவல் சொன்ன வியாபாரி பகதூர் ராணா கூறியுள்ளார்.

முதன் முறையாக கின்னஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட போது, இளைஞருக்கு 18 வயது ஆக வேண்டும் என்று அவர்கள் கூறியதாகவும் ராணா கூறினார்.

மகருக்கு முன் கொலாம்பியாவைச் சேர்ந்த எட்வர் நினோ ஹெர்மன்டெஸ் என்ற 24 வயதுடையவர் 70.21 சென்டி மீட்டர் உயரத்துடன் உலகின் மிக குள்ளமான நபராக அறியப்பட்டு வந்தார்

இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் மீது தே.பா. சட்டம்

இந்து மக்கள் கட்சி என்கிற வலது சாரி கட்சியின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தர்மர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட உள்ளார்.

திண்டுக்கல் நகர பாரதிபுரத்தைச் சேர்ந்த 42 வயது தர்மர்,இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவராக இருந்து வந்தார் . இவர், கடந்த மாதம் திண்டுக்கல் மலைக்கோட்டையில் சிலையொன்றை சட்டவிரோதமாகப் பிரதிஷ்டை செய்த போது கைது செய்யப்பட்டார்; பின்னர் சிலையும் அகற்றப்பட்டது.

மேலும் பதினைந்து தினங்களுக்கு முன் அக். 3ஆம் தேதியன்று, திண்டுக்கல் மலைக்கோட்டையில் தன் இஷ்டப்படி ஒரு காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். அப்போது தடுத்த காவல் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டார். அடிதடி வழக்கு, மதப் பிரச்னையை தூண்டியது உட்பட பல வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சட்ட ஒழுங்குக்கு ஊறு விளைவித்த இவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் உயரதிகாரி தினகரன் பரிந்துரையின் பேரில், திண்டுக்கல் ஆட்சியர் வள்ளலார் உத்தரவிட்டுள்ளார்.

நடுவானில் இந்திய விமானி மாரடைப்பால் மரணம்

துபை, அக். 15: கத்தார் ஏர்வேஸ் விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இந்திய விமானி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பிலிப்பின்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் ஒன்று கத்தார் தலைநகர் தோஹாவுக்கு புதன்கிழமை புறப்பட்டது.

அந்த விமானத்தில் 260 பயணிகள் இருந்தனர். விமானத்தை மும்பையைச் சேர்ந்த விமானி அஜய் குக்ரேஜா (43) உள்ளிட்ட விமானிகள் குழு இயக்கியது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக சக விமானியிடம் கூறினார் அஜய்.

இதையடுத்து வழியில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூரில் உள்ள செர்தாங் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த விமானம் சுமார் 4 1/2 மணி நேரம் தாமதமாக தோஹா சென்றடைந்தது.

கோலாலம்பூர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் மாரடைப்பால் அஜய் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் அஜய் நீண்ட நாளாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் அவர் எப்போதும் இன்ஹேலர் வைத்திருப்பார் என்றும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த அஜய் குக்ரேஜாவின் பெற்றோர் மற்றும் மனைவி, மகன், மகள் ஆகியோர் மும்பையில் உள்ளனர். இது பற்றி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அஜயின் உடலை கோலாலம்பூரில் இருந்து மும்பைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கத்தார் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

17.10.10

சன்னி வக்ஃபோர்டு தலைவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்கள் சந்திப்பு

அப்பீல் அளிப்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியாகின்றன

பாப்ரி மஸ்ஜித் நிலத்தை திரும்ப அளிப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்து வருவதாக உ.பி மாநில சன்னி வக்ஃபோர்டு தலைவர் சுஃபர் அஹ்மத் ஃபாரூக்கி தெரிவித்தார்.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், சோஷியல் டெமோக்ரேடிக் பார்டியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மவ்லானா உஸ்மான் பேக் ஆகிய தலைவர்களுடனான சந்திப்பின்போது இதனை தெரிவித்தார் அவர்.

வழக்கில் வாதாடுவதற்கு பிரபலமான வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர். அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரித்து சமரசத்திற்கு தயாராகவேண்டும் என்ற வாதத்தை ஏற்கமுடியாது. நம்பிக்கையை மட்டும் ஆதாரமாகக் கொண்டுள்ள இந்த தீர்ப்பில் பேச்சுவார்த்தை நடத்துவது பலன் தராது. இவ்வழக்கில் மாயாவதி தலைமையிலான உ.பி அரசு வக்ஃபோர்டிற்கு பூரண சுதந்திரம் அளித்துள்ளது. வழக்கை முன்னெடுத்துச் செல்ல பொருளாதார ரீதியான குறைபாடுகள் உண்டு என சுஃபர் அஹ்மத் ஃபாரூக்கி தெரிவித்தார்.

இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உடனிருப்பார்கள் இதற்கு பதிலளித்த தலைவர்கள் கூறுகையில்,பாப்ரி மஸ்ஜித் வழக்கு என்பது ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் பிரச்சனையாகும். வழக்கை நடத்துவதில் இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உடனிருப்பர் என உறுதி வழங்கினர்.

உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்கு தேவையான விபரங்களை ஒரு வழக்கறிஞர் குழு தயாராக்கி வருவதாக வழக்கறிஞர் ஸஃபர்யாப் ஜீலானி தெரிவித்தார் மேலும் உச்சநீதிமன்றத்திலிருந்து நீதியை எதிர்பார்க்கிறோம். வழக்கை நடத்துவதற்கு பெருமளவிலான பணம் தேவைப்படும். என்றும் தெரிவித்தார்.


சமுதாய துரோகத்திற்கு ஒருபோதும் துணை போகமாட்டேன்- அன்சாரி

முஸ்லிம்கள் தரப்பில் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் துவக்கம் கால மனுதாரரான ஹாஷிம் அன்சாரியையும் பாப்புலர் ஃப்ரண்ட், SDPI, இமாம் கவுன்சில் தலைவர்கள் சந்தித்து செய்திகளை பரிமாறிக் கொண்டனர்.

பாப்ரி மஸ்ஜித் பிரச்சனை உலக முஸ்லிம்களின் பிரச்சனை என அன்ஸாரி சந்திப்பின்போது குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது: பாப்ரி மஸ்ஜித் வழக்கில் சன்னி வக்ஃப் போர்டுடன் நிற்பேன். சமுதாய துரோகத்திற்கு ஒருபோதும் துணை போகமாட்டேன். அயோத்தியில் சில ஹிந்து சன்னியாசிகளுடன் நான் நடத்திய கலந்துரையாடலை ஊடகங்கள் தவறாக பரப்புரைச் செய்தன என்றும் அன்சாரி குறிப்பிட்டார்.

செய்தி:தேஜஸ்

முஸ்லிம்கள் பாபர் மசூதி இடத்தை விட்டுத் தரவேண்டும்: கட்டியார்

அயோத்தியில் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு அங்கு ராமர் கோயில் கட்டுவதற்காக பாபர் மசூதி அமைந்திருந்த பிரச்சனைக்குரிய இடத்தை முஸ்லிம்கள் விட்டுத் தரவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சித் தலைவர் வினய் கட்டியார் கேட்டுக் கொண்டுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வழியேற்படுத்தும் வகையில் முஸ்லிம்கள் பிரச்சனைக்குரிய அந்த இடத்தை விட்டுத் தருவதன் மூலம் தேச நலன் காக்கப்படும். இந்தியர்களின் ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றுவதாகவும் இது அமையும் என்று வினய் கட்டியார் அயோத்தியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

முஸ்லிம்கள் இவ்வாறு செய்ய முன்வராவிட்டால், நாடு முழுவதும் நில உரிமைகள் தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

வினய் கட்டியாரை பாரதீய ஜனதா கட்சியிலிருந்து நீக்காவிட்டால் சாதுக்கள் பாஜகவை விட்டு விலகுவார்கள் என்று அகாரா பரிஷத்தின் தலைவர் கியான்தாஸ் கூறியிருப்பது தொடர்பாகக் கேட்கப்பட்டதற்கு, அவரது வார்த்தைகள் தனக்கு ஆசிர்வதம் அளிப்பது போலாகும் என்று கூறினார்.

இஸ்ரேலின் இறுதி காலம் நெருங்கி விட்டது : அஹ்மது நிஜாத் ஆவேசம்

லெபனான் : இஸ்ரேலின் இறுதி காலம் நெருங்கி விட்டது என்றும் இஸ்ரேலியர்கள் தாங்கள் பூர்விக நாட்டிற்கே திரும்ப போகும் நேரம் வந்து விட்டது என்றும் இஸ்ரேலிலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள பின்ட் ஜிபில் எனுமிடத்தில் நடைபெற்ற ஹிஸ்புல்லாவின் பேரணியில் இஸ்ரேலின் கடும் எதிரியான ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் கூறினார்.

2006-ல் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் நடைபெற்ற போரில் இஸ்ரேலின் குண்டு வீச்சில் ஏராளமான மக்கள் பின்ட் ஜிபிலில் கொல்லப்பட்டார்கள். அவர்களின் மறைவை நினைவு கூறும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அஹ்மது நிஜாத் மக்களின் பலத்த கரகோஷங்களுக்கிடையே "பின்ட் ஜிபில் உயிரோடு உள்ளது. மலை போன்ற உறுதியுள்ள உங்களின் வீரத்தை பாராட்டுகிறேன். என்றும் உங்களுக்கு ஈரான் துணை நிற்கும்" என்று கூறினார்.

இஸ்ரேலுக்கு மிக அருகில் நடந்த ஹிஸ்புல்லா பேரணியில் அஹ்மது நிஜாத் கலந்து கொண்டது இஸ்ரேலுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே அரசியல் வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது. அஹ்மது நிஜாத்தின் அதிகாரபூர்வ லெபனான் வருகையை அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டும் கண்டித்ததுடன் இப்பயணத்தின் மூலம் லெபனானும் தீமைகளின் அச்சு நாடுகளில் இணைந்து விட்டதாக கூறினர்.

பின்னர் லெபனான் பல்கலைகழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அஹ்மது நிஜாத் ஈரானின் அணு ஆயுத திட்டத்தை ஆதரித்து பேசினார். மத்திய கிழக்கு நாடுகளில் எவ்வித அறிவியல் வளர்ச்சியும் பெற்று விட கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருப்பதாக கூறிய அவர் தாம் விஞ்ஞானத்தை பரப்ப நினைப்பதாகவும் அமெரிக்காவோ அதை தடுத்து இருட்டில் ஆழ்த்த நினைப்பதாகவும் கூறினார்

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து முறையீடு-தமுமுக தலைவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த நேர்காணல்


அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இரண்டுக்கு ஒன்று என்ற வீதத்தில் பிரித்தளித்த அலாகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையின் தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.



சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து லக்னோவில் கூடி விவாதித்த முஸ்லீம் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட இடம் குறித்த வழக்கு ஓர் சொத்துரிமை வழக்காகப் பார்க்கப்பட வேண்டுமே தவிர மத மற்றும் இதர நம்பிக்கைகள் அடிப்படையில் அதை அணுகி தீர்ப்பளிப்பது பாரதூர பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவஹிருல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.

மேலும் இந்த தீர்ப்பை விமர்சித்துள்ள பிரபல வழக்கறிஞர்களை வைத்து முக்கிய நகரங்களில் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துவதென்று முடிவுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கில் மனுதாரரான உத்தரப் பிரதேச வக்ப் வாரியம் மேல் முறையீடு செய்யும் போது, இந்தியாவின் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் அதில் தங்களை இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

இஸ்ரேலிய கெடுபிடியைமீறி ஃபின்லாந்து வெளியுறவு அமைச்சர் காஸாவில்...

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையினால் பல நாட்களாக உட்பிரவேச அனுமதி மறுக்கப்பட்டிருந்த ஃபின்லாந்து வெளியுறவு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஸ்டப் கடந்த வியாழக்கிழமை (14.10.2010) இஸ்ரேலியக் கெடுபிடிகளை மீறி காஸா சென்றடைந்துள்ளார்.

அமைச்சர் ஸ்டப் பெய்ட் ஹனூன் கடவை வழியாக காஸாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும், அங்கே அவர் பல்வேறு அரசியல் மற்றும் வர்த்தகப் பிரமுகர்களைச் சந்தித்து உரையாடவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரினால் கடும் சேதமடைந்துள்ள பகுதிகளையும் அமைச்சர் பார்வையிடவுள்ளார். காஸா மீதான இஸ்ரேலிய அத்துமீறல் யுத்தத்தின் விளைவாக காஸாவின் வடக்குப் பிராந்தியத்தில் சுமார் 20 000 வீடுகள் சிதிலமடைந்துள்ளதோடு, அப்பிரதேசத்தின் கீழ்க்கட்டமைப்பு வசதிகள் முற்றாகச் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுப் பிரமுகர்களின் தொடர் காஸா வருகை "ஹமாஸ் இயக்கமே பலஸ்தீன் மக்களின் பிரதிநிதி" என்ற அங்கீகாரத்தை சர்வதேச அளவில் பெற்றுத்தர வழிவகுத்து விடும் என்று காரணங்காட்டி ஃபின்லாந்தின் வெளியுறவு அமைச்சருக்கு காஸாவுக்குள் பிரவேசிக்க இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை பல நாட்களாகத் தொடர்ந்து அனுமதி மறுத்துவந்தது.

இதேவேளை, ஜோர்தானைச் சேர்ந்த கால்பந்தாட்டக் குழுவினரை காஸாவுக்குள் செல்லவிடாமல் எகிப்து அதிகாரத் தரப்பு அனுமதி மறுத்துள்ளது. 'விஹ்தாத்' எனும் ஜோர்தானிய விளையாட்டுக் கழகத் தலைவர் தாரிக் கோரி இதுபற்றிக் குறிப்பிடுகையில், அம்மானில் உள்ள எகிப்தியத் தூதுவராலயத்தில் மேற்படி விளையாட்டுக் குழுவினருக்கு ரபாஹ் கடவையினூடே காஸா செல்வதற்குக் கடவுச் சீட்டுக்கள் வழங்குமாறு சுமார் 50 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பித்தும் எகிப்திய அதிகாரத்தரப்பு அதற்கு எத்தகைய மறுமொழியும் அளிக்கவில்லை என்று விசனம் தெரிவித்துத்துள்ளார்.

கடந்த நான்கு வருட காலமாக காஸா மீது நியாயமற்றுத் தொடரும் முற்றுகையை முறியடிக்கும் நோக்கிலும், காஸா விளையாட்டுக் கழகம் மற்றும் உள்ளூர் விளையாட்டுக் குழுக்களுடனான கால்பந்தாட்டப் போட்டிகளை ஏற்பாடு செய்யுமுகமாகவுமே தமது குழு காஸா பயணத்துக்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தது என கோரி கருத்துத் தெரிவித்துள்ளார்

பாலஸ்தீன் : சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் கைது

ஆக்கிரமிப்பு ஜெருசலம்: யூதரால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட கார் விபத்தில் கடும் காயமடைந்த பாலஸ்தீன் சிறுவர்களில் ஒருவர் இஸ்ரேலிய போலிசாரால் கைதுசெயப்பட்டுள்ளான். முஹம்மத் சராப் என்ற பாலஸ்தீனிய சிறுவன் விபத்தில் ஏற்பட்ட கடும் காயங்களுக்கான சிகிச்சை முடிவதற்கு முன்னரே கைதுசெயப்பட்டுள்ளான்.
பாலஸ்தீன் சில்வண் மாவட்டத்தில் யூத குடியேற்றங்களுக்கான தலைவர் டேவிட் பீறி தனது காரில் வந்துகொண்டிருக்கும் போது முஹம்மத் சராப் உட்பட பல பாலஸ்தீனிய சிறுவர்கள் மீது வேண்டுமென்றே தனது கரை ஏற்றினார். அவர்கள் அனைவரும் தனது காரின் மீது கல்லெறிந்ததாகவும் அதற்காகவே தான் தனது காரை அவர்களின் மீது இடிக்க நேர்ந்தது என்று பின்னர் அவர் கூறியிருந்தார்

ஆனால் அடிபட்ட சிறுவன் முதல் அடியிலே தூக்கி வீசப்பட்டு பின் மீதும் அதே காரில் மீண்டும் அடிபட்டது அப்படியே புகைப்படமாக தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது, பாலஸ்தீனியர்களின் மீது இஸ்ரேலிய அத்துமீறிய செயல்கள் இந்த புகைப்படம் மூலம் மீண்டும் தெரியவந்துள்ளது

பாலஸ்தீனிய கைதிகளுக்கான அமைப்பு ஒன்று சிறுவன் முஹம்மத் சராபை விடுதலை செய்ய முயற்சி செய்யுமாறு அனைத்து மனித உரிமை அமைப்புகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது, மேலும் இஸ்ரேல் தனது கடும் குற்றங்களை மறைக்க சிறுவர்களின் மீதான தனது தீவிர வாதத்தை கட்டவிழ்த்து விடுகின்றது என்றும் அவ்வமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது

செவிட்டு ஊமை அரசாங்கம் - ஜீலானி கடும் தாக்கு

அரசு அமைத்துள்ள 3 நபர் குழுவினால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை என ஹூரியத் மாநாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கம் செவிடாகவும் ஊமையாகவும் செயல்படுவதாக இந்த அமைப்பின் தலைவர் சையத் அலிஷா ஜீலானி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய அரசு காஷ்மீரில் சமாதானத்தை ஏற்படுத்த பத்திரிகையாளர் திலிப் பட்கான்கர், பேராசிரியர் ராதா குமார் மற்றும் தகவல் ஆணையர் அன்ஸாரி ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்தக்குழு காஷ்மீரிகள் பிரிவினைவாதிகள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் அவர்களது கருத்துக்களை கேட்கும் என அரசு தெரிவித்திருந்தது. இந்தக் குழு சம்பந்தமாக பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இது சம்பந்தமாக ஜீலானி மேலும் கருத்துக் கூறுகையில் தாங்கள் அளித்துள்ள 5 அம்சத் திட்டத்தின் அடிப்படையில் அரசு செயல்படாதவரை காஷ்மீர் பிரச்னையில் எந்த மாற்றமும் ஏற்படாது என தெரிவித்தார்.

காஷ்மீரை ஒரு சர்ச்சைக்குள்ளான பகுதி என அரசு அறிவிக்க வேண்டும், அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும், ஆயுதம் தாங்கிய படைகள் காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும், மனித உரிமைகள் மீறப்படுவது நிறுத்தப்பட வேண்டும் மற்றும் பொதுமக்களின் படுகொலைகளுக்கு காரணமான பாதுகாப்பு படையினர் கைது செய்யப்படவேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளை ஹூரியத் அமைப்பு முன்வைத்துள்ளது.


ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாஸின் மாலிக் இந்தக் குழு அமைத்தது சம்பந்தமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.