தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.11.10

யு.எஸ் கடற்கரையில் மர்ம ஏவுகணை! பென்டகன் விசாரணை

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் மர்ம ஏவுகணை பறந்தது பற்றி அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில், கலிபோர்னியா கடல்பகுதி உள்ளது இங்கு வானில் ஏவுகணை ஒன்று பறந்ததினால் ஏற்பட்ட புகை தடத்தை ஹெலிகாப்டரில் சென்ற பத்திரிக்கையாளர்கள், தங்கள் கேமராவில் பதிவு செய்து பென்டகன் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். இது குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்க கடல் பகுதியில் எந்த வித ராணுவ பயிற்சியும் நடைபெறாத நிலையிலும். தனியார் ஆயுத நிறுவனங்கள் தாங்கள் நடத்தப்போகும் ஏவுகணை சோதனை பற்றி, முன்கூட்டியே தகவல் தெரிவிக்காத நிலையிலும் அங்கு ஏவுகணை பறந்திருப்பது ஆச்சர்யமாக உள்ளது. வெளிநாட்டு போர் கப்பல்கள், அமெரிக்கா அருகே போர் பயிற்சி மேற்கொள்வதற்கான வாய்ப்பும் இல்லை என பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எங்கிருந்து ஏவுகணை வீசப்பட்டது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ராணுவத்தின் மாஜி துணை அமைச்சர் ராபர்ட் எல்ஸ்வொர்த், ஒரு வேளை நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து இந்த ஏவுகணை வீசப்பட்டிருக்கலாம் என்றார்.

சோனியாவை விமர்சித்த ஆர் எஸ் எஸ் முன்னாள் தலைவர் மீது வழக்குப்பதிவு

சோனியாகாந்தியை அமெரிக்க உளவாளி என்றும், இந்திராகாந்தி, ராஜிவ்காந்தியின் படுகொலைகளுக்கு அவரே சூத்ரதாரி என்றும் ஆர் எஸ் எஸ் முன்னாள் தலைவர் சுதர்சன் அண்மையில் ஒரு பொதுகூட்டத்தில் பேசியிருந்தார்.

அது தொடர்பாக போபால் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் காங்கிரஸ் பிரமுகர் பிரதீப் சர்மா என்பவர் அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார்

சுதர்சனுடைய இந்த அவமதிப்புப் பேச்சு தனக்கு மனதில் இரணத்தை உண்டாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், குற்றஞ்சாட்டப்பட்ட சுதர்சனின் பேச்சினை ஆராய்ந்து அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் ப்ரதீப் சர்மா தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்

இளம் பெண் இஷ்ரத் கொலை வழக்கை எஸ்ஐடி விசாரிக்கத் தடை கோரிய குஜராத் கோரிக்கை நிராகரிப்பு

டெல்லி: குஜராத்தில் இளம் பெண் இஷ்ரத் ஜஹான் கொலை செய்யப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வுப் படை விசாரிக்க தடை கோரிய குஜராத் அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது.

இளம் பெண் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் அகமதாபாத் அருகே சுட்டுக் கொல்லப்பட்டனர். நான்கு பேரும் தீவிரவாதிகள் என குஜராத் அரசு தெரிவித்தது. ஆனால் இவர்கள் நான்கு பேரும் வேண்டும் என்றே போலியான என்கெளன்டரில் கொல்லப்பட்டதாக இஷ்ரத்தின் தாயார் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் இஷ்ரத்தின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் இஷ்ரத் கொலை வழக்கை விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுப் படையை அமைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.

இதை விசாரித்த நீதிபதிகள் சுபாஷன் ரெட்டி, நிஜ்ஜார் ஆகியோர்அடங்கிய பெஞ்ச், குஜராத் அரசின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.

குஜராத் அரசு ஒரு எஸ்ஐடியை அமைத்திருந்தாலும், அதன் விசாரணை சந்தேகத்திற்குரியதாக இருந்தால் புதிய விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட கோர்ட்டுகளுக்கு அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தை எப்படி ஒரு மாநில அரசு கேள்வி கேட்க முடியும். குஜராத் அரசின் கோரிக்கை வியப்பாக உள்ளது.

எனவே குஜராத் உயர்நீதிமன்றம், புதிய எஸ்ஐடியை அமைத்து உத்தரவிட்டிருப்பதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை என்று உத்தரவில் கூறியிருந்தனர்.

ஏற்கனவே கோத்ரா கலவரம், சோராபுதீன் போலி என்கெளன்டர் என பெரும் சிக்கலில் உள்ள குஜராத் அரசுக்கு தற்போது இஷ்ரத் ஜஹான் வழக்கின் மூலம் மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது

முஸ்லிம்களுடன் புரிந்துணர்வு நோக்கி நகர்கிறோம் - ஒபாமா

இந்திய சுற்றுப் பயணத்தை அடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தோனேசியாவில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெறுவதில் முதலடியை எடுத்து வைத்துள்ளதாகவும் , இதில் நீண்ட தொலைவு பயணிக்க உள்ளதாகவும் சொன்னார் . "இந்தோனேசியா என்வாழ்வில் ஓர் அங்கம் என்றார் ஒபாமா கடந்த புதன்கிழமையன்று இந்தோனேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஒபாமா இந்தோனேசியா என் வாழ்வின் அங்கம் என்று கூறினார் தனது சிறு வயதில் அங்கு கழித்த நாள்களை நினைவு கூர்ந்தார். தன் தாய் இந்தோனேசியர் ஒருவரை மறுமணம் செய்து கொண்டது குறித்தும், அதன் பின்னர் தான் இந்தோனேசியாவில் சில ஆண்டுகள் வசித்தது குறித்தும் ஒபாமா தன் பேச்சில் குறிப்பிட்டார். அதிபராக பதவியேற்ற பின்னர் ஒபாமா தன் சொந்த வாழ்க்கை குறித்து பொது மேடையில் வெளிப்படையாக அதிகம் பேசியது இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியா முஸ்லிம் நாடுகள், மேற்கத்திய நாடுகள் ஆகிய இரண்டுக்குமே முன்னுதாரனமாகத் திகழ்வதாக அவர் புகழாரம் சூட்டினார். மேலும் அவர் பேசுகையில் "நீண்ட நாள்களாக சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்த இந்தோனேசியா இப்போது ஜனநாயக பாதைக்கு வந்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்தோனேசியா ஓர் உதாரணமாகத் திகழ்கிறது. இங்குள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை இந்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் சகிப்புத் தண்மைக்கும் எடுத்துக் காட்டாக விளங்குகின்றன.

என் இந்தோனேசிய வாழ்க்கையின்போது நான் பலவற்றை இங்கு கற்றுக் கொண்டேன். இங்கு படித்தபோது நானும் என், பள்ளி நண்பர்களும் ஒரு நாள் நான் அமெரிக்க அதிபராக உயர்வேன் என துளியும் எதிர்பார்க்கவில்லை. நெல்லின் மீது ஓடி விளையாடியது, பட்டம் விட்டது, பட்டாம் பூச்சி பிடித்தது போன்ற நினைவுகள் எனக்கு இப்போது வருகின்றன. இந்தோனேசியாவில் இருந்து ஒழுங்கற்ற இளைஞனாக சென்ற நான். இப்போது அமெரிக்க அதிபராக இங்கு வந்துள்ளேன்' என்றார் ஒபாமா.

முன்னதாக மத்திய ஜகார்தாவிற்குச் சென்ற ஒபாமாவும் அவரது மனைவி மிச்சேலும் தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய மசூதியான இஸ்திக்லால் மசூதிக்குச் சென்றனர். அவரை வரவேற்ற இமாம் ஹாஜி முஸ்தபா அலி யாக்கூப், அந்த மசூதியின் வரலாறு, கட்டடக் கலை ஆகியவை குறித்து ஒபாமாவுக்கு எடுத்துரைத்தார். இந்த மசூதி ஒரு கிறிஸ்தவரால் வடிவமைக்கப்பட்டது என்ற தகவலையும் ஒபாமாவிடம் கூறினார் இமாம்.

அதிபர் ஒபாமாவின் ம்னைவி மிச்சேல் முழுவதுமாக உடல் மறைக்கப்பட்ட பேண்ட் மற்றும் மேல் ஆடை அணிந்து வந்திருந்தார் தலையையும் அவர் போர்த்தி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பேசினார்.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத்தின் 6-வது நினைவு நாளையொட்டி மேற்குகரைப்பகுதியின் ரமல்லாஹ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பேசினார்.

மத்திய அரசு மீது அத்வானி புகார்

புதுடில்லி:"சி.பி.ஐ.,யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், பா.ஜ.,வின் பார்லிமென்ட் குழுக் கூட்டம் நடந்தது.


இதில், அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:பயங்கரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரத்தில், சி.பி.ஐ.,யை மத்திய அரசு தவறாக கையாளுகிறது. இந்த அரசு தான், ஊழல்களில் அதிகமாக ஈடுபட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் ஊழல் நடந்துள்ளது.இதில், டில்லி அரசு, மத்திய அமைச்சர்கள், விளையாட்டு துறை அமைச்சர், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் உள்ளிட்டோர் அனைவருக்கும் இந்த ஊழலில் தொடர்புள்ளது.


இது தவிர, ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டில் ஊழல் என்று ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளன. இந்த ஊழல் விவகாரங்களை விசாரிக்க பயன்படுத்தாமல், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழி சுமத்துவதற்கு பயன்படுத்துகின்றனர்.அசோக் சவானையும், சுரேஷ் கல்மாடியையும் பதவி நீக்கம் செய்வது மட்டும் போதாது. ஊழல் குறித்து, விரிவான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அத்வானி கூறினார்.