இந்தியாவில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கையைக் கண்டறிவதற்காக, சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் உள்ள மேற்கு மாவட்டம் ஒன்றின் பழங்குடியினர் கிராமத்தில் இந்தக் கணக்கெடுப்பை இந்திய ஊரக வளர்ச்சித்துறைச் செயலர் பி.கே. சின்ஹா துவக்கி வைத்தார்.