தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.5.11

என் தந்தை சிறைபிடிக்கப்பட்ட பின்னரே சுடப்பட்டுள்ளார்: பின்லாடனின் 12 வயது மகள்


இஸ்லாமாபாத்,  கடந்த ஞாயிற்றுகிழமை அல்குவைதா இயக்கத்தின் தலைவன் பின்லாடனை அமெரிக்க படைகள் சுட்டுக்கொன்றனர். அதற்கு சாட்சியாக ஒரு சில போட்டோக்கள் அமெரிக்க ராணுவம் வெளியிட்டது. பின்னர் அவை உண்மையில்லை என மறுக்கப்பட்டது.

கனடாநாட்டு எதிர்கட்சி தலைவரும் பின்லாடனின் போட்டோ குறித்து சந்தேக கேள்விகளை எழுப்பியுள்ளார். அமெரிக்க அதிபரும் தற்போதைக்கு போட்டோக்களை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் 'தன்னுடைய தந்தை சுட்டுக்கொல்லப்படவில்லை. சிறைபிடிக்கப்பட்ட பின்னரே சுடப்பட்டுள்ளார்' என பின்லாடனின் 12 வயது மகள்

ஒசாமா கொல்லப்பட்ட வேளை புகைப்படங்கள் - வெளியிட மறுத்தது அமெரிக்கா; வெளியிட்டது பாகிஸ்தான் (படங்கள்)



அல் - கைதா இயக்கத்தினர், அமெரிக்காவுக்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை முன்னெடுக்க, புகைப்படத்தை விளம்பரமாக பயன்படுத்துவார்கள் என்பதால்,

ஒசாமா தங்கியிருந்த வீட்டை கட்டியவர் கைது


பாகிஸ்தானில், ஒசாமா பின்லாடன் தங்கியிருந்த வீடு, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தலைவர் பயன்படுத்தி வந்த வீடு என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒசாமா பின்லாடன், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த போது, அமெரிக்க ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தான் ராணுவ மையத்திற்கு அருகே இருந்த அந்த வீட்டை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத் தலைவர் சயித் சலாவுதீன் பயன்படுத்தி வந்தார் என்று, தகவல்கள்

மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டால் மோசமான விளைவு: பாகிஸ்தான்

தங்கள் மண்ணில் எந்த நாடாவது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் ராணுவத்திடமிருந்து மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்நாட்டின் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர் எச்சரிக்கை விடுத்தார்.
தவறாக கணக்கு போட்டால் பேரழிவு ஏற்படும். தன்னை பாதுகாத்துக் கொள்ள போதுமான தகுதி பாகிஸ்தானிடம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை என பஷீர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் அபோட்டாபாதில் அமெரிக்கப்

கனிமொழி கைது செய்யப்படுவாரா?

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்திருந்த 2வது குற்றப்பத்திரிகையில் டி.பி. ரியாலிட்டி' குழுமத்தில் இருந்து, "கலைஞர் டிவி'க்கு பணம் கைமாறிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அதில், கூட்டு சதியாளர் என, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததால், வரும் 6ம் தேதி, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கனிமொழிக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், கனிமொழியின் கைதை எப்பாடுபட்டாவது தவிர்க்க வேண்டும் என, தி.மு.க., தலைமை போராடி வருகிறது.

உடல் எடையை குறைக்க, நோயில்லாமல் வாழ!

 உடற்பருமன் உள்ளவர்கள் எடையைக் குறைக்க தலைகீழாக நின்று பார்க்கிறார்கள். ஆனால் இறுதியில் மிஞ்சுவது என்பது எடைக்குறைப்பில் ஏமாற்றமே!. உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி மட்டுமே போதுமா? போதாது. உணவை உண்பதில் கவனம் தேவை.

கலோரி கூடிய உணவுகளான இனிப்பு, காரம், மற்றும் எண்ணெய், பண்டங்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் இருக்கக்கூடாது. பழங்கள் அதிகம் சாப்பிடவேண்டும், கேரட், வெங்காயம், தக்காளி, கீரைவகைகள் இவைகளை பச்சையாக சாப்பிடவேண்டும்.

மேலும் தேவையற்ற உணவுகளான