தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.11.10

அமெரிக்கா சென்ற விமானங்களில் வெடிபொருள்கள்: அமெரிக்கா அதிர்ச்சி நாடு முழுவதும் பதற்றம்

வாஷிங்டன், அக். 31- ஏமன் நாட்டிலிருந்து அமெரிக்கா சென்ற சரக்கு விமானங்களில், வெடி பொருள்கள் அடங்கிய பார்சல்கள் இருந்தது, பிரிட்டன் மற்றும் துபாய் விமான நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது பயங்கரவாதிகளின் சதித் திட்டம்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார். இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பார்சல்கள், நேற்று முன்தினம் பிரிட்டன் கிழக்கு மிட்லண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட, யுனைடெட் பார்சல் சர்வீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டன. இந்த பார்சல்கள் அனைத்தையும், பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கிருந்த ஒரு பார்சலில் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வெடி பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த வெடிபொருள் பார்சல், அங்கிருந்து அகற்றப்பட்டது. இதுகுறித்த தகவல் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதேபோல், துபாயிலிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட இருந்த "பெட்எக்ஸ்' நிறுவனத்தின் சரக்கு விமானத்திலும் அதே வகையான வெடிபொருள் பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பார்சலும் ஏமன் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது தெரிந்தது. இதுகுறித்த தகவலும், அமெரிக்க அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

வெடி பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,"வெடி பொருள்களை அனுப்பி வைத்தது, பயங்கரவாதிகள் தான் என, நம்புவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. யூத வழிபாட்டு மய்யங்களை தகர்ப்பதற்காக இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிந்துள்ளது. இது போன்ற ஆபத்துகளில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க முழு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இந்திய பயணத்துக்கு பாதிப்பு இல்லை: அமெரிக்கா செல்லவிருந்த சரக்கு விமானங்களில் வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து, அதிபர் ஒபாமாவின் பாதுகாப்பு அதிகாரி ஜான் பிரென்னன் கூறியதாவது: வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்களால், அதிபர் ஒபாமாவின் இந்திய சுற்றுப் பயணத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்திய பயணம் திட்டமிட்டபடி நடக்கும். அதிபர், ஒரு நாட்டுக்கு பயணம் செய்கிறார் என்றால், அது தொடர்பான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்தான், பயணம் இறுதி செய்யப்படும். அந்த வகையில் இந்திய பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கெனவே முடிந்து விட்டன. இவ்வாறு ஜான் பிரென்னன் கூறினார்.


அடுத்த பா.ஜ.க. தலைவர் நரேந்திர மோடியாம்!

தலையணையை மாற்றினால் தலைவலி போகுமா என்று சொல்லுவதுண்டு. பா.ஜ.க. மக்கள் மத்தியிலிருந்து தூக்கி எறியப்பட்டது. தொடர்ந்து இருமுறை மக்களவைத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டது. பல மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பை இழந்தனர்.

ஏதோ கட்சியின் தலைவர் சரியில்லை என்பதுபோல கற்பித்துக் கொண்டு தலைவர்களை மாற்றும் வேலையில் ஈடுபட்டு பா.ஜ.க. தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு திரிகிறது.
அத்வானியை பிரதமர் என்று தூக்கி நிறுத்திப் பார்த்தனர்.

பிள்ளை பிழைத்தபாடில்லை. பாகிஸ்தான் சென்றபோது ஜின்னாவை அரசியலைத் தாண்டி நான்கு வார்த்தை புகழ்ந்து சொன்னார் என்பதற்காக, அத்வானியை சங் பரிவார்க் கூட்டம் மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்து எறிந்துவிட்டது.

இன்னொரு தலைவர் ஜஸ்வந்த் சிங், அவரும் ஜின்னாவைப் புகழ்ந்தார். அத்வானியை உண்டு இல்லை என்று பிளந்து கட்டினார் - கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இப் பொழுது அவருக்கு மீண்டும் கட்சியில் ஞானஸ்நானம் கொடுத்துவிட்டனர் - ஏன் விலக்கினார்கள்? ஏன் மீண்டும் சேர்த்தார்கள்? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

இவ்வளவுக்கும் மிகவும் கட்டுப்பாடான கட்சி என்று தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்பவர்கள் அவர்கள்.

கட்சிக்குப் புதிய தலைமை தேவை - அதுவும் இளைய தலைமுறையை சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று தேடி அலைந்து, சலித்து எடுத்து மும்பையில் இருந்து ஒரு தொழி லதிபரைப் பிடித்துக் கொண்டு வந்தனர். நிதின் கட்காரியான அவர் கடந்த ஓர் ஆண்டில் கட்சியைத் தூக்கி நிமிர்த்தவில்லை யாம். அடுத்து சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், கட்காரியை வைத்துக்கொண்டு காயை நகர்த்த முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். கருதுகிறதாம்.

ஆர்.எஸ்.எஸ். வேறு - பா.ஜ.க. வேறு என்று சில சூழ்நிலை களில் அவர்கள் சொல்லுவதுண்டு. உண்மை வேறுவிதமானது தான் - பா.ஜ.க.வின் மூக்கணாங்கயிறு எப்பொழுதுமே ஆர்.எஸ்.எஸிடம்தான்.

ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்தான் பா.ஜ.க.வின் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்று கட்சியின் விதியையே திருத்திக் கொண்டுவிட்டார்கள். நாடாளுமன்ற வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுவில் ஆர்.எஸ்.எஸின் பிரதிநிதி ஒருவர் கட்டாயம் இருக்கவேண்டும் என்பதும் நடைமுறையாகிவிட்டது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். வேறு, பா.ஜ.க. வேறு என்பது சட்ட ரீதியாகத் தப்பித்துக் கொள்ளச் சொல்லும் தந்திரம் ஆகும்.

ஜனசங்கத்தைக் கலைத்துவிட்டு ஜனதாவில் கரைந்த நிலையில்கூட, ஆர்.எஸ்.எஸில் அவர்கள் உறுப்பினராகத் தொடரக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டபோது - இரட்டை உறுப்பினர் முறையிலிருந்து விடுபட முடியாது என்று கூறி, ஜனதாவிலிருந்து விலகி, மறுபடியும் ஜனசங்கத்துக்குப் பதில் பாரதீய ஜனதாவைத் தொடங்கினார்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

பல்வேறு மாநிலங்கள், பல்வேறு இனங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் மாநிலங்களே கூடாது என்றும், மதச்சார்பற்ற தன்மையைத் தூக்கி எறிந்து ஓர் இந்துத்துவா ஆட்சியை நிறுவவேண்டும் என்றும் கருதுகிற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இதன் பொருள் மீண்டும் மனுதர்மம் கோலோச்சவேண்டும் என்பதுதான்.

அதற்காகச் சிறுபான்மை மக்களை எதிரியாக முன் னிறுத்தி வருபவர்கள்; 450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதியை ஒரு பட்டப்பகலில் முக்கிய தலைவர்கள் முன்னிலையிலேயே இடித்துத் தரைமட்டமாக்கிய கூட்டம், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தண்டனையிலி ருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் தண்டனை அளிக்கத் தவறியிருந்தாலும் மக்கள் மன்றம் இவர்களை வாக்குச் சீட்டுகள் மூலம் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டது.

இந்த நிலையில், நரவேட்டை நரேந்திர மோடியை கட்சியின் தலைவராக்கி, குஜராத் மாடலில் இந்தியாவை பா.ஜ.க.வின் பிடியில் கொண்டுவந்துவிடலாமா என்ற நப்பாசையில் இருப்பதாகத் தெரிகிறது.

கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ் அம்மையாரே வெளிப்படையாகக் கூறி விட்டார். நரேந்திர மோடியின் ஜம்பம் குஜராத்தில் மட்டும்தான் - வெளியில் செல்லுபடியாகாது என்று கூறிவிட்டார்.

கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அய்க்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி பிகார் பக்கம் எட்டிப் பார்க்கக் கூடாது என்று தடை விதித்துவிட்டார்.

கோத்ராவை வைத்து சிறுபான்மை மக்களை ஆயிரக் கணக்கில் வேட்டையாடியது மூலம் இந்தியாவில் மட்டுமல்ல - உலகின் பலநாடுகளிலும் மோடியைப்பற்றித் துல்லியமாகத் தெரிந்து வைத்துள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகள் மோடிக்கு விசா கொடுக்க மறுத்துவிட்டன. இதைவிட மானக்கேடு ஒன்றும் தேவையா?

இந்த நிலையில், எந்தத் தைரியத்தில் பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் நரேந்திர மோடி என்று நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

மோடியின் வீர பிரதாபத்துக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதுமானது.
2007 அக்டோபர் 19 ஆம் தேதி அன்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, சி.என்.என்., அய்.பி.என். (CNN -IBN) தொலைக்காட்சி நடத்துகிற சாத்தானின் வக்கீல் (Devil’s Advocate) நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மோடியைப் பேட்டி கண்டவர் புகழ் பெற்ற ஊடகவியலாளர் கரண்தப்பார் ஆவார். பேட்டியாளர் நினைக்கிற மாதிரி தன்னால் தற்போது பேச முடியாது என சொல்லி, நேர்காணல் நிகழ்ச்சியின் இடையிலேயே வெளியேறிவிட்டார். நான்கரை நிமிடமே அவரால் தாக்குப் பிடிக்க முடிந்தது; மிணாறு விழுங்கினார். இவர்தான் அடுத்த பிரதமராம் - பா.ஜ.க.வின் தலைவராம்.

நல்ல தமாஷ்! -------- விடுதலை தலையங்கம் (01.11.2010

அருந்ததி ராய் பேசியதில் தவறில்லை-நடவடிக்கையும் இல்லை-ப.சிதம்பரம்


டெல்லி: காஷ்மீர் தொடர்பாக எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை என்பதால் அவர் மீது டெல்லி காவல்துறை நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது அருந்ததி ராய் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ப.சிதம்பரம், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கூட ஒரு நடவடிக்கைதான்.

ஐபிசி 124ஏ பிரிவில் என்ன கூறப்பட்டுள்ளது என்றால், நேரடியாக ஒரு வன்முறையைத் தூண்டும் வகையில் பேசாத வரை, அவர்கள் மீது சகிப்புத் தன்மையைக் காட்டி நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அருந்ததி ராய் பேச்சு இந்த நிபந்தனைக்கு உட்பட்டு இருப்பதால் சட்டத்தில் கூறியுள்ளபடி அவர் மீது டெல்லி போலீஸார் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றார் ப.சிதம்பரம்

"நியூயார்க் கிரவ்ண்ட் ஸீரோவில் மசூதி வேண்டாம்" - சவூதி இளவரசர் வலீத்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்திற்கு அருகே மசூதியொன்றைக் கட்டுவதற்கு அங்குள்ள முஸ்லிம் அமைப்பு முனைந்திருந்ததும், ஒபாமா போன்றோர் அது உரிமை என்ற அடிப்படையில் ஆதரித்ததும் அறிந்ததே.

ஆனால் மசூதி கட்டும் திட்டத்தை தவிர்க்கும்படி உலகப்பெரும் செல்வந்தர்களில் ஒருவரும் சவூதி இளவரசருமான வலீத் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் கருத்து தெரிவித்துள்ளார். இச்செய்தியை அரேபியன் பிசினஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

"நியூயார்க் மசூதி கட்டுமானத் திட்டத்தில் என்னைத் தொடர்புப்படுத்தி ஏராளமான செய்திகள் வெளியானதைப் படித்தேன். ஆனால், அவை அனைத்தும் பொய்யானவை. அந்த மசூதி திட்டத்துக்கு நான் எந்தவித நிதி பங்களிப்பும் செய்யவில்லை. இரட்டை கோபுர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்கள் இன்னும் ஆறவில்லை. அவர்களுக்கு மதிப்பளித்து அங்கு மசூதி கட்டுவதை தவிர்க்க வேண்டும்." என்று இளவரசர் வலீத் பின் தலால் அல் சவூத் தெரிவித்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது

சென்னை இரத்த தான விருது: 46 கேடயங்களை பெற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதலிடம்

கடந்த 30-11-2010 ஆம் நாள் சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில இரத்தப் பரிமாற்று மையம் சென்னை நகரத்தில் தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு விருது வழங்கும் விழா மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சென்னை மாநகராட்சி குடும்பநலத்துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ், எயிட்ஸ் தடுப்பு மற்றும் கட் டுப்பாடு மையத்தின் திட்ட இயக்குனர்கள் அ. அமுதா மற்றும் பெ. அமுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த மூன்று ஆண்டுகளாக இரத்ததானம் செய்யும் தன்னார்வ அமைப்புகளில் தமிழகத்தில் முதலிடத்தில் இருந்து வரு கின்றது. அல்ஹம்துலில்லாஹ். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் இந்த ஆண்டு சென்னை நகரில் மட்டும் 3100 யூனிட் இரத்த தானம் செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அல்ஹம் துலில்லாஹ்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தன்ஆர்வ சேவையைப் பாராட்டி அதற்கான விருதினை மாநிலச் செயலாளர் சகோ. அப்துல் ஜப்பார் அவர்களிடம் வழங்கினார்.

மேலும் 100 யூனிட்டுகளுக்கு அதிக மாக இரத்ததானம் செய்த மாவட்டங்களுக்கும் கிளைகளுக்கும் தனித்தனியாகக் கேடயங்கள் வழங்கப்பட்டன. வந்திருந்த அமைப்புக ளில் டிஎன்டிஜேயே அதிகமாக கேடயங்களை அள்ளிச் சென்றது.

வட சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், காஞ்சி கிழக்கு, காஞ்சி மேற்கு மாவட்டங் கள் மற்றும் கிளை நிர்வாகிகள் சேர்த்து மொத்தம் 46 கேட யங்களைப் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு வழங்கப்பட்டது.

ஆர்எஸ்எஸ் இந்துக்களின் நலன் விரும்பிபோல் நடித்து இந்துக்களை ஏமாற்றுகின்றது! – இந்து மஹா சபை குற்றச்சாட்டு!

ஆர் எஸ் எஸ் இந்து சமூகத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றது. தனது சொத்தை பெருக்கிக் கொள்வதற்காக அயோத்தி நிலத்தை கைபற்ற ஆர் எஸ் எஸ் முயலுக்கின்றது. இந்து மஹா சபை மற்றும் நிர்மோகியை தவிர வேறு யாருக்கம் அதில் உரிமை கிடையாது. என்று அனைத்து இந்திய இந்து மஹா சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது..

இந்து மஹா சபையின் செய்தி தொடர்பாளர் கஸத்ரியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இந்தியாவில் இந்து சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அவல நிலையை உருவாக்கியதே இந்த ஆர் எஸ் எஸ் தான்.. ஆரம்பத்திலிருந்தே இந்துக்களின் நலன் விரும்பி போல் தன்னை காட்டிக் கொண்டு இந்துக்களை ஏமாற்றி அவர்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றது என குற்றம்சாட்டியுள்ளார்.. பிடிஐ செய்திகுறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது இந்த சண்டையில் ஆர் எஸ் எஸ் யின் உண்மை முகம் அவர்களாளேயே வெளிப்பட்டதோடு இவர்கள் ராமர் மீது கொண்டுள்ள பக்கதியினால் ராமருக்கு கோவில் கட்ட பாபர் மஸ்ஜித் இடத்தை கேட்கவில்லை தங்களது சொத்துக்களை பெருக்கிக் கொள்வதற்காகவே இது போன்று மக்களை ஏமாற்றுகி்ன்றனர் என்பதும் வெட்டவெளிச்சமாகிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்!