இந்து மதவெறியர்களைப் பொறுத்த வரை இந்த குண்டு வெடிப்பு அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மூவர் தூக்கை நிறுத்தி வைக்க தமிழகம் காட்டிய முன்னுதாரணத்தை இதன் மூலம் ரத்து செய்து அப்சல் குருவை தூக்கிலேற்றி இந்துத்தவ வெறியை ஓட்டாக்கலாம் என்பது அவர்களது எண்ணம்.
புதுதில்லி உயர்நீதிமன்றத்தின் ஐந்தாவது வாயிலிற்கு வெளியே இன்று (7.9.2011) காலை 10.20அளவில் குண்டு வெடித்து 12 பேர் உயிரிழக்க, அறுபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோர் அருகாமை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். எவரும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.