தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.12.10

திருவாரூர் சமுதாய விழிப்புணர்வு மாநாடு – புகைப்படங்களுடன்!

கடந்த நவம்பர் 28ம் தேதி நடைபெற இருந்த திருவாரூர் மாவட்ட சமுதாய விழிப்புணர்வு மாநாடு தொடர் மழையின் காரணமாக நேற்றைய தேதிக்கு (12-12-2010) தேதிக்கு. அதன் பின்னரும் நிலைமை முழுமையாக சீரடையாமல் ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருந்ததுடன் சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் இருப்பதால் எதிர்பார்த்தது போல் மக்கள் வருவார்களா என்ற சந்தேகம் சிலருக்கு இருந்தது.

மேலும் திருவிடைச்சேரி கிராமத்தில் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹஜ் முஹம்மத் என்பவர் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் என்று தெரிந்திருந்தும் தவ்ஹீத் ஜமா அத்தை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த 19 இயக்கங்கள் படாதபாடு பட்டன. ஊர் ஊராக ஆளுயர சுவரொட்டிகளை ஒட்டினார்கள். தவ்ஹீத் ஜமாஅத் மீது கொலைப்பழியைச் சுமத்தி மாவட்டத்தில் உள்ள ஊர்கள் தோறும் சென்று தூண்டி விட்டார்கள்.

தமுமுகவும், பாலியல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்ட பாக்கர் கும்பலும், பல வேடம் போடும் விடியல் வெள்ளி கும்பலும் இதற்கு முன்னிலை வகித்தனர். திருவிடைச்சேரி சம்பவம் காரணமாக திருவாரூர் மாவட்ட மக்கள் மாநாட்டுக்கு வர மாட்டார்கள் என்று நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு மாநாடு தோல்வியடையும் என்று காத்துக் கிடந்தனர்.

மேலும் ஹஜ் பெருநாளை 18ம் தேதி கொண்டாடியதால் முஸ்லிம் சமுதாயம் தவ்ஹீத் ஜமாஅத் மீது வெறுப்பில் இருப்பதாகவும் கதை கட்டி மகிழ்ந்திருந்தனர்.

அவர்களது எண்ணத்திலும் எதிர்பார்ப்பிலும் மண்ணை அள்ளிப் போடும் விதமாக திருவிடைச்சேரி அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இந்த மாநாடு நடந்ததால் மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனிக்கப்பட்டது.

மற்ற இயக்கத்தினர் நடத்தும் மாநில மாநாடுகளை மிஞ்சும் வகையில் இந்த மாவட்ட மாநாடு மாபெரும் எழுச்சியுடன் துவங்கியது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் சரி சம அளவில் பங்கு கொண்டனர். மேடையில் இருந்து பார்க்கும் பொழுது கண்ணுக்கெட்டிய தூரம்வரை மக்களின் தலைகளே காட்சியளித்தன. அல்ஹம்துலில்லாஹ்!

மாநாட்டின் கடைசியை மேடையில் இருந்து காண முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம் திருவாரூர் இப்படியொரு மக்கள் வெள்ளத்தை இதற்கு முன் கண்டிருக்குமா என்பது சந்தேகமே. மாநாட்டு திடலின் நீளம் 600 மீட்டர் ஆகும். அரை கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தை மக்கள் நிரப்பிக் காட்டி நாட்டில் முஸ்லிம்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்ற ஒரே அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத்தான் என்பதை அல்லாஹ் நிரூபித்துக் காட்டினான். அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளின் கடும் உழைப்பை இந்த மக்கள் கூட்டம் மெய்ப்பித்தது. மாவட்ட துணைத் தலைவர் வெங்கலம் அப்துல் காதர் தலைமையில் முதல் அமர்வு மாலை 5.00 மணிக்குத் தொடங்கியது. முதல் அமர்வில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டப் பேச்சாளர்கள் தவ்ஹீத் ஜமாஅத்துடைய கொள்கை கோட் பாடுகள் குறித்து சிற்றுரைகள் ஆற்றினார்கள்.

இரண்டாம் அமர்வு மாலை 5.15 மணிக்கு மாவட்டத் தலைவர் அன்சாரி தலைமையில் தொடங்கியது. தலைமை உரைக்குப் பின் மாநிலப் பொருளாளர் முஹம்மது சாதிக் திருவாரூரில் தற்பொழுது காவல்துறை செய்துவரும் அட்டூழி யங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் சட்டத்திற்குட்பட்டு தமிழகமெங்கும் எவ்வாறு அமைதியாக நடைபெற்று வருகின்றது என்பதையும் விளக்கி அமைதி காக்கும் கூட்டத்தை வீணாக வம்புக்கிழுத்து விபரீத விளைவுகளை ஏற்படுத்த வேண்டாம் என்று கண்காணிப்பாளர் மூர்த்திக்கு எச்சரிக்கை செய்தார்.

சென்னை மாநகரிலும் மற்ற மாவட்டங்களிலும் உள்ள காவல்துறை அதிகாரிகள் எவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் செயல்பாடுகளை அறிந்து ஒத்துழைப்புக் கொடுத்து வருகின்றார்கள் என்பதையும் திருவாரூர் மாவட்ட காவல் துறை மட்டும் தேவையில்லாமல் அநீதி இழைத்து வருகின்றது என்பதையும் விளக்கிக் கூறினார். அடுத்து மாநிலப் பொதுச் செயலாளர் எம். அப்துல் ஹமீது தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகளுடன் போட்டி போட முடியாமலும் 19 ஜமாஅத்துகள் என்ற பெயரில் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி எத்தனை அவதூறு சுவரொட்டிகள் ஒட்டி செயல்பட்டாலும் மக்கள் இவர்களது சுய ரூபத்தை அறிந்து தெளிவாக இருக்கின்றார்கள் என்பதை நிரூபித்துக் காட்டிய கூட்டம்தான் இந்த மாநாட்டு வெள்ளம் என்று உதாரணங்களுடன் விளக்கினார்.

மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி ஜனவரி 27ம் நாள் நடைபெற இருக்கின்ற பேரணி மற்றும் போராட்டம் ஏன்?’ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதுவரை வழங்கப் பட்ட தீர்ப்புகள் கடந்த 30-09-2010ம் நாள் பாபர் மசூதி வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படை, அதில் கூறப்பட்ட மத நம்பிக்கையான சான்றுகள் நீதிபதிகளின் சட்ட விரோதமான சிந்தனை, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகள் ராமர் பிறந்தார் என்ப தற்கு சான்றாக எடுத்துவைத்த அறிவியலாளர்களின் சான்றுகள் ஆகியவைகளை மிகத் தெளிவாக விளக்கினார்.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான இறையில்லத்தை பங்கு போட்ட அநீதிக்கு எதிராகவும் உரிமையை மறுத்து மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்தும் உச்ச நீதிமன்றமே தானாக இவ்வழக்கை எடுத்து விசாரித்து உரிய தீர்ப்பை வழங்குமாறு கோரியும் இன்ஷா அல்லாஹ் ஜனவரில் 27ம் நாள் பேரணியுடன் கூடிய போரட்டம் நடைபெற இருப்பதாக விளக்கினார். தமிழகத்தில் உயர் நீதிமன்றங்கள் உள்ள சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும் இப்போரட்டத்திற்கு வருவீர்களா என மக்களை நோக்கிக் கேட்டபோது அல்லாஹ் அக்பர் என்ற கோஷத்துடன் தங்கள் கைகளை உயர்த்தியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

நிறுவனரும் மேலாண்மைக் குழு உறுப்பினருமான பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்து வந்த பாதை’ என்ற தலைப்பில் நிரைவுரையாற்றினார்.

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தீவிரவாதக் கருத்துகளை அடியோடு ஒழித்து மக்களை இறை நம்பிக்கையின்பால் அழைத்து வருவதை விளக்கினார். ஏகத்துவப் பிரச்சாரம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை செயலாற்றி வருவதை காரண காரியங்களுடன் விளக்கினார். இதற்கு முன் தோன்றிய இயக்கங்களின் சுயலாபக் கொள்கைகள் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு எதிராகக் கூடியிருக்கும் இந்தக் கூட்டணிகளின் சுயரூபங்களை விளக்கி அவாகளின் முகத்திரையைக் கிழித்து எறிந்தார்.

தற்பொழுது திருவாரூர் மாவட்ட காவல்துறை திருவிடைச் சேரியில் ஒருதலைப்பட்சமாக நடந்து, தவறு செய்தவர்களை கைது செய்யாமல் சம்பந்தமில்லாத தவ்ஹீத் சகோதரர்களின் மேல் பொய் வழக்குப் போட்டு அநீதி இழைத்து வருவதை விளக்கினார். மேலும் தவ்ஹீத் சகோதரானின் வீட்டை அநியாயமாக உடைத்து நாசப்படுத்தியவர்களின் மேல் நடவடிக்கை எடுக்காமல் கைகட்டி நிற்பதாகக் கூறினார். இதே போக்கு தொடருமேயானால் தவ்ஹீத் ஜமாஅத் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று எச்சரித்தார்.

இறுதியாக மாவட்ட பொருளாளர் காஜா முஹைதீன் தீர் மானங்கள் வாசித்து மக்களின் ஒப்புதலைப் பெற்றபின் கூட்டம் நிறைவு பெற்றது. பல மாதங்களுக்குப் பின் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் அரிய பல கருத்துகளைக் கேட்ட திருப்தியுடன் மக்கள் கலைந்துசென்றனர்














.

முஸ்லிம் வேடம் அணிந்து ஒத்திகை நடத்துவதா? – கண்டன அறிக்கை வெளியிட்ட குமரி TNTJ

முஸ்லிம் வேடம் அணிந்து ஒத்திகை நடத்துவதா? – தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

மாலைமுரசு பத்திரிக்கையில் நேற்று வெளியான செய்தி

இந்தியத் தூதருக்கு அமெரிக்காவில் அவமதிப்பு!

வாஷிங்டன்: இந்தியப்பெண் தூதர் ஒருவர் அமெரிக்காவில் அவமானப் படுத்தப்பட்டுள்ளமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பாரம்பரிய சேலை அணிந்து சென்ற அமெரிக்காவுக்கான இந்திய தூதரை மிசிசிப்பி விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீராசங்கர். இவர் மிசிசிபி பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பின்னர் பார்லிடிமோர் செல்வதற்காக, ஜாக்சன் எவர்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தார். மீராசங்கர் இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்திருந்தார். அப்போது அங்குள்ள அதிகாரிகள் மீராசங்கரை தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர். தான் ஒரு தூதர் என்று மீராசங்கர் மற்றும் அவருடன் சென்றிருந்தவர்கள் எடுத்துக்கூறியும், சமாதானம் அடையாத அதிகாரிகள், சாதாரண பயணிகளை நடத்துவதைப்போல் சோதனையிட்டனர்.

விமானத்தில் செல்லும் சாதாரண பயணிகள் உடைகளுக்குள் ஏதாவது சந்தேகத்துக்கு இடமான பொருட்களை மறைத்து வைத்துள்ளனரா என கைகளால் தடவி பார்த்து சோதனை மேற்கொள்ளப்படும். இதேபோல், மீராசங்கரை வி.ஐ.பி. வெயிடிங் அறைக்கு அழைத்துச் சென்று பெண் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். ஜாக்சன் ரோவர்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் முழு உடம்பையும் ஸ்‌‌கேன் செய்யும் மிஷின்கள் இல்லாததால், மீரா இந்த மாதிரியான ‌சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயர் அதிகாரி ஒருவருக்கு அமெரிக்க விமான நிலையத்தில் நடந்த இந்த சோதனை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியத்தூதர் சேலை அணிந்திருந்ததால் சோதனை நடத்தப்பட்டதாக மீராசங்கர் உடனிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

எனது கணவரின் தியாகத்தை அவமதிக்காதீர்கள்-காங்.குக்கு கர்கரே மனைவி கடும் கண்டனம்

மும்பை: எனது கணவர் மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கும், இந்து அமைப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக எனது கணவரின் தியாகத்தை கொச்சைப்படுத்தி, அவமதிக்காதீர்கள் என்று காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங்குக்கு மகாராஷ்டிர முன்னாள் தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா கர்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு என்னிடம் கர்கரே பேசினார். அப்போது தனக்கும், தனது குடும்பத்திற்கும் இந்து அமைப்புகளால் ஆபத்து இருப்பதாக கூறியிருந்தார் என்று நேற்று பரபரப்புதகவலை வெளியிட்டிருந்தார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிங்கின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியிலும் கூட திக்விஜய் சிங்கின் பேச்சுக்கு கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த நிலையில் ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், திக்விஜய் சிங்கின் கூற்றை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். எனது கணவர் உள்பட மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த அனைவரையும் கொன்றது பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான். இதை நான் 100 சதவீதம் நம்புகிறேன், ஏற்கிறேன். திக்விஜய் சிங், இந்த பிரச்சினையை அரசியலாக்க முயலுகிறார். தேவையில்லாமல் இந்துக்களை இந்த பிரச்சினையில் இழுத்து விட்டு அரசியல் லாபம் காண முயலுகிறார். இது வேதனை அளிக்கிறது.

திக்விஜய் சிங் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே பெரும் விரோதத்தை ஏற்படுத்த முயலுகிறார். அதில் குளிர்காய நினைக்கிறார். இது நிச்சயம் நமது நாட்டுக்கு நல்லதல்ல, பாகிஸ்தானுக்குதான் திக்விஜய்சிங்கின் பேச்சு முழுப் பலனையும் கொடுக்கும்.
Read: In English
மேலும், மும்பை தாக்குதல் சம்பவ விசாரணை கடுமையாக பாதிக்கப்படும் சூழலும் எழுந்துள்ளது. விசாரணையின்போக்கு திசை திரும்பி விடும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. எனது கணவர் நேர்மையானவர், அதேசமயம், யாருக்கும் அஞ்சியவரும் அல்ல. ஒரு இந்துவாக இருந்தாலும், நடுநிலையுடன்தான் அவர் செயல்பட்டார். அனைத்து மதத்தையும் சமமாக கருதியவர் அவர்.

தற்போது அவரது தியாகத்தையும், மரணத்தையும் அவமதிப்பது போல திக்விஜய் சிங் பேசியிருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. மிகவும் மோசமாக உணர்கிறேன். எனது குழந்தைகள் இப்போது வெளிநாடுகளில் உள்ளனர். சமயங்களில் இங்கு நடப்பதைப் பார்க்கும்போது பேசாமல் அவர்களுடன் போய் செட்டிலாகி விடலாமா என்று கூட எனக்கு விரக்தி ஏற்படுகிறது என்றார் கவிதா.

தமிழக காவல்துறையும் & ஹிந்துதுவாவும் : ஒரு சமூக பார்வை.

திண்டுக்கல்,டிச.11:தீவிரவாதிகள் திடீரென தாக்கினால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்பதுக் குறித்த பாதுகாப்பு ஒத்திகை கடந்த 9-06-2010 அன்று திண்டுக்கல்லில் போலீசாரால் நடத்தப்பட்டது.nதீவிரவாதிகளாக வேடமிட்டு ஒத்திகையில் கலந்துக் கொண்டவர்களின் முகத்தில் தாடி ஒட்டப்பட்டு முஸ்லிம்கள் போல் காணப்பட்டன.

இச்செய்தி பல்வேறு பத்திரிகைகளிலும் வெளியானது. ஒவ்வொரு மதத்தினருக்கும் வெவ்வேறான மத அடையாளங்கள் உள்ளன. முஸ்லிம் ஆண்கள் மார்க்க கடமையாக கருதி தாடியை வளர்க்கின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் என்றாலே அவர்களை முஸ்லிம்கள் தான் என்று தீர்மானிப்பது கடைந்தெடுத்த கயவாளித்தனமின்றி வேறென்ன? பகுத்து அறியும் ஆற்றலைப் பெற்ற கலைஞரின் ஆட்சியில் அவரது கட்டுப்பாட்டிலிலுள்ள போலீஸ் துறைதான் இந்த கோமாளித்தனத்தை அரங்கேற்றியுள்ளது.

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில் ஏன் தமிழகத்தின் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் தங்களது தலைமையகத்திற்கு தாங்களே குண்டை வைத்து விட்டு முஸ்லிம்களின் பழியைப்போட தீட்டவும் செய்தனர்.

கிறிஸ்தவ ஆலயங்களை இடித்தும், முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணை வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தாயையும் குழந்தையையும் கொன்ற கொடூர பாவிகள். குஜராத் கலவரத்தில் முஸ்லிம் பெண்களை கூட்டமாக சுற்றி நின்று கற்பழித்து அதை விடியோ எடுத்து ரசித்தவர்கள். குஜராத் பேஸ்ட் பேக்கரியில் அதன் உரிமையாளர் மற்றும் வேலை செய்தவர்கள் எல்லாரையும் அப்படியே தீயிட்டு கொளுத்தியவர்கள். குஜராத்தின் காங்கிரஸ் முன்னாள் MP யையும் அவர் வீட்டில் அடைக்கலம் புகுந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குழந்தைகள் எல்லோரையும் வெட்டி கொன்று தீயிட்டு கொளுத்தினர்.

ஆஸ்திரேலிய கிறஸ்தவ பாதரியார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் காரோடு வைத்து தீவைத்து கொளுத்திய கொடும் பாவிகள். குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணை வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தாயையும் குழந்தையையும் கொன்றார்கள். இவர்கள் போல் உள்ள ஒரு கொடியவர்களை வரலாறுகளில் பார்க்க முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருக்கமுடயுமா? இவர்கள் மனிதர்களா? இல்லை மிருகங்களா? இவர்கள் மனம்தான் என்ன இரும்பினால் செய்யபட்டதா? இப்படி பட்ட ரெத்த வெறி பிடித்த கயவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா மிருகங்கள். இந்நிலையில் தீவிரவாதிகளாக ஏன்? இவர்கள் போல் வேடம் இட்டு ஒத்திகை பார்க்கவேண்டியது தானே.
இதில் இருந்து தமிழக காவல் துறையில் ஹிந்துதுவாவின் தாக்கத்தை உணரமுடிகிறது.

தொடர்ந்து தமிழக காவல் துறை முஸ்லிம் விரோத போக்கோடு செயல்பட்டு வருகிறது. கோவையில் செல்வராஜ் என்ற ட்ராபிக் கான்ஸ்டபில் கொல்லப்பட்டபோது சம்மந்த பட்டவர்கள் மீது வழக்கு தொடராமல். 19 முஸ்லிம்களை சுட்டு கொன்ற கயவர்கள் ஆச்சே இவர்கள்.. ஜனநாயக முறையில் முஸ்லிம்கள் நடத்தும் போராட்டங்களை தீவிரவாதமாக சித்தரிப்பது, அவர்கள் மீது திட்ட மிட்டு பொய் வழக்குகள் போடுவது, இப்படி தமிழக காவல்துறை ஹிந்துதுவாவின் மறு உருவமாக செயல்பட்டு வருகிறது. இம்மாதிரியான நடவடிக்கைகளை கலைஞரின் போலீஸ் துறை மேற்கொள்வது அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சமூக நல்லிணத்தை சீரழிக்கவே உதவும். தமிழக காவல்துறையின் இத்தகைய செயலுக்கு அனைத்து மக்களும் தங்களது கண்டனத்தை பதிவுச்செய்ய வேண்டும்

மாலேகான் குண்டு வெடிப்பு: 'உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சினார் ஹேமந்த் கர்கரே'-திக்விஜய் சிங்!


டெல்லி: மாலேகான் குண்டு வெடிப்பில் வழக்கில் பெண் சாமியார் பிரக்யா உள்பட முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே தனது உயிருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், தான் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் இருப்பதாகவும் மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே தன்னிடம் தெரிவித்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்படுவதற்கு, இரண்டு மணி நேரத்துக்கு முன், தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கர்கரே இவ்வாறு கூறியதாக திக்விஜய் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்த கர்கரே மாலேகாவ்ன் நகரில் நடந்த குண்டுவெடிப்பை விசாரித்து அதில் தொடர்புடைய பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர், ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் பிரசாத் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தார்.

இந்த வழக்குக்குத் தேவையான பல முக்கிய ஆதாரங்களை கர்கரே தலைமையிலான குழு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தேடி சேகரித்து வழக்கை உறுதிப்படுத்தியது. ஆனால், வழக்கு மிக முக்கிய கட்டத்தை எட்டிய நிலையில் மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் கர்கரே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது மறைவுக்குப் பின் இந்த வழக்கில் தொய்வு ஏற்படத் தொடங்கியது. தற்போது கைது செய்யப்பட்ட அத்தனை பேரும் சாதாரண குற்றவாளிகள் நிலைக்கு மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் மாலேகாவ்ன் குண்டு வெடிப்பில் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே தனது உயிருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், தான் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் இருப்பதாகவும் கர்கரே தன்னிடம் தெரிவித்ததாக திக்விஜய் சிங் இப்போது தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி இரவு 7 மணிக்கு கர்கரே என்னை எனது மொபைல் போனில் தொடர்பு கொண்டு கவலையுடன் பேசினார். அப்போது பேசிய கர்கரே, மாலேகாவ்ன் குண்டு வெடிப்பில் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே எனக்கும் எனது குடும்பத்தினரின் உயிருக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டுள்ளன. நானும் என் குடும்பத்தினரும் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் உள்ளோம். மலேகாவ்ன் வழக்கு தொடர்பான விசாரணைகளை எதிர்க்கும் தரப்பினரிடமிருந்து எனக்கு மிரட்டல் வருகிறது என்றார்.

மேலும் இந்த வழக்கில் அவரது விசாரணை குறித்தும் நேர்மை குறித்தும் பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பியதால் கர்கரே மிகவும மணம் புண்பட்டுப் போயிருந்தார். இதை அவரது குரலை வைத்தே என்னால் உணர முடிந்தது.

அவ்வாறு பேசிய அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே மும்பை தாக்குதலில் கர்கரே கொல்லப்பட்டுவிட்டார்.

இவ்வாறு திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர் என்ற தகவல் வந்தவுடன் இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கர்கரே, அப்படியே அதை விட்டுவிட்டு ஸ்பாட்டுக்கு ஓடினார். காமா மருத்துவமனைப் பகுதியில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தீவிரவாதிகளை எதிர்கொள்ள உள்ளே புகுந்த அவரது நெஞ்சில் தீவிரவாதிகளின் குண்டுகள் பாயந்தன. அதில் அந்த இடத்திலேயே அவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழல்களை திசை திருப்ப காங். முயற்சி-பாஜக கண்டனம்:

திக்விஜய் சி்ங்கின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது பேச்சு துரதிஷ்டவசமானது என்று பாஜக கூறியுள்ளது.

ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் உள்பட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு அதை திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதி தான் திக்விஜய் சிங்கின் இந்தப் பேச்சு என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

அந்துலேவைத் தொடர்ந்து திக்விஜய்:

மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட விதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவர் உண்மையிலேயே தீவிரவாதிகளால்தான் கொல்லப்பட்டாரா அல்லது அவரது மரணத்துக்கு வேறு ஏதும் காரணமா என்று எனக்குத் தெரியவில்லை என்றும், இந்த விஷயத்தில் உண்மை மறைக்கப்படுவதாக நான் உணர்கிறேன் என்றும் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த ஏ.ஆர்.அந்துலே சந்தேகம் எழுப்பியதும், அதற்க பாஜக உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததும் நினைவுகூறத்தக்கது.

அந்துலேவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் பதவி விலக நேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது

குஜராத் கொலைகளுக்கு அனுமதி அளித்தது நரந்திர மோடி" : DGP ஜெனரல் ஸ்ரீகுமார்.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்றக் கலவரங்களின்போது முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதில் மோடிக்குத் தொடர்பில்லை" என்று சிறப்புப் புலனாய்வுக்குழு (Special Investigation Team - SIT) வெளியிட்டுள்ள அண்டப்புளுகு வெள்ளை அறிக்கைக்கு எதிராக, குஜராத் முதலமைச்சர் மோடியின்கீழ் காவல் துறையில் பணியாற்றிய உயர் அதிகாரி ஒருவர் குரலெழுப்பியுள்ளார்.

குஜராத்தில் இனப்படுகொலைகளை நடத்திய சங்பரிவார குண்டர்களே "மோடிதான் கொல்லச் சொன்னார்" என்று வெளிப்படையாகவும் பெருமையாகவும் ஒப்புக் கொண்ட பின்னரும் அம்புகளான அந்த குண்டர்கள் மீதும் எய்தவரான குஜராத் முதல்வர் மோடியின் மீதும் நடவடிக்கை எடுக்க வக்கற்றுப்போய் "மோடி ஓர் அப்பாவி" என்று அறிக்கை வெளியிட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினரை என்னவென்பது?

சிறப்புப் புலனாய்வுக் குழுவினரின் அறிக்கையை எதிர்த்து ஒருகுரல் எழுந்து உரத்து ஒலிக்கிறது.கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குஜராத் காவல் துறையின் முன்னாள் தலைமை இயக்குனர் (DGP-புலனாய்வுப் பிரிவு) ஜெனரல் ஸ்ரீகுமார் கடந்த திங்களன்று (6.12.2010) திருவனந்தபுரத்தில் நடந்தேறிய ஒரு பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, "மோடியை அப்பாவியாக அடையாளப் படுத்துவதற்கு, குஜராத்தில் இயங்கும் ஒரு பெரிய தொழில் நிறுவனம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, SITஇன் தலைவர் ஆர் கே ராகவனை வளைத்துப் போட்டிருக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

பாரதீய ஜனதா கட்சித் தலைவருக்கு எதிராகவும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தி, சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்குத் தாம் பட்டியலிட்டு எழுதிய முப்பது பக்கக் கோரிக்கை மனுவையும் இக்கூட்டத்தில் அவர் வெளியிட்டார். "முஸ்லிம்கள் கொத்து-கொத்துகளாகக் கொல்லப்பட்டு, அழித்தொழிப்பு நிறைவேறும்வரை கைகட்டி வேடிக்கை பார்க்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டவர் மோடிதான்" என்ற உண்மையை இப்போது போட்டு உடைத்திருக்கிறார் முன்னாள் DGP ஜெனரல் ஸ்ரீகுமார்.

அரசியல் சாசனத்துக்கு எதிரான மோடி மற்றும் காவல்துறை உயரதிகாரிகளின் கட்டளைகளின்படி செயல்பட மறுப்புத் தெரிவித்ததால் ஸ்ரீகுமாருக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு மறுக்கப் பட்டது. இவர் டிஜிபி ஆகப் பதவி உயர்வு பெற்றதே தனிக்கதை.கோத்ரா கலவரத்தை விசாரித்துக் கொண்டிருந்த நாநாவதி கமிஷன்முன் ஆஜராகி, குஜராத் அரசுக்கு எதிராகப் பல தகவல்களை ஆகஸ்ட் 2004இல் ஸ்ரீகுமார் அளித்தார். அதனால், 2005இல் அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வை குஜராத் அரசு கொடுக்கவில்லை.

அதை எதிர்த்து மத்திய நிர்வாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, மூன்றாண்டு விசாரணைக்குப் பின்னர், கடந்த 2008 மே மாதம் 2ஆம் தேதியன்று - அதாவது ஸ்ரீகுமார் ஓய்வு பெற்ற பின்னர் - டிஜிபி ஆகப் பதவி உயர்வு அளிக்கப் பட்டார்.

ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதுபோல் மோடிக்கு ஏற்ற தலைமைச் செயலராக இருந்த ஜி.எஸ்.சுப்பாராவ் என்பவர், "மாநிலத்தில் காவல்துறை வலுவாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டுமெனில், அடிக்கடி போட்டுத் தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும்" என்று தனக்கு அறிவுரை கூறியதாகவும் அதற்கு, "அப்பாவிகளைச் சுட்டுக் கொல்வது இந்தியக் குற்றவியல் சட்டம் 120-பி பிரிவின்படி குற்றமாகும்" என்று தான் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசும்போது ஸ்ரீகுமார் கூறினார்.

குஜராத் கலவரம் குறித்துப் புலனாய்வுத்துறையினர் (IB) விசாரித்தால் இன்ன இன்ன மாதிரிதான் சொல்ல வேண்டும் என்று ஸ்ரீகுமாரின் உயரதிகாரி பீ.ஸீ. பாண்டே வற்புறுத்தியுள்ளார். அதை ஸ்ரீகுமார் பதிவு செய்து வைத்துள்ளார். தன்னை அடிபணிய வைப்பதற்காகவே தனக்கு வரவேண்டிய பதவி உயர்வுக்கு, தன் ஜூனியரான அஹமதாபாத் காவல்துறை ஆணையர் கே.ஆர் கௌசிக்கை குஜராத் அரசு தேர்வு செய்து நியமித்தது என்று ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.

குஜராத் காவல்துறையில் 1972இல் சேர்ந்த ஸ்ரீகுமார், 2002ஆம் ஆண்டின் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் துவங்கிய, 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட இனப்படுகொலை நடைபெற்றுத் தொடர்ந்து கொண்டிந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் 2002வரை குஜராத் காவல்துறையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கூடுதல் இயக்குனராகப் பணியாற்றினார்.

குஜராத்தில் புலனாய்வுத்துறை உயர் அதிகாரியாகப் பணியாற்றியபோது குறிப்பெடுத்து வைத்திருந்த பல முக்கிய அம்சங்கள் அடங்கிய, 620 பக்கங்களுக்கும் அதிகமான வாக்குமூலப் பிரமாணங்களை, சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்குத் தாம் சமர்ப்பித்ததாகவும் அவற்றை (SIT) கண்டு கொள்ளாமல் முற்றாகப் புறக்கணித்து, வேண்டுமென்றே வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிட்டதாக வருத்தத்துடன் குறிப்பிட்டார் ஸ்ரீகுமார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, "எதிர்கட்சி தலைவர்கள் சங்கர் சிங் வாகேலா மற்றும் ஓராண்டுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்ட கேபினட் மந்திரி ஹரேன் பாண்டியா போன்றவர்களின் தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்யும்படி மோடி எனக்குக் கட்டளையிட்டார்" என்று ஸ்ரீகுமார் கூறினார்.

"இங்கு இதை நான் மீண்டும் மேலெழுப்புவதற்குக் காரணம் யாதெனில் மோடியைப் புனிதப் படுத்த முயலும் SITஇன் இந்த அறிக்கை, இந்திய அரசியலமைப்பின் இறையாண்மைக்கும் தனித்துவத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. மேலும் இந்த அறிக்கை, நமது ஜனநாயகத்தின் அடித்தளங்களை ஆட்டிப் பார்ப்பதாக உள்ளது என்பதாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விளைவுகளை உருவாக்கும் என்பதாலும்தான்" என்று ஸ்ரீகுமார் கூறினார்.

மேலும், "குஜராத் கலவரங்கள் இந்தியாவில் பல்வேறு கொடூரமான வன்முறைத் தாக்குதல்களுக்கு வழிவகுத்தன. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப் படாவிட்டால், அவற்றைப்போல் மேலும் பல கொடுமையான நிகழ்வுகளுக்கு உந்துதலாக அமைந்து விடும்" என்றும் அவர் எச்சரித்தார்.


மதக் கலவரங்களின்போது நடந்த குற்றங்களை மறுவிசாரணை செய்ய மார்ச் 2008இல் உச்சநீதி மன்றத்தின் உத்தரவு மூலம் இந்தச் சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT) அமைக்கப்பட்டது. குஜராத் கலவரத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுஸைன் ஜாஃப்ரியின் மனைவி ஸகிய்யா நஸீம் ஜாஃப்ரியின் புகார் மனுவை ஆய்வு செய்திட, கடந்த ஆண்டு உச்சநீதி மன்றம், சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்கு ஆணையிட்டது.

ஸ்ரீகுமார் தமது வாக்குமூலப் பிரமாணத்தில், அரசாங்க அதிகாரிகள் அந்தக் கலவரத்தில் பங்கு வகித்து, பொதுமக்களுள் 100-130 பேரை நரோதபடியா எனும் இடத்திலுள்ள காவல் நிலையத் தலைமையகத்தின் எதிரில் வைத்துக் கொன்றொழித்ததைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதைப் பற்றி மேலும் விளக்கம் கேட்டோ விசாரிக்கவோ அவர் அழைக்கப்படவில்லை. மோடி உட்பட குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வாதங்களை சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT) அப்படியே ஏற்றுக் கொண்டு, உண்மைகளை மூடிமறைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.

தான் வழங்கிய ஆதாரங்கள் இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்தவை, ஜாஃப்ரி விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கையின் 87 பாராக்களில் 36 பாராக்கள் தனது வாக்குப்பிரமாணத்தின் மூலப் பகுதிகள்தாம் என்றும் ஸ்ரீகுமார் கூறினார் "திருமதி ஜாஃப்ரியின் புகார் மனுவில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எனது ஆதாரங்களைப் பொய்யாக்கும் சதித் திட்டத்துடன் இந்த நீதிமன்ற விசாரணையின் துவக்கம் முதலே முயன்று வருகின்றனர்" என்றும் "உச்சநீதி மன்றத்தின் உத்தரவால் நியமிக்கப்பட்ட இந்தச் சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT), மோடியின் குஜராத் காவல் துறையின்கீழ் இயங்கும் ஒரு துணைக் குழுவாகவே செயல் பட்டு வந்தது" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

குஜராத் கலவரத்துக்கு முன்னர், 1990 மற்றும் 1998 ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றியவர் என்பதற்காக மத்திய அரசாங்க விருதுகள் மூலம் கௌரவிக்கப்பட்டவர் ஸ்ரீகுமார். "இந்துத்துவ இயக்கச் செயல்வீரர்கள் சட்ட விரோதமான செயல்பாடு எதிலும் ஈடுபடவில்லை; நீங்கள் சந்தேகத்திற்குரிய முஸ்லிம் போராளிகள்மீது கவனம் செலுத்தினால் போதும்" என்று மோடி தன்னிடம் கூறியதாகவும் ஸ்ரீகுமார் குறிப்பிட்டுள்ளார். தான் பிறப்பால் ஒரு ஹிந்து என்றும் சனாதன தர்மமான ஹிந்துத்துவத்தைப் பின்பற்றுவதாகவும் அதன் போதனைகள்தாம் தனக்கு இந்துத்துவ வெறியர்களுக்கு எதிராகப் போராட உந்துதலாக உள்ளது என்றும் ஸ்ரீகுமார் கூறுகிறார்.

சரித்திரத்தில் முதுநிலை பட்டம் படித்துள்ள ஸ்ரீகுமார், இந்தியக் காவல் சேவை(Indian Police Service - IPS)யில் இணைவதற்கு முன்னர் காந்தியச் சிந்தனைகளையும் படித்துள்ளார். "உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படும்வரை எந்த ஒரு விசாரணைக்கும் முற்றுப் புள்ளியில்லை" என்று தான் நம்புவதாகவும் "உண்மை குற்றவாளிகள் ஒருநாள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள்" என்றும் குறிப்பிட்டார்.

"மிகவும் கீழ்த்தரமான இரண்டு நிகழ்வுகள், நடந்தேறிய பாவகாரச் செயல்கள் ஆகியன தன்மானமுள்ள எந்தவோர் உண்மையான ஹிந்துவுக்கும் மிகப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தும். ஒன்று தகர்க்கப்பட்ட வழிபாட்டுத் தலமாகிய பாப்ரி மஸ்ஜித் நிகழ்வு. இரண்டாவது சிறுபான்மை சமுதாயத்திற்கெதிரான இனப்படுகொலை. இவ்விரண்டு சாத்தானியச் செயல்களும் பீஜேபி எனும் கட்சியின் தீவிரவாத குண்டர்களால் அதன் தலைவர்கள் என அறியப்பட்டவர்கள் முன்னிலையில் நிகழ்ந்தது" என்று அவர் கூறினார்.

உண்மையைப் புதைக்க முயலும் சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகிட சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை செய்து வருவதாக ஸ்ரீகுமார் கூறினார். "ஏனெனில், இக்குற்றவாளிகள் சட்டமுறைப்படி தண்டிக்கப் படவில்லையென்றால் நடுவுநிலை முஸ்லிம்களின் நிலமை விரக்தியாலும் கவலையாலும் இன்னும் மோசமாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லையென்றால் அது, தீவிரவாத சிந்தனைக்கும் செயல்களுக்கும் வழிவகுத்திடும்" எனக்கூறி முடித்தார் ஸ்ரீகுமார்

தினமலர், தினமணியின் பத்திரிகை தர்மம்: முதலாளித்துவத்தின் அடிவருடிகள்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆதாரங்கள், செய்திகள், வீடியோக்களை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். உலகமே துடிதுடித்துப் பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிற அந்த அராஜகங்கள் எதுவும் நமது அருமையான பத்திரிகைகளுக்கு முக்கியமாகத் தெரியவில்லை போலும். எதுவுமே நடக்காதது போல மலை விழுங்கி மகாதேவன்களாக, வேறு செய்திகளை வாசித்துக்கொண்டு இருக்கின்றன.

தினமலர், தினமணி போன்ற பார்பன பத்திரிக்கைகள் ஹிந்துத்துவா ஆதரவு செய்திகளை போட்டு வழக்கம்போல் இந்தியாவில் யாருக்கும் கொசுகடித்தாலும் ஐ.எஸ்.ஐ. சதி என்றும் செய்தி போட்டு அரிப்பை சொரிந்து கொள்கிறார்கள். தங்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்புகள் அம்பலமான போது அதை மறைத்தும் திசை திருப்பியும் செய்தி போட்டார்கள்.தமிழகம் ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பின் பெண்கள் அமைப்பான துர்காவாகினியை சேர்ந்த பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டதை பற்றி ஒரு செய்தியும் போடாமல் இருட்டடிப்பு செய்தார்கள். தினமணி, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் இந்த விக்கிலீக்ஸ் பற்றிய எந்த செய்தியும் போடாமல் செய்தி “ஆத்தூரில் மான் வேட்டை : 2 பேர் கைது”, “வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை தப்பியோடியது” போன்றவை கூட தினமலரின் முக்கியச் செய்திகள். இளவரசர் சார்லஸின் கார் விபத்து உலகச் செய்தியாகிறது. விஜயகுமார், அவரது மகள் விவாகரங்கள் உள்ளூர் செய்திகளாகின்றன. அதே வேலையில், “ஐரோப்பிய யூனியனுடன் பொருளாதார ஒத்துழைப்பு: மன்மோகன் சிங்” மற்றும் “நோபல் அமைதிப் பரிசு வழங்கும் விழா: இந்தியா உள்பட 46 நாடுகள் பங்கேற்பு” போன்ற செய்திகளைப் போட்டு தங்கள் பிறவிப்பயனை அடைந்து இருக்கின்றனர்.தேடிப்பார்த்தால் விக்கிலீக்ஸ் பற்றிய செய்தியொன்றை தினகரன் கடைசிப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. "பேச்சு சுதந்திரம் பற்றி அந்த மனிதர் பேசிய பேச்சில் மயங்கினார் அந்த 27 வயதுப் பெண்” என்று ஆரம்பித்து விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச்சை ஒரு பெண் பித்தராக சித்தரித்து இருக்கிறது. இதுதான் இந்த பார்பன ஹிந்துத்துவா பத்திரிக்கைகளின் தரமும், தர்மமும் போலும்.

முதலாளித்துவ நாடுகள் மீது இந்த பத்திரிகை முதலாளிகளுக்குத்தான் எத்தனை விசுவாசமும், அடிமை மோகமும். இந்த பார்பன வந்தேறிகள் சுதந்திரத்துக்கு முன்னாள் இந்திய சுதந்திர வீரர்களை வெள்ளை பிரிட்டிஷ்காரர்களுக்கு காட்டி கொடுத்து உயர் பதவிகள் வகித்தார்கள் இப்ப முதலாளித்தவ விசுவாசிகளாகி மேற்கத்திய நாடுகளுக்கு குடை பிடிகிறார்கள். ஓபாமாவின் வருகையை முன்பக்கத்தில் பிரசுரிக்க முடிந்த இந்த பூதகணங்களுக்கு, விக்கிலீக்ஸ் வெளியிட்ட வீடியோக்களையும், செய்திகளையும் பற்றி, எதாவது ஒரு மூலையிலாவது எழுதிவைக்க தெம்பு இருக்கிறதா? ஊடக அரசியலின் சூட்சுமங்களும், சூழ்ச்சிகளும் பிடிபடுகிற இடம் இது. இப்பொழுது ஒரே ஆறுதலும், ஆதரவும் இணையதளங்கள் தான் கருத்துரிமைக்காகவும், மனித உரிமைக்காகவும் குரல் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். மாற்று ஊடகமாகவும், மக்களின் ஊடகமாகவும் இந்த வலைப்பக்கங்கள் பரிணமிக்கட்டும்.

நன்றி: தீராத பக்கங்க
ள்