காஷ்மீர் குறித்து உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த உச்ச நீதிமன்ற வழக்குரைஞரும், அண்ணா ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ளவருமான பிரசாந்த் பூஷண் மீது கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.