தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.11.10

ஹஜ் பெருநாள்: தமிழகத்தில் முஸ்லீம்கள் சிறப்பான கொண்டாட்டம்

சென்னை: தமிழகத்தில் ஈதுல் அழ்ஹா எனப்படும் தியாகப்பெருநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அன்பு, பரிவு ஆகியவற்றை நிலைநிறுத்தும் பண்டிகையாக தியாகப்பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த திருநாள் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு தொழுகைகள் நாடு முழுவதும் நடைபெற்றன.

தமிழகத்திலும் ஈதுல் அழ்ஹா எனப்படும் தியாகப்பெருநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மசூதிகள், ஈத்காக்களில் காலையில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. பின்னர் குர்பானி கொடுத்து பண்டிகையை முஸ்லீம்கள் கொண்டாடினர்.

தலைநகர் சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

சில இடங்களில் குர்பானிக்காக ஒட்டகங்களும் வரவழைக்கப்பட்டு அவை குர்பானி கொடுக்கப்பட்டன. நாளை தவ்ஹீத் ஜமாத்தினர் ஹஜ் பெருநாளை கொண்டாயிருப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரும்,இந்திய தவ்ஹீத் ஜமாத்தினரும் அறிவித்துள்ளனர்.

"ஜெயந்திரர் கைது" புகழ் எஸ்.பி பிரேம்குமார் மரணம்

ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகிய காஞ்சி மடாதிபதிகளை கைதுசெய்து பிரபலம் பெற்ற காவல்துறை கண்காணிப்பாளார் பிரேம்குமார் காலமானார்.காஞ்சி சங்கரராமன் கொலைவழக்கு என்கிற அந்த வழக்கில் ஜெயேந்திரரின் வாக்குமூலத்தை செய்தி ஓடைகளில் காணொளியாக வெளியிட்டவரும் இவரே.

கண்காணிப்பாளராவதற்கு முன்பு ஆய்வாளராகப் பணியாற்றிய போது இராணுவ வீரர் ஒருவரை கை காப்பிட்டு அழைத்துச் சென்று பரபரப்பூட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.அந்த வழக்கில் தான் அண்மையில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் பிரேம்குமார்.

.

சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவந்த பிரேம்குமார் வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிர்நீத்த பிரேம்குமாருக்கு 57 வயது ஆகிறது.முகப்பேரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களும் துறை சார்ந்த அலுவலர்களும் அவரது உடலை பார்வையிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.