தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.10.10

பாபரி பள்ளிவாசல் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியக் கூட்டத்தில் தீர்மானம்!

பாபரி பள்ளிவாசல் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியக் கூட்டத்தில் தீர்மானம்!



பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு அனைத்திந்திய முஸ் லிம் தனியார் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.



உ.பி. மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள புகழ்பெற்ற நத்வத்துல் உலூம் அரபி பல்கலைக் கழகத்தில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 16) அன்று நடைபெற்றது. அனைத்திந் திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இந்தியாவில் உள்ள பல்வேறு முஸ்லிம் அமைப் புகளின் பிரதிநிதித்துவ அமைப் பாகும். முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தலைவரும் நத்வா பல்கலைக்கழகத்தின் தலை வருமான மவ்லவி ராபி ஹசன் நத்வி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் 51 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மவ்லவி நிஜாமுத்தின், துணைப் பொதுச் செயலாளர் அப்துர் ரஹீம் குறைஷி, வாரியத்தின் துணைத் தலைவரும் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் தலைவருமான மவ்லவி ஜலாலுத்தீன் அன்சார் உமரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சைய்யது சஹாபுதீன், ஜம்மியத்துல் உலமா ஹிந்தின் தலைவர்கள் மஹ்மூத் மதனி எம்.பி. மற்றும் அர்ஷத் மதனி பிரபல மூத்த வழக்குரைஞர் யூசுப் முசாலா, தனியார் சட்ட வாரியத்தின் பாபரி பள்ளிவாசல் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் டாக்டர் எஸ்.கி.யூ.ஆர். இல்யாஸ், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான், கர்நாடக இமாஅரத்தே ஷரீஅத் அமைப்பின் தலைவர் முப்தி அஷ்ரப் அலி, இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பேரா.சுலைமான், மில்லி கவுன்சில் பொதுச் செயலாளர் டாக்டர் மன்சூர் ஆலம் தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.


காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 2.30 வரை நீடித்தது. தொடக்கமாக பாபரி பள்ளிவாசல் வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து வழக்குரைஞர் ஜஃபர்யாப் ஜீலானி விவரித்தார். இதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.



சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) பல்வேறு குழப்பங்களும், தவறுகளும் நிறைந்த அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது மிக அவசியமாகும். இந்த மேல்முறையீட்டின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளங்களை சிதைக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப் பை திருத்தி எழுத முயற்சிகள் மேற்கொள்வது,

2) மேல்முறையீடு தொடர்பான நீதிமன்ற செலவுகளுக்காக பாபரி பள்ளிவாசல் சட்டநிதி உருவாக்குவது,

3) பாபரி பள்ளிவாசல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அபத்தங்களை விளக்குவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கருத்தரங்குகள் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழுக் கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. பாபரி பள்ளிவாசல் பிரச்சனையில் பேச்சு வார்த்தைக்கு வழி இல்லையா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த வாரியத்தின் துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் குரைஷி, ‘நீதிமன்றத் திற்கு வெளியில் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. எதிர்தரப்பு ஏதாவது திட்டத்தை முன்வைத்தால் அது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், ஷரீஅத் நெறிமுறைகள் மற்றும் முஸ்லிம்களின் கண்ணியம் ஆகியவற்றின் வெளிச்சத்தில் பரிசீலிக்கப்படும்‘ என்று பதிலளித்தார்.

ஹாசிம் அன்சாரி நடத்தி வரும் சமாதான பேச்சு வார்த்தைகள் குறித்து கருத்து கேட்டபோது, “அது தனி நபர் எடுக்கும் முயற்சி என்றும் ஆனால் தனியார் சட்டவாரியம் எடுக்கும் முடிவிற்கு தான் கட்டுபட்டு நடப்பதாக அன்சாரி தன்னிடம் தெரிவித்தார்” என டாக்டர் இல்யாஸ் தெரிவித்தார்.

மிகுந்த பாதுகாப்பு வளையத் திற்குள் இந்தக் கூட்டம் நடைபெற்றது. வாரிய உறுப்பினர் கள் மத்தியில் கருத்து மோதல் இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அக்கருத் துகளையெல்லாம் பொய்ப்பிப்பது போல் ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


பாப்ரி மஸ்ஜித் நில விவகாரம்:ஜெயேந்திர,விஜேந்திரருடன் இணைந்து வக்பு வாரியத்துடன் பேச்சு நடத்த இந்து மகாசபை முடிவு

சென்னை,அக்.20:அயோத்தி நிலவிவகாரம் குறித்து வக்பு வாரியத் தலைவர்களுடன் வரும் 28-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக இந்து மகா சபை தேசிய தலைவர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

ராம ஜென்மபூமி இந்துக்களுக்கு உரியது. 1949-ம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பாக முதன் முதலாக வழக்கு தொடர்ந்ததும் இந்து மகாசபை தான்.

அயோத்தி இடத்தை மூன்றாகப் பிரித்திருப்பதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த இடத்தை முழுமையாக இந்து மகா சபையிடம் ஒப்படைத்திருந்திருக்க வேண்டும். இந்த தீர்ப்பு எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. எனவே, இதை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருக்கிறோம்.

ராமஜென்மபூமி முழுவதுமாக எங்களுக்கு கிடைத்தவுடனே ராமர் கோவில் கட்டும் பணியை துவங்குவோம். அங்கு ராமர் கோவில் கட்டுவது உறுதி.

இந்த விவகாரம் குறித்து வரும் 28-ம் தேதி வக்பு வாரியத் தலைவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம். இதற்காக ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் நானும் டெல்லி செல்கிறேன். அங்குள்ள மீனாட்சி கோவிலில் வைத்து தான் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம்.

குஜராத் இனக் கலவரம்:குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள் ஆன்லைனில்

மும்பை,அக்.20:2002ஆம் ஆண்டு குஜராத்தில் ஏராளமான முஸ்லிம்களைக் கொலை செய்து இன சுத்திகரிப்பு நடத்திய சங்கபரிவாரங்களுக்கு எதிரான வழக்குகளில் தகுந்த ஆதாரங்களை சமர்பித்து முக்கிய பங்காற்றி மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் "நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு (The Citizens for Justice and Peace)" தான் இதுவரை இந்த இந்து தீவிரவாதிகளுக்கு எதிராக திரட்டிய மொத்த ஆதாரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளது
உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடான இந்திய தேசத்திற்கு உலக நாடுகளின் முன்னிலையில் மாபெரும் அவமானத்தையும், தலைக் குணிவையும் ஏற்படுத்திய இந்த இன சுத்திகரிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க, இதனை நடத்திய இந்து தீவிரவாத கும்பல்களுக்கு உரிய தண்டனை கொடுத்து நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று களமிறங்கிய இந்த The Citizens for Justice and Peace அமைப்பு, தகுந்த ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதில், குற்றம் செய்த தீவிரவாதிகளைப் பாதுகாக்கும் பணிகளை செய்து வந்த அரசுக்கெதிராக போராடி வந்தது.

தான் சேகரித்த ஆதாரங்களை உடனுக்குடன் நீதிமன்றத்தில் சமர்பித்தும் வந்தது. ஆனால் நமது நீதிமன்றங்கள் தம்மால் முடிந்த அளவிற்கு விசாரணையை காலம் தாழ்த்தின என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வருத்தம் தரக்கூடிய விஷயம். மற்றொரு புறம், குற்றவாளிகளுக்கெதிராக தேவைக்கு அதிகமாகவே கிடைத்த ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் தட்டிக்கழித்தும், நீதி விசாரணையை காலவரையின்றி இழுத்தடித்தும் வந்தன.

இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் முன் சமர்பிக்க எங்களால் இயன்ற அளவு முயற்சிகள் செய்து வந்துள்ளோம். அதில் புதிய முயற்சியாக அனைத்து ஆதாரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இதனை http://www.gujarat-riots.com/ என்ற இணைய தளத்தில் கொடுத்துளோம் என்று TCJP அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து தாங்கள் எடுத்துவரும் இதுபோன்ற முயற்சிகளால் குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள் என்று தாங்கள் நம்புவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கீழ்காணும் முக்கிய ஆவணங்கள் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளன:

* தேசிய மனித உரிமை கழகத்தின் (NHRC) அதிகாரப்பூர்வ அறிக்கை
* தேசிய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை
* குஜராத் மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை
* உச்ச நீதிமன்றம் மற்றும் பிரத்தியோக விசாரணை நீதிமன்றங்களின் தீர்ப்புகள்
* கலவர நேரத்தில் முக்கிய தலைவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள். அதில் யார் யாருடன் பேசினர், கலவர நேரத்தில் என்னென்னவெல்லாம் பேசினார்கள் என்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆதாரம்
* மாநில அரசு தெரிவித்த நிவாரண பணிகள் மற்றும் புணர்நிர்மான, மறுவாழ்வுக்கான பணிகளுக்கான அறிக்கைகள்
* முன்னாள் மாநில உளவுத்துறை தலைவர் RB ஸ்ரீகுமாரின் சட்டபூர்வ ஒப்புதல் அறிக்கைகள் (affidavits) அதன் மற்ற இணைப்புகள்

தேசிய அவமானமாகக் கருதப்படும் முஸ்லிம்களுக்கெதிரான இந்த இன சுத்திகரிப்பு நடவடிக்கையை குஜராத் மாநில அரசாங்கம் தான் ஆசீர்வதித்து முன்னின்று நடத்தியது என்பதற்குப் போதுமான ஆதாரம் உள்ளதா? என்று அனைவராலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கு, மிகுந்த எச்சரிக்கையுடன் கூடிய எங்களின் தொடர் முயற்சி வெகு விரைவில் விடை கிடைக்கும் என்று தாங்கள் நம்புவதாக இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

ஆனால் இந்த ஆதாரங்கள் எல்லாம் தகுந்த முறையில் விசாரிக்கப்பட்டு முறையான நீதி வழங்கப்படுமா என்பதை இப்போது நாம் அறுதியிட்டுக் கூற முடியாது. ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்து பாப்போம் என்றும் "இந்திய தேசத்தின் நீங்கா அவமானமாக நிலைபெற்றுவிட்ட இந்த கருப்பு நாட்களை நேர்மையோடு விசாரித்து நீதிவழங்க உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது இந்திய தேசத்தின் அரசியல் அமைப்பிற்கு நீதியை நிலைநாட்டும் நேர்மையும் தைரியமும் உண்டா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்" என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத்தில் சட்ட மேலவை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

விரைவில் சட்ட மேலவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் தமிழகத்தில் உள்ள பட்டதாரிகளும் (பட்டம் பெற்று மூன்று ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்) தங்களது சார்பாக சில உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உரிமை பெற்றுள்ளனர்.

அப்ஸலுல் உலமா பட்டம் பெற்ற ஆலிம்களும், M.A. (அரபிக்) பட்டம் பெற்ற பட்டதாரி ஆலிம்களும் தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவர் ஆவர்.

இது சம்பந்தமான அரசு அறிவிப்பை கீழே வாசியுங்கள்.


நீங்கள் அப்ஸலுல் உலமா பட்டம் பெற்றிருந்தாலோ அல்லது வேறு ஏதாவது டிகிரி பெற்றிருந்தாலோ தேர்தலில் வாக்களிக்க வேண்டுமெனில் உங்கள் பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தை அணுகி இதற்கான விண்ணப்பத்தை பெற்று, அதை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்துக் கொடுத்தால் நீங்களும் சட்ட மேலைவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும். உங்களது சார்பாக ஒருவரை சட்ட மேலவைக்கு தேந்தெடுக்க முடியும்.

இத்தகவலை உங்களைச் சார்ந்தவர்களுக்கு மின்னஞ்சல் / வலைப்பூ / இணையதளம் / செய்தி ஊடகம் / தொலைகாட்சி / சொற்பொழிவு / நிகழ்ச்சி / தொலைபேசி / தொலைநகல் வாயிலாக தெரிவியுங்கள்.

நன்றி! வஸ்ஸலாம்

தகவல் உதவி: கோவை மவ்லவீ அ. அப்துல் அஜீஸ் பாகவீ & காயல்பட்டினம் மவ்லவீ சுல்தான் சலாஹுத்தீன் மழாஹிரி

பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A.,
பொதுச் செயலாளர்,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),

துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்கள்: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group


அஹ்மது நிஜாத் லெபனானை விட்டு உயிரோடு போக கூடாது : இஸ்ரேல் எம்.பி.

ஜெருசலேம் : ஈரானை கடுமையாக எதிர்க்கும் இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்யேஹ் எல்தாட் இஸ்ரேல் ரேடியோவுக்கு அளித்த நேர்காணலில் லெபனானில் இருக்கும் ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத்தை லெபனானை விட்டு வெளியேறும் முன் எல்லையில் உள்ள வீரர்கள் எப்பாடுபட்டேனும் தங்கள் துப்பாக்கிகளை பயன்படுத்தி கொலை செய்ய வேண்டும் என்று பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லெபனானுக்கு அரச முறை பயணம் மேற்கொண்டுள்ள அஹ்மது நிஜாத் இஸ்ரேலின் எல்லையருகே நடந்த ஹிஸ்புல்லா பேரணியில் கலந்து கொண்டு இஸ்ரேலின் இறுதி காலம் நெருங்கி விட்டது என்று பேசியது இந்நேரம் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இச்சூழலில் இஸ்ரேல் எம்.பி. அஹ்மது நிஜாத்தை கொலை செய்ய வேண்டும் என்றும் அது ஹிட்லரை கொலை செய்வதற்கு ஒப்பானதாகும் என்றும் கூறியுள்ளார். தனக்கு பிடிக்காத உலக தலைவர்களை இஸ்ரேல் கொலை செய்வது புதிதல்ல என்பதும் தன் நலனுக்காக எந்தளவுக்கும் இஸ்ரேல் இறங்கும் என்பதும் அனைவருக்கும் தெரியும் என்றாலும் அஹ்மது நிஜாத் கொலை செய்யப்பட்டால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதால் அம்முடிவுக்கு இஸ்ரேல் செல்லாது என்றே அரசியல் பார்வையாளர்கள் அவதானிக்கின்றனர். சமீபத்தில் கூட பல நாட்டு போலி பாஸ்போர்ட்டுகளை வைத்து துபாயில் ஹமாஸ் தலைவரை கொலை செய்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது

இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதிக்குத் தடைவிதிக்குமாறு பிரிட்டிஷ் தூதுவர் கோரிக்கை

பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நிலத்தில் தொடர்ந்தும் சட்டவிரோத யூதக் குடியேற்றங்களை நிறுவிவரும் இஸ்ரேலுடனான அனைத்து இராணுவ ஒப்பந்தங்களையும் ரத்துச் செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் முன்னாள் பிரித்தானியத் தூதுவர் லோர்ட் ரைட் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிரியா மற்றும் சவூதி அரேபியாவுக்கான பிரித்தானியத் தூதுவராகப் பணிபுரிந்த லோர்ட் ரைட் கடந்த வெள்ளிக்கிழமை (15.10.2010) வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில், பலஸ்தீன் நிலத்தில் தொடர்ந்தும் சட்டவிரோதமான குடியேற்றங்களை எத்தகைய தயக்கமும் இன்றி நிறுவிவரும் இஸ்ரேலின் அடாவடித்தனமான போக்கை மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இஸ்ரேலின் இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகள் மிக மோசமான விளைவுகளையே தோற்றுவிக்கும் எனக் கூறியுள்ள அவர், 'இஸ்ரேல் தொடர்ந்தும் சட்டவிரோத யூதக் குடியேற்றங்கள் நிறுவுவதை வழக்கமாக்கிக் கொண்டால், அதன் இந்தப் போக்கு மத்திய கிழக்குப் பிராந்திய அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைவது உறுதி' என்று எச்சரித்துள்ளார்.

அவர் தமது கட்டுரையில், இஸ்ரேல் கடந்த வருடமும் சட்டவிரோதமான யூதக் குடியேற்றங்கள் பலவற்றை நிறுவியுள்ளது என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளார். மேற்குக் கரை, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரங்களில் வாழும் பலஸ்தீனர்களைத் தத்தமது சொந்த இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி, அங்கு யூத ஆக்கிரமிப்பாளர்களைக் கொண்டுவந்து நிரப்பும் நிலைப்பாட்டை இஸ்ரேல் இனியும் மாற்றிக்கொள்ளாத பட்சத்தில், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்து தடுத்துநிறுத்த வேண்டும் என்று லோர்ட் ரைட் கோரிக்கை விடுத்துள்ளார்
.