தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.11.11

ஈராக்கில் பாராளுமன்றம் முன்பு தற்கொலைப்படை தாக்குதல்; பாராளுமன்ற உறுப்பினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

பாக்தாத், நவ. 30-  ஈராக் நாட்டில் தீவிரவாதிகள் நாள்தோறும் குண்டுகளை வெடித்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தலைநகர் பாக்தாத் சுற்றியுள்ள பகுதிகளில் கார்களில் வந்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் பல இடங்களில் குண்டுகளை வெடித்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் மொத்தம் 17 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம்

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது உறுதி-உம்மன்சாண்டி


கேரள மாநிலம் கொல்லம் கல்லூரி மைதானம் ஒன்றில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், முதல்- மந்திரி உம்மன்சாண்டி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-116 ஆண்டு கால பழமையான முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதில் கேரள அரசு உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசின் அச்சம் மத்திய அரசுக்கு

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்


பெய்ரூத்:தெற்கு லெபனானில் ஐதா ஷஆப் நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. வடக்கு இஸ்ரேலை நோக்கி பல தடவை லெபனானில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடந்ததாக குற்றம் சாட்டி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது இஸ்ரேல். தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது என்றும், ஆட்களுக்கு அபாயமில்லை எனவும் லெபனான் அதிகாரிகள்

ஊழல் குற்றச்சாட்டு : குவைத் பிரதமரை பதவி விலகுமாறு உத்தரவு : நாடாளுமன்றமும் கலைகிறது


முடிவை வரவேற்கும் பொதுமக்கள்
குவைத் பிரதமர் ஷேக் நஸீ முஹ்மது அல் - அஹ்மது ஷாபா மீது ஊழல்குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து அவரை உடனடியாக பதவி விலகுமாறு, குவைத் மன்னர் உத்தரவிட்டுள்ளார்.கடந்த 2006 ம் ஆண்டு முதல் குவைத் பிரதமராக இருந்து வரும் ஷேக் நஸீர், ஊழல் மூலம் அரசு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டு சுமத்தின.

10 மாத புரட்சிக்கு பிறகு ஏமனில் பிப்ரவரி 21-ந்தேதி அதிபர் தேர்தல்


ஏமனில் 33 ஆண்டு காலம் அதிபராக இருந்து வந்த அலி அப்துல்லா சாலேவுக்கு எதிராக கடந்த 10 மாதங்களாக நடந்த புரட்சியால் பதவியை விட்டு விலகினார். அரேபிய மன்னர் அப்துல்லா செய்த சமரச முயற்சியால், ஆட்சி அதிகாரத்தை துணை அதிபர் அப்ரபு மன்சூர் ஹாதியிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் சாலே கையெழுத்திட்டார்.

ஜெர்மனியிலுள்ள நோக்கியா நிறுவனத்தில் 17000 ஊழியர்கள் திடீர் டிஸ்மிஸ்.


செல்போன் தயாரிப்பில் உலகில் முன்னணி நிறுவனமாக நோக்கியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஐரோப்பிய நாடுகளின் சீமன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செல்போனை தயாரித்து வருகிறது. கடும் போட்டி காரணமாக சமீப காலமாக இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.எரிக்சன் மற்றும் சீன நிறுவனம்ஹாவி ஆகியவை கடும் போட்டியாக உள்ளன.அவற்றை சமாளிக்க முடியாமல்

ஐரோப்பாவை விலைக்கு வாங்க தயாராகிறது சீனா

ஏறத்தாழ ஐரோப்பாவை விலைக்கு வாங்க தயாராவிட்டது சீனா என்று இன்றைய ஐரோப்பிய செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவின் தொழில் அமைச்சர் சான் டெமிங் அடுத்த ஆண்டு தனது பரிவாரங்களுடன் ஐரோப்பா வருகிறார். சீனாவின் பாரிய முதலீடுகளை ஐரோப்பிய மண்ணில் இறக்குவதற்கு அவர் வருகிறார். முதல் கட்டமாக 2.200 பில்லியன் குறோணர் பெறுமதியான முதலீட்டை சீனா செய்ய இருக்கிறது. இதுவரை சீன முதலீடுகளுக்கு தடை போட்டுவந்த

குண்டுவைக்க பணம் – வாக்குமூலத்தை சிபிஐ மிரட்டி வாங்கியதாக பல்டி அடிக்கும் அசீமானந்த்


டெல்லி:மாலேகான் வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் கைதாகி, தாக்குதலுக்கு காரணம் ஹிந்துதுவா தீவிரவாதிகள் என்று ஒப்புக்கொண்ட பின்னர், இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ள ஹிந்துத்துவ தீவிரவாதி சுவாமி அசீமானந்த், ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில்;’என்னை மிரட்டி வாங்கிய

ஆனர்ஸ் பிறீவிற்க்கிற்கு முன்மாதிரி இன்னொரு உளவியல் கொலையாளி

நோர்வேயில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சந்தேக நபரான ஆனர்ஸ் பிறீவிக்கின் செயற்பாடுகளுக்கு உந்துதலாக அமைந்த உளவியல் காரணங்கள் நேற்று 249 பக்க அறிக்கையாக வெளிவந்தது தெரிந்ததே. இது தொடர்பான இன்னொரு தகவல் இன்று வெளியாகியுள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு நோர்வேயின் ரோன்ட்கெய்ம் பகுதியில் சோமாலியர் ஒருவர் கொலை

29.11.11

முல்லை பெரியாறு அணையை இடிக்க கோரி கேரளாவில் முழு நாள் கடை அடைப்பு & உண்ணாவிரத போராட்டம்


முல்லை பெரியாறு அணையை இடிக்கவேண்டும் எனவும், புதிய அணை  கட்டப்பட வேண்டும் எனவும் கோரி, கேரளாவின் இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா, ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை முதல் மாலை வரை முதல் முழு அடைப்பு போராட்டம்  நடைபெற்றுள்ளது.ஆளும் காங்கிரஸ் கூட்டணி மற்றும்இடதுசாரிகள் என்பனவற்றின்

மொரோக்கோ தேர்தலில் இஸ்லாமிய நீதிக்கட்சி பெரும் வெற்றி.

மொரோக்கோ பாராளுமன்றத் தேர்தலில் இஸ்லாமிய நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி (பி.ஜெ.டி) வெற்றி பெற்றுள்ளது.  இத் தேர்தலில் 395 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் பி.ஜெ.டி கட்சி 80 ஆசனங்களை வென்றெடுத்துள்ளது. இதன் மூலம் அரசாங்கத்தை தலைமை தாங்கி நடத்தும் உரிமையை "பி.ஜெ.டி' கட்சி பெற்றுள்ளது.
தேர்தல் வெற்றியையடுத்து ஆதரவாளர்கள் மத்தியில்

நேட்டோ படை தெரிவித்த வருத்ததை ஏற்க பாகிஸ்தான் இராணுவம் மறுப்பு


கொல்லப்பட்டதற்கு நேட்டோ படை தலைவர் தெரிவித்த வருத்தத்தை ஏற்க பாகிஸ்தான் இராணுவம் மறுத்துவிட்டது.
கடந்த வார இறுதியில் ஆப்கான் எல்லையையொட்டி அமைந்துள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் மீது, ஆப்கானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையின் ஹெலிகாப்டர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான்

ராம் லீலா மைதானத்தை மீண்டும் முன்பதிவு செய்துள்ள அன்னா ஹசாரே : அடுத்த நாடகமா?


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வலுவான லோக்பால் மசோதாதாக்கல் செய்யப்படாவிடின் டிசம்பர் 22ம் திகதி முதல் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பேன் என அன்னா ஹசாரே முன்னர் எச்சரித்திருந்தார்.இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள போதும், இன்னமும்,

உணர்ச்சி மேலிட்டு சீமானின் புத்தி தடுமாற்ற பேச்சு கண்டிக்கப்படவேண்டியது


இந்த தமிழ்நாட்டில் தமிழர்கள் பல கட்சிகளில் இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் யாரும் இல்லை. நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவன் அல்ல என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடுமையாக பேசியுள்ளார். அவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.நாம் தமிழர் என்ற பெயரில் இயக்கம் ஆரம்பித்து அதைக் கட்சியாக தற்போது மாற்றி செயல்பட்டு வருகிறார் இயக்குநர்சீமான். தமிழ் ஆர்வலர்கள்

இருளர் இனப் பெண்கள் மீது பொலிஸார் வன்புணர்வு


பாதிக்கப்பட்ட பெண்கள்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பழங்குடி இருளர் இனப்பெண்கள் நால்வர் அண்மையில் போலீசாரில் வன்புணர்ச்சிக்குள்ளானதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இச் சம்பவம் குறித்து மாஜிஸ்ட்ரேட் விசாரணை துவங்கியிருக்கிறது. ஆயினுங்கூட அதில் தங்களுக்கு

ரஷ்ய தேர்தலில் மேற்கத்திய நாடுகள் தலையிடக்கூடாது


மாஸ்கோ, 28 நவம்பர்- ரஷ்யாவில் எதிர்வரும் தேர்தலில் மேற்கத்திய நாடுகள் தலையிடக்கூடாது என அந்நாட்டுப் பிரதமர் வ்லாடிமிர் புடின் தெரிவித்தார்.
அடுத்த மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில், மீண்டும் அந்நாட்டின் அதிபர் தேர்வுக்கான வேட்பாளராக களமிறங்க இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.ரஷ்யாவின் தேர்தல் முடிவு குறித்த எந்த மேற்கத்திய

28.11.11

முபாரக்கின் ஆட்சிக்கு பின்னர், எகிப்தில் நடைபெறும் முதல் ஜனநாயக தேர்தல் : இன்று தொடக்கம்


முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்து கீழிறக்கப்பட்ட பின்னர்எகிப்தில் முதன்முறையாக ஜனநாயக முறைப்படி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியுள்ளது.இத்தேர்தல் கட்டம் கட்டமாக

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது : 6 மாத சிறைவாசத்திலிருந்து வெளிவருகிறார்!


ஸ்பெக்டரம் 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுகவின் உறுப்பினர் கனிமொழிக்கு தில்லி உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.இந்த ஜாமீன் உத்தரவு மூலம், கடந்த ஆறுமாதகாலமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனிமொழி அங்கிருந்து விடுதலையாகின்றார்.இந்த வழக்கில்கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முன்னாள் மத்தியஅமைச்சர்  ஆ.ராசா கைது செய்யப்பட்டதைத்

மோடிக்கு அஞ்சும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களிடம் வாக்கு சேகரிக்க வரவேண்டாம் – பதேஹ்பூரி இமாம்


புதுடெல்லி:முஸ்லிம்களுக்கு எதிரான அக்கிரமங்கள் குஜராத்தில் அனைத்து வரம்புகளையும் மீறி வருகின்றன என பதேஹ்பூரி இமாம் முஹம்மது முகர்ரம் அஹ்மத் தெரிவித்துள்ளார்.டெல்லியில் நேற்று நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.முஸ்லிம்கள் அதிகமாக

துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகால விசா அறிமுகம்!

வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களைக் கவரும் பிரதேசங்களுள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக இங்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வந்தவர்கள் வேலை கிடைத்ததும் சட்டவிரோதமாக பணிசெய்வதால் அந்நாட்டு

வன்முறையை தூண்டும் ஹஸாரே: திக்விஜய் சிங்


புதுடெல்லி:அன்னா ஹஸாரே வன்முறையை தூண்டுவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் சீக்கிய இளைஞர் ஒருவரால் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அன்னா ஹஸாரே,’அந்த இளைஞர்,

பதினைந்து நாட்களில் ராணுவம் வெளியேறனும் அமெரிக்காவுக்கு பாக் உத்தரவு


பலுசிஸ்தானில் உள்ள தனது விமானப்படை தளத்திலிருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் ஆப்கான் எல்லையையொட்டி அமைந்துள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் மீது, ஆப்கானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையின் ஹெலிகாப்டர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 25 பாகிஸ்தான் வீரர்கள்

தமிழ்நாட்டில் பருவமழை: மிதக்கும் குடியிருப்புகள்


சென்னை, நவம்பர் 28- காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் குறைவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் தமிழ்நாட்டில் பருவமழை

சங்க்பரிவார்கள் நடத்திய குண்டுவெடிப்புகள் சமூகங்களை பிளவுப்படுத்தியுள்ளது – சுரேஷ் கெய்ர்னார்


புதுடெல்லி:சங்க்பரிவாரம் நடத்திய குண்டுவெடிப்புகள் முஸ்லிம்களை பாதுகாப்பு அற்றவர்களாகவும், பீதிவயப்படுபவர்களாகவும் மாற்றியது மட்டுமல்ல, சாதாரண ஹிந்து-முஸ்லிம் மக்களிடையே ஆபத்தான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது என அகில இந்திய தேசிய மதசார்பற்ற பேரவையின் தேசிய கன்வீனர் டாக்டர்.சுரேஷ் கெய்ர்னார் கூறியுள்ளார்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லியில் நடத்திவரும் சமூக நீதி

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை


கழுத்தையும் நெரிக்கும் கசகசா..! பறக்கும் பயணிகள் ஜாக்கிரதை!இந்த செய்தியை தயவுசெய்து பரப்புங்கள்.
கசகசா மட்டுமன்றி நம் ஊரில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பான் பராக், வாசனைப் பாக்கும் கூட வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்ட அயிட்டம்தான்வளைகுடா நாடுகளுக்கு கசகசா கொண்டு சென்றால் சிறைத் தண்டனை: சில சமயம் தூக்கு தண்டனை

உங்கள் பகுதியில் பூகம்ப எச்சரிக்கை செய்யும் இணையத்தளம்.


அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உலகம் முழுதும் ஏற்படும் நில நடுக்கங்களை கண்காணித்து வருகின்றது.உங்கள் பகுதியிலும் பூகம்பம் ஏற்பட்டுள்ளதா என்பதை சில நிமிட நேரங்களில் எச்சரிக்கை செய்யும் வசதியை ஏற்படுத்தி இருக்கின்றது அமெரிக்க புவியியல் ஆய்வு இணையத்தளம்.மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கும் இவ்வசதியை செயற்படுத்துவதற்கு,

27.11.11

கிரண்பேடி மீது வழக்கு டெல்லி கோர்ட் உத்தரவு

புது டெல்லி, நவ. - 27 - முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளையுடன் இணைந்து ஏமாற்றுதல் மற்றும் நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டி அவர் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மேஜிஸ்திரேட் அமீத்பன்சால் டெல்லி போலீசின் குற்றப்பிரிவுக்கு இந்த உத்தரவை

நேட்டோ படை தாக்குதலில் 25 பாக்.வீரர்கள் பலி

பாகிஸ்தான் இராணுவம் மீது நேட்டோ ஹெலிகாப்டர்கள் நடத்திய தாக்குதலில் 25 இராணுவ வீரர்கள் பலியாயினர். 

தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக ஆப்கானிஸ்தானில் `நேட்டோ' படையினர் முகாமிட்டுள்ளனர். 

இந்நிலையில் பாகிஸ்தான் எல்லைக்குள் முகமது மலைப்பகுதியில் நேட்டோ படையின் ஹெலிகாப்டர்கள் அத்துமீறி புகுந்தன. 

பின்னர் இராணுவ சோதனை சாவடியின்மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. அதில் 25 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், 4 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என தெரியவில்லை. 

நக்ஸல் தலைவர் கிஷன்ஜியையும் வீழ்த்திய 'வீரப்பன் புகழ்' விஜயகுமார்!

சென்னை, நவ. 27-  சிறிது காலமாக பேசப்படாமல் இருந்த தமிழக ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமாரின் பெயர் மீண்டும் பலமாக அடிபட ஆரம்பித்துள்ளது. வீரப்பன் உள்ளிட்ட பலரை வீழ்த்திப் புகழ் பெற்ற தமிழக முன்னாள் கூடுதல் டிஜிபியான விஜயகுமார் தலைமையிலான சிஆர்பிஎப் படைதான் தற்போது மேற்கு வங்கத்தை ஆட்டிப்படைத்து வந்த மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜியையும்

நான் வாயைத் திறந்தால் பலர் உள்ளே போக வேண்டி வரும்: ராசா


நான் வாயைத் திறந்தால் பலர் உள்ளே போக வேண்டி வரும். எனவே இப்போதைக்கு நான் ஜாமீன் கேட்கப் போவதில்லை. முதலில் கனிமொழி வெளியில் வரட்டும். பிறகு நான் ஜாமீன் பற்றி யோசிக்கிறேன், என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் தொலைத் தொடர்பு துறையின் அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டார்.

ஓடுபாதையில் தேங்கிய மழைநீர்:7 விமானங்கள் தாமதம்


மீனம்பாக்கம், நவம்பர் 26- சென்னையில் பெய்து வரும் கன மழையைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் மழைநீர் தேங்கியது. இதனால் 7 விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. சென்னை, அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று கனத்த மழை பெய்ததால் விமான ஓடுபாதையில் மழைநீர் தேங்கிவிட்டது. இதன் காரணமாக,

எகிப்தில் இராணுவம் தோல்வி

கடந்த சில தினங்களாக எகிப்தில் நடைபெற்ற ஆர்பாட்டங்கள் நேற்று வெள்ளி தொழுகைக்குப் பின்னர் மிகவும் பிரமாண்டமான பேரணியாக உருவெடுத்தது. எகிப்திய தலைநகர் கெய்ரோவில் உள்ள தாகிர் பிளேசில் சுமார் ஓர் இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடி ஆர்பாட்டங்களை முன்னெடுத்தார்கள். ஒரு சர்வாதிகாரியை கலைத்துவிட்டு அவனை விட மோசமான சர்வாதிகாரியாக

குஜராத்: அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட திருநங்கை கொலை!


குஜராத் மாநிலத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த திருநங்கை சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள லால் தர்வாஜா பகுதியைச் சேர்ந்தவர், இம்ரான் அஜ்மிரி. 40 வயதான திருநங்கையான இவர், 350-க்கும் மேற்பட்ட திருநங்கைகளின் தலைவராக உள்ளார்.

நேற்று அவர் நேரு பாலம் பகுதிக்குச் சென்றிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். படுகாயம் அடைந்த அவரை

மும்பை கிரார்போர்ட் சந்தையில் தீ : 500 க்கு மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்


மும்பையின் கிராவ்ஃபோர்ட் சந்தை பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 500 க்கு மேற்பட்ட கடைகள் எரிந்துநாசமாகியுள்ளன.இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் தீ பற்றிய செய்தி அறிந்து உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வராததால், பொருட்சேதம் அதிகமாகியுள்ளதாக கடை உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

26.11.11

எகிப்தின் புதிய பிரதமராக கமல் கன்சூரி நியமனம்

எகிப்தின் புதிய பிரதமராக கமல் கன்சூரி (Kamal Ganzouri) நியமிக்கப்பட்டுள்ளார்.கெய்ரோ மற்றும் ஏனைய பிரதான நகரங்களில் இராணுவ அதிகாரங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இடைக்கால அரசு பதவியை இராஜினாமா செய்தது.இந்நிலையில் எகிப்தின் முன்னாள் பிரதமர் கமல் கன்சூரியிடமே ஆட்சிப்பொறுப்பு

அமெரிக்க சிஐஏ உளவாளிகள் 12 பேர் ஈரானில் கைது. பர்வேஸ் சரோவ்ரி


ஈரானில் அமெரிக்காவின் உளவாளிகள் 12 பேர் கைது செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஸ் சரோவ்ரி தெரிவித்தார். அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈரான் ரகசியமாக ஈடுபட்டு வருகிறது. அணு உலை நிறுவும் முயற்சிகளை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.Ôஈரானில் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்Õ என்று சர்வதேசஅணுசக்தி கழகமும் கூறிவருகிறது.

டாம் 999 எதிர்க்கப்படுவது ஏன்..? (வீடியோ விவரணம்)

'டாம் 999' டாமிட் ஆனது ஏன்..?. மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ள 'டாம் 999' திரைப்படத்தின் மூலம் தமிழர்கள் வஞ்சிகப்படுகின்றார்கள் எனச் சொல்லப்படும் கருத்துக்களை,மிகத் தெளிவாக காட்சிப்படங்களுடன் விளக்குகின்றது இந்த ஆவணப்படம்.  தமிழகப் பொறியலாளர்களின் முயற்சியில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படம், முல்லைப்

உறையத் தொடங்கும் கடல் நீரும், விளைவுகளும் : பிபிசி வெளியிட்ட ஆச்சரியமான வீடியோ

ஆழமான கடல் நீர் பகுதி, உப்புநீர் கரைசலினால் பனிக்கட்டியாக உறைய தொடங்கும் போது
என்னென்ன மாற்றங்கள் நடைபெறுகின்றன? கடல் வாழ் உயிரினங்கள் எவ்வாறு உயிரிழக்கின்றன? என்பதனை நேரடியாக படம்பிடிக்கப்பட்ட வீடியோ காட்சிகள் முதன்முறையாக பிபிசி இணையத்தளத்தினால்

ஒரு குண்டு வெடித்தால்கூட அதிபர் மாளிகையை தரைமட்டமாக்குவோம்: வட கொரியா எச்சரிக்கை

சியோல், நவ. 26-   "எங்கள் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ஒரு குண்டு வெடித்தால்கூட, தென் கொரியா அதிபரின் மாளிகையை, தரை மட்டமாக்கி விடுவோம்" என, வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே, பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. கடந்தாண்டு நவம்பரில், யெயோன்பியோங்

மெக்சிகோவில் இரு வாகனங்களில் 17 பேர் எரித்து கொலை

குலியாகேன், நவ. 25-   மெக்சிகோ நாட்டில், இரண்டு வாகனங்களில், 17 பேர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.மெக்சிகோ நாட்டின் சினலோவா பகுதி, சர்வதேச போதை கடத்தல் கும்பல்களின் சொர்க்கமாக உள்ளது. இங்கிருந்து, அண்டை நாடான அமெரிக்காவுக்கு, போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன. கடந்த 2006ம் ஆண்டு முதல், போதை

தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்!


தூத்துக்குடி-கொழும்பு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி-கொழும்பு இடையே கடந்த 13-6-2011 அன்று கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. பிளமிங்கோ லைனர் என்ற நிறுவனம் கப்பலை இயக்கி வருகிறது. தொடக்கத்தில் இந்த கப்பலில் அதிக பயணிகள் சென்று

மும்பை பத்திரிக்கையாளர் கொலை வழக்கில் மூத்த பெண் பத்திரிக்கையாளர் கைது.

மும்பையில் கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி பட்டப்பகலில் ஜோதிர்மய் டே என்ற பத்திரிகையாளர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். “மிட் டே” ஆங்கிலப் பத்திரிகையில் பணியாற்றி வந்தார். பத்திரிகையில் கடத்தல் கும்பல் பற்றி தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். இதனால் இந்த கொலை பின்னணியில் பிரபல தாதா சோட்டாராஜன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை


தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்த்திகிடைக்கிறதா?இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடுவிருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .                                                     
பரோட்டாவின் கதை

25.11.11

ஒரே, ஒரு அடிதானா-அன்னா ஹஸாரே வாய்கொழுப்பு


மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத் பவார் மீது டெல்லியில் இன்று நடந்த தாக்குதல் குறித்து அன்னா ஹஸாரேவிடம் செய்தியாளர்கள் கருத்து சொல்லுங்களேன் என்று கேட்டபோது, ஒரே ஒருஅடிதானா என்று திருப்பிக் கேட்டார் அன்னா. பின்னர், என்ன இருந்தாலும் இந்தத் தாக்குதல் தவறானது என்று கண்டித்தார்.எங்கள் ஊரில் குடிகாரர்களை கம்பத்தில் கட்டி வைத்து உதைப்போம் என்று சில நாட்களுக்கு முன்புதான் கூறியிருந்தார் அன்னா. அதற்கு கடும் கண்டனங்களும்,எதிர்ப்புகளும் எழுந்தன.

சரத் பவாருக்கு கன்னத்தில் அறை – தலைவர்கள் கண்டனம்


விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரை ஹர்வீந்தர் சிங் என்ற இளைஞர் காட்சி ஊடகங்களின் முன்னிலையில் கன்னத்தில் அறைந்தார். அரசியல்வாதிகள் எல்லாம் திருடர்கள், விலைவாசி உயர்வுக்கு சரத்பவார்தான் காரணம் என கூறியவாறு அவ்விளைஞர் பவாரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.எதிர்பாரதவிதமாக தாக்கப்பட்ட சரத்பவார் அருகிலிருந்து சுவற்றில் பிடித்ததால் கீழே

இஸ்லாத்திக்கு எதிராக பிரச்சாரங்களுக்கு துருக்கிபிரதமர் கண்டனம் தெரிவிப்பு.


இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரங்கள் துருக்கி எதிர்ப்புத்தெரிவித்துள்ளதுடன், மேற்குநாடுகளில் ஏற்பட்டுள்ள இஸ்லாத்தின் மீதான அச்சத்தை இல்லாதொழிப்பதற்காக முஸ்லிம்கள் ஒன்றுபடுமாறும் அந்நாட்டுப் பிரதமர் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.சில மேற்கத்தைய சக்திகளினால் இஸ்லாத்திக்கு எதரான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன் முஸ்லிம்களை பயங்கரவாதம்,மற்றும் மோதல்கள் போன்றவைகளுடன்

இந்திய புத்தகங்களை அரபியில் மொழிபெயர்க்க திட்டம்


அபுதாபி:இந்திய தூதரகத்துடன் இணைந்து அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றுக்கான ஆணையகம் இந்தியாவின் தொன்மை வாய்ந்த மற்றும் நவீன நூற்களை அரபி மொழியில் மொழிபெயர்க்க புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது என்று இந்திய தூதரக அதிகாரி எம்.கே.லோகேஷ்

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக ஷெர்ரி ரஹ்மான் நியமனம்


அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் புதிய தூதராக முன்னாள் செய்தி அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.முன்பு தூதராக இருந்த ஹூசைன் ஹக்கானி பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி ஏற்படலாம் என்று கூறி அமெரிக்க அரசிடம் உதவி கேட்டதாக சர்ச்சை எழுந்ததால் தூதர் பதவியில் இருந்து விலகினார்.
 இதையடுத்து அந்த இடத்துக்கு ஷெர்ரி ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாதிகளை கைது செய்யவேண்டும் – மஜ்லிஸே முஷாவரா


புதுடெல்லி:தீவிரவாதம் குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் விடுதலையான சூழலில் இத்தகைய வழக்குகளில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஹிந்துத்துவாவினரை கைது செய்யவேண்டும் என ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரா(எ.ஐ.எம்.எம்.எம்) கோரிக்கை விடுத்துள்ளது.முஸ்லிம் இளைஞர்களை தவறாக குற்றவாளிகளாக சேர்த்து சிறையில் அடைத்த அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்தும் ப்ராவிடண்ட் நிதியிலிருந்தும்

இவர் யார் என்று தெரியுமா? தெரிந்துகொள்வோம் வாருங்கள்

கொலம்பசையும் ,மார்கோ போலவையும் தெரிந்த பலருக்கு இந்த பெயர் தெரியுமா என்பது சந்தேகத்திற்குரியதே.ஆனால் இவரின் சாதனைகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.இவர் தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை பிரயாணங்களிலேயே செலவிட்டவர்.1304 ஆம் ஆண்டு மொரோக்காவில் பிறந்தவர் தான் இப்னு பதுதா இவரது இயற்பெயர் ஹாஜி அபு அப்துல்லாஹ் முஹம்மது இப்னு பதுதா என்பதாகும்.இவரின் பயணக் குறிப்புக்கள் "rihla" என்ற என்ற நூலில் இவர் எங்கெல்லாம் பயணம் செய்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யேமனிய அதிபர் அலி அப்துல்லா சாலேஹ்வின் 33 வருட ஆட்சி முடிவுக்கு வருகிறது


யேமனிய அதிபர் அலி அப்துல்லா சாலேஹ், அரசு அதிகாரத்திலிருந்து விலகுவதற்குசம்மதம் தெரிவித்துள்ளார். அவர் தனது ஆட்சி அதிகாரத்தை கையளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.சவுதி மன்னர் அப்துல்லா, மகாராணியார் நாயேஃபின் முன்னர், அவர் பதவி அதிகாரத்தை அவர் கையளித்தார்.இதையடுத்து 33 வருட ஆட்சிபீடத்திலிருந்து, அவர் பதவி விலவுள்ளார். அவரை பதவி விலக கோரி