தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.1.11

இந்த கோமாளிகலின் கூத்தை கேட்க்க யாராவது வாரீஹலா ::தீவிரவாதி அசிமானந்தாவுக்கும் பாஜக, சங்கபரிவாரத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை -கட்காரி!

"தீவிரவாத குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளியான அசிமானந்தாவுடன் பாஜகவுக்கோ சங்கபரிவாரங்களுக்கோ எவ்வித தொடர்பும் இல்லை" என பாஜக தலைவர் நிதின் கட்காரி கேரள பத்திரிக்கையாளர்களிடையே பேசும் போது தெரிவித்துள்ளார்.
கேரளத்திலுள்ள பாஜக தலைமையகத்தில் கேரள பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமேயான தனிப்பட்ட சந்திப்பு ஒன்றைப் பாஜக தேசிய தலைவர் நிதின் கட்காரி நடத்தினார். இதில், "குஜராத் மாடலில் கேரளத்தை முன்னேற்றும் வகையில் திட்டங்கள் அறிவிப்பதன் மூலம் 8 சதவீதம் வரை பாஜக ஓட்டு வங்கியை அதிகரித்து, 5 எம்.எல்.ஏக்களையாவது வருகின்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெறும். இதற்கென கட்சி, தேசிய நிலைபாடுகள் எடுக்கும்.
கேரளத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் தலைமை வகிக்கும் இரு கூட்டணிகளுக்கு எதிராகத் தனித்து நிற்க பாஜக முடிவு செய்துள்ளது. பாஜகவைச் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று காங்கிரஸ் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. இது தவறான பிரச்சாரமாகும். நாட்டில் வாஜ்பாய் தலைமையிலான அரசே சிறுபான்மையினருக்கு அதிக முன்னேற்றத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. பீகார் தேர்தலில் முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியைக் கைகழுவி விட்டதாலேயே காங்கிரஸ் இவ்வாறான தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
சிறுபான்மை மக்களோடு பாஜகவுக்கு எவ்வித விரோதமும் இல்லை. பாஜக, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. தீவிரவாத குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளியான அசிமானந்தாவுடன் பாஜகவுக்கோ சங்கபரிவாரங்களுக்கோ எவ்விதத் தொடர்பும் கிடையாது" என்று கட்காரி கூறினார்.
"குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக மோடி அரசு நடத்திய அராஜகங்களைக் குறித்து" பத்திரிக்கையாளர்கள் இடைமறித்து கேள்வி எழுப்பினர். அப்போது,
"குஜராத்தில் நடந்தவை வருந்தத்தக்க நிகழ்வுகளே. ஆனால் அதே சமயம் அதுதொடர்பாக செய்திகளில் வந்தவைகளில் மிகப்பெரும்பான்மையான சம்பவங்களும் பத்திரிக்கைகளின் தவறான மிகைப்படுத்தல்களாகும். குஜராத்தில் 30 சதவீத முஸ்லிம்களும் பாஜகவுக்கே ஓட்டளித்துள்ளனர்" என்று பதிலளித்தார்.
"தீவிரவாத்தைத் தீவிரவாதமாகவும் குற்றவாளிகளைக் குற்றவாளிகளாகவுமே காணப்படவேண்டும். ஜாதி, மதத்தின் பெயரால் பிரிவினை ஏற்படுத்தி ஓட்டு வங்கியை உருவாக்க காங்கிரஸ் முயல்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.                இந்த இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

சம்ஜெளதா குண்டு வெடிப்பு இந்துத்துவாவினரே காரணம்: அசீமானந்த் மீண்டும் வாக்குமூலம்!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் விரைவு இரயில் மீது 2007ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு இந்துத்துவா பயங்கரவாதிகளே காரணம் என்று சுவாமி அசீமானந்த் மீண்டும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பஞ்ச்கூலா மாஜிஸ்ட்ரேட் முன் சனிக்கிழமையன்று வாக்குமூலம் அளித்த சுவாமி அசீமானந்த் என்ற நபா குமபார் சர்கார், சம்ஜெளதா குண்டு வெடிப்பின் முக்கியக் குற்றவாளியாக இந்துத்துவா பயங்கரவாதிகளான தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 164ஆன் கீழ், தேசிய புலணாய்வு அமைப்பால் (NIA) இந்த வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த வாக்குமூலம் சட்டப்படி சான்றாக எடுத்துக்கொள்ளத் தக்கதாகும்.

முன்னதாக சுவாமி அசீமானந்த் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் அவரைத் துன்புறுத்தி பெறப்பட்டது என்று அசீமானந்தின் வழக்கறிஞர் மன்வீர் ரதி கூறிய குற்றச்சாட்டையும் சனிக்கிழமையன்று பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் மறுத்துள்ளது.

சம்ஜெளதா விரைவு ரயிலில் குண்டு வெடித்த உடனே, இது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்றும் ஆரிஃப் கஸ்மானி என்பவர் இந்த குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளி என்றும் முன்னர் கூறப்பட்டது.

சம்ஜெளதா விரைவு ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் அவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண் நீதிபதியை பதவிநீக்கம் செய்தது சரியே: உச்சநீதிமன்றம்

புதுதில்லி, ஜன.16: ரயிலில் டிக்கெட் இல்லாமல் 3 முறை பயணம் செய்த பெண் நீதிபதியை பதவிநீக்கம் செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புறநகர் ரயிலில் 3 முறை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததற்காகவும், டிக்கெட் வாங்குமாறு வலியுறுத்திய ரயில்வே ஊழியரை அச்சுறுத்தியதற்காகவும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டான வாலவல்கர் 2000-ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் அதற்கு மேற்பட்டவர்கள் யாரும் இல்லை என்றும்;  நீதித்துறையில் உள்ளவர்கள் ஒவ்வொரு நடத்தையிலும் கண்ணியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து, அவரை டிஸ்மிஸ் செய்ததை உறுதிப்படுத்தி உத்தரவிட்டது.

அசீமானந்தின் வாக்குமூலப் பதிவை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி!

அசீமானந்திடம் இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 164ன் கீழ் பதிவு செய்யப்படவுள்ள வாக்குமூலத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிய மனுவை தேசிய புலணாய்வு நிறுவனத்தின் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2007ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சம்ஜெளதா விரைவு ரயில் குண்டு வெடிப்பில் அசீமானந்த் முக்கியக் குள்ளவாளிகளில் ஒருவர் ஆவார்.

அண்மையில் அசீமானந்த் மாஜிஸ்ட்ரேட் ஒருவரிடம் அளித்ததாகக் கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை தன்னுடைய மனுவில் சுட்டிக்காட்டிய சண்டிகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சடின்டர் சிங், மத்திய ஆளும் கூட்டணி பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களின் பெயர்களைக் களங்கப்படுத்தவே ஒப்புதல் வாக்குமூலம் வெளியிடப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை சட்டத்துக்குப் புறம்பான வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்காக புலணாய்வு அதிகாரிகளைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் இன்றும் வழக்கறிஞர் தன்னுடைய மனுவில் கூறியிருந்தார்.

தன்னுடைய மனுவில் கூறப்பட்டுள்ளவற்றைக் கவனத்தில் கொண்டு, சுவாமி அசீமானந்திடம் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள வாக்குமூலத்திற்கு முன் போதிய முன்னேற்பாடுகளைச் செய்து கொண்ட பிறகே வாக்கு மூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் தன்னுடைய மனுவில் கோரியிருந்தார்.

மனுதாரரின் வாதங்களைக் கேட்ட, தேசிய புலணாய்வு நிறுவன சிறப்பு நீதிமன்ற நீதிபதி பஞ்ச்குலா இந்த மனுவை தள்ளுபடி செய்தார். பின்னர் நீதிபதி, சுவாமி அசீமானந்தை தன்னுடைய ஓய்வறைக்கு அழைத்துச் சென்று அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தார்

அமெரிக்க இராணுவத்தால் கந்தஹாரில் 100 மில்லியனுக்கு மேல் சேதம்

கடந்த ஆறு மாத காலமாக கந்தஹாரில் அமெரிக்க இராணுவத்தினால் வீடுகள், பண்ணைகள் முதலானவற்றுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள உடைமைச் சேதங்களின் மொத்தப் பெறுமதி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைவிட அதிகமாகும் என ஆப்கானிய கமிஷன் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (13.01.2011) நிவ்யோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தப் புதிய கணிப்பீடு, இதற்கு முன்னர் அமெரிக்க இராணுவம் வெளியிட்டிருந்த புள்ளிவிபரத்திலிருந்து (1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெரிதும் வேறுபடுவதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் புள்ளிவிபரத்தை வெளியிட்டவர் கந்தஹார் பிராந்தியத்துக்குப் பொறுப்பாக இருந்த கமாண்டர் மேஜர் ஜெனரல் ஜேம்ஸ் டெர்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிய கமிஷனின் அறிக்கையில் 900 இற்கும் அதிகமான ஆப்கானிய வீடுகள் அமெரிக்கத் துருப்பினரால் வேண்டுமென்றே இடித்துத் தகர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள், பழத்தோட்டங்கள், பெருந்தெருக்கள் என்பவற்றின்மீது இடையறாது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள், புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் என்பவற்றினாலேயே பெருமளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கந்தஹாரின் ஆளுநர் கூறியுள்ளார்.

மேற்படி ஆப்கானிய கமிஷனின் தலைவர் முஹம்மத் ஸாதிக் அஸீஸ் கருத்துரைக்கையில், 'கந்தஹார் பிராந்தியத்தைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களில் வயல்வெளிகளை அடுத்திருந்த 800-900 வீடுகளும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரங்களும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன என்று நம்முடைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.