திருச்சி திருவானைக்காவலில் வடிவேலு பிரசார வேன் மீது செருப்பு வீசப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் தே.மு.தி.க. அலுவலகம் சூறையாடப்பட்டது.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் திருச்சி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.