அபுதாபி:வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின்(ஜி.சி.சி) உறுப்பு நாடுகளுக்கும் ஈரானுக்குமிடையேயான உறவில் மேலும் விரிசல் அதிகரித்துள்ளது.
அரபு நாடுகளில் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள மக்கள் எழுச்சியின் திரைமறைவில் வளைகுடா நாடுகளில் ஸ்திரத்தன்மையற்ற சூழலை உருவாக்கவும்,தங்களது விருப்பங்களை நிலைநாட்டவும் ஈரான் மேற்கொண்டுவரும் முயற்சிகள்தாம் இம்மோதல் முற்றுவதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.