தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.9.11

டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு : 9 பேர் பலி!


புதுடெல்லி : டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் காலை 10.17க்கு பலத்த சத்தத்துடன் குண்டுவெடிப்பு நடைபெற்றதில் 9 பேர் உயிரிழந்-துள்ளனர். டெல்லி உயர்நீதிமன்ற 5ம் நுழைவு வளாகத்தில் வெடித்த குண்டால் 45 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததாக வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

துபாயில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுக்கு ஜாமீன்

துபாய், செப். 7-  அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக துபாயில் போராட்டம் நடத்தி சிறை சென்ற இந்தியர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராக காந்தியவாதி அன்னா ஹசாரே கடந்த மாதம் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவருக்கு நாடுமுழுவதும் ஆதரவு பெருகியது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் ஆதரவு தெரிவித்து ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.  கடந்த மாதம் (ஆகஸ்டு) 21-ந் தேதி அன்னா ஹசாரேயின் ஆதரவாளர்கள் துபாயில் அல் மம்'‘ர் பீச் பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதற்கு அவர்கள் போலீசாரிடம் அனுமதி பெறவில்லை. இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே, அவர்களை ஜாமீனில் விடக் கோரி நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. 

இந்தியாவில் 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு


Majority of Indian Muslims live in a very poor conditions
டெல்லி:இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 180 மில்லியனிற்கு மேலுள்ளதாக யு.எஸ். நம்புவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
பத்து வருடத்திற்கு ஒரு முறை இந்திய அரசு மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும், இந்தியாவில் முஸ்லிம்களின் இருப்பு பல காரணிகளை

உயர்நீதிமன்றத்தில் “தினமலர்” எரிப்பு போராட்டம்! படங்கள்!!

காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர் என்று அவதூறு செய்யும் தினமலர் நாளேட்டை எரித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் போராட்டம், புகைப்படங்கள்!

5.09.2011 பதிப்பில் “ராஜீவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்”  (தினமலர் அந்த செய்தியை இணையத்தளத்திலிருந்து நீக்கிவிட்டதால் வேறொரு சுட்டி இணைக்கப்பட்டுள்ளது – வினவு)என்ற தலைப்பில் தினமலர் நாளேடு பார்ப்பன வன்மத்துடன் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. மூவரையும் தூக்கிலேற்ற வேண்டும் என்ற வெறியுடன் எழுதியிருந்த தினமலர் அதில் “காதல் தோல்வியால் தீக்குளிக்கும் செங்கொடிகள்” என்று அயோக்கியத்தனமாக எழுதியிருந்தது.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.2 கோடி பரிசு: ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.2 கோடி பரிசு அளிக்கப்படும் என்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
 
இளைஞர்கள் ஒரு நாட்டின் மதிப்பு மிக்க

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி..


உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, தனக்கு செருப்பு வாங்குவதற்காக மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இதற்காக மாநில அரசுக்கு ஏற்பட்ட செலவு ரூ. 10 லட்சமாகும்.
கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இந்திய அரசியல் தலைவர்கள் தொடர்பாக, தனது தலைமையகத்துக்கு அனுப்பி ரகசிய கேபிளில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
அதில், மாயாவதிக்கு

விக்கிலீக்ஸ்:தேசிய அளவில் பெரிய பொறுப்பை வகிக்கத் தயாராகும் மோடி



நியூயார்க்:மாநில அளவில் தன்னை வலுப்படுத்தியுள்ள நரேந்திர மோடி தற்போது தேசிய அளவில் பெரிய பொறுப்பை வகிக்க ஆயத்தமாகி வருவதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியுட்டது.
டெல்லி அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாயாவதிக்கு விக்கிலீக்ஸ் அசாஞ்சே பதிலடி!


என்னை கொண்டு செல்ல உங்களது தனி விமானத்தை லண்டனுக்கு அனுப்புங்கள் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதிக்கு விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பதிலடி கொடுத்துள்ளார்.
2007 முதல் 2009 ஆம் ஆண்டு வரை இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள், தங்கள் நாட்டு அயலுறவுத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்த ரகசிய ஆவணங்களில் மாயாவதி பற்றிய தகவல்களை “விக்கிலீக்ஸ்’ இணைய தளம்

ஃபலஸ்தீனை தனிநாடாக அறிவிக்க விரும்பாத அமெரிக்கா


imagesCA64N27M
நியூயார்க்:ஃபலஸ்தீனத்தை தனி நாடாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்படுகிறது. ஃபலஸ்தீனத்திற்கு தனிநாடு அந்தஸ்து தரக்கூடாது என காஸ்ஸா பகுதியை ஆக்கிரமித்து ஃபலஸ்தீனத்துடன் போர் செய்யும் இஸ்ரேல் கூறி வருகிறது.
இஸ்ரேலின் கூட்டாளியாக உள்ள அமெரிக்காவும் ஃபலஸ்தீனத்தை