சென்னையில் கடந்த ஆண்டு 2011 ஜூலை 3 ம்தேதி சிறுவன் இராணுவக் குடியிருப்பில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த வழக்கில் சிறுவனைச் சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடல், இந்திராநகர் குடிசைப் பகுதியைச் சேர்ந்த குமார்- கல்யாணி தம்பதியின் மகன் தில்ஷன், குடியிருப்பின் அருகில் உள்ள இராணுவ க் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாதாம் மரங்களில், பாதாம் கொட்டைகள் பறிக்கச் சென்ற போது, அங்குள்ள இராணுவ அதிகாரி சுட்டதில் இறந்தான்.இந்தச்