தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.12.10

இத்தாலி நாட்டு சுவிஸ், சிலி தூதரகங்களில் குண்டுவெடிப்பு!

இத்தாலியின் தலைநகர் ரோமில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து, சிலி தூதரகங்களில் நேற்று இடம்பெற்ற குண்டு தாக்குதல்களில்
இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிறிஸ்மஸ்து விடுமுறையை முன்னிட்டு இவ்விரு தூதரகங்களுக்கும் கிடைக்கப்பெற்ற இரு பொதிகளிலிருந்து இவ் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. இது குறித்து சுவிற்சர்லாந்து தூதரக காவல் அதிகாரிகள் தெரிவிக்கையில், இப் பார்சல் பேர்னில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கே அனுப்பப்பட்டுள்ளது. எனினும் இத்தாலியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என தெரிவித்தனர்.

சுவிஸ் தூதரகம் மீதான தாக்குதல் இடம்பெற்று சிறிது நேரத்தில் சிலி தூதரகத்தில் இதே போல் பார்சல் குண்டு வெடித்துள்ளது. உக்ரேய்ன் தூதரகத்திலிருந்தும், சந்தேகத்துக்குரிய பார்சல் குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. இத்தாக்குதல்களுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பு கூறவில்லை.

எனினும், அண்மையில் லண்டனில் மாணவர்களால் நடத்தப்பட்ட வன்முறைகளின் பிரதிபலிப்பாக இத்தாக்குதல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இத்தாக்குதலில் சுவிஸ் தூதரக பணியாளரின் கரங்களில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளது

மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை! - ராய்ப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு .

மாவோஜிஸ்ட்டுக்களுக்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது ராய்ப்பூர் கீழ் நீதிமன்றம்.

குழந்தைகள் நல மருத்துவரான பினாயக் சென் (70) சட்டீஸ்கர் மாநில பழங்குடியின ஏழை மக்களுக்காக மருத்துவ உதவி மையங்களை நடத்திவந்தார்.
அவருடைய சேவைகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. அவர் கைதாகிய தருணம் அவரது மருத்துவ தொண்டுக்காக கௌரவமான சர்வதேச விருதும் கிடைக்கப்பெற்றது.

இந்நிலையில் நாராயண் சன்யால் என்ற மாவோஜிய சித்தாந்தவாதிக்கும் தலைமறைவாக வாழ்ந்துவந்த மாவோஜிஸ்ட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே செய்திப்பரிமாற்றங்கள் நடைபெற உதவியாக இருந்தவர் என அவர் மீது குற்றச்சாட்டப்பட்டு முன்வைக்கப்பட்டு கைதாகினார்.

தற்போது இக்குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதை எதிர்த்து மேன்முறையீடு செய்வார் என அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மாவோஜிஸ்ட்டுக்களை ஒடுக்குவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அமைப்பு அட்டூழியங்கள் செய்திருந்ததாக பினாயக் சென் குற்றம் சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது

கிருஸ்துவர்கள் ஓட்டுக்காக இந்துக்களுக்குத் துரோகம் இழைத்த ஜெயலலிதா-ராம.கோபாலன் தாக்கு

சென்னை: மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்த ஜெயலலிதா, பின்னர் கிருஸ்தவர்களின் ஓட்டுக்காக அதைக் கைவிட்டு இந்துக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கூறினார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், முதல்வர் கருணாநிதியும் கிருஸ்தவர்களின் புகழாரத்தில் மயங்கி இந்து தாழ்த்தப்பட்டோர் சலுகையை மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கும் வழங்குவோம் எனப் பேசியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது இந்து தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் அநீதி!.

கிருஸ்தவர்கள் எங்கள் மதத்தில் தீண்டாமை, ஜாதிக் கொடுமை இல்லை என்று கூறித்தான் இந்துக்களை மதம் மாற்றுகின்றனர். ஆனால் இந்துக்களின் சமூக நீதிக்காக அளிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் சலுகை மதம் மாறிய பின்னரும் வேண்டும் என்பது தன்மானத்தோடு, சுயமரியாதையோடு வாழ்கின்ற தாழ்த்தப்பட்ட இந்துக்களை மதமாற்ற நடக்கிற சதி!.

ஜெயலலிதா மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். கிருஸ்தவர்களின் ஓட்டிற்காக அதனைக் கைவிட்டு இந்துக்களுக்குத் துரோகம் இழைத்தார்.

மதமாற்றத் தடைச் சட்டத்தின் அவசியத்திற்கு ஜெயலலிதா என்னென்ன காரணம் சொன்னாரோ அதுவெல்லாம் இன்றும் தொடர்கிறது!. ஆனால் இந்துக்களின் நலன் பற்றி இவர் எதுவும் பேசவில்லை!

முதல்வர் கருணாநிதியோ தற்போதைய அவரது ஆட்சியில், கடந்த 4 ஆண்டுகளில் சிறுபான்மையினருக்குக் கல்வி உதவித் தொகை என்ற பெயரில் அரசு நிதியைக் வாரிக் கொடுத்துள்ளார்.

இந்துக்களுக்குக் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு எந்தச் சலுகையையும் கொடுக்கவில்லை!.

அரசின் உதவியால் நடைபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் இந்துக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.

லயோலா கல்லூரி உள்பட முஸ்லீம், கிருஸ்தவர்களின் 21 கல்லூரிகள் பற்றி சென்ற ஆண்டு வெளியான செய்தியில் விரிவுரையாளர் பதவியில்கூட தாழ்த்தப்பட்டோர் ஒருவரும் நியமிக்கப்படவில்லை.

இந்து முன்னணி அரசியல் இயக்கம் அல்ல. ஆனால் இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகப் போர்க் குரல் கொடுத்துப் போராடும் இயக்கம். வரும் தேர்தலில் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படும் இத்தகைய செயல்பாட்டை, திட்டங்களை மக்களுக்கு விளக்கி இந்து முன்னணி பிரச்சாரத்தில் இறங்கும்.

தாழ்த்தப்பட்ட இந்துக்களின் சலுகையை மதம் மாறிய கிருஸ்தவர்களுக்கு வழங்க இவர்கள் முயற்சித்தால், கிருஸ்தவ நிறுவனங்களில் இந்துக்களுக்கும் பங்குகொடுக்க வேண்டும்; கிருஸ்தவ பள்ளி, கல்லூரிகளில் இந்துக்களுக்கும் இட ஒதுக்கீடும், வெளிநாட்டிலிருந்து வரும் நன்கொடையை எல்லோருக்கும் பிரித்து வழங்கக் கோரியும் இந்துக்கள் சார்பாக இந்து முன்னணி போராட்டத்தில் இறங்கும் என்று எச்சரிக்கிறோம் என்று கூறியுள்ளார்.