பாக்தாத்:ஏற்கனவே அறிவித்துள்ள கால வரம்பிற்கும் மேலாக ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நீடித்தால் தாக்குவோம் என பிரபல ஷியா அறிஞர் முக்ததா அல்ஸத்ர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2011-ஆம் ஆண்டு ஈராக்கிலிருந்து வாபஸ் பெறுவோம் என அறிவித்துவிட்டு ஈராக் ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கிறோம் என்ற பெயரால் சிலரை நிரந்தரமாக நாட்டில் தங்கவைப்பதற்கு திட்டமிடவே ஸத்ரின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது. ஆக்கிரமிப்பு சக்திகளை தங்களது ஆயுதம் எதிர்கொள்ளும் என ஸத்ரை மேற்கோள்காட்டி எ.எஃப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.