தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.4.11

'ஒபாமாவின் பிறப்பிடம் எது?' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி : பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை வெளியிட்டது வெள்ளை மாளிகை


பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பிறப்பிடம் தொடர்பான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் முகமாக, ஒபாமாவின் உண்மையான பிறப்பு சான்றிதழை வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டுள்ளது.
ஒபாமா ஹவாய் தீவுகளில் தான் பிறந்தார் என்பதை உறுதிப்படுத்தும் இப்பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், ஒபாமா ஜனாதிபதி பதவியை வகிப்பதற்கான சட்ட அந்தஸ்த்து குறித்த சர்ச்சைகளை ஒரு வழியாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

தமிழக பாஸ்போர்ட் அதிகாரியின் வேண்டுகோள்!!

April 29,பாஸ்போர்ட் பெறுவதற்கு புரோக்கர்களை அணுக வேண்டாம். அதிகாரிகளை நேரடியாக சந்தித்து முறையிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

என சென்னை மண்டல புதிய பாஸ்போர்ட் அதிகாரி சி.செந்தில் பாண்டியன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகமும், மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் கிளை அலுவலகங்களும் செயல்படுகின்றன.

ஐ.எஸ்.ஐ. பற்றி பொய் பிரசாரம் நடக்கிறது: பிரதமர் கிலானி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. தீவிரவாத ஆதரவு அமைப்பு என்று அமெரிக்கா பட்டியலிட்டது. இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி, ஐ.எஸ்.ஐ. பற்றி பொய் பிரசாரம் நடக்கிறது என்று குறிப்பிட்டார்.

அவர் இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு விழாவில் பேசியபோது இதை குறிப்பிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

பேஸ்புக் நிறுவனருக்கு எகிப்தில் அழைப்பு


கெய்ரோ,  பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், எகிப்து வரவேண்டும் என, "ஜனவரி 25 புரட்சி' அமைப்பின் சார்பில், அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டில், கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வந்த, அடக்குமுறை ஆட்சிக்கு, சமீபத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதற்கு, மக்களின் எதிர்ப்பு ஒரு காரணமாக இருந்தாலும், அனைத்து போராட்டக் குழுக்களையும் ஒருங்கிணைப்பதில், "பேஸ்புக்' இணையதளம் முக்கிய பங்கு வகித்தது.

கனடாவில் தொடங்கியது கையெழுத்துப் போராட்டம்


ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழுவின் அறிக்கையை கவனத்தில் கொண்டு இலங்கை மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ஒரு ஆணைக் குழுவை அமைப்பதற்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூனுக்கு அதிகாரம் உள்ளது என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி. ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இலங்கையின் போர்க்குற்றங்களை