தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.5.11

அமைச்சர் மரணத்துக்கு காரணமான லாரி மேற்கு வங்காளத்தில் சிக்கியது

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
சென்னை : அமைச்சர் மரியம் பிச்சை மரணத்துக்கு காரணமான சரக்கு லாரியை,  மேற்கு வங்க மாநிலத்தில்  தமிழக சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியை ஓட்டிய டிரைவர், ஆந்திராவில் பிடிபட்டார். திருச்சி மேற்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் மரியம்பிச்சை. மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார். அதிமுக மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். 13ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 16ம் தேதி அமைச்சராக பதவி ஏற்றார்.

ரயிலில் பெண்களுக்கு கட்டண சலுகை: ஜுன் 1 தேதி முதல் பாதி பணம் கொடுத்தால் போதும்

புதுதில்லி,  (டிஎன்எஸ்) 58 வயது பெண்களுக்க ரயிலில் பயணம் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 1ஆம் தேதி முதல் அவர்கள் ரயிலில் பயணம் செய்ய பாதி கட்டணம் கொடுத்தால் போதும். எனினும் ஜுன் 1ஆம் தேதிக்கு பிறகு பயணம் செய்வதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தால், இந்த கட்டண சலுகை கிடையாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

2011-12-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த அப்போதைய அமைச்சர் மம்தா பானர்ஜி ஏராளமான

தமிழக புதிய ஆட்சியின் முதல் கோணல்: விடை தருவது யார் ?


ஆரவரமான வெற்றியுடன் தமிழகத்தில் கோட்டையை பிடித்திருக்கும் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக்கு தொடக்கமே சறுக்கலாக அமைகிறதா? இந்த கேள்வி தான் தற்போது சமநிலையில் இருந்து அரசியலை பார்க்கும் அனைவரின் மனதிலும் எழுந்துள்ள கேள்வி. இந்த கேள்வி எழுவதற்கு காரணம், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கிறோம் என்ற அரசின் அறிவிப்பு. ஏன்? எதற்கு? இதில் அடுத்த நடவடிக்கை என்ன? என்று அடுத்தடுத்து இயல்பாகவே கேள்விகள் தொக்கி நிற்கின்றன. ஆனால்

இலவச அரிசி திட்டம் : ஜூன் 1ம் திகதி முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைக்கிறார்



 ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக 20 கிலோ அரிசி வழங்கும் திட்டம் ஜூன் 1ம் திகதி முதல் அமல்படுத்தப்படும் என உணவுத்துறை அறிவித்துள்ளது.
அ.தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்தால் இந்த அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று முதல்- அமைச்சராக ஜெயலலிதா கடந்த 16-ந்தேதி பதவி ஏற்றதும் 7 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கிய உத்தரவு இலவச அரிசி வழங்கும் திட்டமாகும். அரிசி பெற தகுதி உடைய அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக 20 கிலோ அரிசி வழங்கப்படும்

கனிமொழி ஜாமீன் உயர்நீதிமன்றம் நிறுத்திவைப்பு


2ஜி ஊழல் வழக்கில் திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தில்லி உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
2ஜி ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் கனிமொழி, சரத்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து அவர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை சிபிஐ நீதிமன்றம் முன்னதாக தள்ளுபடி செய்திருந்தது. அதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தங்களது ஜாமீன் மனுக்களை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று மதியம் 2 மணிக்குத் தொடங்கியது.

ஆப்கனில் பொதுமக்கள் பலி: மன்னிப்பு கேட்டது நேட்டோ


தென்-மேற்கு ஆப்கானிஸ்தானில் விமானத்தாக்குதல் ஒன்றில் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு ஆப்கனில் உள்ள அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
பொதுமக்களின் உயிரிழப்பை தடுப்பதற்குத்தான் நேட்டோ அதிகபட்ச

நடிகர் மோகன்லாலும், துபாய் புர்ஜ் கலிஃபா உல்லாச வீடும்!!

உலகின் மிக உயரமான கட்டிடமாகிய (துபாய் நாட்டில் உள்ள) புர்ஜ் கலிஃபா அடுக்குமாடி,

இந்த குடியிருப்பில் மூன்றரை கோடி ரூபாயில் வீடு வாங்கியுள்ளார் மலையாள நடிகர் மோகன்லால்.

கடந்த வாரம் தனது 51 வது பிறந்தநாளை நண்பர்களுடன் சிறப்பாக கொண்டாடினார். தனக்கு தானே பிறந்தநாள் பரிசளித்துக் கொள்ள விரும்பினார்.

துபாயில் புர்ஜ் கலிஃபா என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க முடிவு செய்தார்.
முதலில் துபாய் சென்று வீட்டை

வெள்ளை துண்டுக்கு மாறும் கருணாநிதி: குருபெயர்ச்சியால் திடீர் மாற்றம்


குருபெயர்ச்சி சாதகமில்லாமல் போனதால், மஞ்சள் நிறத்தில் இருந்து, அடிக்கடி வெள்ளை துண்டுக்கு கருணாநிதி மாறி வருகிறார். ஆரம்பம் முதல் கறுப்பு துண்டு அணிந்த கருணாநிதி, ஐந்தாண்டுகளுக்கு மேலாக மஞ்சள் துண்டுக்கு மாறினார். “கழுத்து பகுதியில் அதிக வலி ஏற்படுவதால், கனமான மஞ்சள் துண்டு அணிந்தால் கழுத்து பகுதியில் வெப்பம் ஏற்படும். வலியை அது கட்டுப்படுத்தும் என, மருத்துவர்கள் ஆலோசனைப்படி துண்டு மாற்றம் நடந்தது’ என, தி.மு.க., தரப்பில் கூறப்பட்டது.
“கருணாநிதி ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்ததால், குருபலம் பெற அவர் மஞ்சள் துண்டு அணிந்தார்’ என, ஆன்மிக பெரியோர் கூறி வந்தனர். முதல்வராக பதவியில் இருந்த காலத்தில் மஞ்சள் துண்டை அவர் தவிர்த்தது இல்லை. தஞ்சாவூரில் இரண்டாண்டுகளுக்கு

30.5.11

நீதிக்குப் புறம்பான தமிழினப் படுகொலைகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் காணொளிகளாக காண்பிக்கப்படவுள்ளன!



சரணடைந்த தமிழ் மக்களை சிறீலங்கா இராணுவத்தினர் கோரமாக படுகொலைசெய்யும் காட்சிகள் அடங்கிய காணொளி நாளை முப்பதாம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் காண்பிக்கப்படவுள்ளதாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நீதிக்குப் புறம்பான படுகொலைகள்

அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை


மைச்சர் மரியம்பிச்சையின் மரணத்துக்குக் காரணமான லாரி எங்கே?’- இந்த ஒற்றைக் கேள்விக்கு விடை கிடைத்தால்தான், அவரது மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழும். ஆரம்பத்தில், விபத்துதான் என்று அடித்துச் சொல்லிய பலரும், 'அமைச்சர் மரணத்தில் மர்மம் இருக்கலாம்’ என்று மாற்றிச் சொல்வதற்குக் காரணம்... விபத்துக்கான லாரி இன்னமும் சிக்கவில்லை! 

 சி பி - அப்போ லாரி சிக்கிடுச்சுன்னா மரணத்துல மர்மம் இல்லைன்னு முடிவுக்கு வந்துடுவீங்களா?

பிரதமர் நல்லவர், ரிமோர்ட் கண்ட்ரோல் போல அவரை இயக்குபவர் தான் பிரச்சினை : அனா ஹஸாரே


பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதனர். ஆனால் அவரை ரிமோர்ட் கண்ட்ரோல் போல இயக்குபவர்கள் தான் பிரச்சினைக்குரியவர்கள் என லோக்பால் சட்ட மசோதா குழுவின் தலைவர்களில் ஒருவரும், காந்தியவாதியுமான அனா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். இம்மாநாட்டை ஊழலுக்கு எதிரான இந்திய அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

முதல்வரா இருந்தவர் உறுப்பினர் ஆகிறார்? இதுதான் காலச்சக்கரமோ!?


சென்னை, மே 30: முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, திங்கள்கிழமை சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி ஏற்கிறார். திருவாரூர் தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்ற மே 23-ம் தேதி கருணாநிதி தில்லியில் இருந்தார். அவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் அன்று பதவி ஏற்கவில்லை. இவர்கள் தவிர அதிமுக தரப்பில் சிவபதி, மனோகரன் ஆகியோர்

மாநில புதிய தேர்தல் ஆணையாளராக சோ.அய்யர் நியமனம்!


தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சோ.அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சியின் போது மாநில தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்ட சையத் முனீர் ஹோடா, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, மே.27ம் திகதி முதல் அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு சோ.அய்யர் தேர்தல்

ஆப்கானில் நேட்டோ படைகளது இராணுவ கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்!


ஆப்கானிஸ்தானில் பொலிஸ் அதிகாரியின் சீருடையில் தலிபான் தீவிரவாதி ஒருவன் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில், இராணுவ உயர் அதிகாரிகள்
இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், ஜேர்மனிய ஜெனரல் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

29.5.11

ஏமனில் உள்ள தமிழக செவிலியர்களை மீட்க விஜயகாந்த் வேண்டுகோள்


சென்னை, மே.28-   வளைகுடா நாடான ஏமனில் உள்நாட்டு போரில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த செவிலியர்களை காப்பாற்றுமாறு மத்திய அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஏமன் நாட்டில் அதிபர் அலி அப்துல்லா சலேவை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபருக்கு ஆதரவாக ராணுவமும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாக பழங்குடியினரும் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை: சென்னையில் கருத்தரங்கம்


இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் சிறிலங்க அரச படைகள் போர்க் குற்றங்களை இழைத்துள்ளன என்றும், அதன் மீது ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ள ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் மீது சென்னையில் இன்று கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
‘தமிழீழ விடுதலையும்

ருவாண்டா இன அழிப்புடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது


ருவாண்டாவில் இன அழிப்பு மற்றும் டூட்சி இனப் பெண்களை பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்துவதற்காக தனி குழுக்களை அமைத்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் தேடப்பட்டு வந்த பிரதான சூத்திரதாரி பேர்னாட் முன்யாகிசாரி கொங்கோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஹூட்டு எனப்படும் பெரும்பாலும்

முதல் முறையாக ஐரோப்பியப் பாராளுமன்றில் தமிழர்கள் தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர் !


குற்றம் இழைக்கப்பட்டோர் தண்டிக்கப்பட்டனாரா என்ற தலைப்பில், ஐரோப்பியப் பாராளுமன்ற உறுபினர்கள் பலர் கலந்துகொள்ளும் தீர்மானம் நிறைவேற்றும் மாநாடு ஒன்றை முதல் முறையாக தமிழர்கள் நடத்தவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற வளாகத்தில் யூன் 1ம் திகதி இது நடைபெறவுள்ளது. போர் முடிவுற்று 2 வருடங்கள் ஆகியும் குற்றம் இழைத்தவர்கள்

எகிப்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குகிறது சவுதி அரேபியா


கெய்ரோ, மே.22- எகிப்தில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதை தொடர்ந்து 17 நாட்களுக்கு பிறகு முபாரக் பதவி விலகினார். தற்போது எகிப்தின் ஆட்சி அதிகாரம் ராணுவ கவுன்சில் வசம் உள்ளது. 
 
இந்நிலையில் போராட்டத்தை தொடர்ந்து கலவரத்தால் பாதிக்கப்பட்ட எகிப்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த சவுதி அரேபியா முன்வந்துள்ளது. எகிப்துக்கு அந்நாடு ரூ.20 ஆயிரம் கோடி நிதிஉதவி அளிக்கிறது. 

28.5.11

செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு


செருப்பு அணியாமல் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமாரை அழைத்த முதல்வர் ஜெயலலிதா, செருப்பு அணியுமாறு நேற்று உத்தரவிட்டார்.
அரசியல் கட்சி தொண்டர்கள், தங்கள் கட்சித் தலைமை மீது வைத்துள்ள பற்று, பாசம் அளவுக்கு அதிகமானால் என்ன செய்வர் என்றே தெரியாது. சமீபத்தில் ஒரு அ.தி.மு.க., பெண் தொண்டர், ஜெயலலிதா முதல்வராக வர வேண்டும் என்பதற்காக, தன் நாக்கையே அறுத்து, கோவில் உண்டியலில் போட்ட சம்பவம் நடந்தது. அந்த வரிசையில், அமைச்சர் பொறுப்பேற்றுள்ள ஒருவர், ஜெயலலிதாவை கடவுளாக நினைப்பதாகவும், அவர் இருக்கும் இடத்தில் செருப்பு அணிவதில்லை

ஏமனில் உள்நாட்டு போர்: இந்தியர்கள் வெளியேற வேண்டுகோள்


சானா, மே.28-  ஏமனில் உள்நாட்டு போர் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்தியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக பழங்குடியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு பழங்குடி படையினர் திடீரென்று தலைநகர் சானாவுக்குள் புகுந்து ராணுவத்தினர் மீது பயங்கர தாக்குதல்

ஈரானில் பொதுமக்கள் முன்னிலையில் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை!


ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நேற்று, ஐந்து பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஷிராஸ் எனும் நகரில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் இத்தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. இவர்கள் கொலை,பாலியல், வல்லுறவு, கடத்தல் உள்ளிட்ட

கட்டாயம் ஹெல்மெட் :இன்று 28ஆம் தேதி முதல் போலீஸ் அதிரடி தொடங்கும்

சென்னை, மே 28 (டிஎன்எஸ்) சென்னை நகர போலீசார் மீண்டும் கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக 28ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளனர். அதன் பிறகு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

ஹெல்மெட் அணிவதற்கு போலீசார் விதித்த கெடுவுக்குநேற்றுடன் முடிவடைந்தது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் பயன்படுத்துங்கள்.

மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

மதம் மாறினால் நடை, உடை, பாவனை, மொழி, தேசப்பற்று அனைத்தும் மாறிவிடுமென்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் பிரச்சாரம் செய்கிறது. அந்த அவதூறு பிரச்சாரத்தை வலுவான வாதங்களோடு வேரறுக்கும் கட்டுரை

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 1

27.5.11

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் : மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிகள் பேட்டி


இன்று காலை 10.00 மணியளவில் வெளிடப்பட்ட, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு (பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வு) முடிவுகளின் படி  மாநில அளவில்  ஐந்து மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றனர்.

அவர்கள் பெயர் விவரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி நித்யா, கோபிச்செட்டிபாளையம் மாணவி ரம்யா, தலைவாசல் எஸ்.ஆர்.எம். முத்தமிழ் பள்ளி மாணவி சங்கீதா, செய்யாறு மாணவி மின்னலாதேவி, சென்னை திருவொற்றியூர் மாணவி ஹரிணி ஆகியோர் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளவர்கள் ஆவர். அவர்களுடைய மதிப்பெண்கள் 496/500 ஆகும்.

மரண தண்டனை பெற்ற இருவரின் கருணை மனுக்கள், ஜனாதிபதியால் நிராகரிப்பு



மரணதண்டனை பெற்று நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இரு குற்றவாளிகளின் கருணை மனுக்களை இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல்  நிராகரித்துள்ளார். இதையடுத்து இருவரும் விரைவில் தூக்கிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1993ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றில், பஞ்சாப்பை சேர்ந்த தீவிரவாதி தேவிந்தர் பால்சிங் பல்லார் கருணை மனு அளித்தார். கடந்த 7  1/2 (ஏழரைஆண்டுகளாக) ஜனாதிபதியின் பரிசீலணையில் இருந்து வந்த இக்கருணை மனுவை நேற்று, குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல் நிராகரித்துவிட்டார்.

Rafah எல்லையை மீண்டும் நிரந்தரமாக திறந்தது எகிப்து - காஸா மக்கள் மகிழ்ச்சி


காஸா வுக்குள் நுழைவதற்கான Rafah எல்லை நுழைவாயிலை மீண்டும் திறந்துவிடப்போவதாக எகிப்து அறிவித்துள்ளது.
                                                             காஸா 

பாபர் மசூதியும் பார்பன வேட்டையும்!!

முஸ்லிம்களின் 450 வருடம் வரலாற்று பழமைவாய்ந்த பாபர் மஸ்ஜித் ஹிந்து வெறியர்களால் இடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அலஹாபாத் உயர் நீதி மன்றத்தின் (சிறுபிள்ளைத்தனமான) தீர்ப்பை உச்சநீதி மன்றமே கண்டித்தது.

உச்சநீதி மன்றம் நல்லதீர்ப்பு தரும் என்ற

ஹிட்லர் வளர்த்த பேசும் நாய்கள் : புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு


போர் நடவடிக்கைகளின் போது, புலனாய்வு செய்வதற்காகவும், மீட்பு நடவடிக்கைகளுக்காகயும் நாய்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ஜேர்மனை ஆண்ட சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர், தனது நாசிப்படையிலிருந்த நாய்களுக்கென ஒரு பாடசாலையையே பயன்படுத்தியிருக்கிறார் என்பது வழக்கத்திற்கு மாறானது தானே!

2-வது கடற்படை தளம் அமைப்பதில் பாகிஸ்தானுக்கு உதவ சீனா மறுப்பு


பீஜிங், மே.26- பாகிஸ்தானில் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு சீனா உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ மந்திரி அகமது முக்தார் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை ஏற்க சீனா மறுத்து விட்டது.
பாகிஸ்தான் கடற்படை தளத்துக்குள் தலீபான்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக தான் இவ்வாறு மறுப்பு கூறப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

குடியிருப்புகள் மீது விமானம் விழுந்ததில் 10 பேர் பலி

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் விமானம் நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 2 பைலட்டுகள், 2 டாக்டர்கள், 2 மருத்துவ உதவியாளர்கள் இருந்தனர்.  
 
இரவு 10.35 மணிக்கு விமானம் டெல்லியை நெருங்கிக்கொண்டு இருந்த போது திடீரென்று தரைக் கட்டுப்பாட்டு

26.5.11

சென்னை விமான நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு


விமான நிலையங்களுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதையொட்டி நாடு முழுவதும் விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக 10 விமான நிலையங்கள் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதில் சென்னை, பெங்களுர், ஐதராபாத், டெல்லி, மும்பை, அகர்தலா ஆகிய விமான நிலையங்கள் அடங்கும். சென்னை விமான நிலையத்தில் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் படி இந்திய விமான ஆணையம்

டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் கார்க்குண்டு வெடிப்பு!? : உயிர்ச்சேதம் இல்லை


இன்று புதன்கிழமை நண்பகல், டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில், கார் பார்க் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரொன்றில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளதாக அறியமுடிகிறது.
டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் கேட் இல 6 இற்கு அருகாமையில் சில்வர் நிற ஃபோர்ட் பிகோ கார் ஒன்றினுள் இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. எனினும் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. இக்குண்டுவெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இன்னமும் அறியப்படவில்லை என காவற்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு மீட்பு படையினர் மற்றும் தீயனைப்பு படைவீரர்கள் குறித்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

தவறாக கைது செய்யப்பட்டது ஏன்? : 1.5 பில்லியன் USD நஷ்ட ஈடு கோரும் இந்திய மாணவி


அமெரிக்காவில் கல்வி கற்று வரும் இந்திய தூதுவ உயரதிகாரி ஒருவரின் மகளான கிருத்திகா பிஸ்வாஸ் (Krittika Biswas) (18), தன்னை தவறாக கைது செய்த காவற்துறையினரை கண்டித்து 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
நியூயோர்க்கின் குயீன்ஸில் இல் அமைந்துள்ள John Powne உயர்தர

10 வயதில் சிஸ்கோ தேர்வு எழுதி சிறுமி அறிவு சாதனை!!

 திருநெல்வேலி: இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார்.

அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். அவரது ஐகியூ.,திறன் அதிகரிப்பு, கற்றுக்கொண்ட

ராஜீவ் கொலையை யாரும் அரசியல் ஆக்க முயற்சிக்க வேண்டாம்: காங்கிரஸ் கருத்து


புதுடெல்லி,  தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது ராஜீவ்காந்தி கொலை பின்னணியில் மறைமுகமாக தி.மு.க.வும் ஒரு காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டி இருந்தார்.
இதுபற்றி டெல்லியில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி, எங்களை பொறுத்தவரை ராஜீவ் படுகொலை மிகவும் உணர்ச்சிகரமாக துயர சம்பவம்.

மன்மத லீலையை வென்றார் உண்டோ!!

May 26, தி.மு.கவின் தோல்வியை தங்களது வெற்றியாக கொண்டாடும் பட்டியலில் பொறுக்கி நித்தியானந்தாவும் சேர்ந்திருக்கிறார்.

இவரது சாபத்தால்தான் தி.மு.க படுதோல்வி அடைந்திருக்கிறதாம். இந்த உண்மையை தனது பொற்கால ஆட்சிக்காக ஏங்கித்தான் தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று பேசும் புரட்சித் தலைவியின் காதில் விழுந்தால் விழுந்தால் அம்பி சட்னிதான்.

மாவோஸ்ட் மக்கள் போராளிகள் அதிரடி தாக்குதல்!!

May 26, சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோஸ்ட் மக்கள் போராளிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு உள்பட 10 பேர் பலியானார்கள்.

சத்தீஷ்கார் மாநிலம் கரியாபாண்ட் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் பவார் தலைமையில் 10 போலீசார், ரோந்துப் பணியிலும், காணாமல்போன போலீசாரை தேடியும் ஒரிசா மாநில எல்லைப் பகுதிக்கு சென்றனர்.

25.5.11

பலஸ்தீன் ஆக்கிரமிப்பு ‘நக்பா’ நினைவு தினத்தில்



பலஸ்தீன ‘ஆக்கிரமிப்பு தினம்’ ‘நக்பா’ தினம்  ஆண்டுதோறும்  பலஸ்தீனில் இடம்பெறுகின்றது பலஸ்தீனின் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பின்   இந்த வருடம்  63 ஆவது ஆண்டு நிகழ்வு, ‘ஆக்கிரமிப்பு தினம்’ இன்று ஞாயிற்று கிழமை பலஸ்தீனில் நடைபெருகின்றது ‘ஆக்கிரமிப்பு தினம்’ நிகழ்வுகள் பலஸ்தீனம் முழுவதும் அனுஷ்டிக்கபடுகின்றது அவை பேரணியாக , ஆர்பாட்டங்களாக , கண்ட கூட்டங்களாக ,

அமெரிக்கா இஸ்ரேலின் இரும்பு அரணாக இருக்கும்: ஒபாமா


இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் தான் கொண்டிருந்த தனது எல்லைப் பகுதிக்கு செல்லவேண்டும் என்ற அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தான் தெரிவித்த கருத்தில் இருந்து பல்டி அடித்துள்ளார் என்று பலஸ்தீன் செய்திகள் தெரிவிக்கின்றது நேற்று அமெரிக்காவில் இயக்கும் இஸ்ரேலிய முக்கிய அரசியல் அழுத்த அமைப்பான அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைபப்பு- American Israel Public Affairs Committee (AIPAC)யின் வருடாந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஒபாமா ஐநா சபையின் ஊடாக பலஸ்தீன் தேசத்தை உருவாக்க பலஸ்தீனர்கள் மேற்கொள்ளும் முயற்சியை நிராகரித்ததுடன் இஸ்ரேலை பாதுகாக்கும் இரும்பு அரணாக (ironclad) வொசிங்டன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தயாநிதி மாறன் விக்கிலீக்ஸ் செய்திகளுக்கு எதிராக கதறல்..


இந்து நாளிதழில் தன்னை பற்றி வெளியிடப்பட்ட செய்தி அவதூறானது, உண்மைக்கு மாறானது எனக்கூறி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்து நேற்றைய இதழின் முதல் மற்றும் 11ம் பக்கங்களில் தமிழக மற்றும் தேசிய அரசியல் குறித்து 2008ம் ஆண்டில் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தயாநிதி மாறன் சில கருத்துக்களை கூறியதாக செய்தி ( கருணாநிதி டபிள் கேம் ) வெளியிடப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் இணைய தளம் அம்பலப்படுத்தி

மரியம்பிச்சையின் சாவில் மர்மம் இருக்கிறது: ஜெயலலிதா


திருச்சி "மரியம்பிச்சையின் சாவில் மர்மம் இருக்கிறது," என்று, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில், திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க., அமைச்சர் நேருவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வின் மரியம்பிச்சை, சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம், சென்னையிலிருந்து திருச்சி வந்த அவர்,

24.5.11

அமைச்சர் மரியம் பிச்சை சாவில் மர்மம் விசாரணைக்கு ஜெ. உத்தரவு


சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியம் பிச்சையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஜெயலலிதா, மரியம் பிச்சையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டார். மேலும் இது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில் நேற்றுகாலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை பரிதாபமாக உயிரிழந்தார்.

தேர்தலில் ஜாதி கட்சிகளுக்கு பெரும் அடி


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், கொ.மு.க., உள்ளிட்ட ஜாதிக் கட்சிகள் அனைத்தும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. ஒட்டுமொத்தமாக தமிழக வாக்காளர்கள் ஜாதிக் கட்சிகளுக்கு, மரண அடி கொடுத்து, பாடம் புகட்டி உள்ளனர்.
தமிழகத்தில் வன்னியர் சங்கமாக துவக்கப்பட்டு, பின் அரசியல் கட்சியாக பா.ம.க., உருவெடுத்தது. ஆரம்ப கட்டத்தில் சுயேச்சையாக நின்று, அதிகபட்சம் நான்கு தொகுதிகள் வரை வெற்றி பெற்று, தங்களது பலத்தை நிரூபித்தனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது வழக்கு?


மதுரை, மே.24- ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு விற்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஏர்செல் நிறுவனத்தை வெளிநாட்டு வாழ் இந்தியரான சிவசங்கரன் என்பவர் நடத்தி வந்தார்.

கர்நாடகாவில் கந்தலாகிப்போன பாரதிய ஜனதா!!

 புதுடில்லி: கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரிய கவர்னர் பரத்வாஜின் சிபாரிசை, மத்திய அரசு நிராகரித்துள்ளது.

கர்நாடகாவில், கடந்த அக்டோபரில், முதல்வர் எடியூரப்பா அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரிய போது, அவரை எதிர்த்து, 11 பா.ஜ., மற்றும் 5 சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க திட்டமிட்டிருந்தனர்.

23.5.11

பாகிஸ்தான் இராணுவ விமான படை தளத்தினுள் தாக்குதல் : தலிபான்கள் பொறுப்பேற்பு


பாகிஸ்தானின் கராச்சி இராணுவ விமான படை தளத்துக்குள்,  நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு தாக்குதலில் 5 பொதுமக்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணம்!!

திருச்சி, மே 23: திருச்சி அருகே நடந்த சாலைவிபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார். இவர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்.

பெரம்பலூர், பாடாலூர் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலைவிபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார். சட்டசபை உறுப்பினராக இன்று பதவி ஏற்பதற்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் பயணித்தபோது

தலிபான் தலைவர் முல்லா ஓமர் கொல்லப்பட்டாரா?


காபூல், மே.23- ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் முல்லா முகமது ஓமர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டுவிட்டதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
குவெட்டாவில் இருந்து வடக்கு வாஜிரிஸ்தானுக்கு செல்லும் வழியில் அவர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் டோலோ தொலைக்காட்சி தெரிவித்தது. எனினும் அவர் எப்படி, யாரால் கொல்லப்பட்டார் என்ற விவரத்தை அந்த தொலைக்காட்சி வெளியிடவில்லை.
இதனிடையே முல்லா ஓமர் கொல்லப்பட்டதை பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தினார். முல்லா ஓமர் கொல்லப்பட்ட தகவல் சரியானதுதான் என்றார் அவர். எனினும் முல்லா ஓமர் கொல்லப்பட்ட தகவலை

சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஹமாஸை சேர்க்க இயலாது


சமாதான பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் இயக்கத்தை சேர்க்க இயலாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும்,அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பெஞ்சமின் நெதன்யாகு ஒபாமாவை சந்தித்து பேசிய பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.

ஹமாஸும், பத்தாஹும் நல்லிணக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள

கனிமொழியை பார்க்க இன்று டெல்லி செல்கிறார் கருணாநிதி


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகள் கனிமொழியைப் பார்க்க திமுக தலைவர் கருணாநிதிஇன்று டெல்லி விரைகிறார்.
கனிமொழி கைது செய்யப்பட்டது முதல் அதிர்ச்சியில் இருக்கிறார் கருணாநிதி. இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, உங்களது மகள் இப்படி ஒரு வழக்கில், செய்யாத குற்றத்துக்காக கைதாகி சிறையில் அடைத்தால் உங்கள் மனம் என்ன பாடுபடுமோ அதேபோலத்தான் நானும் இருக்கிறேன் என்று கூறியிருந்தார் கருணாநிதி.

தாக்குதலைத் தொடர்ந்தால் பதிலடி பாகிஸ்தான் எச்சரிக்கை


தங்கள் நாட்டில் இதற்குமேலும் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் துணைத் தலைவர் மைக்கேல் பாகிஸ்தான் வந்து ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளை‌ச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்து