தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.5.11

ஏமனில் உள்ள தமிழக செவிலியர்களை மீட்க விஜயகாந்த் வேண்டுகோள்


சென்னை, மே.28-   வளைகுடா நாடான ஏமனில் உள்நாட்டு போரில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த செவிலியர்களை காப்பாற்றுமாறு மத்திய அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஏமன் நாட்டில் அதிபர் அலி அப்துல்லா சலேவை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபருக்கு ஆதரவாக ராணுவமும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாக பழங்குடியினரும் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த, குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
எதிர்க்கட்சியினரை சேர்ந்த படைகள் ராணுவ முகாமையும், மருத்துவமனையையும் தாக்கி வருவதால் கடந்த சில நாட்களாக தமிழகச் செவிலியர்கள் உண்ண உணவும் இல்லாமல், உறக்கமும் இல்லாமல், உயிர் பாதுகாப்பு இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
ராணுவமும் தங்களது சிகிச்சைக்காக செவிலியர்களை வெளியேற அனுமதிக்கவில்லை. மருத்துவமனையில் தொடர்ந்து இருந்தால் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் தவிக்கின்றனர். இந்த பரிதாபமான நிலைமையால் தமிழ்நாட்டில் அவர்களின் உறவினர்கள் கவலையில் உள்ளனர்.
ஏமன் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் தமிழக செவிலியர்களை உடனடியாக மீட்கவும், அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரவும் மத்திய அரசு உடனே தீவிர நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: