பெங்களூர்:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல்நாஸர் மஃதனி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இன்று வியாழக்கிழமை உச்சநீதிமன்றம் இம்மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும்.
நீதிபதிகளான ஞான் சுதா மிஷ்ரா, மார்க்கண்டேய கட்ஜு ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் இம்மனுவை பரிசீலிக்கும். அப்துல் நாஸர் மஃதனி மீது சதித்திட்டம் தீட்டிய குற்றம் மட்டுமே இவ்வழக்கில்