தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.1.11

ஆர்ப்பாட்டக் காரர்களுடன் இணைந்தார் எல் பராதேய் : எகிப்துக்கு புதிய நெருக்கடி


எகிப்து அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம், நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஊழல், வேலை வாய்ப்பின்மை, பொருட்கள் விலையேற்றமென, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது.
இதனால் 30 ஆண்டுகாலமாக ஆட்சி நடத்தும் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும். அவர்  நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என கோரி கடந்த நான்கு நாட்களாக ஆர்ப்பாட்ட காரர்கள் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.
தற்போது அவர்களோடு  நீதிபதிகளும், காவற்துறையினரும் இணைந்து கொண்டுள்ளனர். நேற்று தலைநகர் கெய்ரோவின் தஹ்ரிர் மையத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ஒன்றையும் மக்கள் நடத்தினர்.

ஆளும் அரச வர்க்கத்திற்கு எதிரானவரும், விடுதலை கோரும் அமைப்பின் தலைவருமான முகம்மது எல் பரதேய்யும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்துகொண்டுள்ளார். நோபல் பரிசு பெற்றவரான எல் பரதேய், இவ்வளவு காலமும் வியன்னாவில் தங்கியிருந்து, தற்போது கெய்ரோ திரும்பிய நிலையில் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டிருந்தார்.
அவரும் தற்போது அதிபர் முபாரக்கை பதவி விலக கோரி அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர், சிறைகளை உடைத்து தப்பி ஓடினர். மேலும் கடைகள், வணிக நிறுவனங்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருவதால் கலவரத்தை அடக்குவதற்கு அரசு சார்பான இராணுவ தரப்பினர் பாரிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனால் ஆர்ப்பாட்ட காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் சுமார் 150 க்கு மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

.

எகிப்திலிருந்து 300 இந்தியர்களுடன் மும்பை வந்திறங்கியது ஏர்-இந்தியா விமானம்!


கலவர பூமியாக மாறியிருக்கும் எகிப்திலிருந்து பத்திரமாக இந்தியர்களை மீட்டுவர புறப்பட்டு சென்ற
ஏர் இந்தியா விமானம் இன்று மாலை 300 இந்தியர்களுடன் மும்பை CST விமானநிலையத்தில் தரையிறங்கியது.

போயிங் 747-800 எனும் இவ்விமானம் எகிப்து தலைநகர் கெய்ரோவிலிருந்து நேற்று புறப்பட்டது. இதேவேளை மீதமுள்ளவர்களை கொண்டுவருவதற்கு மும்பை ஜெத்தாஹ் விமானங்களை கெய்ரோவுக்கு அனுப்புவதற்கு ஏர்-இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

தற்போதைய கணிப்பின் படி 600 இந்தியர்கள் எகிப்திலிருந்து தாய்நாட்டிற்கு திரும்புவதற்காக இன்னும் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் சுற்றுலா நிமித்தமும், வேலை நிமித்தமும் அங்கு சென்றவர்கள் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. வேறு நாடுகள் பலவும் இவ்வாறு தங்கள் நாட்டவர்களை அங்கிருந்து மீட்டெடுக்கும் பணியிலல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது

இந்திய மாணவர்கள் கால்களில் கருவி ஏன்? : அமெரிக்கா விளக்கம்


அமெரிக்க Tri Valley பல்கலைக்கழக மோசடி வழக்கில் சிக்கிக்கொண்ட இந்திய மாணவர்களின் கால்களில், அவர்களுடைய நடமாட்டத்தை கண்காணிக்கும் எலக்ட்ரானிக் டேக் எனும் கருவி பொருத்தப்பட்டிருப்பதற்கு அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.
மாணவர்கள் கால்களில் கருவி பொருத்தப்படுவது அமெரிக்காவின் பல இடங்களிலும் நடைமுறையில் உள்ளது. கருவியை பொருத்தியதால் அம்மாணவர்கள் குற்றவாளிகளோ, சந்தேகப்படும் நபர்களோ என அர்த்தமல்ல. மாணவர்களை ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்துவதற்கு பதிலாகவே இக்கருவிகள் பொருத்தப்படுகின்றன என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குறித்த Tri Valley பல்கலைக்கழகத்தில், படித்துவருவோரில் 90 சதவீதமானோர் இந்திய மாணவர்களாவார்கள். அண்மையில் இப்பல்கலைக்கழகத்தில் சோதனை நடத்திய போது அங்குள்ள மாணவர்களுக்கு போலி விசா அளிக்கப்பட்டிருந்ததும், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

எனினும், இது அப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினதும், விசா செய்து கொடுத்த ஏஜெண்டுக்களினதும் தவறு. ஆனால் பலிக்கடாவாக அகப்பட்டுள்ள இந்திய மாணவர்கள் மீது விசாரணை என்ற பெயரில் தடுப்புமுகாமில் அடைக்கப்பட்டு துன்புறுத்தல், கட்டாயப்படுத்தி காலில் இக்கருவி பொருத்தல் என்பன நடந்தேறியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இது இந்தியர்களை அவமதிக்கும் செயல் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் வயலார் ரவி ஆகியோர் குற்றம் சுமத்தியிருந்தனர்

போராட்டங்களில் கலந்துக்கொள்ளும் வெளிநாட்டினர் நாடு கடத்தப்படுவர் - குவைத் எச்சரிக்கை

குவைத்,ஜன.30:குவைத் நாட்டில் கண்டனப் போராட்டங்களில் கலந்துக் கொள்ளும் வெளிநாட்டினர் நாடு கடத்தப்படுவர் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

உள்துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள்காட்டி அல்வதன் பத்திரிகை இச்செய்தியினை வெளியிட்டுள்ளது.

குவைத்தில் வாழ்ந்துவரும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், அரபு, ஆசியா நாடுகள் உள்பட அனைத்து வெளிநாட்டினரும் குவைத் நாட்டின் சட்டங்களை மதித்து நடக்கவேண்டும். குடும்பத்துடன் நாடு கடத்தப்படுவதை தவிர்ப்பதற்கு கண்டனப் பேரணிகளில் கலந்துக்கொள்ளக் கூடாது என அப்பத்திரிகை தெரிவிக்கிறது.

போராட்டங்களில் பங்கேற்போர் அவரவர் நாடுகளுக்கு சென்று போராட்டங்களில் கலந்துக் கொள்ளட்டும் என்பதுதான் குவைத் அரசின் நிலைப்பாடாகும்.

எகிப்தில் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழலில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து குவைத்தில் வாழும் எகிப்து நாட்டவர்கள் எகிப்து தூதரகத்திற்கு முன்பாக பேரணி நடத்த தயாரான வேளையில் குவைத் நாட்டு அதிகாரிகள் அவர்களை கைதுச் செய்திருந்தனர். இதன் பின்னர் குவைத் அரசின் அறிக்கை வெளியாகியுள்ளது.

கூட்டம் நடத்தியதாக குற்றஞ்சாட்டி கடந்த ஏப்ரல் மாதம் அல்பராதியின் ஆதரவாளர்களான பல எகிப்து நாட்டைச் சார்ந்தவர்களையும் குவைத் நாடு கடத்தியிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

நன்றி :பாலைவண தூது

அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு எகிப்தில் தடை.....

கெய்ரோ,ஜன.30:எகிப்தில் அல்ஜஸீரா தொலைக்காட்சி செயல்பட அந்நாட்டு சர்வாதிகார அரசு தடைபோட்டுள்ளது.

எகிப்தில் கடந்த நான்கு தினங்களாக ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக கடுமையான மக்கள் திரள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் நடைபெற்றுவரும் மக்கள் திரட்ட போராட்டங்களை அல்ஜஸீரா தொலைக்காட்சி உடனுக்குடன் ஒளிபரப்பி வருகிறது.

அல்ஜஸீராவினால் எங்கே தங்கள் நாடுகளிலும் புரட்சி வெடித்துவிடுமோ என பல அரபு நாடுகள் அச்சத்தில் உள்ளன.

இந்நிலையில் அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு எகிப்திய அரசு இன்று தடை ஏற்படுத்தியுள்ளது. இதனை MENA செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த உத்தரவை எகிப்தின் வெளி உலக தகவல் தொடர்பு அமைச்சர் அனஸ் அல்ஃபிக்கி பிறப்பித்துள்ளார். அல் ஃபிக்கி தனது உத்தரவில், "அல்ஜஸீராவின் அனைத்து நடவடிக்கைகளும் எகிப்திய குடியரசில் நிறுத்தப்பட வேண்டும். மேலும் அதன் உரிமங்கள் செல்லாது என அறிவிக்கப்படுகிறது. அல்ஜஸீரா தொலைக்காட்சியின் பணியாளர்களிடமிருந்து பத்திரிகையாளர் அடையாள அட்டைகள்(press cards) வாபஸ் பெறப்படுகின்றன" இவ்வாறு கூறியுள்ளார்.
செய்தி:presstv

ரஷ்ய குண்டுத்தாக்குதலை நடத்தியவன் 20 வயது இளைஞன் : புலனாய்வு பிரிவினர் தகவல்

ரஷ்யாவின் டொமொடெடோவோ விமான நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதலுக்கு சூத்திரதாரி 20 வயதான இளைஞன் ஒருவன்ரே என ரஷ்ய புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்(சி.சி.டி.வி.கேமரா பதிவு )இவன் தென் கௌகாசஸ் (Caucasus) மாநிலத்தை சேர்ந்தவன் எனவும், அங்குள்ள மலைகளில் பதுங்கி வாழும், இஸ்லாமிய புரட்சிக்குழுவின்றின் உறுப்பினர்களில் ஒருவன் எனவும் புலனாய்வு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இத்தகவல்கள் இக்குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதுவரை தெளிவடையாத பல குழப்பங்களுக்கு தீர்வு கண்டுவிடும் என கூறியுள்ள அத்தகவல்கள், குறித்த இளைஞனின் பெயரை குறிப்பிட மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

ரஹ்ய குண்டு தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டும், 180 பேர் படுகாயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

'பாலஸ்தீன விட்டுக்கொடுப்பு' - தகவல் கசிவு,குழி பறி வேலைகள்


மஹ்மூத் அப்பாஸ்
கசிந்த தகவல்களால் பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸுக்கு சங்கடம் எழுந்துள்ளது

மத்திய கிழக்கு பேச்சுவார்த்தைகளின்போது இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்கள் இடையில் பரிமாறப்பட்ட இரகசிய ஆவணங்கள் நூற்றுக்கணக்கானவை ஊடகங்களில் கசியவிடப்பட்டுள்ளன.
கிழக்கு ஜெருசலேத்தில் இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்கள் பலவற்றை இஸ்ரேலிகளிடமே தந்துவிட பாலஸ்தீனத் தலைவர்கள் தயாராக இருந்தனர் என்றும், இருக்கின்ற இஸ்ரேலிய குடியிருப்புகள் தொடருவதற்கு அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் என்று காட்டுவதாகவும் கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீனர்கள் தமது கொள்கையிலிருந்து இறங்கிவந்து இந்த விட்டுக்கொடுப்புகளுக்குத் தயார் என்று கூறியும், இஸ்ரேலியர்கள் இதெல்லாம் போதாது என்று சொல்லி நிராகரித்திருந்தனர் என்பதாகவும் கசிந்த தகவல்கள் காட்டுகின்றன.
இந்த ஆவணங்கள் நிஜமானவை என்னும் பட்சத்தில், பாலஸ்தீனத் தலைவர்கள் வெளியில் பேசும்போது வலிமையாக பேசுவதுபோல காட்டிக்கொண்டாலும், தனிப்பட்ட ரீதியில் பேசும்போது அவர்கள் எந்த அளவுக்கு விட்டுக்கொடுக்க தயாராக இருக்கின்றனர் என்று காட்டுவதாக இவை அமைந்துள்ளன எனலாம்.
கசிந்துள்ள தகவல்களினால் ஏற்படக்கூடிய சேதங்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று விளங்காமல் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனத் தலைவர்களும் ஃபதா இயக்கத்தினரும் தட்டுத்தடுமாறி வருவதாகத் தெரிகிறது.
அல்ஜஸீரா வெளியிட்டுள்ள இந்த தகவல்களை கட்டுக் கதைகள் என்று கூறி பாலஸ்தீன தலைமைப் பேச்சுவார்த்தையாளர் சயேப் எரகாத் புறந்தள்ளியுள்ளார்.
ரமல்லா நகரில் உள்ள அல்ஜஸீரா அலுவலகத்தின் முன்பு கூடி கட்சித் தொண்டர்கள் எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் என்று அழைப்பு விடுக்கும் செய்தி ஃபதா கட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிகளுக்காக உண்மையில் எந்த அளவுக்கு விட்டுக்கொடுப்புகளைச் செய்ய பாலஸ்தீன தலைவர்கள் முன்வந்துள்ளார்கள் என்று காட்டும் தகவல்கள் என்று கூறி வெளியிடப்பட்டுள்ள இந்த தகவல்களைக் கண்டு பாலஸ்தீன மக்கள் பலர் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலப்பரப்புகளில் யூதக் குடியிருப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற விவகாரம் தொடர்பில்தான் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் கடைசியாக நடந்த பேச்சுவார்த்தைகள் முறிந்து போயிருந்தன.
யூதக் குடியிருப்புகள் தொடர்ந்து அமைக்கப்படுவது கட்டாயம் நின்றாக வேண்டும் என்று அப்போது பாலஸ்தீனர்கள் அடித்துச் சொல்லியிருந்தனர்.
ஆனால் இந்த இடங்களை இஸ்ரேலிகளிடம் விட்டுக் கொடுத்து விடவும், ஜெருசலேத்தில் உள்ள இஸ்லாத்தில் மிகப் புனித இடங்களாக கருதப்படும் சில இடங்கள் தொடர்பில் ஏதாவது உடன்பாட்டுக்கு வருவது பற்றிப் பேசுவதற்கும் 2008ல் பாலஸ்தீனத் தலைவர்கள் தயாராக இருந்திருந்தனர் என்று கசிந்த தகவல்கள் கூறுகின்றன.
இப்படியான விட்டுக்கொடுப்புகளை செய்வதை பாலஸ்தீன மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தங்களுடைய தலைவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள் என்பதையே இப்படியான தகவல்கள் காட்டுவதாக அவர்கள் நம்புகின்றனர்                         நன்றி : பி.பி.சி

இலங்கை மகிந்தாவை விசாரிக்க அம்னெஸ்டி கோரிக்கை



மஹிந்த ராஜபக்ஷ
மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அவசர பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்குற்றங்கள் மற்றும் சித்தரவதை தொடர்பாக அவருக்குரிய பங்கு குறித்து அமெரிக்கா விசாரிக்க வேண்டுமென சரவதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கோரியுள்ளது.
இது பற்றி அந்நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பகுதிக்கான இயக்குனர் சாம் ஜாஃப்ரி பிபிசியிடம் கூறுகையில் இலங்கை இராணுவத்தின் மீது, நம்பத்தகுந்த, பாரதூரமான மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தின் தலைமை தளபதியாக அதிபர் மகிந்த ராஜபக்சே இருக்கிறார். எனவே இந்த மனித உரிமை மீறல்கள் நடந்தபோது இராணுவ அதிகார கட்டளைத்தொடரின் அதி உயர் பதவியில் இருந்தவர் என்ற முறையில் பொறுப்பேற்றல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அம்னெஸ்டியின் இந்த கோரிக்கை தவறானது, சட்டரீதியில் சாத்தியமற்றது என்கிறார் இலங்கை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜீவ் விஜய சிங்க.
இது தொடர்பாக பிபிசியிடம் கருத்து தெரிவித்த அவர், ஒரு நாட்டின் தலைவருக்கு முன்பு ஒருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் முன் அவர் மீதான குற்றங்களை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இதை உலக நீதிமன்றங்கள் செய்ய வேண்டும் என்றும் கூறிய அவர், சூடானின் ஜனாதிபதிக்கு இது போல நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இத்தகைய உலக நீதிமன்றங்கள் செயல்பட உதவும் சர்வதேச ஒப்பந்தங்கள் பலவற்றில் அமெரிக்கா கைச்சாத்திடவில்லை வில்லை என்பதோடு, அமெரிக்கா செய்த போர் குற்றங்கள் தொடர்பில் அந்த நாடு இதுவரை பொறுப்பேற்க விரும்பவில்லை என்பது உலகுக்குத் தெரியும் என்பதால், மஹிந்த மீதான புகார்கள் தொடர்பில் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்றும் ராஜீவ் விஜயசிங்க வாதிட்டார்.
புறக்கணிப்பு கோரிக்கை
இதற்கிடையே, இலங்கையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இலக்கிய விழாவை துருக்கியின் நன்கு அறியப்பட்ட எழுத்தாளரான ஆர்ஹான் பாமுக் அவர்களும் மற்றவர்களும் புறக்கணிக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் புகழ் பெற்ற எழுத்தாளர்களான நோம் சாம்ஸ்கி மற்றும் அருந்ததி ராய் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காலி இலக்கிய விழாவில் எழுத்தாளர்கள் கலந்து கொள்வது, இலங்கையில் பேச்சு சுதந்திரத்தை நசுக்கும் செயலை நியாயப்படுத்துவது போலாகும் என இவர்கள் கூறுகின்றனர்.
ஆயினும் இந்தக் கோரிக்கையை விழா ஏற்பாட்டாளர்கள் விமர்சித்துள்ளனர். இந்த இலக்கிய விழாவானது நன்மை செய்வதற்கான உந்துசக்தி என்று அவர்கள் வர்ணித்துள்ளனர்

30.1.11

மலேஷியாவில் ஒரு பாடப் புத்தகத்தால் சர்ச்சை


மலேஷியாவில் ஒரு பாடப் புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இந்திய வம்சாவழி மக்களை இழிவு படுத்துவதாக உள்ளது என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
அந்நாட்டில் ‘ஓ’ லெவல் படிக்கும் மாணவர்களுக்கு மலாய் இலக்கியப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில், மலேஷியாவில் குடியேறியுள்ள இந்திய வம்சாவழி மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் கீழ் சாதி மக்கள் என்று பொருட்படும் வகையில் வாசகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக் கூறி எதிர்ப்பு எழுந்துள்ளது.
“ஏற்றுக் கொள்ள முடியாத அல்லது காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களை கூறும் போது அது மலேஷியாவில் வசிக்கும் மலாய், சீன மற்றும் இந்தியர்கள் என்கிற மூவின மக்களின் ஒற்றுமையை பாதிக்கின்றது” என்று கோலாலம்பூரிலுள்ள வழக்கறிஞரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பசுபதி சிதம்பரம் தமிழோசையிடம் தெரிவித்தார்.
பசுபதி சிதம்பரம் பேட்டி
ஆனால் சர்ச்சைகுரிய “இண்டர்லாக்” எனும் அந்தப் புதினத்தை எழுதியுள்ள 85 வயதான ஹுசைன் அப்துல்லா, சரித்திர சான்றுகளின் அடிப்படையில் தனது புத்தம் எழுதப்பட்டது எனவும் அதன் காரணமாக சர்ச்சைகுரிய பகுதிகள் நீக்கப்படாது எனவும் தெரிவித்துவிட்டதாகவும் பசுபதி சிதம்பரம் கூறுகிறார்.
இந்தப் புத்தகத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருவதாகக் கூற்படும் நிலையில், சரித்திர ரீதியிலான இலக்கியம் என்பதால் அதிலிருந்து எந்தப் பகுதியையும் நீக்கக் கூடாது என மலாய் எழுத்தாளர்கள் வாதிட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
தமது எதிர்ப்பை தெரிவித்த நிலையில் மலேஷிய அரசு சர்ச்சைகுரிய பகுதிகளை நீக்குவதாகவும் ஆனால் புத்தகத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டதாகவும் பசுபதி சிதம்பரம் கூறுகிறார்.
மலேஷிய அரசின் இந்த நிலைப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் மூவின மக்களின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதால், இப்புத்தகம் முழுமையாக திரும்பப் பெறப்பட வேண்டும் என தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கருத்து வெளியிட்டார்.
கல்வி, சமூக, கலாச்சாராம் மற்றும் பொருளாதார ரீதியாக மலேஷியாவில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் முன்னேறிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் அதிலும் குறிப்பாக மாணவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்கிற ரீதியிலேயே இப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தாங்கள் கருதுவதாகவும் அவர் கூறுகிறார்.செய்தி :அலைகள் 

பி.பி.சி.ரேடியோ 7 மொழிகளின் சேவை நிறுத்தம்

லண்டன் அரசு ஒலிபரப்பு நிறுவனமான பி.பி.சி. நிறுவனம் ரேடியோ மற்றும் டி.வி. ஒலிபரப்புகளை நடத்தி வருகிறது. நீண்ட காலமாக பி.பி.சி. ரேடியோ 32 மொழிகளில் ஒலிபரப்பி வந்தது.
இந்திய மொழிகளான இந்தி, தமிழ், வங்காளம், நேபாளி மொழிகளிலும் ரேடியோ ஒலிபரப்புகள் உள்ளன. இவற்றில் ஆயிரக் கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனம் பிரிட்டிஷ் அரசின் நிதியுதவியுடன் இயங்கி வருகிறது.
இங்கிலாந்தில் புதிய கூட்டணியரசு பொறுப்பேற்றதிலிருந்து, பல செலவுகளைக் குறைக்க முடிவு செய்தது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பி.பி.சி.க்கு வழங்கும் உதவித் தொகையும் சுருக்கப்பட உள்ளது. ஏறக்குறைய ரூ. 2000 கோடியை, பிரிட்டிஷ் அரசு உதவித் தொகையாக பி.பி.சிக்கு அளித்து வருகிறது.
அடுத்த ஆறு ஆண்டுகளில் 16 சதவீதம் வரை இந்த உதவித்தொகையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. எனவே, தனது உலக மொழிச்சேவைகளை சுருக்கிக் கொள்ளுவதென பி.பி.சி. முடிவு எடுத்துள்ளது.
இதற்காக 7 மொழிகளின் ஒலிபரப்பை நிறுத்த பி.பி.சி. முடிவு செய்துள்ளது. அல்பேனியன், வெசிடோனியன், போர்ச்சுகீஸ், ஆப்ரிக்கன், செர்பியன் மொழிகள் உள்ளிட்ட 7 ஒலிபரப்புகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இந்த துறைகளில் பணியாற்றிய 650 ஊழியர்களும் வேலை இழக்கின்றனர்.
இந்த சேவைகளை ரத்து செய்வதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.300 கோடியை மிச்சப்படுத்தலாம் என பி.பி.சி. எதிர்பார்க்கிறது. உதவித் தொகையைக் குறைக்கும் அரசின் முடிவுக்கு இங்கிலாந்தின் தேசிய பத்திரிகையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் பி.பி.சி.யின் ஆன்லைன் சேவையில் 350 பேர் வேலை பறிபோயுள்ளது

29.1.11

எகிப்திலே தொடர்ந்து நடபெற்றுக்கொண்டிருக்கும் மாபெரும் மக்கள் புரட்ச்சி!!! அரசாங்கத்தைக் கலைத்தார் எகிப்து ஜனாதிபதி _

எகிப்திலே தொடர்ந்து நான்காவது நாளாக நடந்த ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது எட்டு பேர் கொல்லப் பட்டுள்ளனர். வெள்ளிகிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் வெள்ளமெனத் திரள ஆரம்பித்திருந்தனர். அவர்களுக்கும் கலகக் கட்டுப்பாட்டுப் பொலிசாருக்கும் இடையே மோதல்கள் எழுந்துள்ளன. கெய்ரோவிற்கு சற்று வெளியே அமைந்துள்ள கீஸா பகுதியில் கலகக் கட்டுப்பாட்டுப் பொலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசியும் தண்ணீர்ப் பாய்ச்சி அடித்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்துள்ளனர்.

நாட்டின் கிழக்குப் பகுதி நகரமான சூயெஸ்ஸிலும் கலவரங்கள் நடந்துள்ளதாகத் தெரிகிறது. அங்கே வியாழக்கிழமை நடந்த கலவரங்களின்போது மூன்று பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
தவிர கெய்ரோவின் மத்திய பகுதியில் தொடர்ந்து நான்காவது நாளாக ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் மூண்டது. துறைமுக நகரமான அலெக்ஸாந்திரியாவிலும், இஸ்மாயிலியா, சினாய் போன்ற இடங்களிலும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பான்மையானோர் இளைஞர் குழுக்கள் என்று தெரிகிறது. நாட்டில் வேகமாகப் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல், அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி ஆகியவற்றால் விரக்தி அடைந்திருப்பதாக இவர்கள் கூறுகின்றனர். இதுவரை நடந்த ஆர்ப்பாட்டங்களில் எகிப்தின் மிகப்பெரிய எதிர்க்கட்சி இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற அமைப்பு கலந்துகொள்ளவில்லை. ஆனால் இனி தாங்களும் ஆர்ப்பாட்டங்களில் இறங்க எண்ணங்கொண்டுள்ளதாக இவர்களும் அறிவித்துள்ளனர். டுனீஷியாவில் மக்கள் கொந்தளிப்பை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் கண்டதால் எகிப்திலும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில்
இறங்கியுள்ளனர் எனச் சொல்லலாம்             இதேநேரம் அதிபர் ஹொஸ்னி முபாரக்கின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் அவரது மகன் காமல் முபாரக் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளனர்.  கடைசி செய்தி: எகிப்தில் இடம்பெற்றுவரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தினால்; அந்நாட்டு அதிபர் ஹொஸ்னி முபாரக் தனது அரசாங்கத்தைக் கலைத்து புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளார். 


அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே திருவோம்: அசோக் சிங்கால் மண்டைகன கொக்கரிப்பு

காஞ்சிபுரம், ஜன. 28: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்தார். காஞ்சிபுரம் கும்பாபிஷேக விழாவுக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியது: கடந்த சில மாதங்களுக்கு முன், கோவாவில் நடைபெற்ற இந்து சமய மாநாட்டில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதன்படி, ராமர் கோயில் கட்டுவதில் உறுதியாக உள்ளோம்.

சிந்திக்க :இந்தியாவை மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி கொண்டு போகாமல் விட மாட்டார்கள் போல. இப்படித்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததும் ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இந்தியா பாகிஸ்தான் என்று பிரிந்து போக காரணமாக இருந்தார்கள். இப்ப பாபர் மசூதி அதை தொடர்ந்து காசி, மதுரா மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 2500 மசூதிகளை உடைப்போம் என்று சொல்லி இன்னும் எத்தனை கலவரங்களை நடத்த போகிறார்களோ இந்த பாசிச ஹிந்துவா பயங்கரவாதிகள். நினைத்தாலே மிகவும் பயமாக இருக்கு

சர்ச்சுகள் மீதான தாக்குதல்:ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் பரிசுத்தமானவர்கள் என கமிஷன் நற்சான்றிதழ்

பெங்களூர்,ஜன:2008 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆளுங்கட்சியான பா.ஜ.கவுக்கு, சங்க்பரிவார அமைப்புகளுக்கும் தொடர்பில்லை என நீதிபதி சோமசேகர கமிஷன் தெரிவித்துள்ளது.

நேற்று கர்நாடகா அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்தான் கமிஷன் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு 'சுத்தமானவர்கள்' என்ற சான்றிதழை வழங்கியுள்ளது.

சங்க்பரிவாரின் அரசியல் முகமூடியான பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 4 மாதங்களிலேயே அதாவது, 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பெங்களூர், கோலார், சிக்பள்ளாப்பூர், பெல்லாரி, தாவணகெரே, சிக்மகளூர், உடுப்பி, தென்கன்னடம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் பற்றி விசாரிக்க ஒரு நபர் கமிஷனை பா.ஜ.க அரசு நியமித்தது.

இக்கமிஷன் வெள்ளிக்கிழமை கர்நாடகா பா.ஜ.க முதல்வர் எடியூரப்பாவிடம் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ள முக்கியக் கருத்துக்கள்:

பெங்களூர், கோலார், சிக்பள்ளாப்பூர், பெல்லாரி, தாவணகெரே, சிக்மகளூர், உடுப்பி, தென்கன்னடம் மாவட்டங்கள், குறிப்பாக மங்களூர் மற்றும் தாவணகெரே நகரங்களில் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது உண்மை. எல்லாத் தாக்குதல் சம்பவங்களும் தற்செயலாக அல்லது விபத்தாக நேர்ந்ததல்ல.

சில சம்பவங்கள் பல ஆண்டுகளாக நிலவிவரும் அடிப்படைவாதத்தின் திட்டமிட்ட மதத் தாக்குதலாகும். மங்களூரில் நடந்துள்ள தாக்குதல் சம்பவத்தை நியாயப்படுத்த இயலாது. இது கிறிஸ்தவ மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது.

இத்தாக்குதல் சம்பவங்களில் அசல் ஹிந்துக்களின் நேரடி அல்லது மறைமுக பங்களிப்பு இல்லை. இச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் போலீஸார் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். இத் தாக்குதல் சம்பவங்களில் அரசியல்வாதிகள், பாஜக, சங்பரிவார் அமைப்புகள் மற்றும் மாநில அரசுக்கு நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு இருந்துள்ளதாக கிறிஸ்தவ மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. இச் சம்பவத்தை அரசியலாக்கிய அரசியல் கட்சிகள் எதுவும் கமிஷன் முன்பு தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்கவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹிந்துக்களை அவமானப்படுத்தும் விதத்திலான பிரசுரங்களும், மதமாற்றம் தொடர்பான பிரச்சனைகளும்தான் இத்தாக்குதல்களுக்கு காரணம் எனக்கூறி தாக்குதலை நியாயபடுத்தியுள்ளது சோமசேகர கமிஷன்.

மதமாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனவும் இக்கமிஷன் அரசுக்கு பரிந்துரைச் செய்துள்ளது.

அறிக்கையில் முரண்பாடு- முன்னாள் மத்திய அமைச்சர்: தேவாலயங்கள் மீதான தாக்குதல் தொடர்பாக முன்னாள் நீதிபதி சோமசேகர் கமிஷனின் அறிக்கையில் முரண்பாடு உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பூஜாரி குற்றம் சாட்டியுள்ளார்.

தேவாலயங்களின் மீது தாக்குதல் நடந்த பிறகு அது குறித்து பஜ்ரங் தள பொதுச்செயலாளர் மகேந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்பதாக தெரிவித்தார். இத் தாக்குதலுக்கு போலீஸாரின் ஆதரவும் இருந்தது என ஆரம்ப கட்ட விசாரணையில் நீதிபதி சோமசேகர் தெரிவித்திருந்தார்.

தற்போது இறுதி அறிக்கையில் பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகள் தாக்குதலில் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார். இதை காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பூஜாரி தெரிவித்துள்ளார்.


ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் - உளவுத்துறை, பாதுகாப்புத்துறை ஏஜன்சிகள் - தொடர்புகள் குறித்து விசாரணை தேவை - கருத்தரங்கில் கோரிக்கை

புதுடெல்லி,ஜன.29:பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகள் ஒருங்கிணைந்து டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தின. இக்கருத்தரங்கில் குண்டுவெடிப்பு வழக்குகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் தொடர்புகள் வெளியான சூழலில் இந்தியாவில் பாதுகாப்பு ஏஜன்சிகள், உளவுத்துறை ஏஜன்சிகள் ஆகியவற்றில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் ஆதிக்கத்திற்கான காரணம் என்ன என்பதுக் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

குண்டுவெடிப்புகளில் இதுவரை பாதுகாப்பு ஏஜன்சிகள் விசாரணையை திசைதிருப்பிக் கொண்டிருந்தன என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. இச்சூழலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங், சி.பி.எம்.பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகிய அரசியல் பிரமுகர்களும், பிரபல மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்ற இக்கருத்தரங்கில் இத்தகையதொரு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம்களைக் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.

சிறையிலடைக்கப்பட்ட நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச்செய்ய வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்புகளைக் குறித்தும் மீண்டும் விசாரணை நடத்தவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ், அபினவ்பாரத், வி.ஹெச்.பி, பா.ஜ.க, பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளுடன் உளவுத்துறை, பாதுகாப்பு ஏஜன்சிகள், போலீஸ் அதிகாரிகள், அதிகாரவர்க்கத்தினர், ராணுவத்தினர் ஆகியோருக்கான தொடர்புகளைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும்.

குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட அப்பாவிகள் அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.

மேலும் அவர்களின் புனர்வாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பவர்களைக் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் இவர்களுக்கு அரசியல் ரீதியாக, தார்மீக ரீதியாக ஆதரவளிப்பவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பணம் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும்.

பயங்கரவாத வழக்குகளில் நிரபராதிகளை சிக்கவைத்து சித்திரவதைச் செய்து அவர்களை நிர்பந்தப்படுத்தி பொய் வாக்குமூலங்களை வாங்கிய அனைத்து போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இவர்களுக்கு வழங்கிய பதவிகளையும், பதக்கங்களையும் பறிக்கவேண்டும்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் விடுதலைச் செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்ற நீதிமன்ற தீர்ப்பைக் குறித்து கேள்வி எழுப்பும் ஆந்திர அரசின் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

பொய்வழக்குகள் சுமத்தப்பட்டதால் மனோரீதியாக பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் மாநில அரசுகள் மன்னிப்புக் கோரவேண்டும்.

பயங்கரவாத வழக்குகளில் ஆஜராகமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றிய பார் கவுன்சில் நடவடிக்கையை இக்கருத்தரங்கு கண்டிக்கிறது.

முஸ்லிம்களுக்கெதிராக பொய்ச் செய்திகளை பரப்பும் ஊடகங்களின் பங்கினையும் இக்கருத்தரங்கம் கண்டிக்கிறது.

புலனாய்வு ஏஜன்சிகள் ஆதாரங்கள் என போலியாக முன்வைக்கும் காரியங்களை கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடக் கூடாது என ஊடகங்களை இக்கருத்தரங்கம் வேண்டிக் கொள்கிறது.

இக்கருத்தரங்கில் அமீத் சென் குப்தா, ஆஷிஷ் கேதான், சித்தரஞ்சன் சிங், ஃபராஹ் நக்வி, இஃப்திகார் கிலானி, பிரசாந்த் பூஷன், சத்ய சிவராம், சீமா முஸ்தஃபா, சுபாஷ் கட்டாடே, சுரேஷ் கைர்னார், தருண் தேஜ்பால், பிருந்தா க்ரோவர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


அல்ஜஸீரா வெளியிட்ட ரகசிய ஆவணங்கள்: ஃபலஸ்தீன் ஆணையம் வெளிநாட்டு உதவியை கோருகிறது

ரமல்லா,ஜன.29:உலக முஸ்லிம்களின் புனிதஸ்தலமான பைத்துல் முகத்தஸ் என்றழைக்கப்படும் மஸ்ஜிதுல் அக்ஸா உட்பட கிழக்கு ஜெருசலத்தின் பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேலுக்கு தாரை வார்க்க ஃபலஸ்தீன் ஆணையம் ஒப்பந்த மேற்கொண்ட தகவல்களைக் குறித்த ஆவணங்களை சமீபத்தில் அல்ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்டது.

இந்நிலையில் தங்களது சாயம் வெளுத்துப்போன ஃபலஸ்தீன் ஆணையம் இதுத்தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகளின் உதவியை நாடியுள்ளது.

பிரிட்டீஷ் ரகசிய புலனாய்வு அதிகாரி, அல்ஜஸீராவில் பணியாற்றும் அமெரிக்க குடிமகன், பிரஞ்சுநாட்டு குடிமகன் ஆகியோரை விசாரிக்கத்தான் ஃபலஸ்தீன் ஆணையம் அந்நாடுகளின் உதவியை நாடியுள்ளது. இதனை ஃபலஸ்தீன் ஆணைய மத்தியஸ்தர் ஸாஇப் எரகாத் தெரிவித்தார். இம்மூன்று பேரும் தவறு செய்யவில்லை எனினும், விசாரணை குழுவின் முன்னிலையில் ஆஜராக வேண்டுமென அவர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


சவூதி அரேபியா:ஜித்தாவில் பெருவெள்ளம் - 4 பேர் மரணம் - கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம்

ஜித்தா,ஜன.29:கடந்த புதன்கிழமை ஜித்தாவில் பெருமழையினால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மக்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடந்த 17 ஆண்டுகளுக்கிடையே கடுமையான மழை கடந்த புதன்கிழமை ஜித்தாவில் பெய்தது. இதனால் ஏற்பட்ட விபத்துக்களில் 4 பேர் மரணித்தனர். முக்கிய சாலைகளெல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி நதிபோல் காட்சியளித்தன. இதனால் மக்கள் வீடுகளிலும், பள்ளிக்கூடங்கள், கடைகளில் ஒதுங்கினர்.

வியாழக்கிழமை கால நிலை மாறினாலும் மக்களின் வாழ்க்கை சாதாரணகதிக்கு மாற இன்னும் சில தினங்கள் ஆகலாம். மூன்று மணிநேரத்தில் 111 மில்லி லிட்டர் மழை பெய்துள்ளது.

 மழைத் துவங்கி சில மணிநேரங்களுக்குள்ளாகவே ஃபலஸ்தீன் தெரு, ஹாயில், மதீனா சாலை, வாலி அல் அஹத் தெரு, ஷரஃபியா ஆகிய பகுதிகள் உட்பட நகரத்தின் முக்கிய பகுதிகளெல்லாம் வெள்ளத்தில் சிக்கியது. இதனால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்கள் இரவில் பள்ளிக்கூடங்களிலும், அதிகாரிகள் ஏற்பாடுச்செய்த தற்காலிக முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டனர். வியாழக்கிழமை காலையில்தான் பல மாணவர்களும் வீடு திரும்பினர்.

புதன் கிழமையிலிருந்து நகரத்தின் பல பகுதிகளிலும் மின்சாரம் தொடர்பு பாதிக்கப்பட்டிருந்தது. துயர்துடைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், சாதாரண வாழ்க்கை வெகுவிரைவில் புனரமைக்கவும் நியூயார்க்கில் அறுவை சிகிட்சையை முடித்துவிட்டு மொரோக்கோ நாட்டு காஸாபிளாங்காவில் ஓய்வெடுக்கும் சவூதி அரேபியா மன்னர் அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.

செய்தி:மாத்யமம்


மொடாஸா குண்டுவெடிப்பை நிகழ்த்தியதும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள்தான் - என்.ஐ.ஏ

புதுடெல்லி,ஜன.29:கடந்த 2008 ஆம் ஆண்டு மொடாஸா குண்டுவெடிப்பை நிகழ்த்தியதும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டுவைத்த ஹிந்து பயங்கரவாதிகள்தான் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது.

மொடாஸாவில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளிகளான ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே ஆகியோர்தான் என ஏற்கனவே குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா என்.ஐ.ஏவிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

குண்டுவெடிப்பு நிகழும்பொழுது இருவரும் சம்பவ இடத்தில் இருந்ததை அஸிமானந்தா தெரிவித்ததாக என்.ஐ.ஏ கூறுகிறது.

குஜராத் மாநிலம் மொடாஸாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்டான். 10 பேருக்கு காயமேற்பட்டது. ஈகைப் பெருநாளின் முந்திய தினம் இரவு பொருட்களை வாங்குவதற்காக சுகா பஸாரில் முஸ்லிம்களின் கூட்டம் அதிகமாக இருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்தது.

மொடாஸாவில் ஹிந்து ஜாக்ரதி சமிதியின் தலைவர்களான சியாம் ஸாஹூ, திலீப் நகர், சிவநாராயண் சிங், தர்மேந்திரா பைராகி ஆகியோரின் உதவியுடன் டாங்கேயும், கல்சங்கராவும் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக அஸிமானந்தா தெரிவித்தார். இவர்களெல்லாம் அப்பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களாவர். இவர்களுடன் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு படையால் கைதுச் செய்யப்பட்ட லோகேஷ் சர்மாவுக்கு இக்குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக அஸிமானந்தா என்.ஐ.ஏவிடம் தெரிவித்துள்ளான்.

குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் தலைமறைவு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளான டாங்கே, கல்சங்கரா, அமீத் ஆகியோரின் புகைப்படங்களை அஸிமானந்தா அடையாளம் கண்டுள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனே குஜராத் போலீஸ் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை கைதுச் செய்து சித்திரவதைச் செய்தபொழுதும் ஆதாரங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து வழக்கு முடங்கிப்போனது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


28.1.11

ஜன27 பாபர் மசூதிகெதிரான அநியாய தீர்ப்பை கண்டித்து பேரணி&ஆர்ப்பாட்டம் ஸ்தம்பித்தது சென்னை- அழைகடலென திரண்ட மக்கள் கூட்டம்


ஸ்தம்பித்து போன சென்னை- அழைகடலென திரண்ட மக்கள் கூட்டம்! அல்ஹ்ம்துலில்லாஹ்!
ஜனவரி 27 பாபர் மஸ்ஜித் வழக்கின் அநியாயத்தீர்ப்பை கண்டித்து நடைபெற்ற போராட்டப் புகைப்படங்கள்

ஜன 27 பாபர் மசூதி தீர்ப்புக்கெதிரான பேரணி&ஆர்ப்பாட்டம் ஸ்தம்பித்து போன மதுரை மாநகரம்

ஜனவரி 27 பாபர் மஸ்ஜித் வழக்கின் அநியாயத்தீர்ப்பை கண்டித்து நடைபெற்றபோராட்டப் புகைப்படங்கள் (மதுரை)