ரமல்லாஹ், ஆக. 6- இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணும் விதமாக, பாலஸ்தீன தனி நாடு கோரிக்கை தொடர்பான வரைவு அறிக்கையினை ஐ.நா. பொதுச்சபையில் சமர்பிக்க பாலஸ்தீன அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கான வரைவு அறிக்கையினை இறுதி வடிவம் பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் சர்ச்சைக்குரிய காஸா, மேற்கரைபகுதி, ரமல்லாஹ் உள்ளிட்ட கிழக்கு ஜெருசலம் பகுதிகளை கடந்த 1967-ம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஆக்கிரமித்து வருகிறது. இப்பகுதிகளில் பாலஸ்தீனர்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளை அமைத்து தனி நாடு உரிமையினை கோரி