
புதுடெல்லி:உடல் நிலை காரணங்களை பரிசீலித்தால் அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் பெற உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள மாநில பி.டி.பி கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை பரிசீலிக்கும் வேளையில் நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இக்கருத்தினை தெரிவித்தது.