தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.3.11

மத்திய அரசிலிருந்​து தி.மு.க விலகல்


சென்னை,மார்ச்.6:மத்திய அரசிலிருந்து விலகிக் கொள்வதாக திமுக இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

திமுகவின் உயர்நிலை செயற்குழு கூட்த்தின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி, திமுக இடையிலான 7 ஆண்டு கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

பாபர் மஸ்ஜித் வழக்கு:அத்வானி, பால்தாக்கரே, முரளி மனோகர் ஜோஷிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி,மார்ச்.4:வரலாற்றுச் சிறப்புமிக்க முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமான பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட வழக்கில் பா.ஜ.க தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சிவசேனா தலைவர் பால்தாக்கரே உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1992-ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜிதை இடிக்க சதித்திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கை மீண்டு விசாரிக்க வேண்டுமென சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் பரிசீலித்தது. இதனைத் தொடர்ந்து

இந்தியாவின் ஆதரவைக் கோருகிறார் லிபியா அதிபர் கடாபி


திரிபோலி, மார்ச். 5- லிபியாவில் கலவரக்காரர்களுக்கு எதிராக ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், காஷ்மீரில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் போன்றதே. எனவே இந்தியா தன்னை ஆதரிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார் கடாபி.
லிபியாவில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

25 பைசாவுக்கு பை! பை! செல்லாது!

டெல்லி,மார்ச்.4:நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி முதல் 25.காசு நாணயத்திற்கு மூடு விழா நடத்தவுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

ஒரு காலத்தில் ஒரு காசு, 2 காசு, 5 காசு, 10 காசு என்று நாணயங்கள் இருந்தன. அவற்றை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டனர். இவற்றை இப்போதெல்லாம் காணவே முடிவதில்லை. தற்போது 25 காசு, 50 காசு ஆகியவை மட்டும் புழக்கத்தில் உள்ளன. இதில் 25 காசு நாணயத்தையும் புழக்கத்திலிருந்து நிறுத்த அரசு தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தான் கிறிஸ்துவ அமைச்சர் கொலை: கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டம்


லாகூர், மார்ச். 5- பாகிஸ்தானில் இஸ்லாமின் முன்னுரிமையைக் குறைக்கும் மத துவேசச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி வந்த, அந்நாட்டு அமைச்சர் சபாஸ் பட்டி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இஸ்லாமியர் தவிர மற்றவர் உரிமைகளைக் காக்க

திரிபோலியில் பிரம்மாண்டமான போராட்டம்


திரிபோலி,மார்ச்.5:நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் தொடரும் லிபியாவின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபிக்கு எதிராக தலைநகரான திரிபோலியில் நேற்று பிரம்மாண்டமான போராட்டம் நடைபெற்றது.