தமிழகத்தின் இன்று நடந்து முடிந்துள்ள சட்ட சபை தேர்தலில், மாநிலம் முழுவதுமாக சராசரியாக 75.2% வீத விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் ஆணைக்குழு அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
அனைத்து வாக்குசாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதாக தகவல் இல்லை என தெரிவித்துள்ள அவர் பல இடங்களில் மின்னணி எந்திரங்கள் கோளாறு ஏற்பட்டு வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியதாகவும், இதனால் வாக்குப்பதிவு சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.