தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.1.11

சுவாமி அசிமானந்தாவின் மணமாற்றம் ஒரு பரபரப்பான ரிப்போர்ட்,,,!!!!!!!

புதுடெல்லி,ஜன.8:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்த சுவாமி அஸிமானந்தா, தான் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததற்கு காரணம் இதே வழக்கில் பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள ஒரு முஸ்லிம் இளைஞருடனான நல்லுறவுதான் காரணம் என தெரிவித்துள்ளார்.

மாஜிஸ்ட்ரேட் முன்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சுவாமி அஸிமானந்தா இதுக்குறித்து கூறியதாவது: "நான் ஹைதராபாத்தில் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்படும்பொழுது சக கைதிகளில் ஒருவர் அப்துல் கலீம் என்பவராவார். சிறைக்குள்ளே வைத்து கலீம் எனக்கு நிறைய உதவிச் செய்துள்ளார். எனது பொருட்களை எடுத்து வைக்கவும், உணவு மற்றும் தண்ணீர் கொண்டு தந்ததும் கலீம் ஆவார். கலீம் போன்ற நிரபராதிகள் சிறையில் வாடுவதைக்கண்டு இவ்வழக்கில் பிராயசித்தம் செய்வதற்காக எனது மனசாட்டி என்னைத் தூண்டியது. அதனடிப்படையில்தான் குற்றத்தை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தேன் என அஸிமானந்தா கூறியுள்ளான்.

இந்தியா:மக்கா மசூதியைத் தாக்கியது நானே : ஆசிமானந்த்

.
ஹைதராபாதில் உள்ள மக்கா மசூதியின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தனக்குத் தொடர்பு இருப்பதாக இந்துத்துவா பயங்கரவாதியான சுவாமி ஆசிமானந்த் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார். மேலும், 2006 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் மலேகான் மசூதி ஒன்றில் நடைபெற்ற குண்டு வெடிப்பும் சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் இரயில் வெடிகுண்டு தாக்குதலும் இந்துத்துவா பயங்கரவாதிகளால்தான் நடத்தப்பட்டது. இது குறித்து தனக்குத் தெரியும் என்றும் ஆசிமானந்த் கூறியுள்ளார்மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் தவறாகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஒருவர் சுவாமி ஆசிமானந்துடன் நன்முறையில் நடந்து கொண்டதைத் தொடர்ந்து ஆசிமானந்த் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜடீன் சட்டர்ஜி என்ற நபா குமார் சர்கார் என்ற பெயரையுடை ஆசிமானந்த் என்றறியப்படும் இந்துத்துவா சாமியார், குஜராத்தில் முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதியான மோடாஸாவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பிலும் இந்துத்துவா பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்.

இந்து கோயில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பழி வாங்கும் நோக்கில் திட்டமிட்ட இத்தகைய வெடிகுண்டு தாக்குதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ் குமார் என்பவரும் மூளையாக இருந்து செயல்பட்டார் என்று கூறியுள்ள ஆசிமானந்த், கோரக்பூர் மக்களவை உறுப்பினர் யோகி ஆதித்யநாத் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித  உதவியும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

சுனில் ஜோஷி மற்றும் ராம்ஜி எனப்படும் ராமசந்திர கல்சங்க்ரா உள்ளிட்ட காவி பயங்கரவாதிகளின் பெயர்களைத் தேர்ந்தெடுத்தது இந்திரேஷ்தான் என்று ஆசிமானந்த் கூறியுள்ளார்.

இந்திய கிரிமினல் சட்டம் 164ஆவது பிரிவின் கீழ் மாஜிஸ்ட்ரேட் நீதிபதியிடம் அளித்த வாக்கு மூலத்தில், குண்டு வெடிப்புகளில் ஈடுபட்ட இந்துத்துவா பயங்கரவாதக் குழுக்களை ஆசிமானந்த் அடையாளம் காட்டியுள்ளார்.

மாஜிஸ்ட்ரேட்டிம் அளித்த வாக்கு மூலத்தில், தன்னுடைய செயல்களுக்காகத் தனக்கு மரண தண்டனை கிடைக்கக் கூடும் என்பதை நான் அறிவேன். என்றாலும் மக்கா மசூதி குண்டு வெடிப்பில் தவறாக் கைது செய்யப்பட்டுள்ள கலீம் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

சிறையில் சுவாமி ஆசிமானந்திடம் கலீம் நன்முறையில் நடந்து கொண்டதுதான் ஆசிமானந்த் தன் தவறை ஒப்புக் கொள்ள வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்துத்துவா பயங்கரவாதம் எந்த அளவு உறுதியாக உள்ளது என்பதையும் புலணாய்வு அமைப்புகள் சந்தேகித்ததைவிட அதிக அளவு நெட்வொர் கொண்டதாக இந்து பயங்கவராதம் உள்ளதையும் ஆசிமானந்தின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

பிற இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளை வெவ்வேறு புலணாய்வு அமைப்புகள் விசாரணை செய்து வரும் நிலையில், ஆசிமானந்தின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் அவற்றில் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படாது. என்றாலும் அவற்றின் விசாரணைக்கு இது உதவக்கூடும்.

2006ஆம் ஆண்டு மலேகான் குண்டு வெடிப்பில், மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் படையும் சிபிஐயும் முஸ்லிம்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டியிருந்தன. ஆசிமானந்தின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் புலணாய்வு அமைப்புகளின் விசாரணையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.

மக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மொபைல் போன் வியாபாரியான கலீம் ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். தற்போது வேறு ஒரு வழக்கில் கலீம் கைது செய்யப்பட்டு சுவாமி ஆசிமானந்த் அடைக்கப்பட்டுள்ள அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நான் கலீமுடன் கலந்துரையாடியபோது, மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் அவர் எவ்வாறு கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்தார் என்பதை நான் அறிந்து கொண்டேன். நான் சிறையில் இருக்கும் போது, கலீம் எனக்கு அதிகமாக உதவிகள் செய்தார். எனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்ட போதெல்லாம் தண்ணீர் கொண்டு வந்து தந்தார். எனக்காக உணவும் கொண்டு வந்து தந்தார். கலீமின் நன்னடத்தை என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. இந்தக் குண்டு வெடிப்பு வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று என்னை என் ஆழ்மனம் தூண்டியது என்று சுவாமி ஆசிமானந்த் தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்

அயோத்தி - சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி புத்த அமைப்பும் வழக்கு!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் எங்களுக்கே சொந்தம் என்று புத்த அமைப்பு ஒன்றும் உரிமை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில் ராமர் பிறந்ததாகவும், அங்கிருந்த கோவிலை இடித்து விட்டு மசூதியை முகலாய மன்னர் பாபர் கட்டியதாகவும் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த நிலத்துக்கு உரிமை கோரி நடந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அதன்படி, அந்த இடத்தை மூன்றாகப் பிரித்து இரண்டு இந்து அமைப்புகள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கு தலா ஒரு பங்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகளும் முஸ்லிம் அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த நிலையில், சர்ச்சைக்குரிய இடத்துக்கு புத்த மதத்தினரும் உரிமை கொண்டாடத் தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. கூட்டமைப்பு மற்றும் புத்த கல்வி அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவர் உதித் ராஜ் டில்லியில்  வெள்ளிக் கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:

அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து இந்தியாவில் உள்ள புத்த மதத்தினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது சர்ச்சைக்குரிய நிலம் மட்டுமல்ல. மசூதி கட்டுவதற்கு முன்பாக, அந்த இடத்தில் புத்த விகாரம் இருந்துள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 2003ஆம் ஆண்டு தாக்கலான தொல்லியல் ஆய்வறிக்கையிலும் இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில் வட்ட வடிவிலான வழிபாட்டு தலம் இருந்ததாக கூறப்பட்டது. அது, நிச்சயமாக புத்த விகாரமாகத்தான் (புத்தர் கோவில்) இருக்க வேண்டும். மேலும், தூண்களால் கட்டப்பட்ட வழிபாட்டு தலமாக இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டது. வட இந்தியாவை பொருத்தவரை கோவில் என்றால் இந்துக்கள் கோவில் மட்டுமல்ல. இந்துக்கள், ஜைனர்கள், புத்த மதத்தினர் என அனைவருமே கோவில் என்றே கூறுவது வழக்கம். எனவே, இந்து கோவில் என முடிவு செய்வது தவறு.

இவ்வாறு உதித் ராஜ் தெரிவித்தார். அப்போது உடன் இருந்து மத்திய முன்னாள் அமைச்சரும் பாரதீய ஜனசக்தி தலைவருமான சங்பிரியா கவுதம் கூறியதாவது:-

சர்ச்சைக்குரிய இடத்தில் கசவ்தி வகை தூண்கள் இருந்ததாக அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சுதிர் அகர்வால் தெரிவித்துள்ளார். காசியில் உள்ள புத்த விகாரத்திலும் அது போன்ற தூண்களே இருக்கின்றன. இதுபோல, மசூதியை கட்டுவதற்கு அந்த இடத்தில் இருந்த கசவ்தி வகை தூண்கள் பயன்படுத்தப்பட்டதாக ஆங்கிலேயே கட்டிட நிபுணர் கார்னஜியை மேற்கோள் காட்டி, மற்றொரு நீதிபதி எஸ்.யு.கான் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்ச்சைக்குரிய அந்த இடத்தை சுற்றிலும் சில புத்த விகாரங்கள் அழிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டு இருக்கிறது. மசூதியை கட்டுவதற்கு அதில் இருந்த பாகங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. எனவே, அந்த இடம் புத்த மதத்தினருக்கு சொந்தமானது.

இவ்வாறு சங்பிரியா தெரிவித்தார்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு இந்த சர்ச்சையை இரு தரப்பினரும் முடிவுக்கு கொண்டு வந்தால் நாங்கள் எதுவும் செய்திருக்க மாட்டோம். நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, உண்மையான உரிமையாளரான நாங்கள் அமைதியாக இருந்திருப்போம். தற்போது, இரண்டு தரப்பினருமே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். எனவே, உண்மையான உரிமையாளரான நாங்கள் ஏன் அமைதி காக்க வேண்டும்? எனவே, வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.