தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.1.11

ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்


மாஸ்கோ : உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான மாஸ்கோ விமான நிலையத்தில் உள்ள பயணிகள் வருகை பகுதியில் குண்டு வெடித்து குறைந்தது 31 நபர்கள் பலியானதாகவும் 130 நபர்கள் காயமடைந்துள்ளதாகவும் சுகாதார துறை அதிகாரிகள் கூறினர்.


ஆரம்ப கட்ட தகவல்களின் படி இது தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என கருதுவதாக ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் நிருபர்களிடம் கூறினார். மேலும் தற்கொலை மனிதன் மூலம் குண்டு வெடித்திருக்கலாம் என ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
குண்டு வெடிப்பை தொடர்ந்து மாஸ்கோ முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டொமோடிடோவா மாஸ்கோவின் நவீன விமான நிலையமாய் இருந்த போதும் அதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாய் இருந்ததில்லை. 2004-ல் இரு தற்கொலை படை மனிதர்கள் கள்ளத்தனமாய் விமான டிக்கெட் வாங்கி விமானத்தில் பயணித்து 90 நபர்களுடன் விமானத்தை வெடிக்க செய்தது குறிப்பிடத்தக்கது.

உலகின் உயரமான உணவகம் (ஓட்டல்) துபாயில் திறப்பு

துபாய் :  உலகின்  மிக உயரமான  உணவகம் துபாயில்  உள்ள உலகத்தின் மிக  உயரமான கட்டிடமான  புர்ஜ் கலிபாவில் உள்ள 122 வது மாடியில் உள்ளது. பூமியிலிருந்து 442 மீட்டர் உயரமுள்ள          அவ்வுணவகம் பொது மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
882 மீட்டர் உயரமுள்ள பர்ஜ் கலிபாவில் அமைந்துள்ள “அட்மாஸ்பியர்” என பெயரிடப்பட்டுள்ள இவ்வுணவகம் (ஓட்டல்) நேற்று திறக்கப்பட்டது.  இந்த ஓட்டலுக்கென்று பிரத்யேகமாக உள்ள லிப்டின் மூலம் பர்ஜ் கலிபாவின் கார்பரேட் சூட் லாபியிலிருந்து நேரடியாக செல்லலாம்.
இதில் ஓரே சமயத்தில் 210 நபர்கள் உட்கார்ந்து அமீரகம் முழுமையும் அழகாய் பார்வையிட்டு கொண்டே உண்டு களிக்கலாம். ஆனால் இவ்வளவு வசதி கொண்ட இவ்வுணவகத்தில் ஒரு நபர் சாதாரணமாக சாப்பிட்டால் கூட சுமார் 8500 இந்திய ரூபாய் கொடுக்க வேண்டும். சரி உணவு சாப்பிடாமல் வெறும் தேநீர் மட்டும் சாப்பிட்டால் 100 டாலர் கொடுத்தால் போதும், அதாவது இந்திய மதிப்பில் வெறும் 4600 ரூபாய் கொடுக்க வேண்டும்.
முதல் இரண்டு நாட்களும் முழுமையாய் புக் செய்யப்பட்டு உள்ளதாக ஈமார் ஓட்டல் குழும தலைவர் மார்க் டார்டென் கூறினார். மேலும் இந்த ஓட்டல் இத்துறைக்கே முன்னோடியாய் திகழும் என்றும் கூறினார். 1030 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள இது உலகின் இரண்டாம் உயரமான ரெஸ்டாரெண்டான சிஎன் டவரில் உள்ள சுழலும் 360 ரெஸ்டாரெண்டை விட 92 மீட்டர் உயரமானது.

ஜனவரி 26 'டென்ஷன்': ஜம்முவில் கல்வி நிலையங்களை மூடும் காஷ்மீர் அரசு

ஜம்மு: குடியரசு தினத்தையொட்டி பிரச்சனை ஏற்படலாம் என்பதாலும், பாஜக லால் சௌக்கில் தேசியக் கொடி ஏற்ற திட்டமிட்டுள்ளதாலும் ஜம்மு காஷ்மீரில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களையும் மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,

குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு பல்கலைக்கழகம் உள்பட அனைத்து கல்வி நிலையங்களும் நாளை மூடப்பட்டிருக்கும்.

தனியார் கல்வி நிர்வாகங்கள் உள்பட அனைத்து கல்வி நிலைய நிர்வாகத்திற்கும் இந்த உத்தரவை கண்டிப்பாக மீறக்கூடாது என்று தெரிவித்திருக்கிறோம் என்றார்.

பாஜக ஸ்ரீநகரில் தேசிய கொடி ஏற்றத் திட்டமிட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் செயலால் ஜம்முவில் பிரச்சனை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்... 30 பேர் பலி, 70 பேர் காயம்

பாக்தாத்: ஈராக்கில் உள்ள கர்பலா நகரில் ஷியா யாத்திரிகர்களை குறிவைத்து 2 கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 30 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 70 பேர் காயம் அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்பலாவுக்கு செல்லும் யாத்திரிகர்கள் பேருந்துகள் நின்று கொண்டிருந்த டர்மினலில் நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் 9 பேர் உயிர் இழந்தனர், 18 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரத்திலேயே கர்பலாவின் தென் பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர், 50 பேர் காயம் அடைந்தனர்.

கடந்த வாரம் நடந்த மூன்று தற்கொலைப்படை தாக்குதல்களில் 56 பேர் கொல்லப்பட்டனர், 180 பேர் காயம் அடைந்தனர்.

நேற்று ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இரண்டு இடத்தில் தெருவோரம் வைத்திருந்த குண்டுகள் வெடித்தன. முதல் குண்டு வெடித்ததில் ஈராக் இராணுவ அதிகாரி ஒருவரும், அவரது டிரைவரும் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டாவது குண்டு வெடிப்பில் அந்த வழியாகச் சென்றிருந்தவர்களில் குறைந்தது 8 பேர் காயம் அடைந்தனர்.

கர்பலா நகரில் ஏராளமான ஷியா பிரிவு யாத்திரிகள் கூடியிருந்த நேரத்தில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. யாத்திரிகர்கள் ஷியா பிரிவுத் தலைவர்களில் ஒருவரான இமாம் ஹுசைனின் இறப்பிற்காக 40 நாள் துக்கம் அனுஷ்டித்து இறுதியில் கர்பலா செல்வது வழக்கம். இந்த புனித காலத்தில் கர்பலாவில் வாகனப் பயன்பாட்டிற்கு போலீசார் தடைவிதித்துள்ளனர். அதனால் யாத்திரிகர்கள் கால் நடையாக வந்துள்ளனர்.

இதனால் அங்கு கூடுதலாக 120,000 போலீசாரும், இராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

முதல் கார் வெடிகுண்டு தாக்குதல் கிழக்கு கர்பலாவில் இருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் அல் இப்ராஹிமி பகுதியில் உள்ள பஸ் டர்மினலில் நடந்தது.

இந்த தாக்குதல் நடந்து 4 மணி நேரம் கழித்து தெற்கு கர்பலாவில் இரண்டாவது குண்டு வெடித்தது.

இது குறித்து யாத்திரிகர் பாத்மா மாடலௌல் (40) கூறுகையில், "என்னதான் குண்டு வெடித்தாலும் நாங்கள் ஹூசைனுக்கு மரியாதை செய்ய நாங்கள் எங்கள் யாத்திரையைத் தொடர்வோம். இந்த தாக்குதல்களை நடத்தும் இஸ்லாமிய எதிரிகள் ஓயும் வரை நாங்கள் எங்கள் பயணத்தை நிறுத்தமாட்டோம். நாங்கள் கர்பலா வந்ததே அவர்களுக்கு ஒரு செய்தி சொல்லத்தான். அவர்கள் தாக்குதல் மேல் தாக்குதல் நடத்த ஈராக்கின் பகையாளிகளை எதிர்த்து போராடும் எண்ணம் எங்களுக்கு அதிகரிக்கும் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்," என்றார்.

"ஏற்கனவே யாத்திரிகர்கள் தாக்கப்பட்டதால் இந்த தாக்குதல்கள் அதிகாரிகள் எதிர்பார்த்ததுதான். ஆனால் என்னதான் போலீசார் குவிக்கப்பட்டிருந்தாலும் நகரம் முழுவதும் நடந்து வரும் அத்தனை பயணிகளையும் பாதுகாப்பது என்பது கடினமானது", என்று பிபிசியின் ஜிம் தெரிவித்தார்.

பிரமாண்ட புத்தக கண்காட்சி கப்பல் துபாய் வருகை.


துபாய்,ஜன.24:'லோகோஸ் ஹோப்' என்ற கடலில் சஞ்சரிக்கும் கப்பலில் நடைபெறும் புத்தக கண்காட்சி துபாய் வந்தடைந்தது. 50 நாடுகளைச் சார்ந்த 400 பணியாளர்கள் இக்கப்பலில் உள்ளனர். புத்தகக் கண்காட்சி கப்பல் இரண்டு வருட சர்வதேச திட்டமாகும். வருகிற பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி இக்கப்பல் அபுதாபிக்கு செல்லும். இக்கப்பலில் பணிபுரியும் கேப்டன் உள்பட அனைத்து பணியாளர்களுமே சம்பளம் வாங்காமலேயே பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கப்பல் பணியாளர்களில் பொறியாளர்கள்,ப்ளம்பர், புக் கீப்பர், சமையல்காரர்கள், தச்சர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சமூக சேவைகள் மூலமாகவும், இலக்கியம் மூலமாகவும் மக்களுக்கு உதவ இவர்கள் தயார். தென்னாப்பிரிக்காவுக்கு சென்றிருந்த வேளையில் இவர்கள் பள்ளிக்கூடம் நிர்மாணித்தல், நூல்களை இலவசமாக வழங்குதல், இலவச மருத்துவ மற்றும் பல் மருத்துவ க்ளீனிக் ஆகிய பணிகளில் ஈடுபட்டனர்

குழந்தைகளை எரித்து கொல்லும் அளவுக்கு இவர்கள் எப்படி கொடூரமானவர்களாக மாற்றபடுகிறார்கள்!! ஒரு ஆய்வு கட்டுரை


புதுடெல்லி,ஜன.22:ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவருடைய 2 மகன்களை உயிருடன் எரித்துக் கொன்ற வழக்கில் தாரா சிங்குக்கு மரண தண்டனை விதிக்கும்படி சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஒரிஸாவில் கடந்த 1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ், அவருடைய 2 மகன்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாராசிங்குக்கு கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாராசிங் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த ஒரிசா உயர்நீதிமன்றம், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ மேல்முறையீடு செய்தது. தாராசிங்குக்கு மரண தண்டனை விதிக்கும்படி கோரியது. இந்த வழக்கை நீதிபதிகள் சதாசிவம், பி.எஸ்.சவுகான் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு, கடந்த மாதம் 15ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று அறிவித்தனர். அதில், 'அரிதிலும் அரிதான' வழக்கில் மட்டுமே குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்த வழக்கு அந்த பிரிவில் வரவில்லை. எனவே, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. சி.பி.ஐ மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் செல்வியின் கட்டுரை (சிந்திக்கவும்): இந்த குழந்தைகள் என்ன குற்றம் செய்தன? எப்படி குழந்தைகளை எரித்து கொல்லும் அளவுக்கு இவர்கள் கொடூரர்களாக மாற்றபடுகிறார்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பின் மூளை சலவை. இவர்கள் ஹிந்து மதத்தை வளர்கிறோம், ஹிந்துக்களுக்கு என்று ஒரு நாடு அதுதான் இந்தியா என்று கூறி அப்பாவி ஹிந்து வாலிபர்களை தங்கள் வலையில் வீழ்த்தி அவர்களுக்கு தீவிரவாத பயிர்ச்சி கொடுக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சுமார் ஐம்பது ஆயிரம் முழுநேர உழியர்களை கொண்டது. முழு நேர உழியர்கள் என்றால் என்ன? இந்த முழு நேர உழியர்கள் திருமணமே செய்து கொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சித்தாந்தங்களை இந்தியா முழுவதும் பரப்புவது. இவர்கள் வேறு எந்த வேலைக்கும் போக மாட்டார்கள். தங்கள் இயக்க வேலையை மட்டுமே செய்வார்கள். இன்னும் தெளிவாக செல்லனும் என்றால் தங்கள் உடல், பொருள், ஆவி, எல்லாம் தங்களது இயக்கத்தை பரப்புவதே என்ற அளவுக்கு தீவிரமாக செயல்படுவது. இப்படியாக இந்த முழுநேர உழியர்கள் இந்தியா முழுவது சுற்றி திரிந்து ஹிந்து வாலிபர்களை தங்கள் வலையில் விழவைகிறார்கள். பின்னர் அவர்களுக்கு சிந்தனை ரீதியான பயிற்சி, உளரீதியான பயிற்சி, ஆன்மீக பயிற்சி, ஆயூத பயிற்சி, உளவு பயிற்சி இப்படி கடுமையான பயிற்ச்சிகள் கொடுக்கபடுகிறது.

இவர்களுக்கு பயிற்சி கொடுபதற்க்கு என்றே இந்தியா முழுவது பயிற்சி கேந்திரங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்துகிறது. ஒரு நாள், மூன்றுநாள் பயிற்சி கேந்திரங்கள் அந்த அந்த மாநிலங்களில் உள்ள பயிற்சி கேதிரங்களில் நடக்கிறது. இங்கு பயிற்சிகளை வெற்றிகிரமாக முடித்தவர்களுக்கு மத்திய பயிற்சி கேந்திரத்தில் பயிற்சி அளிக்கபடுகிறது. மத்திய பயிற்சி கேந்திரங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களான ராஜஸ்தான், உத்திர பிரதேசம், ஒரிசா, கேரளா போன்ற மாநிலங்களில் நடத்தபடுகின்றன. இதன் மூலம் அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி கொடுக்கபடுகிறது. மேலும் இவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளிக்கபடுகிறது. இவர்களுக்கு ஆயூத பயிற்சி அளிப்பது இந்தியாவின் முன்னாள் ராணுவ அதிகாரிகள் என்பது அதிர்ச்சியான உண்மை. இந்தியாவின் பல முன்னாள் ராணுவ அதிகாரிகளும், உளவுத்துறை அதிகாரிகளும், நீதிபதிகளும் பிற்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பின் உறுபினர்கள் என்பது உண்மையோ உண்மை.

உலகில் இஸ்ரைளின் உளவுத்துறையான மொசாதுக்கு அடுத்தபடியாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உளவுத்துறை நாம் சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு வலிமையான உளவுத்துறையை தன்னகத்தே கொண்டுள்ளது. இவர்கள் பத்து முதல் இருபது பெயர் கொண்ட ஒரு குழு இதை இவர்கள் ஒரு அணி என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு அணிக்கும் ஒருதலைவர் என்றமுறையில் இவர்களது அடிமட்ட செயல்பாடு ஆரம்பம் ஆகிறது. குறைந்த பட்சம் ஒரு வூரில் பத்து முதல் ஐம்பது அணிகள் வரை இவர்களுக்கு இருகின்றன. இவர்கள் தான் அந்த வூரில் என்ன நடக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றார்கள்.

இப்படி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயிற்ச்சி கூடங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு முஸ்லிம் மற்றும் சிறுபான்மை எதிர்ப்பு, வெறுப்பு என்பவை போதிக்கப்படுகிறது. எனவே இவர்கள் அன்றாடம் வாழ்வில் நடக்கும் சிறிய விசயங்களையும் மத கண்கொண்டு பார்கிறார்கள். எப்படியெல்லாம் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை மக்களோடு பிரச்சனைகளை உண்டாக்கி அதை கலவரங்களாக மாற்றுவது என்பதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். கொடுக்கல் வாங்கல் முதல் வியாபார பிரச்சனைகள் வரை மனிதன் அன்றாடம் வாழ்வில் நடக்கும் பிரச்சனைகளை ஹிந்து முஸ்லிம் பிரச்சனை போல் சித்தரித்து இவர்கள் ஒரு ஆதரவு கரம் நீட்டுவது போல் அந்த விஷயங்களுக்குள் வந்து ஒரு பெரும் கலவரம் நடக்க காரண கர்தாவாகிரார்கள்.

கலவரம் செய்வதில் இவர்கள் வல்லவர்கள். ஏன் என்றால் இவர்களிடம் ராணுவ ரீதியில் தாயாரிக்க பட்ட ஒரு படை ஆயூதங்களுடன் ரெடியாக ஒரு தலைமையின் கீழ் முறைபடுத்தப்பட்ட சிறு குழுக்களாக இருந்து செயல்படுகிறது. இவர்கள் கலவரங்களை திட்டமிட்டு நடத்திவிட்டு ஒளிந்து கொள்வார்கள். பாதிக்க பட்ட சிறுபான்மை தங்களது எதிர்ப்புகளை ஜனநாயக முறைப்படி தெரியபடுத்த வீதிகளுக்கு வரும்போது இந்திய கையாலாகாத காவல்துறை இவர்களை பிடித்து குண்டர் தடுப்பு சட்டத்திலும், போடாவிலும், இன்னும் பல ஆள்தூக்கி சட்டங்களிலும் சிறையில் தள்ளி மொத்த கலவரங்களுக்கும் இவர்கள் தான் காரணம் போன்ற ஒரு மாயை தோற்றுவித்து விடுகிறார்கள். இவர்களுக்கு துணையாக இந்த பாசிச சிந்தனை உள்ள பத்திரிக்கைகளும் இந்த பிரச்சனிகளை தலைப்பு செய்திகளாக்கி பூதகரமாக்கி முஸ்லிம் விரோத சிந்தனையை வளர்கின்றன. மக்கள் விழிப்புடன் செயல்படவேண்டிய காலம் இது. இந்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத சிந்தனையில் மக்கள் விழுந்துவிடாமல் அந்த பாசிச ஹிட்லர் சித்தாந்தத்தை இந்த மண்ணை விட்டு விரட்டுவது ஒவ்வொரு இந்தியனது கடமை.

எழுத்தாளர், சிந்தனையாளர் திரு.பாரதி கிருஷ்ணா குமார் பஹ்ரைன்னில் சிறப்புரை


பஹ்ரைன்,ஜன.23: பஹ்ரைன் வருகை தந்த தமிழக NCHRO (தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு )ன் துணைத்தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.M.G.K.நிஜாமுதீன் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பிரபல எழுத்தாளர் திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களையும் வரவேற்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை பஹ்ரைன் இந்தியா ஃபிரட்டேர்னிட்டி ஃபோரம் (BIFF)-தமிழ்நாடு பிரிவு கடந்த 15-ம் தேதி அன்று இரவு 8 மணி அளவில் BIFF அரங்கத்தில் வைத்து நடத்தியது. இந்தியா ஃபிரட்டேர்னிட்டி ஃபோரம் என்பது ஜாதி , மத ,மொழி பேதமின்றி பஹ்ரைன் வாழ் இந்திய மக்களுக்காக சேவை செய்து வரும் ஒரு அமைப்பு.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பிரபல எழுத்தாளரும், ஆவணப்பட மற்றும் குறும்பட தயாரிப்பாளரும், பாபரி மஸ்ஜித் விஷயத்தில் கடந்த 20 வருடங்களாக முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடியவருமான மனித உரிமை போராளி திரு.பாரதி கிருஷ்ணா குமார் அவர்கள் தனது உரையில் இந்துத்துவவாதிகள் ஆட்சியில் இல்லை என்றாலும் இந்துத்துவம் இன்னும் ஆட்சிப் பீடத்தில் தான் இருக்கின்றது என்றும் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இல்லாவிடினும் தாழ்த்தப்பட்டோருக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான ஃபாசிச மனோபாவம்தான் அரசின் எல்லா துறைகளிலும் ஆட்சியில் இருக்கின்றது என்றார். இந்துத்துவ சக்திகள் சாதாரண குடிமகன்களின் எண்ணங்களுக்கு விலங்கிட்டு விட்டு, கேடிகளுக்கு ஆட்சி அதிகாரத்தையும், சாதாரண குடிமக்களை எவ்வாறு இஸ்லாமியர்களுக்கு எதிராக திருப்பும் திட்டத்தோடு செயல்படுகிறது என்பதையும் விளக்கினார்.

சினிமாவிலும், அரசியலிலும் தேசப்பற்றை பற்றி பேசும் அனைவரும் தேசியவாதியுமல்ல; அரசியலில் இஸ்லாமியர்களின் நண்பர்களாக காட்டிகொள்ளும் அனைவரும் நண்பருமல்ல என்ற விழிப்புணர்வை இஸ்லாமியர்கள் அடைய வேண்டும் என்றார். மேலும் இந்துத்துவவாதிகள் தேசியக் கொடியை ஏந்தி வரும் முஸ்லிம்களை கண்டு பயப்படுவதை பற்றியும் இந்த தேசத்தை பீடித்துள்ள இந்துத்துவவம் என்ற நோயை விரட்ட அறிவு ரீதியான யுத்தத்திற்கு முஸ்லிம்கள் தயாராக வேண்டும் என்று கூறினார்.

சிறப்புரையாற்றிய NCHRO (தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு)ன் தமிழக துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சகோதரர் M .G .K .நிஜாமுதீன் அவர்கள், இந்துத்துவ சக்திகள் இஸ்லாமியர்களை தீவிரவாதி என்ற ஒற்றை வார்த்தைகளை கொண்டு பின்னடைய செய்கிறார்கள் என்றார். இஸ்லாமியர்களிடையே உள்ள அறியாமையை ஆணித்தரமாக சாடிய அவர் பத்திரிகை மற்றும் அரசியலில் இஸ்லாமியர்கள் சாதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.

இந்திய முஸ்லிம்கள் பின்தங்கி உள்ளமைக்கு காரணம் அறியாமையும், பரந்த சிந்தனை இல்லாமையும் , பரந்த தொடர்பில்லாமையும் தான் என்றும் முஸ்லிம்களைக் காட்டிலும் குறைவான சதவீதம் உள்ள பிற சமுதாயத்தவர்கள் எல்லா உரிமைகளும் பெற்று வாழும் போது முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு காரணம் முஸ்லிம்களிடம் உள்ள ஒற்றுமையின்மைதான் என்றும் முஸ்லிம்கள் எல்லா சமூகத்துடனும் பரந்த தொடர்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என உரையாற்றினார்