இன்றுள்ள நிலையில் கருணாநிதி ஸ்டாலினிடம் பொறுப்பை விட்டு விலகுவதே நல்லது என்றும் இதைவிட்டால் திமுக தன்னைப் புதுப்பிக்க வேறு வழி கிடையாது என்றும் தமிழக அரசியல் விமர்சகர் சோலை குறிப்பிடுகிறார். இது குறித்து வெளியான ஆய்வு வருமாறு :
தமிழக சட்டசபை தேர்தல் தீர்ப்பு எப்படி இருக்கும் என, ஏடுகளும், ஊடகங்களும் கருத்து கணிப்புக்களை வெளியிட்டன. ஆனால், ஓட்டுப்பதிவின் போது வீசிய அமைதிப் புயல், அந்த கணிப்புக்களையெல்லாம் சுருட்டிக் கொண்டு போய்விட்டது.”இந்த அளவிற்கு மகத்தான வெற்றி பெறுவோம் என, அ.தி.மு.க., அணி எதிர்பார்க்கவில்லை. ஏன்… “இந்த அளவிற்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கும்’ என, தி.மு.க., அணியும் எதிர்பார்க்கவில்லை.