தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.5.11

கருணாநிதி ஸ்டாலினிடம் பொறுப்பை விட்டு விலகுவதே நல்லது


இன்றுள்ள நிலையில் கருணாநிதி ஸ்டாலினிடம் பொறுப்பை விட்டு விலகுவதே நல்லது என்றும் இதைவிட்டால் திமுக தன்னைப் புதுப்பிக்க வேறு வழி கிடையாது என்றும் தமிழக அரசியல் விமர்சகர் சோலை குறிப்பிடுகிறார். இது குறித்து வெளியான ஆய்வு வருமாறு :
தமிழக சட்டசபை தேர்தல் தீர்ப்பு எப்படி இருக்கும் என, ஏடுகளும், ஊடகங்களும் கருத்து கணிப்புக்களை வெளியிட்டன. ஆனால், ஓட்டுப்பதிவின் போது வீசிய அமைதிப் புயல், அந்த கணிப்புக்களையெல்லாம் சுருட்டிக் கொண்டு போய்விட்டது.”இந்த அளவிற்கு மகத்தான வெற்றி பெறுவோம் என, அ.தி.மு.க., அணி எதிர்பார்க்கவில்லை. ஏன்… “இந்த அளவிற்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கும்’ என, தி.மு.க., அணியும் எதிர்பார்க்கவில்லை.

இது மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி!! குஸ்புவின் ஆணவ பேச்சு!!

 தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கு தான் என்று நடிகை குஷ்பு கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக அபார கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் நடிகை குஷ்பு கடும் சினம் கொண்டார்.

கலைஞரை பார்த்து, துக்கம் விசாரிக்க மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, நெப்போலியன், நடிகை குஷ்பூ ஆகியோர் வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு,

இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்று கூறினார்.

மேற்கு வங்கம் இடது சாரிக்கூட்டணியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது!!

 கொல்கத்தா: மேற்கு வங்காள மாநில சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 59 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.

முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றி சதவீதம் 20 ஆகும். ஆனால், மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம் மக்கள் தொகையை விட இது குறைவாகும்.

கடந்த சட்டப் பேரவையில் 46 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் இடம் பெற்றிருந்தனர். அவ்வகையில் தற்போதைய சட்டப் பேரவையில் முஸ்லிம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனலாம்.

வடிவேலு பிரசாரம் காமெடி ஆகி விட்டது: நடிகர் சிங்கமுத்து தாக்கு


காமெடி நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து மோதல் நீடிக்கிறது. ஏற்கனவே இருவரும் போலீசில் புகார் அளித்தனர். இதில் சிங்கமுத்து கைதானார். சட்டமன்ற தேர்தலில் வடிவேலு தி.மு.க.வுக்கும் சிங்கமுத்து அ.தி.மு.க.வுக்கும் பிரசாரம் செய்தனர். 
 
அ.தி.மு.க. வெற்றி பெற்றது குறித்து சிங்கமுத்து கூறியதாவது:-   
 
தமிழக மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஏற்கனவே ஆட்சி செய்த