தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.3.11

மும்பை தாக்குதல் தொடர்பாக சாட்சிகளிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் விசாரணை குழுவுக்கு இந்தியா வர அனுமதி

புதுடெல்லி,மார்ச்.3:மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாக சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியதை அடுத்து அந்த நாட்டு குழு இந்தியாவுக்கு வந்து விசாரிக்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

பாகிஸ்தான்:சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்,மார்ச்.3:பாகிஸ்தானில் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் ஷஹ்பாஸ் பட்டி (வயது 42) சுட்டுக் கொல்லப்பட்டார்.

கிறிஸ்தவ சமூகத்தைச் சார்ந்த ஷஹ்பாஸை கொலைச் செய்தது பாக். தாலிபான் என போலீஸார் கூறுகின்றனர்.

தனது தாயாரின் வீட்டிலிருந்து காலையில் காரில் வெளியேறிய ஷஹ்பாஸை மூன்று அல்லது நான்குபேர் அடங்கிய கும்பல் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அவருடைய கார் டிரைவர் மீது அந்தக் கும்பல்

எங்கள் பிரச்சினையில் தலையிட்டால் ரத்த ஆறு ஓடும்: கடாபி


திரிபோலி, மார்ச். 3- லிபியாவில் நடப்பது வன்முறையாளர்களுக்கும் அரசுக்கும் இடையிலான பிரச்சினை. இதை நானே பார்த்துக் கொள்வேன். இதில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளோ, அல்லது அவர்களின் கைப்பாவையான ஐ.நா. சபையோ தலையிட்டால் ரத்த ஆறு ஓடும் என எச்சரித்துள்ளார் லிபிய அதிபர் கடாபி.
லிபியாவில் அரசுக்கு எதிராக கிளம்பியுள்ள போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்துவதால் ஐ.நா.

சர்வதேச நீதிமன்றத்தில் லிபியா மீது போர் குற்ற வழக்கு


ஆம்ஸ்டர்டாம், மார்ச். 3- லிபியா மீது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நடவடிக்கை எடுத்தால், அதனை அதிபர் கடாபி மீது போர்குற்ற வழக்காக சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்படும் என சர்வதேச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் அரசுக்கெதிராகவும், அதிபர் முஅம்மர் கடாபி பதவி விலக்கோரியும்

பிரதமருக்கு ஆ.ராசா எழுதிய கடிதம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்


புதுடெல்லிமார்ச். 3- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராச எழுதிய கடிதத்தில் இடம் பெற்றிருந்த வாசகங்களுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மத்திய தொலைத் தொடர்புத்துறை மந்திரியாக ஆ.ராசா பதவி

கோத்ரா வழக்கை மறுவிசாரணைச் செய்யவேண்டும் - பிரசாந்த் பூஷண்

புதுடெல்லி,மார்ச்.3:கோத்ரா ரெயில் எரிப்பைக் குறித்து மறுவிசாரணை நடத்தவேண்டுமென பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் வலியுறுத்தியுள்ளார்.

2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு காரணமான கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 31 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டு 62 பேர் விடுதலைச் செய்யப்பட்ட சூழலில் பிரசாந்த் பூஷண் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

கோத்ரா தீர்ப்பு:பிரிட்டீஷ் இந்தியன் முஸ்லிம் கவுன்சில் கண்டனம்

லண்டன்,மார்ச்.4:கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பிற்கு பிரிட்டீஷ் இந்தியன் முஸ்லிம் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'இந்திய சட்ட வரலாற்றில் விசித்திரமான புறக்கணிக்கப்பட வேண்டிய தீர்ப்பாகும் இது. ஒன்பது ஆண்டுகள் சிறையில் கொடூர சித்திரவதைகளை அனுபவித்த பிறகு 63 பேர் குற்றமற்றவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

துனீசியா: 'அல் நஹ்தா' இஸ்லாமிய இயக்கத்தின் மீதான தடை நீக்கம்

துனீஸ்,மார்ச்.4:துனீசியாவில் நாட்டை விட்டு வெளியேறிய சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பின் அலியால் தடைச்செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கமான அல்நஹ்தாவின் தடையை துனீசிய அரசு நீக்கியுள்ளது. அல் நஹ்தா செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

துனீசியாவில் மக்கள் எழுச்சியால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து 20 வருடமாக வெளிநாட்டில் வாழ்ந்திருந்த அல் நஹ்தாவின் தலைவர் ராஷித் அல் கன்னோஷி நாடு திரும்பியிருந்தார்.