தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.3.11

கோத்ரா தீர்ப்பு:பிரிட்டீஷ் இந்தியன் முஸ்லிம் கவுன்சில் கண்டனம்

லண்டன்,மார்ச்.4:கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பிற்கு பிரிட்டீஷ் இந்தியன் முஸ்லிம் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'இந்திய சட்ட வரலாற்றில் விசித்திரமான புறக்கணிக்கப்பட வேண்டிய தீர்ப்பாகும் இது. ஒன்பது ஆண்டுகள் சிறையில் கொடூர சித்திரவதைகளை அனுபவித்த பிறகு 63 பேர் குற்றமற்றவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய அப்பாவிகளை சித்தரவதைக்குள்ளாக்கிய அதிகாரிகளுக்கெதிராகவும் நடவடிக்கை மேற்கொள்ள நீதிபதிகள் துணிச்சலை வெளிப்படுத்த வேண்டும்.

சந்தேகத்தின் அடிப்படையிலான ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றம் 31 பேரை தண்டித்துள்ளது.' இவ்வாறு கவுன்சிலின் தலைவர் முனாஃப் ஸீனா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: