தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.5.11

பின்லேடனை வேட்டையாட அமெரிக்காவுக்கு உதவிய ஐஎஸ்ஐ


ஒசாமா பின்லேடனை வேட்டையாட அமெரிக்க சிறப்புப் படையினருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சரியாக 2 வாரத்திற்கு முன்புதான் விக்கிலீக்ஸ் ஒரு தகவலை வெளியிட்டது. அமெரிக்காவின் குவான்டானாமோ முகத்தை அம்பலப்படுத்திய அந்த தகவலில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ குறித்த அமெரிக்காவின் கருத்து வெளிப்பட்டது.

தீவிரவாத அமைப்பாக ஐஎஸ்ஐயை அமெரிக்கா கருதி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பாகிஸ்தானுக்கும், ஐஎஸ்ஐக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. உலக அரங்கில் ஐஎஸ்ஐயின் பெயர் மகா மோசமாக கெட்டுப் போனது.
இந்த நிலையில் விக்கிலீக்ஸ் தகவல் வெளியான அதே காலகட்டத்தில்தான் பின்லேடனை பாகிஸ்தானில் வைத்து வேட்டையாடி வீழ்த்தியுள்ளது அமெரிக்கப் படை.
இந்த இரு சம்பவங்களுக்கும் நேரடியாக தொடர்பு ஏதும் இல்லை என்ற போதிலும், பின்லேடனை வேட்டையாட பாகிஸ்தான் அரசும், ஐஎஸ்ஐயும் உதவியாக இருந்தன என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரையும், அமெரிக்காவின் கிடுக்கிப் பிடி அதிகரிக்க ஆரம்பித்துள்ளதையும், தன்னை அது எப்படி கருதுகிறது என்பதை அறிந்து கொண்டதைத் தொடர்ந்தும், பின்லேடனை காட்டிக் கொடுத்து தான் தப்பிக்க ஐஎஸ்ஐ நினைத்ததாக கூறப்படுகிறது.
எனவேதான் இதுவரை தங்களுக்குப் பக்கத்து வீட்டிலேயே இருந்து வந்த பின்லேடனை, வீழ்த்த அமெரிக்காவுக்கு உதவியுள்ளது ஐஎஸ்ஐ.
அமெரிக்காவின் கோரப் பிடியில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளும் வகையிலேயே பின்லேடனை பகடைக் காயாக வைத்து பாகிஸ்தானும், ஐஎஸ்ஐயும் தப்பித்துக் கொண்டதாக கருதப்படுகிறது.
பின்லேடன் வேட்டை குறித்து கருத்து தெரிவித்த அதிபர் ஒபாமா, பாகிஸ்தான் அரசின் முழு ஒத்துழைப்பு இருந்ததால்தான் பின்லேடனை வேட்டையாட முடிந்தது. பாகிஸ்தான் முழுமையாக எங்களுக்கு உதவியதைத் தொடர்ந்தே லேடனை வீழ்த்தினோம் என்றார்.

0 கருத்துகள்: