தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.5.11

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஆந்திர எம்.எல்.ஏ. தொடர்ந்து கவலைக்கிடம்


நகரி, மே.3 ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே மஜ்லீஸ் முஸ்லிம் கட்சி எம்.எல்.ஏ. அக்பருதீன் ஒவைசி (39). நேற்று முன்தினம் மர்ம மனிதர்களால் சுடப்பட்டார். கத்தியாலும் குத்தப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஐதராபாத்தில் உள்ள அவரது சொந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக 'கேர்' ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு 12 டாக்டர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளிக்கிறார்கள். அவரது உடலில் பாய்ந்த 3 குண்டுகள் அகற்றப்பட்டன. ஒரு குண்டு சிறுநீரகம் அருகே உள்ளதால் அதை அகற்ற முடியவில்லை.
அவரது வயிற்றின் கீழ் பகுதியில் ஏற்பட்ட கத்தி குத்து காயத்தால் நோய் கிருமி தொற்றி உள்ளது. இடது சிறுநீரகம் முழுவதும் சிதைந்து விட்டது. வலது புற சிறுநீரகத்திற்கு டயாலீசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. டாக்டர்கள் கூறும்போது, அக்பருதீன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவரை காப்பாற்ற தொடர்ந்து போராடி வருகிறோம் என்றனர்

0 கருத்துகள்: