தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.12.10

வாரணாசியில் குண்டு வெடித்து 20 பேர் காயம்!

இந்துக்களின் புனித நகராகக் கருதப்படும் வாரணாசியில் குண்டு வெடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாரணாசியில் கங்கா ஆர்த்தி என்ற நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வெளிநாட்டிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த குண்டு வெடிப்பில் 7 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் 4 பேர் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். ஆனால் குறைந்தது 20 பேருக்கும் அதிகமானோர் காயமுற்றிருக்கக் கூடும் என்றும் அவர்களில் வெளிநாட்டவரும் அடக்கம் என்றும் இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

கங்கை நதிக்கரையோரம் தஷாஸ்வமேத் பகுதியில் மாலை 6.30 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றதாக அரசுத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வாரணாசி குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், குண்டு வெடிப்புத் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார். மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உள்துறை அமைச்சகத்தை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
.

பாலஸ்தீன் நாட்டை பிரேசில் அங்கீகரித்து உள்ளது.


பாலஸ்தீனை அதன் 1967ஆம் ஆண்டின் எல்லைப்படி தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரேசில் அறிவித்துள்ளது. பிரேசிலின் இந்த அறிவிப்பிற்கு இஸ்ரேல் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.பாலஸ்தீன அதிபர் அப்பாசுக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா எழுதியுள்ள கடிதத்தில், 1967ஆம் ஆண்டின் எல்லைகளின் படி பாலஸ்தீனை தனி நாடாக பிரேசில் அங்கீகரித்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்நிலையில், பாலஸ்தீன் மக்களின் குடியிருப்புகளை இடித்துவிட்டு அங்கு யூதக் குடியிருப்புகள் அமைக்கும் பணிகளை இஸ்ரேல் நிறுத்தும் வரை தாம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்று பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் கூறியுள்ளார்.

சாமியார் நித்தியானந்தா அறையில் ஆணுறைகள்: பெண் பரபரப்பு வாக்குமூலம்

சாமியார் நித்தியானந்தா தனது பிடதி ஆசிரமத்தில் எப்போதும் ஆணுறைகள், மது வகைகளை வைத்திருப்பார். ஆணுறைகளை அவர் வைத்திருந்ததை நானே எனது கண்ணால் பார்த்துள்ளேன் என்று நித்தியானந்தா வழக்கில் ஒரு சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார். சமீபத்தில் நித்தியானந்தா வழக்கில் ராம்நகர் கோர்ட்டில் கர்நாடக சிஐடி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிக்கையுடன் இந்த வாக்கு மூலத்தையும் இணைத்துள்ளனர்.பல்வேறு சாட்சிகளின் வாக்குமூலங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு பெண் சாட்சிதான் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இவரிடம், மோட்சம் அடைவீர்கள் என்று சொல்லி சாமியார் நித்தியானந்தா உடல் ரீதியான உறவுக்கு கட்டாயப்படுத்தி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அந்தப் பெண் கூறுகையில், நான் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். அப்போது என்னிடம் ஒரு மதுக் கடையிலிருந்து மது வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டார் நித்தியானந்தா.இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தேன். இருப்பினும் நித்தியானந்தாவின் போதனைகளால் எனது மனம் அந்த அதிர்ச்சியை புறக்கணித்தது. எந்த ஒரு குடும்பப் பெண்ணும் மதுக் கடைக்குச் சென்று மது வாங்க மாட்டார். ஆனால் நித்தியானந்தாவின் போதனையால் பிரெய்ன் வாஷ் செய்யப்பட்டிருந்த நான் ஆசிரமத்திற்கு அருகில் இருந்த மதுக் கடைக்குச் சென்று மது வாங்கி வந்தேன். பின்னர் அதை தனது அறைக்குக் கொண்டு வருமாறு கூறினார் நித்தியானந்தா. அங்கு கொண்டு போய்க் கொடுத்ததும் அதை வாங்கி அருந்தினார். என்னால் அந்த மதுவின் நெடியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் நான் வாந்தி எடுத்து விட்டேன். பின்னர் நான் மயங்கி விட்டேன்.
சில மணிநேரம் கழித்து நித்தியானந்தா எழுப்பிய பிறகே நான் கண் விழித்தேன். நான் மயக்கமாக இருந்தபோது என்ன நடந்தது என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. நான் படுக்கையில் படுத்திருந்தேன். என்னை அவர் என்ன செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால் எனது உடைகள் கலைந்திருந்தன.பிறகு என்னை டிரஸ் செய்து கொள்ளச் சொல்லி அங்கிருந்து போகுமாறு பணித்தார் நித்தியானந்தா. நான் ஆசிரமத்தில் சேர்ந்தபோது நித்தியானந்தா போட்ட விதிமுறைகளில் ஒன்றாக எனக்குக் கூறப்பட்டவை ஆசிரமத்திற்குள் மது அருந்தக் கூடாது என்பது. ஆனால் என்னையே மது வாங்கச் சொல்லி அனுப்பி வைத்தவர் நித்தியானந்தா.அதேசமயம், நான் அவருக்கு மது வாங்கி வந்ததையும், அவர் அருந்தியதையும் யாரிடமும் கூறக் கூடாது என்று என்னை எச்சரித்தார் நித்தியானந்தா என்று அந்த பெண் கூறியுள்ளார். மது மட்டுமல்லாமல் ஆணுறைகளும் நித்தியானந்தா அறையில் இருந்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார். இவை இரண்டும் நித்தியானந்தா அறையில் எப்போதும் இருக்கும் என்றும் அப்பெண் கூறியுள்ளதாக அந்த வாக்குமூலம் தெரிவிக்கிறது

மன்மதன் அம்பு: கமலின் வக்கிரம்.

கமலகாசன் சிறந்த வியாபாரி.இவர் கவுதமியை கல்யாணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ்ந்து வருவது குறிப்பிடதக்கது. இவர் இதற்க்கு முன்னாள் முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தி நிறைய படங்கள் எடுத்துள்ளார். அப்போது எல்லாம் இந்த பார்பன பத்திரிக்கைகள் அதை பெரிய விசயமாக எடுத்து கொண்டது இல்லை. இது ஒருபுறம் இருக்க இவர் ஹிந்து மத மக்களின் உணர்வுகளை காயபடுத்தி மன்மதன் அம்பு படத்தில் சில பாடல்கள் எழுதி இருக்கிறார் என்ற கண்டனம் எழுந்துள்ளது. இவர் இதன் மூலம் அந்த படத்திற்கு விளம்பரம் தேடுகிறார் என்றே சொல்ல முடிகிறது. இந்த விஷயம் முற்றிலும் கண்டிக்கபட வேண்டியது. இந்த தருணத்தில் மக்கள் எல்லாரும் சேர்ந்து இந்த மன்மதன் அன்பு படத்தை பார்ப்பதை தவிர்ப்பது தான் இதற்க்கு நீங்கள் செலுத்தும் சிறந்த எதிர்ப்பாகும். இன்னும் எத்தனை ஏழை எளிய மக்கள் கமல் ரசிகர் மன்றம் அமைத்து கமல் பட கட் அவுட்களுக்கு பால் அபிசேகம் செய்கிறார்கள். எல்லாரும் சேர்ந்து இந்த படத்திற்கு கொடுக்கும் தோல்விதான் இவர்களுக்கு சிறந்த பாடத்தை கற்று கொடுக்கும்