தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.10.10

சங்கராச்சாரியாருடன் சந்திப்பா? முஸ்லிம் தனியார் சட்டவாரியம் திட்டவட்ட மறுப்பு











2003 ஆண்டில் எடுத்தப் படம்

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியப் பிரதிநிதிகள் எதிர்வரும் 17 ந்தேதி சந்தித்துப் பேசவிருப்பதாக, காஞ்சி மடத்திலிருந்து பத்திரிகை களுக்குச் செய்தி தரப்பட்டு ள்ளது. 11.10.2010 தேதியிட்ட ஆங்கில, தமிழ் நாளேடுகளிலும் இச்செய்தி பிரசுரமாகியுள்ளது.

இது குறித்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரிய உறுப்பினரும், தமுமுக தலைவருமான பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் கேட்டோம். அவர் நம்மிடம்.

“காஞ்சி சங்கராச்சாரியாரை அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியப் பிரதிநிதிகள் வரும் 17-&ந் தேதி சந்திக்க உள்ள தாக வெளிவந்துள்ள செய்தி குறித்து முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் துணைத் தலைவர் காகா சைய்யத் அவர் களிடம் விசாரித்தேன். முஸ்லிம் தனியார் சட்டவாரியம் சங்கராச் சாரியாரை சந்திப்பது குறித்த செய்தி பொய்யானது எனத் திட்டவட்டமாக மறுத்தார். சங்கராச்சாரியாரை சந்திக்க முஸ்லிம் தனியார் சட்டவாரியம் சம்மதிக்கவில்லை என்பதையும் அழுத்தமாக தெரிவித்தார்.

அகில இந்திய தனியார் சட்டவாரியத்தின், பாப்ரி மஸ்ஜித் குழுவின் ஒருங்கி ணைப்பாளர் ஷி.னி.ஸி. இல்யாஸ் அவர்களிடமும் பேசினேன். அவரும் இதைத் திட்டவட் டமாக மறுத்தார். காஞ்சி சங்கராச் சாரியாருடனான பேச்சு வார்த்தை 2003&ம் ஆண்டிலேயே முற்றுப் பெற்றுவிட்டது. இனி அவரிடம் பேசுவதற்கு எதுவுமில் லை என்றும் ஷி.னி.ஸி. இல்யாஸ் தெளிவு படுத்தியுள்ளார்” என்று கூறினார்.

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு தொடர் பாக, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கேட்டதற்கு “எதிர்வரும் 16.10.2010 அன்று லக்னோவில் நடைபெற உள்ள அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து விரிவாக ஆலோசித்து முடிவெடுக்க உள் ளோம். இக்கூட்டத்தில் பங்கேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கருத்துக்களையும் எடுத் துரைக்க உள்ளேன். என பேரா. எம்.ஹெச் ஜவாஹி ருல்லாஹ் தெரிவித்துள்ளார்.
ஹிந்துத்துவ தலைவர்களை ‘ஹாஷிம்‘ அன்சாரி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித் துக் கேட்டதற்கு,‘ஹாஷிம் அன்சாரி இந்துத்துவத் தலைவர்களை சந்தித்துப் பேசுவதால் வழக்கின் போக்கு மாறாது. மேலும், இவரது பேச்சு வார்த்தை முடிவுகள் வழக்கையும் பாதிக்காது. இது சுன்னத் வல் ஜமாத் வக்ஃப் வாரியத்தின் வழக்கு ஆகும்.’ என்று தெரிவித்தார்.

நீதிக்கான போராட்டத்தை தொடரும் ரேச்சல் கொரியின் பெற்றோர்

ஜெருசலம்,அக்.13:ஃபலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்துவிடும் அக்கிரமங்களுக்கெதிராக போராடி உயிரைத் தியாகம் செய்த அமெரிக்க மனித உரிமைப் போராளி ரேச்சல் கொரியின் பெற்றோர் நீதிக்கான போராட்டத்தை அவர் மரணித்து ஏழு ஆண்டுகள் கழிந்த பிறகு தொடர்கின்றனர்.

கொரியின் மரணத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்துவதோ, விசாரணை செய்வதோ சாத்தியமாகாவிட்டாலும் கூட அந்த குற்றவாளிகளின் முகத்தை ஒருமுறையாவது காண இயலுமா என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 -ஆம் தேதி ஃபலஸ்தீனில் ஒருவருடைய வீட்டை இடிக்க முயன்ற இஸ்ரேலிய ராணுவத்தினரை தடுப்பதற்கு முயன்ற பொழுது புல்டோஸர் ஏற்றப்பட்டு கொல்லப்பட்டார் ரேச்சல் கொரி.

கொரியின் கொலையின் மூலம் இஸ்ரேல் எவ்வளவுதூரம் மனிதத் தன்மையற்று ஃபலஸ்தீனர்களுடன் நடந்துக் கொள்கிறது என்பதை மனிதநேய ஆர்வலர்கள் உலக சமூகத்தின் முன்னால் எடுத்துரைத்தனர்.

கொரியின் பெற்றோர்கள் நீதிமன்றத்தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரியிருப்பது இரண்டு விஷயங்களாகும்.
1.ரேச்சல் கொரியின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை நேரில் சந்திக்க அனுமதிக்க வேண்டும்
2.இச்சம்பவத்தில் ராணுவம் மன்னிப்புக் கோருவதுடன், வழக்கு தொடர்பாக செலவழித்த பணத்தை தரவேண்டும் என்பதாகும்.

ஆனால், கொரியின் பெற்றோர்கள் தாக்கல் செய்துள்ள சிவில் வழக்கில் விசாரணை நடைபெறும் பொழுது புல்டோஸரின் ஓட்டுநரையும், அச்சம்பவத்திற்கு தலைமை வகித்த ராணுவ கமாண்டரையும் வெளியில் காண்பிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கெதிராக கொரியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இவ்வழக்கை நடத்துவதற்கு இதுவரை தங்களுக்கு ஒரு லட்சம் டாலர் செலவானதாக கொரியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தை விசாரணைச் செய்த அதிகாரிகள் கொரியின் மரணம் விபத்து என பதிவுச் செய்துள்ளனர். மேலும் இந்த அக்கிரமச் செயலில் ஈடுபட்ட புல்டோஸர் ஓட்டுநரையும், ராணுவ அதிகாரியையும் குற்றமற்றவர்கள் எனக் கூறுகிறது விசாரணை அறிக்கை.

புல்டோஸரின் ஓட்டுநர் புகைப்படலத்தின் காரணமாக கொரி நிற்பதை கவனிக்காமல் புல்டோஸரை ஓட்டியதாக அவ்வறிக்கையில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நஷ்ட ஈட்டைக்கோரி கொரியின் பெற்றோர்கள் வழக்கு தாக்கல் செய்தனர்.

ஃபலஸ்தீன் மக்களின் துயரங்களைக் குறித்து ஒன்றுமே தெரியாமலிருந்த ரேச்சல் கொரியின் பெற்றோர் தற்பொழுது ஃபலஸ்தீனர்களுக்காக உலகை சுற்றி வருகின்றனர்.

கொரியின் தாயார் சின்டி கொரி, ரேச்சல் கொரியின் மரணத்திற்கு முன்பு ஒரு முறை கூட வெளிநாட்டிற்கு சென்றதில்லை. தந்தை க்ரைக கொரியோ வியட்நாம் போரில் அமெரிக்காவிற்கு உதவுவதற்காக நாட்டை விட்டு வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்