தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.2.12

பீகாரில் இருந்து கொள்ளை கும்பல் தலைவன் உறவினர்கள் சென்னை வருகை


சென்னையில் பெருங்குடிகீழ்க்கட்டளை ஆகிய இடங் களில் உள்ள வங்கிகளில் பட்டப்பகலில் துப்பாக்கி மு னையில் கொள்ளையடித்த வட மாநில கொள்ளையர் 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இக்கொள்ளைக் கும்பலுக்கு தலைவனாக இருந்தவன் வினோத்குமார். இவனது சொந்த ஊர் பீகார் மாநிலம் பத்துஹா ஆகும். போலீசார் ஒரு செல்போன் மூலம் துப்பு துலக்கி வி னோத்குமாரின் நெருங்கிய உறவினர்
ஒருவரை கண்ட றிந்தனர். பின்னர் போலீசார்அவரிடம் வினோத்குமார் சென்னையில் சுட்டு க்கொல்லப்பட்ட தகவலை கூறி, அவரது உடலை பெற்றுச் செல்லுமாறு கூ றினர். இதையடுத்து அவர் நாளைக்குள் சென்னை வந்து வினோத்குமார் உடலை பெற்றுச் செல்வதாக கூறினார்.

அவரிடம் போலீசார் வினோத்குமார் உடல் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் உடலை பீகார் கொண்டு செல்ல தேவையான உதவிகளைச் செய்ய தயாராக இருக்கிறோம் என்றனர். அதற்கு அவர்எனக்கு உந்த உதவியும் தேவையில்லை என்று கூறி போனை வைத்து விட்டார். வினோத்குமார் உறவினர்கள் நாளை இரவுக்குள் சென்னை வந்து சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்: