தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.1.11

திருச்சி ஏர்போர்டில் தோலிருக்கச் சுளை விழுங்கும் திருடர்கள்

உங்கள் இந்நேரம் தளத்தில், சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் பற்றி செய்தி வெளியானதைப் படித்தேன். நான் துபையில் பணிபுரியும் கண் பரிசோதகர். (ஆப்தால்மிஸ்ட்). துபையிலிருந்து  கடந்த ஒன்றாம் தேதி இரவு பதினொன்றரை மணிக்கு, திருச்சி ஏர்போட்டில் இறங்கினேன்.
எனது லக்கேஜான டிராலி பேக்கின் ஜிப் உடைக்கப்பட்டு இருந்ததால் சந்தேகப்பட்டு  அங்கேயே பெட்டியைத் திறந்து பார்த்தபோது பொருட்கள் நான் வைத்தபடியே இருந்ததால் புகார் எதுவும் கொடுக்காமல் வீட்டுக்கு வந்து விட்டேன்.
வீட்டில் வந்து பொருட்களைப் பிரித்தபோது கண்ணாடி பிரேம் இருந்த அட்டைப்பெட்டியும் அதனுள் பிளாஸ்டில்க் பெட்டியும் இருக்க, பிரேமை மட்டும் திருடி விட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பூட்டைத் திறக்க முயன்று முடியாமல்  ஜிப்பின் கிளிப்பை உடைத்து பேக்கிலிருந்த விலை உயர்ந்த கண்ணாடி பிரேமை ஏர்போர்டில் லக்கேஜ் ஹேண்டில் செய்யும் ஊழியர்கள் திருடி விட்டனர்.
தோலிருக்கச் சுளை விழுங்கும் திருடர்கள் திருச்சி ஏர்போர்டில் இருப்பதை வாசகர்களுக்குத் தெரிவிப்பதற்காகவே இக்கடிதத்தை உங்கள் தளத்தில் வெளியிடக் கோருகிறேன்.
நாம் பூட்டுப் போட்டு விட்டோமே என நம்பி லக்கேஜை விட்டுவிடாமல் சரியான முறையில் பொதிந்து கட்டி எடுத்துச்செல்வது பாதுகாப்பானது.
- வாசகர் பைசல் பின் நஜ்புதீன், அத்திக்கடை நன்றி இன்நேரம்.இந்த இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

நெல்லை அருகே போலீசிடம் இருந்து தப்பிய கைதி வேனில் அடிபட்டு சாவு

நெல்லை: நெல்லை அருகே போலீசிடம் இருந்து தப்ப முயன்ற கைதி வேனில் அடிபட்டு இறந்தார்.

சென்னை சோழவரம் லட்சுமியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் வினோத் குமார். எலக்ட்ரீசியன். இவர் சென்னை புழல் காவாங்கரை லால்பகதூர் தெருவைச் சேர்ந்த ரத்தினபாண்டி மகள் லட்சுமி என்பவரை கடந்த இரண்டு ஆண்டாக காதலித்து வந்தார்.

இவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு லட்சுமியின பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 5 மாதத்துக்கு முன் லட்சுமியை அழைத்து கொண்டு வினோத்குமார் ஓடினார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி லட்சுமியை மீ்ட்டனர்.

அதன்பிறகு அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை உடன்குடி ரோட்டைச் சேர்ந்த செல்வராஜ் மகன் லோகேஷ் என்பவருக்கும், லட்சுமிக்கும் கடந்த 9-12-2010ல் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்தில் லட்சுமிக்கு விருப்பம் இல்லை. திருமணத்துக்கு பிறகும் வினோத்துடனான காதல் நீடித்தது. இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொண்டனர்.

21-12-2010 அன்று 21 பவுன் நகைகளுடன் லட்சுமி வினோத்குமாருடன் ஓட்டம் பிடித்தார். இது குறித்து திசையன்விளை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நாகமாணிக்கம், சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் விசாரணை நடத்தி காதல் ஜோடிகள் சென்னையில் இருப்பது தெரிந்து அங்கு சென்று அவர்களை அழைத்து வந்தனர்.

வினோத்குமார் மீது புதுப்பெண்ணை கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்களை காவலர்கள் மகேஷ், மாணிக்கவாசகம், கீதா ஆகியோர் அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி லட்சுமியை பெற்றோரிடம் ஒப்படைக்கவும், வினோத்குமாரை 15 நாள் காவலில் வைக்கவும் உத்தரவிட்டார். அதன்படி அவரை நாங்குநேரி சிறையில் அடைக்க போலீசார் அழைத்து வந்தனர்.

இரவு 11.45 மணிக்கு நாங்குநேரி சிறை அருகே வந்தபோது அவரது கை விலங்கை போலீசார் கழற்றினர். அப்போது அவர் திடீரென போலீஸ்காரர்களை தள்ளிவிட்டு ஓடினார். போலீசார் அவரை விரட்டிச் சென்றனர். நான்குவழிசாலை ரோட்டை கடக்கும்போது திருவனந்தபுரத்தில் இருந்து ஈரோட்டுக்கு சென்று கொண்டிருந்த கூரியர் வேன் வினோத்குமார் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இந்த இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

தற்கொலையில் தமிழகம் 3வது இடம்: மேற்கு வங்கம் முதலிடம்

டெல்லி: கடந்த 2009-ம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 348 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், 418 பேர் விபத்துகளில் பலியாகியுள்ளதாகவும் தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

2008-ம் ஆண்டைவிட 2009-ல் தற்கொலை 1.7 சதவிகிதமும், சாலை விபத்துகள் 7.3 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 151 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். மேலும் 3,57,021 பேர் சாலை விபத்துகளில் பலியாகியுள்ளனர்.

நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 223 ஆண்களும், 125 பெண்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில் தற்கொலை செய்து கொள்ளும் 125 பெண்களில் 69 பேர் இல்லத்தரசிகள். ஒரு நாளில் 73 பேர் உடல் நலக்குறைவாலும், 10 பேர் காதல் விவகாரத்தாலும் தற்கொலை செய்து கொள்வதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

முதலிடத்தில் மேற்கு வங்கம்-2வது இடம் ஆந்திரா

தற்கொலையில் 14 ஆயிரத்து 648 பேருடன் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. 14 ஆயிரத்து 500 பேருடன் ஆந்திரா இரண்டாவது இடத்திலும், 14 ஆயிரத்து 424 பேருடன் தமிழகம் மூன்றாவது இடத்திலும், 14 ஆயிரத்து 300 பேருடன் மகாராஷ்டிராவும், 12 ஆயிரத்து 195 பேருடன் கர்நாடகமும் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.

வழக்கமாத தற்கொலையில் கேரளா முன்னணியில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் பட்டியலில் மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகியவை முதலிடத்திற்கு வந்துள்ளன.

நாட்டில் நடக்கும் மொத்த தற்கொலைகளில் மேற்குவங்கம், ஆந்திரா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களின் பங்கு 55.1 சதவிகிதமாகும்.

2009ல் டெல்லியில் ஆயிரத்து 477 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மொத்த தற்கொலையில் உத்தர பிரதேசத்தின் பங்கு 3.3 சதவிகிதம். 2009ல் மஹாராஷ்டிரா(2,872), ஆந்திரா (2,414), கர்நாடகா(2,282), சட்டீஸ்கர்(1,802), மத்திய பிரதேசம்(1,395) ஆகிய 5 மாநிலங்களில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நாட்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் மூன்றில் இரண்டு பங்கு இந்த 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான். கடந்த 2009-ம் ஆண்டில் மொத்தம் 17 ஆயிரத்து 368 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது 2008-ம் ஆண்டைவிட 7 சதவிகிதம் அதிகம் ஆகும்.

கடந்த 10 ஆண்டுகளாக மஹாராஷ்டிராவில் தான் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 2008ல் தற்கொலை செய்து கொண்ட 512 பேரில் இருந்து அதிகரித்து 2009ல் ஆயிரத்து அறுபது விவசாயிகள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளனர்.

பீகார் (112), ஒரிசா (154) மற்றும் ஜாக்க்கண்டில் (164) குறைந்த பேர் தற்கொலை செய்துள்ளனர். நாட்டில் தற்கொலை காரணங்களில் 23. 7 சதவிகிதத்துடன் குடும்ப பிரச்சனை முதலிடத்திலும், 21 சதவிகிதத்துடன் உடல்நலக்குறைவு இரண்டாவது இடத்திலும் உள்ளது.

சமுதாய மற்றும் பொருளாதாரக் காரணங்களால் ஆண்களும், தனிப்பட்ட மற்றும் உணர்ச்சி காரணங்களால் பெண்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். 2009ல் வேலையின்மையால் 18.8 சதவிகிதத்தினரும், வேலை பிரச்சனை காரணமாக 15.1 சதவிகிதத்தினரும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

நகரங்களில் சென்னைக்கு 2வது இடம்

35 பெரு நகரங்களில் நடந்த தற்கொலையில் பெங்களூர் (2,167), சென்னை (1,412), டெல்லி (1,215) மற்றும் மும்பையில் (1,051) 43. 3 சதவிகிதம் பேர் இறந்துள்ளனர்.

புனேவில் தான் விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விபத்துகளை பொருத்தவரையில் சாலை விபத்தில் 37.9 சதவிகிதத்தினரும், விஷத்தால் 8 சதவிகிதத்தினரும், ரயில் விபத்துகளில் 7. 8 சதவிகிதத்தினரும், நீரில் மூழ்கி 7.7 சதவிகிதத்தினரும் மற்றும் தீ விபத்துகளில் 7 சதவிகிதத்தினரும் இறந்துள்ளனர்.இந்த இடுகை (post)தங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி

உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.opera for phones

download opera mini 5.1 (271 KB)

download செய்த பிறகு

Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள்

ஆக கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் Opera வை exit செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள். தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள www.thanneerkunnam.net என தேடி பார்க்கவும்      இந்த இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி